Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள்

Featured Replies

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள்

பொலிஸாரும் படையினரும் மேற்கொண்டு வருகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது தமிழ் ஊடகவியலாளர்கள் அநாவசியமாக எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற நெருக்கடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கின்றபோதிலும், அரசாங்கம் அது விடயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காண்பிக்காமல் அலட்சிய மனோபாவத்தையே கடைப்பிடித்து வந்திருக்கின்றது. அண்மைக்காலமாக தலைநகர் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் படையினரின் தேடுதல் வேட்டைகளின் போது தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களையடுத்து அவர்களின் பிரச்சினை மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஊடகத்துறை, தகவல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தமிழ்ப் பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களையும் சிரேஷ்ட செய்தியாளர்களையும் தனது அமைச்சுக்கு அழைத்து சிரேஷ்ட பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்து ஆராய வேண்டிய அளவுக்கு அந்த விவகாரம் உயர்மட்டத்துக்கு உறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் ஊடகவியலாளர்கள் முகங்கொடுக்க வேண்டியிருக்கும் பாதுகாப்பு கெடுபிடிகள் குறித்து தமிழ் ஊடகங்களின் பிரதிநிதிகள் அமைச்சர் யாப்பாவுக்கு விளக்கியதையடுத்து, எதிர்காலத்தில் அத்தகைய துரதிர்ஷடவசமான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்வதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்திருக்கிறார். தமிழ் ஊடகவியலாளர்கள் விடயத்தில் பொலிஸார் அல்லது படையினர் தரப்பில் அதிகார துஷ்பிரயோகம் அல்லது அத்துமீறல்கள் இடம்பெறுமானால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்கப் போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழ் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் காலங் கடந்தென்றாலும், இந்தளவுக்கு அக்கறை காட்ட முன்வந்தமைக்காக அமைச்சர் யாப்பாவுக்கு நாம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

தேடுதல் வேட்டைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளின்போது தமிழ் ஊடகவியலாளர்களுடன் பொலிஸார் மற்றும் படையினர் நடந்து கொள்வதில் காண்பிக்கின்ற ஒரு விசித்திரமான போக்கை இச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டவேண்டியிருக்க

  • தொடங்கியவர்

`ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்காதே'; ஊடகவியலாளர் அணி திரண்டு ஆர்ப்பாட்டம்

front.jpg

அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் மீது அரச படையினர் மேற்கொண்டுவரும் கைது, விசாரணை. கெடுபிடி என்பவற்றிற்கு கண்டனம் தெரிவித்து ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் நேற்று வியாழக்கிழமை மாலை கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை 4 மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக ஊழியர் தொழிற் சங்க சம்மேளனம் என்பவற்றின் பிரதிநிதிகளும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

`அடக்காதே அடக்காதே ஊடக சுதந்திரத்தை அடக்காதே', `அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்காதே', `அரசபடை அராஜகத்திற்கு அரசே பதில் சொல்', `வேண்டாம் வேண்டாம் மீண்டுமொரு தடவை ஊடக சுதந்திர இருட்டடிப்பு', அவசரகாலச் சட்டம் மூலம்தமிழ் ஊடகத்துறையை அடக்க முயலாதே' போன்ற பாதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமெழுப்பினர்.

அரச தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை காண்பித்தபோதும் அதனை உதாசீனம் செய்து தமிழ் ஊடகவியலாளர்களை கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டமை மற்றும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளின் போது நூற்றுக் கணக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களை புகைப்படமெடுத்து பிரசுரித்தமை தொடர்பாக இரு தமிழ்ப் பத்திரிகைகளின் அலுவலகங்களுக்குள் நுழைந்து விசாரணைகளை மேற்கொண்டமை உட்பட அதிகரித்துள்ள கெடுபிடிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தே தமிழ், சிங்கள ஊடகவியலாளர்களால் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேவேளை, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேலக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் கலாநிதி ந.குமரகுருபரன், செயலாளர் சட்டத்தரணி த. ஜெயரட்ணராஜா, மாநகர சபை உறுப்பினர் ஆர். ராஜேந்திரன், கொழும்பு அமைப்பாளர் எஸ். முரளிதரன், புதிய இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தர் நடராஜா ஜனகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

`ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்காதே'; ஊடகவியலாளர் அணி திரண்டு ஆர்ப்பாட்டம்

அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் மீது அரச படையினர் மேற்கொண்டுவரும் கைது, விசாரணை. கெடுபிடி என்பவற்றிற்கு கண்டனம் தெரிவித்து ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் நேற்று வியாழக்கிழமை மாலை கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை 4 மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக ஊழியர் தொழிற் சங்க சம்மேளனம் என்பவற்றின் பிரதிநிதிகளும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

`அடக்காதே அடக்காதே ஊடக சுதந்திரத்தை அடக்காதே', `அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்காதே', `அரசபடை அராஜகத்திற்கு அரசே பதில் சொல்', `வேண்டாம் வேண்டாம் மீண்டுமொரு தடவை ஊடக சுதந்திர இருட்டடிப்பு', அவசரகாலச் சட்டம் மூலம்தமிழ் ஊடகத்துறையை அடக்க முயலாதே' போன்ற பாதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமெழுப்பினர்.

