Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறன்கள் கைது??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடகங்களை தன் கையில் வைத்துக் கொண்டு, உலகமே தன் பக்கம் என்று நினைத்த மாறன் சகோதரர்களின் கனவை ஸ்பெக்ட்ரம் வழக்கு தகர்த்திருக்கிறது. தயாநிதி மாறனோடு, கலாநிதி மாறனும் கைது செய்யப்படுவார் என்கிற செய்திகளால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் சகோதரர்கள்.

2ஜி விசாரணையை நேரடியாகக் கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றத்தின் ஏ.கே.கங்குலி, ஜி.எஸ்.சிங்வி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பாக ஸ்பெக்ட்ரம் விசாரணையின் தற்போதைய நிலை குறித்த தன்னுடைய 71 பக்க அறிக்கையை புதனன்று சி.பி.ஐ. தாக்கல் செய்தது. சி.பி.ஐ. சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘தயாநிதி மாறன் மீதான புகார்களை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. ஏர்செல் நிறுவனத்தை விற்கச் சொல்லி சிவசங்கரனை தயாநிதி மாறன் நிர்ப்பந்தித்துள்ளார்’’ என்று சொன்னபோது, அதிர்ந்துதான் போனார் தயாநிதி.

ஆ.ராசா கைதுக்குப் பிறகும் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு 2 ஜி வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லை என்றே நம்பப்பட்டது. தங்கள் ஊடக பலத்தால் மாறன் சகோதரர்கள் அப்படி நம்ப வைத்தார்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். சிவசங்கரனின் வருகைக்குப் பிறகுதான் அலைக்கற்றை வழங்கியதில் தயாநிதி எவ்வளவு ஊழல் செய்திருக்கிறார் என்பது வெளியில் தெரியவந்தது.

‘‘எனக்கு முன்பு இருந்தவர்கள் எடுத்த முடிவுகளைத் தான் நானும் பின்பற்றினேன்’’ என்று ஆ.ராசா அதிரடி வாக்குமூலம் கொடுத்தார். அப்போதும் பாரதிய ஜனதா ஆட் சிக் காலத்தில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்த பிரமோத் மஹாஜனையும், அருண் ஷோரியையும் குறிப்பிடுகிறார் என்றே பத்திரிகைகளும் பொது மக்களும் நினைத்தார்கள். காரணம், ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்திகளை அதிக அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்ததே சன் டி.வி.தான்.

பிரஷாந்த் பூஷண் தொடர்ந்த பொதுநல வழக்கில் ‘1999 முதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டது. எக்னாமிக்ஸ் டைம்ஸ், தெகல்ஹா இதழ்கள் தயாநிதி மாறனுக்கு ஊழலில் பெரும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியிட்டன.

இதையடுத்து, சி.பி.ஐ. தரப்பு தயாநிதி மாறனுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்ள தொடர்பு குறித்து விசாரணையை முழுவீச்சில் முடுக்கி விட்டது. முதல் தகவல் அறிக்கைக்கு முந்தைய காலகட்டமான பூர்வாங்க விசாரணையைத் தொடங்கி தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானவையா, அதற்காக ஆதாயம் பெற்றுள்ளாரா என்று விசாரணையின் போக்கை மாற்றியது. இந்த நேரத்தில் சரியாக சிவசங்கரனும் வந்து சேர, மாட்டிக்கொண்டார்கள் சகோதரர்கள்.

2004 மே 23 முதல் 2007 மே 14 வரை தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன். அந்த நேரத்தில், சிவசங்கரனுக்குச் சொந்தமான ஏர்செல் நிறுவனம் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கொல்கத்தா, கேரளா, பஞ்சாப், ஹரியானா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்தது.

ஆனால் தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யாமல் தொடர்ந்து தாமதித்துக் கொண்டிருந்தார். மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத் தின் அனந்தகிருஷ்ணனுக்கு, ஏர்செல் நிறுவனத்தை விற்க வேண்டும் என்று சிவசங்கரனுக்கு தொடர்ந்து பிரஷர் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் பணியாற்றிய ப்ரஹலாத் ஷாந்திகிராம் மற்றும் ராகுல் கோஸ்வாமி ஆகிய இருவரும், இது தொடர்பாக சிவசங்கரனுக்கு தொடர்ந்து நெ ருக்கடி கொடுத்து வந்துள்ளார்கள்.

