Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லிபியாவில் செய்திருந்தோம் இலங்கையில் ஏன் இல்லை? கோர்டன் வைஸ் கேள்வி .

Featured Replies

Tuesday, 12 July 2011 06:32

விலங்குகள் மீதான கொடுமைகளை அவுஸ்திரேலியர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.ஆட்கள் மீதான கொடூரத்தனம் தொடர்பான எமது சகிப்புத்தன்மையானது குறைந்தளவிலான தெரிவையே கொண்டுள்ளது.அல்லது பிரிட்டனின்

ஆவணப்படம் கடந்த வாரம் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட பின்னர் இறுக்கமான மௌனம் கடைப்பிடிக்கப்படுவதாய் ஒருவர் நினைக்கக் கூடும்.2009 இல் இலட்சக்கணக்கான தமிழ் பொதுமக்களை இலங்கை "விடுவித்தமை'கொடூரமான விவகாரமாக இருந்ததை ஆவணப்படம் நிரூபித்துள்ளது என்று இலங்கையில் ஐ.நா.வின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றிய கோர்டன் வைஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கொலைக்களங்கள் பற்றி கண்களை மூடிக்கொண்டு இருக்க வேண்டாம் என்ற தலைப்பில் கோர்டன் வைஸ் அபிப்பிராயத்தை சிட்னி மோர்னிங் ஹெரால்ட் லீட் பத்திரிகை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

திங்கட்கிழமை ஏ.பி.சி.இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப் படத்தை ஒளிபரப்பியது.அது கிட்டத்தட்ட பார்க்க முடியாத பயங்கரத்தைக் கொண்டிருந்தது.

சிறுவர்கள் கொல்லப்பட்டமை,சிறைப்பிடிக்கப்பட்டோருக்கு தண்டனை வழங்கப்பட்டமை,ஆயுதம் தரிக்காதோருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டமை,பெண்கள் வல்லுறவுக்குட்பட்டு கொல்லப்பட்டமைக்கான அதிகளவு ஆதாரங்கள் என்பவற்றை அந்த ஆவணப்படம் கொண்டுள்ளது.இந்த ஆவணப்படம் மூன்று வாரங்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டபோது விசனத்திற்கு இலக்காகியிருந்தது.பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.கொடுமையான குற்றங்கள் தொடர்பாக தனது அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென அதிர்ச்சியடைந்திருக்கும் தனது தேசத்துக்கு பிரதமர் டேவிட் கமரூன் மீள உறுதியளித்திருந்தார்.அவுஸ்திரேலியாவில் அவ்வாறு இல்லை.

2009 இல் தமிழ் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் சிறிய நிலப்பகுதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டது.3 இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களை புலிகள் கவசமாக வைத்திருந்தனர்.நீண்டகாலமாக சந்தேகப்பட்டதை ஆவணப்படம் இப்போது உறுதிப்படுத்துகிறது.

ஏப்ரலில் ஐ.நா.வெளியிட்ட அறிக்கையில் மோதல் சூனிய வலயத்தில் புகலிடம் கோரியிருந்த பொதுமக்கள் மீது படிமுறையாக குண்டு வீச்சு நடத்தப்பட்டதற்கு நம்பகரமான ஆதாரம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.காயமடைந்த பெண்கள், சிறுவர்களால் நிரம்பி வழிந்த ஆஸ்பத்திரிகள் மீது குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதாக ஐ.நா.நிபுணர் குழு தெரிவித்ததுடன் பட்டினியால் வாடிக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் தடுக்கப்பட்டதாகவும் கைதிகள் படுகொலை செய்யப்பட்டதாகவும் நிபுணர் குழு கூறியிருந்தது.

விடுதலைப்புலிகளும் பேசமுடியாத அளவுக்கு கொடூரமானவர்களாக இருந்தார்கள். அவர்களும் ஆயிரக்கணக்கானவர்களை கொன்றதுடன் பொதுமக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தினர்.

ஆனால் ஒரு தரப்பின் காட்டுமிராண்டித்தனத்தை தனது சொந்தப் பிரஜைகள் மீதே இறைமையுள்ள அரசாங்கமொன்றின் காட்டுமிராண்டித்தனத்திற்கு சாட்டாக கூற முடியாது என்று ஆவணப்படத்தில் சட்ட நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

ஜெனீவாவில் ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டிருந்தது.தூதுவர்கள்,ஐ.நா.அதிகாரிகளுக்கு இந்த ஒளிநாடா காண்பிக்கப்பட்டது.அந்த பிரதிமைகள் கண்ணீரை ஏற்படுத்தியிருந்தது.அங்கு சபையிலிருந்த இலங்கை இராஜதந்திரிகள் அதனை போலியென நிராகரித்திருந்தனர்.

படகுகளில் செல்லும் தமிழர்கள் போலி அகதிகள் என்று அவுஸ்திரேலியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிப்பது போன்று ஆவணப்படத்தையும் போலியானது என்று நிராகரித்தனர்.

எவ்வாறாயினும் பிரதிமைகள் பொய்யானவை அல்ல.ருவாண்டா,கிழக்கு திமோர், கம்போடியா,பொஸ்னியா தொடர்பான பிரதிமைகள் உண்மையானவை என்பதே எமது உணர்வாக இருந்தது.சனல்4 ஆவணப்படத்தை அவுஸ்திரேலியர்கள் பார்க்க வேண்டும்.தார்மீக ரீதியான தலைமைத்துவத்தை எமது அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.

கால்நடைகள் தொடர்பாக பகிரங்கமாக வெளிப்படுத்தும் தமது விசனத்தை வெளிப்படுத்த அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

கொடூரத்தனத்துக்கான பதிலளிக்கும் கடப்பாட்டை நாம் வழிநடத்திச் செல்ல வேண்டும்.

லிபியாவில் இதனை நாம் செய்திருந்தோம்.இலங்கையில் ஏன் இல்லை

http://www.thinakkural.com/news/all-news/world/7393-2011-07-12-01-03-26.html

சிங்களப் பயங்கரவாதிகளை வழிக்குக் கொண்டுவர சர்வதேசம் ஆக்கிரமிப்புப் பயங்கரவாதிகள் மீது போர்தொடுத்து அவர்களை அழிப்பதைத் தவிர வேறு வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் இனவழிப்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கப் போகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.