Jump to content

இந்தியாவில் சினிமாவினால்...


Recommended Posts

கள நண்பர்களே, அதிலும் குறிப்பாக இந்திய நண்பர்களே, உங்களிடம் ஒரு கேள்வி, இப்பொழுதெல்லாம் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் ஒரு படம் வெளியானால் அந்த படம் வசூலில் சாதனை எண்டு வரும் செய்திகள்தான் அதிகம், ஆனால் படம் ஆக கூட 3 மாதங்களுக்கு மிஞ்சி ஓடாது, உதாரணத்துக்கு சந்திரமுகி படம் வந்தது அது வசூலில் தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை எண்டு சொன்னார்கள், அதன் பிறகு விஜயின் படங்கள் திருப்பாச்சி, கஜினி, மன்மதன் என்று பல படங்கள் ஒவ்வொரு மாதமும் றிலிஸ் ஆகிக்கொண்டு இருக்க படமும் ஹிட் ஆகி, பணத்தை வாரி இறைக்கின்றது, இந்த பணம் எப்படி வருகினறது? இந்தியாவில் இருப்பவர்கள் சினிமாவை நம்பி வாழ்கின்றார்களா? அல்லது அவர்கள் சினிமாவுக்கு அடிமையாகிவிட்டார்களா? இதைப்பற்றி அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும்,,

மு.கு: இந்த கருத்துப்பிரிவு வீன் சச்சரவுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆரம்பிக்கவில்லை...

Link to comment
Share on other sites

நல்ல கேள்வி.....

இப்போது இந்தியாவில், குறிப்பாக 1996க்கு பின் தனி நபர் வருமானம் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.... எனவே வாழ்க்கைத்தரமும் அதனுடன் சேர்ந்தே உயர்ந்திருக்கிறது... பொழுது போக்குக்காக நிறைய செலவு செய்யப்படுகிறது.... என் தந்தை காலத்தில் எல்லாம் 10,000 ரூபாய் சம்பளம் என்பது எட்டாக் கனியாக இருந்தது.... கிடைத்த சம்பளத்தை வைத்து குடும்பத்தை ஓட்டுவதே அவர்களுக்கு எல்லாம் சவாலாக இருந்தது.... எனவே வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு படங்கள் தான் அவர் குடும்பத்துடன் பார்ப்பார்....

இப்போது அப்படி அல்ல.... எங்களுக்கெல்லாம் எடுத்தவுடனே 5 டிஜிட் சேலரி கிடைக்கிறது.... பொழுதுபோக்குகளுக்கு நிறைய செலவிட முடிகிறது.... வாரம் ஒரு சினிமா, தீம் பார்க் என்று செலவு செய்கிறோம்....

இப்போ இங்கே "பரமசிவன்" பட்டையை கிளப்ப ஆரம்பித்திருக்கிறது....

Link to comment
Share on other sites

இந்தியாவில் சினிமாவும் இப்போது பணம் கொழிக்கும் தொழிலாகி இருக்கிறது.... இந்திய சினிமாக்களுக்கு உலகளாவிய வரவேற்பு கிடைக்கிறது.... நம்ம ஊர் இந்தியன் பாகிஸ்தானிலும் சக்கை போடு போட்டது....

பன்டி அவுர் பப்ளி என்ற சமீபத்தில் வந்த இந்தி திரைப்படம் யு.கே. டாப் 10ல் இடம் பெற்று அசத்தியது....

அரசுக்கும் நல்ல வருவாய்.... அப்புறம் என்ன?

Link to comment
Share on other sites

நண்பர் Danklas நல்ல முயற்ச்சி!!

