Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா தள்ளாட்டம்: அச்சப்படுகிறது சீனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தள்ளாட்டம்: அச்சப்படுகிறது சீனா

அமெரிக்கா தற்போது தனது பெரும் கடன் சுமையில் இருந்து மீள வழி தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது.

தற்போதைய சூழலில், சீனா தன்னைக் காத்துக் கொள்வதற்கு மிகச் சில வழிகளே இருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் மொத்தக் கடன், தற்போது 14.3 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, கடன் பத்திரங்களாக, அமெரிக்காவிடம் இருந்து 1.16 டிரில்லியன் டாலர் அளவுக்கு வாங்கியுள்ளது. 2010 அக்டோபரில், இது 906 பில்லியன் டாலராக இருந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவிடம் இருந்து கடன் பத்திரங்கள் வாங்கியுள்ளன.

பெரும் கடன் சுமையில் அமெரிக்கா மூழ்குவதை இரண்டாண்டுகளுக்கு முன்பே சீனா உணர்ந்திருந்தது. 2009, மார்ச் 12ம் தேதி உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபோ,"அமெரிக்காவுக்கு பெரிய அளவில் கடன் அளித்துள்ளோம். அதுபற்றி எங்களுக்குக் கவலை ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாகச் சொல்வதானால் நான் கவலையில் ஆழ்ந்துள்ளேன்.

அமெரிக்காவின் வார்த்தைகளில் சொல்வதானால், நம்பகத் தன்மையை நிலைநிறுத்துங்கள். சீனச் சொத்துக்களின் பாதுகாப்புக்கு உறுதியளியுங்கள்' என்று, வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் இதுகுறித்துப் பேசிய சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ,"முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், பொறுப்பான கொள்கை முடிவுகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என நம்புகிறோம்' என்றார்.

சீனாவிடம் தற்போது அன்னிய செலாவணி இருப்பு, 3 டிரில்லியன் டாலர். பிற நாடுகள் எதுவும் இந்தளவுக்கு அன்னிய செலாவணி இருப்பை மேற்கொள்ளவில்லை. இந்த இருப்பில் பெரும்பான்மை டாலர் வடிவில் தான் உள்ளன. இவை மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில், கடன் பத்திரங்கள் மற்றும் டாலர் தொடர்பான பல்வேறு வடிவங்களில் பங்குச் சந்தை உட்பட அமெரிக்காவிலேயே முதலீடு செய்யப்படுகின்றன. உள்நாட்டுச் சேமிப்பை ஊக்குவித்தல், சீனக் கரன்சியான ரென்மின்பியின் மதிப்பை டாலரை விடக் குறைத்து வைத்துக் கொள்ளல் போன்றவை அக்கொள்கைகளில் குறிப்பிடத் தக்கவை.

ஆனாலும், அமெரிக்க பொருளாதார இறங்குமுகம், சீனாவின் வளர்ச்சிக்கு சிக்கலைத் தரும். சீனத் தயாரிப்புகளை அமெரிக்கா வாங்குவதைக் குறைத்தால் கூட, வேலைவாய்ப்பு அளவு சீனாவில் குறையும். அதே சமயம், டாலர் பரிமாற்ற வர்த்தகம் என்பது உலகில் முன்னணியில் இருப்பதால், சீனா தன் நிலையை சாதகமாக்கிக் கொள்ள அமெரிக்காவிடம் சில புதிய ஏற்றுமதிக் கொள்கை அணுகுமுறையைக் கூட பின்பற்றலாம்.

தற்போது அமெரிக்காவின் சிக்கலான நிலை, சீனாவையும் பெரும் சிக்கலுக்குள் தள்ளியுள்ளது. இதனால், சீனா தன்னை காத்து கொள்வதற்கு மிகக் குறைந்த வாய்ப்புகளே இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து சீன பொருளாதார நிபுணர் யாவோ வெய் கூறியதாவது:

இது அமெரிக்கா, சீனாவுக்கு ஒரு எச்சரிக்கை. சீனாவுக்கு குழப்பமான சூழல். அமெரிக்க டாலரில் கடன் பத்திரங்களை வாங்குவது குறித்து சீனா மறுபரிசீலனை செய்ய வேண்டும். எதிர்காலத்தில் டாலர் பாதுகாப்பானதா என்பது பற்றி யோசிக்க வேண்டும்.

