Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2,709 ஆசிரியர்கள் புதிதாக நியமனம்! 230 பேர் மட்டுமே தமிழர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2,709 ஆசிரியர்கள் புதிதாக நியமனம்! 230 பேர் மட்டுமே தமிழர்கள்!

Published on July 27, 2011-10:34 am

நாடுமுழுவதும் 2,709 ஆசிரியர் நியமனங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன. இதற்கான அறிவித்தலை கல்வி அமைச்சு விடுத்துள்ளது. எனினும் அவற்றில் 230 நியமனங்கள் மட்டுமே தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சின் அறிவித்தல்படி 1,662 சிங்கள மொழி மூல ஆசிரியர்களும் 230 தமிழ் மொழி மூல ஆசிரியர்களும் 138 அழகியல்பாட ஆசிரியர்களும் 84 தகவல் தொழில்நுட்ப பாடஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இதற்கான நியமனக் கடிதங்கள் விரைவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடாக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அரசு விரைவில் 4,000 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் என்று இரு மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. எனினும் அதில் அரைவாசிப்பேருக்கு மட்டுமே இப்போது நியமனங்கள் வழங்கப்படுகின்றன. ஏனையோருக்கும் நியமனங்கள் வழங்கப்படுமா? என்று தகவல் இல்லை.

http://www.saritham.com/?p=27820

வடமகாண கல்விப்பணிப்பாளர் கட்டாய லீவில் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்?

July 27, 2011

வடமாகாண கல்விப்பணிபாளர் க.விக்னேஸ்வரன் இன்று கட்டாய லீவில் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். பல்வேறு குற்றச்சாட்டுக்களின் காரணமாக ஆளுனரால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரைத் தொடர்ந்து பல உயர் அதிகாரிகள் மீதும் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. அரச தரப்பினரின் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக தேர்தலில் ஆதரவாக செயற்படவில்லை என்ற காரணத்தினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கிறது எனினும் இதனை ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை. இக்காரணம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தேர்தலில் வீட்டுக்கு ஆதரவாகச் செயற்பட்ட பலர் வீட்டுக்கு அனுப்பப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது என திணைக்கள அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்

http://www.alaikal.com/news/?p=77265

இவை தமிழருக்கு முழுமையான சுயாட்சி ஒன்றே தீர்வு என்பதை வலியுறுத்துகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த 230 ல.... எத்தினை மூனாவோ... தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.