தற்கால தமிழக இளைய சமுதாயம் வளர்ச்சி பாதையில் உள்ளது.இங்கு சினிமா பைத்தியங்கள் அதிகம் என்றாலும் அது பொழுது போக்கு என்ற நிலையில் தான் உள்ளது. முன்னொரு காலத்தில் சினிமாவில்ருந்து முதல்வர் நாற்காலி என்ற போக்கு மாறி விட்டது. தற்போது விஜயகாந்து அவ்வாரே முயன்ரு தற்போது ஆதரு இல்லாமல் இரூப்பது ஒரு உதாரணம்.

அமெரிக்க கம்பெனிகளின் படியெடுபால் தற்கால இளைய சமுதாயம் 5 இலக்க சம்பளத்தை வெகு விரைவாக தொட்டு விட்கிறது. சென்னையில் கார் தயாரிப்பு நிறுவனங்களும்,கண்ணி சார் நிறுவணங்களும் பணத்தை அள்ளி கொட்டுகிறது. நம் கலாசர படி சென்னை மக்கள் வாழ்வதால் அவர்களுக்கு தேவை இல்ல்லாத செலவு இல்லை. சினிமா மட்டுமே ஒரே பொழுது போக்கு.

சில நேரம் கிராம பகுதியில் இன்னும் ரசிகர் மன்றம் போன்ற அபத்தம் இருந்தாலும் அது விடை பெற நீண்ட நாள் ஆகாது.

Link to comment
Share on other sites

கன்னத்தில் முத்தமிட்டால் படம் உலக திரைபல விழா பலவற்றில் திரையிட பட்டு நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.

Link to comment
Share on other sites

ஒரு காலத்தில் 200 படங்கள் ஆண்டுக்கு வெளிவந்து கொண்டிருதது தமிழ் நாட்டில்.... இப்போது 70 படங்கள் தான் வெளிவருகிறது....

எனக்கு தெரிந்து இப்போது சினிமா மோகம் ஒழிந்து கொண்டு தான் வருகிறது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜய்க்கு ஆதரவு தரக்காரணம் அவரின் திருமணம்.....

Link to comment
Share on other sites

அவர் இலங்கை தமிழ் பெண்ணையா மணந்திருக்கிறார்?

எனக்கு தெரிந்து அவருடன் பள்ளியில் படித்த சங்கீதாவை பல வருடம் காதலித்தே மணந்திருக்கிறார்.... ஆனால் அந்த காதலை மீடியாவுக்கு இன்று வரை மறைத்தே வருகிறார்.....

Link to comment
Share on other sites

வசூல் என்று டன் கூறியதும், ஒரு சுவையான சென்னை பாக்ஸ் ஆபிஸ் புள்ளி விவரம் தருகிறேன்....

ஓபனிங் எனப்படும் முதல் நாள் வசூலில் 20 லட்சம் வாரி சாதனை படைத்தது சந்திரமுகி.... அதன் சாதனையை முறியடித்தது கஜினி (22 லட்சம்).....

இப்போது எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல பரமசிவன் 30 லட்சம் சம்பாதித்து இமாலய சாதனை படைத்திருக்கிறது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய்க்கு ஆதரவு தரக்காரணம் அவரின் திருமணம்.....

அதற்கு முன்பும் ஆதரவு இருந்தது. இப்போது சூர்யாவிலும் மதிப்பு வைத்திருக்கின்றார்கள்.

இருவரும் தமிழர்கள், நல்ல படங்களைத் தருகின்றமை தான் காரணமாக இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இலங்கை தமிழ் பெண்ணையா மணந்திருக்கிறார்?

எனக்கு தெரிந்து அவருடன் பள்ளியில் படித்த சங்கீதாவை பல வருடம் காதலித்தே மணந்திருக்கிறார்.... ஆனால் அந்த காதலை மீடியாவுக்கு இன்று வரை மறைத்தே வருகிறார்.....

சங்கீதா யாழ் புத்தூர் பெண் என்று அறிந்திருக்கின்றேன்

Link to comment
Share on other sites

எது எப்படியோ, தமிழ் நாட்டுக்கு நல்ல மருமகளாகவே அவர் இருக்கிறார்....