அரச தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை காண்பித்தபோதும் அதனை உதாசீனம் செய்து தமிழ் ஊடகவியலாளர்களை கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டமை மற்றும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளின் போது நூற்றுக் கணக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களை புகைப்படமெடுத்து பிரசுரித்தமை தொடர்பாக இரு தமிழ்ப் பத்திரிகைகளின் அலுவலகங்களுக்குள் நுழைந்து விசாரணைகளை மேற்கொண்டமை உட்பட அதிகரித்துள்ள கெடுபிடிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தே தமிழ், சிங்கள ஊடகவியலாளர்களால் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேவேளை, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேலக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் கலாநிதி ந.குமரகுருபரன், செயலாளர் சட்டத்தரணி த. ஜெயரட்ணராஜா, மாநகர சபை உறுப்பினர் ஆர். ராஜேந்திரன், கொழும்பு அமைப்பாளர் எஸ். முரளிதரன், புதிய இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தர் நடராஜா ஜனகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

- தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான சித்திரவதை: பாதுகாப்பு அமைச்சிடம் முறைப்பாடு

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான சித்திரவதையைக் கண்டித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு பல ஊடக அமைப்புகளின் சார்பாக முறைப்பாட்டுக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.பாரதி, இலங்கை ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் பாலசூர்யா, இலங்கை முஸ்லிம் ஊடகவியலாளர் பேரவையின் தலைவர் என்.எம். அமீம், சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீதா ரஞ்சனி, ஊடகத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் தர்மசிறி லங்கபெலி ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

தமிழ் ஊடக நிறுவனங்களில் தேடுதலை மேற்கொள்ளவும் தமிழ் ஊடகவியலாளர்களைக் கைது செய்யவும் அவசரகால சட்ட நடைமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் தகவல் அமைச்சினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளும் கூட இத்தகைய கைது நடவடிக்கைகளின் போது நிராகரிக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையானது ஊடகவியலாளர்களின் பணிச் சூழலை மட்டும் பாதிக்கவில்லை. அவர்கள் தங்கள் வதிவிடங்களில் வாழ்வதற்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் தங்களுடன் விவாதிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 15 ஆம் நாள் யாழில் நமது ஈழநாடு அலுவலகத்தில் சோதனை

டிசம்பர் 17 ஆம் நாள் கொழும்பு தினக்குரல் ஊடகவியலாளர் 12 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டமை

டிசம்பர் 19 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் அமைதி ஊர்வலத்தில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களை அரச படையினர் தாக்கியமை

ஜனவரி 5 ஆம் நாளன்று புகைப்படம் எடுத்த வீரகேசரி மற்றும் தினக்குரல் ஊடகவியலாளர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்டியில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை ஆட்சேபித்து, கண்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இலங்கை ஊழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடகவியலாளர் சங்கம், முஸ்லிம் ஊடக அமைப்பு, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும் கண்டி நுவரேலிய ஊடகங்கள் சங்கங்கள் இணைந்து, மணிக்கூண்டுக் கோபுரத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

நோவூட் செய்தியாளர் ரஞ்சித் ராஜபக்ச மற்றும், கண்டி லங்காதீப செய்தியாளர், ஜே.ஏ.எல். ஜெயசிங்க ஆகியோருக்கான அச்சுறுத்தலை கண்டித்தே, இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

தகவல் மூலம்- பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊடகவியலாளர் பாதுகாப்பு குறித்து மகிந்தவுடன் சந்தித்துப்பேச ஊடக அமைப்புகள் முயற்சி

தமிழ் ஊடகவியலாளர்கள் எந்தவித அச்சமும் இன்றி சுதந்திரமாகப் பணியாற்றுவதை உறுதிப்படுத்துவது தொடர்பாக கலந்தரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு தென்னிலங்கை ஊடக அமைப்புகள் ஸ்ரீலங்காவின் அரசு தலைவர் மகிந்த ராஜபக்சவைக் கோரியுள்ளன.

