Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடதுசாரியத்துக்கு பின்னாலுள்ள இலங்கை அரசின் மறைகரம்

Featured Replies

யாழ் களத்தில் முன்பு நடந்த விவாதங்களை இப்போது மீண்டும் வாசித்து வருகிறேன். எனது நிலைப்பாடுடன் சேரக்கூடிய முன்னைய விவாதங்களின் தொடர்சியாக எனது உரையாடலை தொடர விரும்பிகிறேன். செப்டம்பர் 2006 காலப்பகுதியில் யாழ் கருத்து களத்தில் நிகழ்ந்த ஒரு நீண்ட விவாதம் தற்போது மீண்டும் வாசிக்கும் போது சில விடயங்களை எம்மை மீள் பரிசீலனை செய்யத் தூண்டுகிறது. முதலில் அந்த விவாததை இங்கு உள்ளீடு செய்ய விரும்புகிறேன். ''ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'' - ஒளவையார்

லண்டனில் இருந்து ஒளிரும் தொலைக்காட்சியொன்று அண்மையில் சில அரசியல் விவாதங்களை செய்து வருகிறது. அதில் அனேகமாக மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் தம்மைதாம் பீத்திக்கொள்ளும் இடதுசாரிகள் பலரும் மற்றும் தமிழ்த் தேசியச்செயல்பாட்டாளர்கள் சிலரும் கலந்து கொண்டு விவாதித்து வருகின்றனர். பிரச்சினை இவ்வாறான விவாதங்கள் பற்றியது அல்ல. இந்த தொடர் விவாதங்களில் முன்வைக்கப்படும் கருத்துகள் மிக முக்கியமானவை.

தமிழ்த் தேசியச் செயல்பாட்டாளர்கள் கருத்துகள் எனது அக்கரைக்கும் ஆய்வுக்கும் அப்பாற்பட்டது. இவர்களுக்கு எதிர்தரப்பினரான இடசாரிகள் பற்றிய ஒரு ஆழமான அரசியல் பார்வை எமக்கு அவசியம். இந்தத்தரப்பினரில் ஒரு சாரார் எங்கப்பன் குதிருக்குல் இல்லை என்பதுபோல் அவர்களின் கருத்துகளில் இருந்து அவர்கள் இலங்கை அரசின் எடுபிடிகள் என்பதை அறியலாம். அதில் சிலர் கொழும்பில் இருக்கும் கூண்டுக்கிளிக்காக குரல் கொடுப்பவர்கள். மூன்றாவது தரப்பினர் தம்மை உண்மையான மார்க்ஸ்ஸிட் அல்லது இடசாரிகள் என்றவாறு இலங்கை அரசுக்கு எதிராக மின்னி முழங்குவதை பார்த்திருப்பீர்கள். இவர்கள் கருத்துகளின் பின்னாள் உள்ள இலங்கை அரசின் மறைகரம் பற்றியே யாழ் களத்தில் ஒரு உரையாடலை தொடக்கி வைக்க விரும்புகிறேன்.

இந்த மார்க்ஸ்ஸிச மாமேதைகள் இலங்கை அரசின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் புலம்பெயர் தேச தமிழர்களின் அரசியல் எழுச்சியை நசுக்கிடாமல் மடைமாற்றம் செய்கின்றனர். இங்கு இன்றைய யாழ் தினசரியான வலம்புரியில் வந்த ஆசிரியர் தலையங்கத்தை மீள வாசிக்குமாறு இணைத்துள்ளேன். புலிகளின் தோல்விக்கு காரணமான சர்வதேசம்...

2002 மாசியில் உருவான அரச-புலிகள் யுத்த நிறுத்தமும் அதனைத்தொடர்ந்த பேச்சு வார்த்தைகளும் தோல்வி அடையவே சிங்கள பெளத்த பேரின வாத இலங்கை அரச இயத்திரம் விரும்பியது. அந்த காலத்தில் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவான இடதுசாரிகள் சிலரால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தமிழ்த்தேசியத்தை குப்புறவிழவைத்தை என்பதையே வரலாறு தமிழரெமக்கு விட்டுச்சென்ற பாடமாகும்.