தனது அன்னிய செலாவணி இருப்பைக் குறைப்பது, ரென்மின்பியை உலகளவிலான கரன்சியாக்குவது, அன்னிய செலாவணி இருப்பை வேறு கரன்சிகளில் முதலீடு செய்வதன் மூலம் பொருளாதார தடுமாற்றத்தை சீனா தடுத்து நிறுத்த முடியும். ஆனால், அதிக தாமதம் சீனாவுக்கு அபாயமானது. இவ்வாறு யாவோ வெய் தெரிவித்தார்.

அமெரிக்காவின் கடன் சுமை மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகளின் கடன்சுமை, தங்கம் விலை உயர்வு ஆகிய பிரச்னைகளும் சீனாவுக்கு சவால் விடும் அளவில் உள்ளன. ஏனெனில், உலக நாடுகள் முழுவதும் தங்கள் முதலீடுகளின் மதிப்பைக் குறையவிடாமல் தடுக்க ஆரம்பித்துள்ளன. இதற்கான அறிகுறிதான் தங்கம், வெள்ளி விலை ஏற்றம். கச்சா எண்ணெய் விலை அதிகரிக்காத நிலை ஆகும். மிகவும் வளர்ந்த பொருளாதார நாடாக கருதப்படும் சீனாவுக்கு இந்தச் சிக்கல் எதிர்பாராதது. அதே சமயம், அதிக அபாயங்களைக் கொண்டது.

http://www.pathivu.com/news/17507/57/.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி தமிழ் அரசு, உங்கட அரசு கொச்சம் உதவலம்தனே, உங்கட உடம்பு முழுக்க என்னமா தங்கம் கொட்டி கிடக்கு !!!!!!!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி தமிழ் அரசு, உங்கட அரசு கொச்சம் உதவலம்தனே, உங்கட உடம்பு முழுக்க என்னமா தங்கம் கொட்டி கிடக்கு !!!!!!!!!!!!!

காலம் வரும்போது பார்ப்போம் உடையார்.

அமெரிக்க பொதுநலச் செலவுகளில் டிரில்லியன்களை வெட்டுவதாக ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் உறுதிமொழி எடுக்கின்றனர்

By Patrick Martin

21 July 2011

அடுத்த மாதம் கூட்டாட்சி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையை தவிர்க்க “உகந்ததைப் பேசும்” நேரம் வந்து விட்டது என்று கூறி ஜனாதிபதி ஒபாமா காங்கிரஸ் தலைவர்களை அழைத்தார். அப்பொழுது கொடுக்க வேண்டிய நிதிகள் அனைத்தையும், ஆகஸ்ட் மாதம் 3ம் திகதியில் சமூகப் பாதுகாப்புக் காசோலைகள் தொடங்கி பல கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்க முடியாமற் போகலாம் என்று நிதியமைச்சரகம் கணித்துள்ளது.

செனட்டில் மூன்று ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் மூன்று குடியரசுக் கட்சியினரும் “அறுவர் குழு” என அழைக்கப்படுவோர், செவ்வாயன்று இந்த ஆறு செனட் உறுப்பினர்களின் ஆதரவையும் கொண்ட வரவு-செலவுத் திட்டத்தில் வெட்டுக்களை ஏற்படுத்தும் உடன்பாட்டை அறிவிப்பதற்கான முயற்சிகளை மீண்டும் தொடக்கினர். கன்சர்வேடிவ் கட்சியின் ஒக்லாகோமாவைச் சேர்ந்த டோம் கோபர்ன் மே மாதம் குழுவில் இருந்து விலகினார், ஆனால் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவியில் கூடுதலான 117 பில்லியன் டொலர்கள் வெட்டுக்கள் வேண்டும் என்ற அவருடைய கோரிக்கையை மூன்று ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஏற்றவுடன் மீண்டும் குழுவில் பங்குபற்றுகிறார்.