இது தொடர்பாக ஐந்து ஊடக அமைப்புகள் மகிந்த ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளன.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,

அரச பாதுகாப்பு தரப்பினரால், அவசர காலசட்டத்தினைப் பயன்படுத்தி ஊடகவிலாளர்களை கைது செய்தல், இடையூறுகளை விளைவித்தல், மற்றும் ஊடக நிறுவனங்களை தீவிர சோதனையிடுதல், போன்ற நடவடிக்கையினை அதிகரித்து வருகின்றமையினை காணக்கூடிவாறு இருப்பதுடன், இவை அதிகளவு தமிழ் ஊடகங்களை இலக்காக வைத்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

தமிழ் ஊடகவியலாளர்களை அவசர காலச்சட்டத்தின் கீழ் கைது செய்யும் பொழுது மட்டுமின்றி கடமையில் இருக்கும் போது கூட பாதுகாப்பு தரப்பினர் மூலம், அரசினால் வழங்கப்பட்டுள்ள உத்தியோக பூர்வ அடையாள அட்டையினையும், நிராகரித்து விடுகின்றனர்.

இது ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிக்கும் நடவடிக்கைகளை தடுப்பதோடு, அவர்கள் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றது.

ஆனால் இந்த நிலமை தொடர்பாக உங்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு எமது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆர்வத்துடன் இருப்பதுடன், அதற்காக உடனடியாக நாளையும், நேரத்தினையும், பெற்றுத்தருவீர்கள் என எதிர்பார்க்கின்றோம் என கேட்டுக்கொண்ட அக்கடிதத்தில், இராணுவத்தினரின் அண்மைக் காலத்தில் ஊடகநிறுவனங்கள். ஊடகவியவாளர்கள், மற்றும், ஊடகப்படப்பிடிப்பாளர்களுக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொலை அச்சுறுத்தலுக்குள் தமிழ் ஊடகங்கள்

சுகுணம்

ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்கள் எந்தளவு சுதந்திரக் காற்றினை அனுபவிக்கின்றார்கள் என்பதனை இயங்கும் சுதந்திர ஊடகங்களை வைத்து அறிந்து கொள்ள முடியும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளை பார்த்தால் இவற்றை விளங்கிக்கொள்ள முடியும். இருந்தாலும் ஆரம்ப உலகப் போர் இடம் பெற்ற வேளையில் சுதந்திர ஊடகம் மறுக்கப்பட்டது. காரணம் ஒரு நாட்டின் யுத்த இரகசியங்கள் மற்றும் யுத்தம் நடக்கும் காலங்களில் எதிரி தமது பலவீனங்களை அறிந்து கொள்ள ஊடகங்கள் துணை போகலாம் என்ற உணர்வினைக் கொண்டிருந்தார்கள். எனினும் யுத்தம் இடம் பெறும் காலங்களில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தத

  • கருத்துக்கள உறவுகள்

உம். ஒவ்வொரு முறையும் கொலைகள் விழும்போது தானே ஆர்ப்பாட்டம். இதுவரைக்கும் கொல்லப்பட்ட நிமலராஜன், நடேசன், சிவராம் போன்றவர்களுக்காக என்ன நடந்தது? கடைசியில் மூடி வைக்கப்பட்ட வழக்காகத் தானே மாறிப் போச்சு!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ஊடகவியலாளர்கள் தான் இவ்வாறான சம்பவங்களை மீண்டும் இடம்பெறாமல் தடுக்கவேண்டும். பழைய கொலைகளையும் தூசி தட்டி எழுத வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஊடகவியலாளர்கள் தான் இவ்வாறான சம்பவங்களை மீண்டும் இடம்பெறாமல் தடுக்கவேண்டும். பழைய கொலைகளையும் தூசி தட்டி எழுத வேண்டும்.

அது பிரியோசமே இல்லை!!

இதைப் பற்றி சர்வதேசத்துக்கு கொண்டு செல்லும் விதத்தில் தான் சிங்களத்தின் முகத்திரையை கிழிக்கும் அளவு தங்கியிருக்கின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை தான் சொல்லுறன்.... எல்லாரும் தமிழில எழுதாம ஆங்கிலத்தில அட்லீஸ்ட் 2 பேப்பராவது ஒவ்வொரு நாளும் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் வீரகேசரியும் ஆங்கில வெளியீடு ஒன்றைச் செய்து கொண்டிருந்தது ஈழத்தில். கடைசியில் குறுகிய காலத்தில் அது நஸ்டப்பட்டு நின்று போனது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எதனை காட்டுகிறது....? இலாபம் எண்டால் தான் எங்கட ஆட்கள் செய்வினம் எண்டதைதானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.