2009 மே 17க்கு பின்னான இலங்கை அரசின் புதிய அரசியல் நிகழ்ச்சி நிரலொன்றை உருவாக்கியுள்ளது. சாமானியர்கள் புரிந்து கொள்ளமுடியாத சிக்கலான ஒரு றொக்கெட் விடும் அறிவியல் அல்ல இது. மிக இலகுவான ஆனால் பாரிய பின்விளைவுகளை தரக்கூடிய மேற்குல எதிர் அரசியல். தமிழ் மக்களின் மத்தியில் குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் அரசியலில் இதை மெல்ல மெல்ல கரைத்து விடுவதன் மூலம் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக மேற்குலகின் அரசியலை உருவாக்குவதாகும்.

வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளாத ஒரு சமூகம் ஒரே தவறை மீண்டும் மீண்டும்செய்யும் அபத்தத்தை சந்திக்கும். (தொடரும்...)

Edited by ராஜகுரு

இன்று ஐ.நா. அறிக்கை, சனல் உட்பட்ட போர்க்குற்ற அறிக்கைகள் ஆதாரங்கள்; சீனாவின் சிங்களம் மீதான பொருளாதார உறவுகள், தமிழக அரசியல் மாற்றங்கள்; அரபு உலகம் மூலம் ஏற்பட்டுவரும் ஒருவித உலக மாற்றமும் எமக்கு ஒருவித அரசியல் தீர்வை பெறக்கூடிய சூழலை உருவாக்கி தந்துள்ளன.

இந்த அனுகூலங்களை சரியான முறையில் அணுகுவதே இன்றைய வரலாற்று கடமை. இதில் இடது, வலது மற்றும் இவை சாரா அனைத்து தமிழர்கள் தமிழர்களும் அடங்கும்.

  • தொடங்கியவர்

அண்மையில் அதே தொலைக்காட்சியில் சனல்-4 வெளியிட்ட ஸ்ரீலங்கா : கொலைகளம் எனும் ஆவணப்படம் குறித்த விவாதத்தில் கலந்து கொண்ட இனியொரு மார்க்ஸ்சிச மாமேதை சொன்னார், தான் கேர்ட்டிஸ் கொம்யூனிஸ் கட்சி ஒழுங்கு செய்த மே தின ஊர்வலத்தில் கலந்து கொண்டதாவும் 40ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் அதில் பங்கேற்றதாகவும். இதைத் தொடர்ந்து சொன்னதுதான் அதிர்சியான விடயம். தங்களின் எதிர்களுடன் உங்கள் தமிழ் அமைப்புகள் (BTF, GTF) சேர்ந்து வேலை செய்வதாக, அதாவது பிரித்தானியாவின் பிரதான மூன்று கட்சிகளுடன் தற்போது தமிழர்கள் பலர் சேர்ந்து வேலை செய்கிறார்கள் அதை முதலில் நிறுத்த வேண்டுமென அந்த மேதை குறிப்பிட்டார்.

வர்க்க எதிரிகளுக்கு எதிராக அணிதிரளுமாறு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த தமிழர்களை கூவி அழைத்தார். மேற்குலக அரசியல் நலனுக்கு எதிராக மக்கள் நலன் அரசியலை முன்வைத்து புலம்பெயர்தேச தமிழர்களைச் செய்யத்தூண்டும் இடதுசாரியம் மிக ஆபத்தானது. இது இலங்கை அரசின் மறைமுக அரசியல் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும்.

Edited by ராஜகுரு

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்ஸ்சிச மாமேதை சொன்னார், தான் கேர்ட்டிஸ் கொம்யூனிஸ் கட்சி ஒழுங்கு செய்த மே தின ஊர்வலத்தில் கலந்து கொண்டதாவும் 40ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் அதில் பங்கேற்றதாகவும். இதைத் தொடர்ந்து சொன்னதுதான் அதிர்சியான விடயம்.

இந்த கம்னியுஸ்ட் காரங்கள் ...மார்சிஸ்ட் காரங்கள்...