அறுவர் குழு உடனடியாக வரவு-செலவுத் திட்டத்தில் 500பில்லியன் டொலர்கள் வெட்டுக்கள் தேவை என்று அழைப்பு விடுகிறது; இதைத்தவிர பல துறைகளில், சுகாதாரப் பாதுகாப்பு, போக்குவரத்து, இராணுவம், விவசாயம், போன்றவற்றில் 3.2 டிரில்லியன் டொலர்கள் கூடுதல் குறைப்பையும் நாடியுள்ளது; ஆனால் எப்படிப்பட்ட திட்டங்கள் குறைப்பிற்காகத் தெரிந்தெடுக்கப்பட வேண்டும் என்பது சட்டமன்றக் குழுக்கள் இத்துறைகளை மீது அதிகார வரம்பைக் கொண்டவற்றால் நிர்ணயிக்கப்படும் எனக் கூறப்பட்டுவிட்டது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே கடன் வரம்பினை உயர்த்துவதற்கான வழிவகையில் ஒபாமாவின் நிலையில் ஏற்பட்டுள்ள கணிசமான மாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், குறுகிய காலம் கடன் வரம்பை நீட்டிக்க வேண்டும் என்பதில் கையெழுத்திட ஒபாமா இனி மறுக்க மாட்டார், ஆனால் பெரிய பற்றாக்குறைக் குறைப்புப் பொதியில் உடன்பாடு மற்றும் காங்கிரஸிற்கு அதை இயற்றுவதற்காக அதிக கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஒப்புக் கொண்டால்தான் இது அவரால் ஏற்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இத்தந்திரோபாயத்தின் தெளிவான நோக்கம் அறுவர் குழு கூறும் வழியே உடன்பாட்டிற்கு கதவைத் திறந்து வைத்தல் என்பதாகும். அக்குழுவின் திட்டம் இன்னும் குடியரசுக் கட்டுப்பாட்டிலுள்ள மன்றத்தில் நிராகரிக்கப்படவில்லை. ஒரு இடைக்கால தடுப்பு நடவடிக்கை என்னும் முறையில் வெள்ளை மாளிகை மக்கோனல்-ரீட் திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கிறது. அது ஒபாமாவிற்கு கடன் வரம்பை உயர்த்த ஆகஸ்ட் 2 வரை அவகாசம் கொடுக்கிறது; செலவு வெட்டுக்கள் 1.5 டிரில்லியன் டொலர்கள் வரை இருக்குமாயின் இந்த அதிகாரம் பயன்படுத்தப்படலாம்.

காங்கிரஸில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைக்கு இன்னும் தீர்வு ஏதும் வரவில்லை; மன்ற குடியரசுக் கட்சியினர் எவ்வளவு குறைவாக இருந்தாலும் செல்வந்தர்கள் மீதான வரி அதிகரிக்கப்படக்கூடாது என்றும் கணிசமான பெரும்பான்மையினர் கடன் உச்சவரம்பை மீறுவது இன்னும் பெரிய நிதிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.

மன்ற வரவு-செலவுத் திட்டக் குழுவின் தலைவர் ரியன் அறுவர் குழுவின் திட்டமான செல்வந்தர்களுக்கு வரி 35ல் இருந்து 29 சதவிகிதம் எனக் குறைக்கப்படுவதை பாராட்டினார்; மேலும் பெருநிறுவன வரிவிகிதங்கள் குறைப்பையும் பாராட்டினார்; ஆனால் சுகாதாரப் பாதுகாப்புச் செலவுகளில் போதுமான வெட்டுக்கள் இல்லை என அவர் புகார் கூறினார்.

இதற்கிடையில் கடன் தரம் பிரிக்கும் நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீசஸ் அமெரிக்கப் பொதுநிதி தொடர்பாகக் கூடுதல் அழுத்தம் கொடுத்துள்ளது; மேரிலாந்து, புதிய மெக்சிகோ, வர்ஜீனியா, டெனசீ மற்றும் தென் கரோலினா என்னும் ஐந்து மாநிங்கள் தரம் கீழிறக்கப்படும் திறனை எதிர்கொள்கின்றன, ஏனெனில் அவை கூட்டாட்சி வருமானத்தைத்தான் அதிகம் நம்பியுள்ளன என்று கூறுகிறது. “அமெரிக்க அரசாங்கத்தின் தரம் Aa1 அல்லது அதற்கும் கீழே குறைக்கப்டுமாயின், இந்த ஐந்து மாநிலங்களின் தரமும் கீழிறக்கப்படும்” என்று மூடிஸ் செவ்வாயன்று அறிவித்துள்ளது.

http://www.wsws.org/tamil/articles/2011/july/110723_dem.shtml

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி தமிழ் அரசு, உங்கட அரசு கொச்சம் உதவலம்தனே, உங்கட உடம்பு முழுக்க என்னமா தங்கம் கொட்டி கிடக்கு !!!!!!!!!!!!!

மலேசியா முருகன்ரை, தங்கத்திலை தான்...... உடையாருக்கு கண். :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலேசியா முருகன்ரை, தங்கத்திலை தான்...... உடையாருக்கு கண். :D:lol:

உடையார் முருகனை விட்டுவிடுங்கோ அவர்தான் நல்ல கம்பிரமாக நிற்கின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.