எங்கள் ஊர் பெண்ணை முத்தையா முரளிதரனுக்கு கொடுத்திருக்கிறோமே.... அவர் எப்படி இருக்கிறார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊர் பெண்ணை முத்தையா முரளிதரனுக்கு கொடுத்திருக்கிறோமே.... அவர் எப்படி இருக்கிறார்?

முரளிதரனுக்கு மனைவியாக இருக்கின்றார். :wink: :P

Link to comment
Share on other sites

விஜய் சங்கீதாவை காதல் திருமணம் செய்தார். சங்கீதா பள்ளி படிப்பை முடித்த பின் லன்டன் சென்று விட்டதாக அறிந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன்,

விஜய் நல்ல படங்கள் தாறதாலதான் ஈழத்தவர் ஆதரிக்கினம் எண்டு சொன்னதில ஒரு நகைக்குறி போட்டிருந்தாப் பிரச்சினையில்லையெல்லோ? மற்றாக்கள் சீரியசா எடுத்துப்போட்டு பிறகு அதைவைச்சே நாலு பக்கத்தை நிரப்பிறதைத் தவிர்க்கலாமே

Link to comment
Share on other sites

விஜய் சங்கீதாவை காதல் திருமணம் செய்தார். சங்கீதா பள்ளி படிப்பை முடித்த பின் லன்டன் சென்று விட்டதாக அறிந்தேன்.

ஆமாம்.... சேத்துப்பட்டில் உள்ள ஒரு ஐஸ்க்ரீம் பார்லரில் இருவரும் சந்தித்து மணிக்கனக்காக பேசுவார்கள் என்று குங்குமம் இதழில் ஒரு முறை செய்தி போட்டிருந்தார்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுவன்சங்கர் ராஜாவும் லண்டனில் வசித்த இலங்கைப்பெண்ணான சுயா வினை மணமுடித்தார். சன்ரைஸ் கானக்குயில் போட்டியில் முதலாம் இடத்தினை சுயா பெற்றார். விஜய்யின் மனைவி சங்கீதாவும் லண்டனில் தான் வசித்து வந்தார். ஜெய் ஆகாஸ் என்ற நடிகரும் யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்தவர். இவரும் லண்டனில் வசித்தவர். யாழ்ப்பாணம் கட்டுவனைச் சேர்ந்தவர் தான் நடிகர் மோகனைத்திருமணம் செய்தார். அவர் ஜரோப்பா நாடுகளில் ( நோர்வே அல்லது பிரான்ஸ்) ஒன்றில் வசித்தவர். முதல்மரியாதை படத்தில் நடித்த ரஞ்சனியும் லண்டனில் வசிக்கும் ஈழத்தமிழரினைத்தான் மணம்செய்தார். உப்பு படத்தில் ரோஜாவுக்கு ஜோடியாக நடித்த வேந்தனும் லண்டன் வாழ் ஈழத்தமிழர். பாலுமகேந்திரா மட்டக்களப்பில் பிறந்த ஈழத்தமிழர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்,

விஜய் நல்ல படங்கள் தாறதாலதான் ஈழத்தவர் ஆதரிக்கினம் எண்டு சொன்னதில ஒரு நகைக்குறி போட்டிருந்தாப் பிரச்சினையில்லையெல்லோ? மற்றாக்கள் சீரியசா எடுத்துப்போட்டு பிறகு அதைவைச்சே நாலு பக்கத்தை நிரப்பிறதைத் தவிர்க்கலாமே

நீங்கள் தான் அதை சீரியஸ் ஆக்கின்றீர்கள். ராஜாதிராஜாயோ, அல்லது லக்கிலுக்கோ அதை நகைச்சுவையாகத் தான் ஏற்றுக் கொண்டிருள்ளபோது. பிறகேன் இந்த சந்தேகம்

Link to comment
Share on other sites

தகவல்களுக்கு நன்றி கந்தப்பு அவர்களே.....

