Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் தொடர்பில் சர்ச்சை: மீள அளவிடவுள்ளது நேபாளம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் தொடர்பில் சர்ச்சை: மீள அளவிடவுள்ளது நேபாளம் _

வீரகேசரி இணையம் 7/20/2011 12:20:53 PM Share

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் ஏற்பட்ட குழப்பத்தினைத் தொடர்ந்து அதனை மீண்டும் அளக்க நேபாளம் முடிவெடுத்துள்ளது.

உலகின் அதி உயரமான சிகரமாகக் கருதப்படும் எவரெஸ்ட் சிகரம் இமயமலைத்தொடரில் அமைந்துள்ளது. இதன் உயரத்தினை 1954 ஆம் ஆண்டு அளந்த இந்தியா எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் என உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

எனினும் அதன் பின்னர் பல்வேறு தரப்பினரல் மேற்கொள்ளப்பட்ட அளவீடுகள் வேறுபட்ட அளவுகளை காட்டி நின்றன.

இதேபோல் சீனாவும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,844 மீட்டர் எனவும் மேற்பகுதியில் உள்ள பனிப் பகுதியுடன் சேர்த்து கணக்கிடும் போது அதன் உயரம் 8.847 மீட்டர் எனவும் தெரிவித்துள்ளது .

இந்நிலையில் எவரெஸ்ட்டின் உயரம் தொடர்பில் சர்ச்சை நிலவி வருகின்றது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த நேபாள நாட்டின் நிலச்சீர்திருத்தம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் பேச்சாளர் கோபால் கிரி, கடந்த ஆண்டு நேபாள், சீனா இடையே எல்லைப்பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடந்த போது சீனப் பிரதிநிதிகள் எவரெஸ்ட் சிகரத்தின் சரியான உயரம் 8,844 என கூறினர்.

முதன்முதலாக 1856 ஆம் ஆண்டு தான் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அளவீடு செய்யப்பட்டது. இது அடி அளவீட்டின் படி 29 ஆயிரத்து 29 அடி(29029 ) என அளவிடப்பட்டது.

தற்போதைய நவீன தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட நிலையில், மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தினை துல்லியமாக அளவிட அமைச்சு முடிவு செய்துள்ளது. அதன் பிறகே இந்தியா கூறிய அளவு சரியானதா?, சீனா கூறிய அளவீடு சரியானதா? என்ற குழப்பத்திற்கு விடை கிடைக்கும் என ‌கோபால் கிரி தெரிவித்தார்.

எனினும் சிகரத்தினை அளவிட சுமார் 2 ஆண்டுகள் தேவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32779

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தன் வின்ரருக்கு மலையை அளந்திருப்பான், மற்றவன் சம்மருக்கு மலையை அளந்திருப்பான்....

உலகத்திலை ஆயிரம் பிரச்சினை நடக்குது, அதைப் பாக்கிறதை விட்டுட்டு... இதுக்கெல்லாம் ஏன் சர்ச்சை படுறாங்கள்.

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் திமிங்கிலத்தின் எலும்புகளை கண்டெடுத்துள்ளார்கள்.

அந்தப் பகுதி பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஆழமான கடல் பகுதியாக இருந்தது.

கால மாற்றத்தில் ஏற்பட்ட நிலத்தட்டுக்களின் அசைவுகளால், அது மலையாக மாறியது என ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

1954 ம் அளந்தை 60 வருடத்திற்கு பின் ஒப்பிட்டுப் பார்த்து சர்ச்சை படாதீங்கப்பா. 60 வருசத்திலை மலை இன்னும் கொஞ்சம் வளந்திட்டுது அவ்வளவு தான்..

  • கருத்துக்கள உறவுகள்

பூமியின் கண்டத் துண்டுகள், பூமியினுள் உள்ள லாவாவின் மீது மிதந்து கொண்டிருக்கின்றன!

இவை ஒன்றோடொன்று உரசிக் கொள்கின்றன.

இந்திய உபகண்டத்தின் கண்டத் துண்டும், ஐரோப்பிய கண்டத்தின் கண்டத் துண்டும், இமய மலைத்தொடரின் அடியில், ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருக்கின்றன!

இந்திய உப கண்டத் துண்டு, ஐரோப்பிய கண்டத்துண்டை, நிலப் பகுதி நோக்கி நெருக்குவதால், இமய மலை உயர்ந்து கொண்டிருக்கின்றது!

இமய மலைத்தொடர், உருவாகியதே இதனால் தான்!

a4f1.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.