ரஸ்யா .. சீனா... கியுபா போன்ற நாடுகளின் கால்களில் விழுந்து அய்யா நாங்கள் உங்கள் கொள்கை கோட்பாட்டினை கடைபிடிப்ப்வர்கள்.. நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கவேண்டும் என கெஞ்சி கூத்தாடி தடுப்பரணை உருவாக்கவேண்டும் . ஆதரவாக யெல்லாம் உருவாக்க மிடியாது .அண்ணர் ராஜபகெசே உள்ளார்.. இந்த குறைந்த பட்ச செயல்திட்டத்தினையாவது செய்துமிடித்துவிட்டு பிறகு பேசுவது நன்றாக இருக்கும்.. அத்தோடு இப்படித்தான் இருப்பம் என்றால் பழைய கம்னியுச வரலாறுகள் எல்லாம் துப்பாகிகளை கொண்டு வடிவமைக்க பட்டுள்ளன.புதியதாக ....கிளர்ச்சி/புரட்சி செய்ய ஆசைபடுபவர்கள் ஏ.க்கே துப்பாக்கியை கொண்டு பயிற்சிசெய்து முதல் பிளைட்டில் இலங்கையில் லேண்டாகி தாங்கள் விரும்பும் போராட்ட அமைப்பை கட்டமைக்க வேண்டும்.. அதைவிடுத்து இப்போ செய்யவறையும் சொறிந்து கொண்டு.. அப்போ அப்படி செய்திருக்கலாமே .. இப்போ இப்படி செய்திருக்கலாமே என்று 721 பானிப்பட்டு பாபர் கதையெல்லாம் கூறபடாது.. (பாவம் விடுங்கப்பா உங்க அளவுக்கு புலிகளுக்கு பலமோ மூளையோ இல்லை)...இப்ப புலிகள் இல்லை.. களம் பொதுவாக திறந்து விடப்பட்டுள்ளது.. மாற்று கருத்து மாணிக்கங்கள் அனைவரும் துணிந்து செயல்பட வேண்டிய தருணம் இது :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

என்ன ராஜகுரு தொடர்ந்து திரி தேடுகிறார். ஏதேதிற்கோ.

இந்த கம்னியுச மேலைநாடுகள் எல்லாம் வர்க்கப்போராடத்தில் ஈடுபடபோகின்றன. சனனாயக சோசலிச ஸ்ரீலங்கா இவர்களைக்காப்பாத்த நிறைய காசை விசுக்க வேண்டியிருக்கிறது.

யானை இருக்கிற நாடு என்றபடியால் காட்டு யானைக்கூட்டத்திற்குள் ஒரு கூலி யானையை விட்டால் எல்லாவற்றையும் அடிமைகளாய் பிடிக்கலாம் என்று தெரிந்து வைதிருக்கிறபடியால் எல்லாவற்றையும் கஸ்டப்பட்டு சமாளிக்குது. பாவம் ஸ்ரீலங்கா. எங்கை எங்கை வெடிப்பிருக்கோ அங்கை அங்கை எல்லாம் வெடி வைச்சு உடைக்க எவ்வளவு முடியுது தெரியுமா?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

2009 மே 17க்கு பின்னான இலங்கை அரசின் புதிய அரசியல் நிகழ்ச்சி நிரலொன்றை உருவாக்கியுள்ளது. சாமானியர்கள் புரிந்து கொள்ளமுடியாத சிக்கலான ஒரு றொக்கெட் விடும் அறிவியல் அல்ல இது. மிக இலகுவான ஆனால் பாரிய பின்விளைவுகளை தரக்கூடிய மேற்குல எதிர் அரசியல். தமிழ் மக்களின் மத்தியில் குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் அரசியலில் இதை மெல்ல மெல்ல கரைத்து விடுவதன் மூலம் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக மேற்குலகின் அரசியலை உருவாக்குவதாகும்.

உண்மை தான் ராஜகுரு!

இடதுசாரித்தனம் பேசுவதற்குக் கவர்ச்சியாக இருக்கும்!

நீங்கள் சொல்கின்ற வழியில் சிங்களம் போய்க்கொண்டிருப்பதை நானும் அவதானித்துக் கொண்டிருக்கின்றேன்!

இரு இனங்கள் எவ்வளவு ஒற்றுமையான புரிந்துணர்வோடு இலங்கையில் வாழ்கின்றன என்பதை இவர்கள் ஆதாரங்களுடன் விளங்கப் படுத்துகின்றார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.