இவ்வளவு பேர் தமிழ் திரையுலகுடன் இணைந்திருக்கும் போது, பிறகு ஏன் ஈழத்தமிழர் பிரச்சினையை மையப்படுத்தி ஒரு திரைப்படம் கூட வரவில்லை... பாலுமகேந்திரா முயற்சிக்கலாமே....

தெனாலியில் ஓரிரு காட்சிகளில் ஈழத்தமிழரின் இன்னல்களை கே.எஸ். ரவிக்குமார் காட்டியிருந்தார்.... கமலும் மிகச்சிறப்பாகவே ஈழத்தமிழராய் வாழ்ந்திருந்தார்....

மணிரத்னம் அதுபோல் ஒரு முயற்சி எடுத்தார்.... ஆனால் அது நடு நிலையாக இருக்குமா என்பது சந்தேகமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமல் தெனாலியில் அப்படி கதைத்ததால் பலருக்கு அவர் மீது நிறையக் கோபம் உண்டு. அவர் ஈழத்தமிழரை அவமதித்து விட்டதாகவே உணருக்கின்றனர். சொல்லப் போனால் அப்படி யாரும் உச்சரிப்பதில்லை.

இருக்க யுத்தம் காரணமாக படைப்பாளிகள் புலம்பெயர்ந்து விட்டாலும், விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுப் பிரிவு இதுவரைக்கும் 50ற்கு மேற்பட்ட முழுநீளத்திரைப்படங்களைத் தயாரித்திருக்கின்றன. அதிகமாக குறும்படங்கள் வந்திருக்கின்றன.

இதை விட புலம்பெயர்ந்த நாடுகளிலும் படங்கள் வெளிவருக்கின்றன. அஜீவன் அண்ணா கூட பல குறும்படங்களை வெளியிட்டிருக்கின்றார்

Link to comment
Share on other sites

அப்படியா,

நாங்கள் எல்லாம் கமல் மிக தத்ரூபமாக நடித்திருக்கிறார் என்றல்லவா நினைத்தோம்? அவர் மீது கோபப்பட்டு என்ன பயன்... இயக்குனர் மீதல்லவா உங்கள் கோபம் திரும்ப வேண்டும்?

எப்படியிருந்தாலும் 'இஞ்சாருங்கோ' என்ற வார்த்தை தமிழத்தில் பிரபலமானது அந்த திரைப்பட குழுவினரால் தான்.....

Link to comment
Share on other sites

கன்னித்தில் முத்தமிட்டால் படம் என்க்கு மிகவும் பிடித்த ஒன்று. உங்கள் பல பேர் அதற்க்காக என் மேல் பாய வேண்டாம். மனிரத்னம் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு இடுத்து இருகிறார் என்று புரிந்து கொண்டு பார்த்தால் பிரச்சனை இல்லை. விடை கொடு எங்கள் நாடே பாடல் தேசிய விருது பெற்றது

Link to comment
Share on other sites

குற்றப் பத்திரிகை படம் கொஞ்சம் எல்லை மீறியதால் தான் தடை செய்யப்பட்டதாக சொல்கிறார்கள்... அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை......

Link to comment
Share on other sites

என்னதான் நடந்தாலும் என் கொள்கை மாறது. நான் எந்த ஒரு நடிகர்களுக்கும் ஆதரவு இல்லை

ரிரின் போகும் படைலைக்கு படைலை நடிகர்களூக்கு ஆதரவே ஒழிய இந்திய சினிமாவுக்கு அல்ல. இந்திய மக்கள் பாவம் அவர்களை சினிமாவுக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள்