அனந்தகிருஷ்ணனுக்கும் மாறன் சகோதரர்களுக்குமான தொடர்பு 1997 ஜனவரியில் மேக்சிஸ் நிறுவனத்துடன், டி.டி.எச். ஒளிபரப்பு தொடர்பாக ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தத் தில் தொடங்குகிறது.

சிவசங்கரனுக்கு மறைமுகமாகக் கொடுக்கப்பட்டு வந்த நெருக்கடி, நவம்பர் 2005-ல் சென்னையில் உள்ள சன் டி.வி. அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலாநிதி மாறன் மூலமாக நேரடியாகவே கொடுக்கப்பட்டது. தயாநிதி மாறனும் இது தொடர்பாக சிவசங்கரனிடம் பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளார்.

இந்த தொடர்ந்த நெருக்கடிகளை அடுத்து, சிவசங்கரன், ஏர்செல் நிறுவனத்தில் உள்ள தன் பங்குகளை தயாநிதி மாறனின் சொல்படி, அனந்தகிருஷ்ணனுக்கு விற்கிறார். இது மட்டுமே நடந்திருந்தால், தயாநிதி மாறன் சிக்கியிருக்க மாட்டார். இதற்குப் பிறகு நடந்தவைதான் தயாநிதி மாறனை வசமாகச் சிக்க வைத்திருக்கிறது என்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.

பங்கு விற்பனை முடிந்த உடன் அனந்த கிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் சன் குழுமத்தில் முதலீடு செய்யப் போவதாக அறிவிக்கிறது. இதற்கான மத்திய அரசின் அனுமதி மார்ச் 2007-ல் வழங்கப்படுகிறது. அப்போது தயாநிதி மத்திய அமைச்சராக இருக்கிறார். சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ.600 கோடியும், மாறன்களுக்குச் சொந் தமான மற்றொரு நிறுவனமான சவுத் ஏஷியா எஃப்.எம். நிறுவனத்தில் 111 கோடி ரூபாயும் முதலீடு செய்கிறார் அனந்தகிருஷ்ணன். இந்த முதலீடே மாறன் சகோதரர்களை வசமாகச் சிக்க வைத்துள்ளது. அதோடு ஏர்செல் நிறுவனத்துக்கு மேலும் 14 சர்க்கிளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்கிறார் தயாநிதி.

தொலைத்தொடர்புத் துறையில் நேரடி அன்னிய முதலீடு 74 சதவிகிதத்தை தாண்டக் கூடாது என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு வளைந்து கொடுக்கப்பட்டதை தயாநிதி மாறன் கண்டுகொள்ளாமல் இருந்தது அவருக்குத் தெரிந்தே எல்லாம் நடந்திருக்கிறது என்பதற்கான ஆதாரம் என்கிறார்கள்.

அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் 74 சதவிகிதத்தை வைத்திருந்தாலும், அப்பல்லோ மருத்துவமனையின் சிந்தியா செக்யூரிட்டீஸ் மூலமாக ஏர்செல் நிறுவனத்தில் 99.3 சதவிகித பங்குகளை அனந்தகிருஷ்ணன் வாங்கினார். இதற்கு ஆதாரமாக, மலேசிய பங்குச் சந்தையில் மார்ச் 2006-ல் அனந்த கிருஷ்ணன் தாக்கல் செய்த காலாண்டு அறிக்கையில் ஏர்செல் நிறுவனத்தில் 99.3 சதவிகித பங்குகளை வைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டுகிறார்கள்.

இந்த விதிமீறலை மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருக்கும் போது, அவரது கவனத்துக்கு ஒரு தன்னார்வ அமைப்பு கொண்டு வந்தும், வட இந்திய ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டும், மாறன் அமைதி காத்ததையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கவனமாக விசாரித்து வருகிறார்கள்.

மாறன் குறித்த தங்களது விசாரணையில் முக்கிய கட்டத்தை எட்டிய சி.பி.ஐ., தனது 71 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் கடந்த புதன் அன்று தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், “ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு விற்குமாறு சென்னையைச் சேர்ந்த தொலைத்தொடர்பு மேம்பாட்டாளர் சிவசங்கரன் நிர்ப்பந்திக்கப்பட்டார்.

தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் ஒருங்கிணைந்த சேவை உரிமங்கள் கோரி சிவசங்கரன் விண்ணப்பித்தார். ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி அந்த உரிமங்கள் 2 ஆண்டுகள்வரை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.

உரிமங்களைப் பெறுவதற்காக சிவசங்கரன் பல்வேறு வழிகளில் முயன்றார். இறுதியில் மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு பங்குகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. 2006-ம் ஆண்டில் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை சிவசங்கரனிடம் இருந்து பெற்ற மலேசிய நிறுவனத்துக்கு குறிப்பிட்ட உரிமங்களை ஆறே மாதங்களில் வழங்குவதற்கு தயாநிதி மாறன் உதவினார்’’ என்று சி.பி.ஐ. தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த அறிக்கை தயாநிதி மாறனுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சி.பி.ஐ. திரட்டியுள்ளது என்பதையே காட்டுகிறது. சி.பி.ஐ. பிடியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க தயாநிதி மாறன் டெல்லியில் செய்த ‘லாபி’ எதுவும் எடுபடவில்லை என்பதையும் காட்டுகிறது.

தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, அத்துறையில் செயலாளராக இருந்த உத்தரப்பிரதேச கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான நிருபேந்திர மிஷ்ரா என்பவரை சி.பி.ஐ. விசாரித்துள்ளது. இவர், சி.பி.ஐ.க்கு அளித்த சாட்சியத்தில், சிவசங்கரன் தனது புகாரில் கூறியவை அனைத்தையும் உறுதி செய்துள் ளதாகத் தெரிகிறது.

மாறன் அமைச்சராக இருந்த போது, தொலைத் தொடர்புத் துறை செயலாளராக இருந்த இவரின் சாட்சியம், மாறனுக்கு பெரும் சிக்கலாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவரைத் தவிரவும், அப்போது, தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றிய மூத்த அதிகாரிகள் பி.கே.மிட்டல் மற்றும் ஆர்.ஜே.எஸ். குஷவாஹா ஆகியோரையும் சி.பி.ஐ. விசாரித்துள்ளது.

ஏற்கெனவே, சிவசங்கரன் புகார் தொடர்பாக லண்டனில் உள்ள வங்கியில் பணியாற்றும் இருவரை, சி.பி.ஐ. விசாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் அமைச்சராக இருக்கும் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை மட்டுமல்ல, அவர் தனது பழைய அமைச்சரவை சகாவான ஆ. ராசாவுக்குத் துணையாக போகக் கூடும் என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில். இந்த ஊழல் விவகாரங்களில் கலாநிதிக்கும் தொடர்பு இரு ப்பதால் கலாநிதி மாறனும் கைது செய்யப்படுவார் என்று டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன.

ஆ.ராசா கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவரது கைது பற்றி பத்திரிகைகள் பரபரப்பாக எழுதின. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான ஆவணங்கள் திட்டமிட்டு மீடியாக்களுக்கு கசியவிடப்பட்டது. அவரது கைது பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றான பிறகு, அவர் கைது செய்யப்பட்டு திகார் அனுப்பப்பட்டார். கனிமொழி கைதிலும் இதுவே நடந்தது. இப்போது மாறன் சகோதரர்களின் ஸ்பெக்ட்ரம் தொடர்பு பற்றி கோர்ட்டில் வெளிப்படையாக சொல்லப்பட்டுவிட்டது. இனி இருவ ருக்கும் சம்மன் கொடுப்பது, விசாரணை என்று வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படும். எனவே, விரைவில் அவர்களது கைது இருக்கலாம் எனத் தெரிகிறது.

ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் விசாரணை முழுமையாக முடிக்கப்பட்டு விடும் என்று சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருக்கிறது. இந்நிலையில், வியாழனன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். பிரதமரின் ஆலோசனையின் பேரில் அவர் ராஜினாமா செய்தார்.

- குமுதம் ரிப்போட்டர்

கொலைகாரக் குடும்பம் சிறைப்படுவது மகிழ்வே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.