Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா ஜெயிக்க வடிவேலுதான் காரணம். பாக்யராஜ்

Featured Replies

தேர்தல் நேரத்தில் பிரசாரத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வதும், அதன்பிறகு கறிவேப்பிலையைத் தூக்கி எறிவதுபோல்... கண்டுகொள்ளாமல் போவதும் தி.மு.க. தலைமைக்கு வாடிக்கையாகிவிட்டது என்று இயக்குநர் பாக்யராஜின் ரசிகர்கள் பல ஆண்டுகளாக புலம்பி வருகிறார்கள்.

நடிகை குஷ்பு, நடிகர் வடிவேலு ஆகியோருக்கு தரப்பட்ட மரியாதையில் சிறு அளவுகூட பாக்யராஜுக்குத் தர வில்லை என்ற ஆதங்கமும் அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில், பாக்யராஜை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கேள்விகளைத் தொடுத்தோம்.

தேர்தல் முடிவுகள் பற்றி என்ன நினைத்தீர்கள்?

‘‘இழுபறியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என எதிர்பார்க்கவில்லை.’’

இந்த அளவுக்கு தி.மு.க. படுதோல்வி அடைந்ததற்கு என்ன காரணம்?

‘‘மக்கள் ஒருமித்த மனோநிலைக்கு வந்திருந்ததுதான் காரணம். தேர்தலுக்கு எட்டு மாதங்கள் முன்பே அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்றே நினைக்கிறேன்.’’

நீங்கள் சொல்கிற அந்தக் காலகட்டத்தில்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல், குடும்ப ஆதிக்கம் பற்றி பெரிதாகப் பேசப்பட்டது. இந்தப் பிரச்னைகள்தான் மக்களின் மன மாற்றத் திற்குக் காரணமா?

‘‘எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஜெயலலிதா சொல்லிக்கொண்டு இருந்தது அந்த இரண்டைப் பற்றித்தானே!’’

தி.மு.க.வின் தோல்வி உங்களை எந்த அளவுக்கு பாதித்தது? அரசியல் நமக்குத் தேவையா என்கிற மனநிலை வந்ததா?

‘‘இப்படியெல்லாம் நினைக்கிற அளவுக்கு நான் அரசியலில் தீவிரமாகப் போகவில்லை. சினிமா, பத்திரிகை, மகன் சாந்தனுவுக்காக கதை கேட்பது என எப்போதும் போல் தான் இருக்கிறேன்.’’

தி.மு.க. தேர்தல் நேரத்தில் நடிகை குஷ்பு, நடிகர் வடிவேலு ஆகியோருக்கு கொடுத்த முக்கியத்துவம் உங்களுக்குக் கொடுக்கவில்லையே?

‘‘நான் ஹைதராபாத்தில் இருந்தபோது ஒரு ரசிகர் போன் செய்து அழுதார். ‘குஷ்பு, வடிவேலுவை முன்னிலைப்படுத்திய அளவுக்கு உங்களுக்கு ஏன் சார் இல்லை?’ என்று கண்ணீர் விட்டார். இதில் ‘ஃபீல்’ பண்ணவேண்டிய அவசியமே இல்லை. நான் எதையும் எதிர்பார்த்து நடக்கவில்லை. தேவைப்படும்போது கூப்பிடுகிறார்கள். நானும் போய் பேசிவிட்டு வருகிறேன் என்று சொன்னேன்.’’

கனிமொழி கைது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

‘‘நானும் உங்களை மாதிரி பத்திரிகைகளில் பார்த்து தெரிந்துகொண்டதுதான். தவறான குற்றச்சாட்டுகள் என அவர் சொல்லி இருக்கிறார். நிரபராதி என நிரூபிப்பேன் என்று கனிமொழி உறுதியாகச் சொல்கிறார். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.’’

கருணாநிதியின் தலைமை இடத்தை நிரப்புவது யாராக இருக்கமுடியும்?

‘‘எல்லோரும் ஏற்றுக் கொண்டது ஸ்டாலினை தான். கட்சியிலும் ஒப்புக் கொண்டிருக்காங்க. இதற்கு அழகிரியும் எதிர்ப்புத் தெரிவிக்கல...’’

