Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தத்தில் அப்பாவி மக்கள் இறந்தார்கள்; ஆனால் தொகை தெரியாது

Featured Replies

யுத்தத்தில் அப்பாவி மக்கள் இறந்தார்கள்; ஆனால் தொகை தெரியாது: வாசுதேவ

யுத்தத்தில் அப்பாவி மக்கள் இறந்துள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன் ஆனால் இறந்தவர்களின் தொகைபற்றி எனக்கு எதுவும் தெரியாது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்., கேம்பிரிச் முகாமைத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வடக்கில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். ஜனநாயகம் இருக்கும் போதுதான் இனங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படும். ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும், சமூகப் பொருளாதாரத்தையும் வடக்கு மக்கள் அனுபவிக்க வேண்டும். அதற்கு அரசாங்கம் உறுதியான நிலைப்பாடு ஒன்றை எடுத்து இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.

யுத்தம் முடிவடைந்த போதும் வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னம் தேவையற்ற ஒன்று என நான் கருதுகின்றேன். புலம்பெயர் தமிழர்கள் வடபகுதிக்கு வருகை தந்து வடக்கின் அபிவிருத்தியை எவ்விதம் செய்யலாம் என சில திட்டங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வரலாம்.

வன்னி யுத்ததில் பொது மக்கள் இறந்துள்ளதை ஏற்றுக் கொள்கிறீர்களா? எவ்வளவு போர் இறந்துள்ளார்கள் என்பது ஏதும் தெரியுமா என ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

யுத்தத்தில் அப்பாவி மக்கள் இறந்துள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் இறந்தவர்களின் தொகைபற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் கலாநிதி எஸ்.மோகன், அமைச்சின் அதிகாரியான கலாநிதி ஜி.வி.திலகசிறி மற்றும் அரசியல் பிரிவு பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/24954-2011-07-19-13-16-35.html

யுத்தத்தில் அப்பாவி மக்கள் இறந்தார்கள்; ஆனால் தொகை தெரியாது: வாசுதேவ

வகை தொகையின்றிக் கொன்றால் கணக்கு எப்படித் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்கள் தமிழர்கள் எப்படி தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்
<_< இவன் ஒரு போலி இடதுசாரி. விக்கிரமபாகு கருணாரத்தினவிடமிருந்து பிரிந்து பதவிக்ககவும், பணத்திற்காகவும் சிங்கள இனவாதப் பேய்களுடன் இணைந்துள்ளவன். அதனாலேயே தமிழினக்கொலையை ஆதரித்தும் நியாயப்படுத்தியும் வருகிறான். லங்கா சமசமாஜக் கட்சியின் பெயரைக் கெடுத்துக்கொண்டே இனவாதம் பேசியவன். கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத அரசியல்வாதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.