இப்ப வரும் படங்கள் எதில் ஆபாசக் காட்சிகள் இல்லை. அது இல்லாவிட்டால் இந்தியாவில் படம் படு தோல்வியாகிவிடும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனது ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வர அனுமதியளிக்காததால் சங்கடத்தில் அமெரிக்கா ! அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு : அரசாங்கத்தின் தீர்மானத்தால் கடும் அதிருப்தியில் வொஷிங்டன் அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளதால், அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த ஆய்வுகப்பலில், பல்கலைக்கழக மாணவர்களே வருகைத் தருவதாகவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவுமே அனுமதி கோரியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை எனவும், எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், அதற்கான அனுமதியை மறுத்துள்ள இலங்கை அரசாங்கம், எந்தவொரு பிற நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கும் இனி இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது. மேலும், எந்தவொரு ஆய்வு கப்பலையும் இலங்கை கடற்பரப்பிற்குள் இனி அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமையவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதிலளித்துள்ளது. இதேவேளை, சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டிய இலங்கை அரசாங்கம், எந்தவொரு நாட்டின் ஆய்வுகளுக்கும் இனி இலங்கைக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த கப்பலின் தேவைகளை, சர்வதேச கற்பரப்பிற்குள் சென்று பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனிடையே குறித்த அமெரிக்க ஆய்வுக் கப்பல், சென்னை துறைமுகத்துக்குள் செல்ல அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அங்கும் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380126
    • நாகப்பட்டினத்திலிருந்து – காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல், மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது. அதன்படி, மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவைகள் நாகையிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகையை சென்றடையும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த கப்பல் சேவையில், இரு வழிப் பயணத்துக்காக அண்ணளவாக 34 ஆயிரத்து 200 ரூபா அறவிடப்படவுள்ளதுடன் ஒவ்வொரு பயணியும் தம்முடன் 20 கிலோ வீதம் 3 பொதிகளை எடுத்துச் செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1380121
    • இங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் கோயம்புத்தூர்காரார் ஒருவரை சிலவருடங்களுக்கு முன்பு ஏன் தமிழகத்தில் ஊழல் செய்யும் திமுக அதிமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டேன். திமுக, அதிமுக ஊழல் செய்தாலும் மக்களுக்கு ஓரளவு நலத்திட்டங்கள்செய்கிறார்கள். ஆனால் தேசிய கட்சிகள் தமிழகத்தை கண்டு கொள்வதில்லை என்றார். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாதிக்கட்சிகள்.  தேதிமுகவுக்கு கொள்கையே இல்லை என்றார். இன்னுமொருவருடன்  கதைக்கும்போது திமுகவை வேண்டாதபோது அதிமுகவுக்கும் , அதிமுகவை வேண்டாதபோது திமுகவுக்கும் நடுநிலையானவர்கள் சிலர் வாக்களிக்கிறார்கள் என்றார்.  தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பெரியகட்சிகள் பணம் குடுத்து கவருவார்கள் ( திருமங்கலம், R K நகர் தேர்தல் முடிவுகள்). ஒவ்வொரு தொகுதியிலும் , தொகுதியில் அதிக மக்கள் வாழும் சாதிக்காரரை வேட்பாளராக தேர்வு செய்வார்கள்.  தலித் சாதியினர் வன்னியருக்கு , வன்னியர் தலித்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.  சில தொகுதிகளில் சில வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கு.  திமுக , அதிமுக்வுக்குள்ள நிரந்தரவாக்குகள், கட்சியில் தனக்கு போட்டியாளரை வேட்பாளராக தலைமை தெரிவு செய்ததினால் வேட்பாளரை விழுத்த சதி திட்டம் உட்பட பல காரணங்கள் ஒருவரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.   இப்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை அதிகம். இதனால் அவர்கள் மோடியை தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எம் ஜீ ஆர், ஜெயலலிதா மாதிரி பிரபல்யமான தலைவராக ஏடப்பாடி இல்லாதது, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்திருப்பது திமுகவுக்கு சாதகம். 
    • ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.   மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.   நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.   உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.   நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள்.  இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.   இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.