கடந்த தேர்தலில் தி.மு.க.வில் உறுப்பினராகக் கூட இல்லாத நடிகர் வடிவேலு செய்த பிரசாரம் எந்த அளவுக்கு பயனைக் கொடுத்தது?

‘‘விஜயகாந்துக்கும், வடிவேலுவுக்கும் ‘பெர்சனல்’ பிரச்னை. அதை தி.மு.க. மேடையில் வடிவேலு பேசிவிட்டார். இதில் வேடிக்கை என்னன்னா... அவர் எம்.ஜி.ஆர். பாடல் களை அதிகமா பாடி ஓட்டுக் கேட்டதைப் பார்த்து, இவர் ஏ.டி.எம்.கே.க்குதான் ஓட்டுக் கேட்கிறார் என நினைத்து ரெட்டை இலைக்கு ஓட்டுப் போட்டுவிட்டார்கள்.

இவ்வளவு தெள்ளத் தெளிவா பாடியவர் ஜெயலலிதாவைப் பத்தி பேசல. நானே பிரசாரத்துக்குப் போகிறபோது சில இடங்களில் ரெட்டை விரலைக் காட்டுவாங்க. என்னடா நம்ம ஆள் இப்படிப் போயிட்டாரே என்கிற ஆதங்கம் அவர்களுக்கு. அவர்களின் கையைக் குலுக்கிவிட்டு உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க என்று சொல்லி விடுவேன்.’’

ரஜினியால் மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டதா?

‘‘இல்லைங்க. ஜனங்கள் ஏற்கெனவே தீர்மானித்து வைத்துவிட்டார்கள். அதுதான் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. ரஜினிக்கு அவரது கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது. ஆனால் அதை அவர் ஒரு வாரத்திற்கு முன்பே சொல்லி இருக்கலாம். ‘மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்’ என்று தேர்தல் அன்றுதான் சொல் லவேண்டுமா என்ன? அவர் சொன்னதால் எதுவும் நடந்து விடவில்லை. அவர் முன்பு சொன்னதெல்லாம் நடக்கவில்லையே.’’

தி.மு.க.வின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

‘‘இதைப் போன்று பல தோல்விகளைச் சந்தித்து வளர்ந்திருக்கிற மிகப் பெரிய இயக்கம் தி.மு.க.! சொன்னதை செய்வார் கலைஞர் என்கிற நம்பிக்கை மக்களிடம் இருந் தது. ஆனால், கடைசி எட்டு மாதங்களில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் மக்கள் மனதை மாற்றி விட்டது.’’

இவ்வளவு மோசமான தோல்விக்கு ஈழப் பிரச்னையும் ஒரு காரணமா?

‘‘நான் அப்படி நினைக்கவில்லை. கடந்த எம்.பி. தேர்தலின்போது ஈழத்தில் மிகவும் உக்கிரமான போர் நடந்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி தானே ஜெயித்தது.’’

சீமானின் கட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

‘‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும். சினிமா படப்பிடிப்பு மாதிரி கட்சியை நடத்திவிடக் கூடாது. ஈழத் தமிழர்களுக்காக சீமான் கட்சி நடத்துவது தவறில்லை.’’

இயக்குநர்கள் சங்கத்தில் மோதல்களும் முட்டல்களும் நடப்பது நல்லதா?

‘‘கேள்விகள் கேட்பது தப்பில்லையே! விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதைத்தானே அது காட்டுகிறது. தப்பு நடந்துவிடக்கூடாது என்பதால்தானே அப்படிக் கேட் கிறார்கள். கேள்விகள் கேட்கக் கூடாது என்பது ஜனநாயகம் இல்லை’’ என்று முடித்துக் கொண்டார் பாக்யராஜ்.

Thanks to Kumudam reporter.

To see pictures please click the below link...

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=7960

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவனமாக ஈழத்தமிழர் பிரச்சினையையும் சீமானையும் தவிர்த்துள்ளார். சீமானின் வளர்ச்சியின்வேகம் காரணமா?

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக எல்லா வில்லங்கமான கேள்விகளையும் தவிர்த்துள்ளார்..!! நல்ல அரசியல்வாதியாக வரலாம் மேற்குலகில்..! ஆனால் தமிழ்நாட்டில் சரிப்பட்டு வராது..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.