Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல்

Featured Replies

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்

"விக்கிலீக்ஸ்' இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி, தி.மு.க., - காங்கிரசார் பெயர்கள் அடங்கிய, சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் நகல் வினியோகிக்கப்படுகிறது.

சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளோர் பட்டியலை வெளியிட வேண்டுமென, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ளோர் குரல் எழுப்பி வருகின்றனர். அப்பட்டியலை, "விக்கிலீக்ஸ்' இணையதளம் சிறிது சிறிதாக அவ்வப்போது வெளியிட்டு, அமளியை ஏற்படுத்தி வருகிறது. "இப்பட்டியல் சரியானது' என, சுவிஸ் வங்கியும், "இப்பட்டியல் தவறானது' என, சம்பந்தப்பட்டோரும் கூறி வருகின்றனர்.

ஆனாலும், இந்த இணைய தளத்தில் வெளியான பட்டியல் ஒரு சிலரைக் கூட சென்றடையாமல், இணைய தளம் தடை செய்யப்பட்டது. இந்த இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாகக் கூறி, தி.மு.க., - காங்., பிரமுகர்கள், அமைச்சர்கள், வி.ஐ.பி.,க்கள் பெயர், அவர்கள் முதலீடு செய்துள்ள தொகை ஆகிய விவரங்கள் அடங்கிய நகல்கள், ஈரோடு மக்களிடம் நேற்று வினியோகிக்கப்பட்டது. அதில், நிரா ராடியா, முன்னாள் பிரதமர் ராஜிவ், நரேஷ்கோயல், கருணாநிதி, ஸ்டாலின், ஆ.ராஜா , எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், லாலு, உட்பட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நகல் உண்மையானதா என்பதை விட, இந்த நகல்கள் அதிக அளவில் ஜெராக்ஸ் எடுத்து மக்களுக்கு வினியோகிக்கப்படுவதால், தி.மு.க., - காங்., பிரமுகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=291071

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ட பேரைக் காணோம் :D

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ட பேரைக் காணோம் :D

சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் இதில் ரதி உங்களின் பெயர் ஏன் வருகின்றது ?உங்கள் பெயர் வேறிடத்தில் அல்லவா தேடவேண்டும். :D :D

இன்று கலவரம் நடாந்த இடத்தில் உங்கள் பெயர் இருக்கும் ரதி, ஏற்கனவே சில சோத்து இன சொறி வேற்று இன பெண்களும் திருட்டில் ஈடுபட்டார்கள் என கேள்விப்பட்டன். :lol:

  • தொடங்கியவர்

சுவிஸ் வங்கியில் என் கணக்கில் ரூ. 35 ஆயிரம் கோடியா?: கருணாநிதி மறுப்பு

சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் பணம் போட்டு வைத்திருப்பதாக வெளியான செய்திக்கு திமுக தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

கருணாநிதிக்கு சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கருணாநிதிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாயும், கலாநிதி மாறனுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாயும் சுவிஸ் வங்கியில் உள்ளதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. விக்கிலீக்ஸின் தகவல்கள் குறித்து தமிழக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின. இந்த நிலையில் அதை மறுத்து கருணாநிதி பேட்டி அளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

ஒரு தமிழ் பத்திரிகை 35 ஆயிரம் கோடி சுவிஸ் வங்கியில் நான் போட்டு இருப்பதாக செய்தி வெளியிட்டு உள்ளது. எது பற்றியும் விசாரிக்காமல் செய்தி வெளியிட்டுள்ளது. அதை நிருபிக்க வேண்டும்.

தவறான செய்தியை வெளியிட்ட அந்த பத்திரிக்கை மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வழக்கறிஞர்களுடன் பேசி முடிவு செய்வோம்.

புதிய தலைமை செயலகத்தை பற்றி ஒரு ஆங்கில பத்திரிகையில் ஒரு தகவல் வந்துள்ளது. யாரோ தவறான தகவலை கொடுத்து இருக்கிறார்கள். புதிய தலைமை செயலகத்தை தனியாகவோ, அதிகாரிகளுடனோ சென்று பார்த்து பலருடைய கருத்துக்களை வெளியிட வேண்டும்.

தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடக் கூடாது. புதிய தலைமை செயலகத்தில் ஆளுநர் உரை படிக்கப்பட்டு விவாதம் நடந்துள்ளது. இதே கட்டிடத்தில் தான் பலமுறை அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது. இந்த இடம் சட்டசபை நிகழ்வுகளுக்கு போதாது என்பதை ஏற்க கூடியதாக இல்லை.

சமச்சீர் கல்வி திட்டத்தை எதிர்த்த ஜெயலலிதா அரசுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது போல புதிய தலைமை செயலக வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். சமச்சீர் கல்வி திட்டத்தை தாமதமாக செயல்படுத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் இடைக்கால இழப்பீட்டை ஈடுசெய்ய கல்வியாளர்களை கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். சமச்சீர் கல்வியின் வெற்றி, சமான்ய மக்களுக்கு, மாணவர்களுக்கு தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

மெட்ரோ ரெயில் திட்டம் மத்திய அரசின் திட்டம். அதைப்பற்றி மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை பிரச்சினையில் அரசியல் ஆதாயத்திற்காக பேசுபவர் ஜெயலலிதா. தி.மு.க. தமிழ் இனத்திற்காக தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறது. தமிழ் இன படுகொலையை திமுக எப்போதும் ஆதரித்தது கிடையாது. இலங்கையில் போர் நடந்தபோது, போர் என்றால் சாகத்தான் செய்வார்கள் என்று கூறியவர்தான் ஜெயலலிதா.

இவ்வாறு கருணாநிதி தனது பேட்டியின்போது தெரிவித்தார்.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=458764&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் பணம் போட்டு வைத்திருப்பதாக வெளியான செய்திக்கு திமுக தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஏன் அதை விட அதிகம் என்று சொல்கின்றார ........................?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.