Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களின் தாயக பூமியில் இருந்து இராணுவம் அகற்றப்படவேண்டும் - மாவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தாயக பூமியில் இருந்து இராணுவம் அகற்றப்படவேண்டும் - மாவை

10 ஆகஸ்ட் 2011

மக்கள் தங்கள் சொந்த மண்ணில் சொந்த வீடுகளில் வாழ வேண்டும்.

தமிழ் மக்களின் தாயக பூமியில் இருந்து இராணுவம் அகற்றப்படவேண்டும். எமது மக்கள் தங்கள் சொந்த மண்ணில் சொந்த வீடுகளில் வாழவேண்டும். அரசு மேற்கொள்ளும் இன ஒழிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என்பதை எமது மக்கள் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். தமிழ் மக்களின் உணர்வுகள் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் மூலம் தீர்ப்பு அளித்துள்ளன. இதனை இந்த அரசு உணர்ந்து செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தின்போது உரையாற்றிய போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அவசரகாலச் சட்டத்தை கைகளில் வைத்துக்கொண்டு, இராணுவ பலத்துடன் இன ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கி உள்ளது.இதற்கு உதவியாக ஜனாதிபதியின் கட்டளையை பிரதமர் இந்தச் சபையில் சமர்ப்பித்துள்ளார்.யுத்தம் முடிந்துவிட்டது; பயங்கர வாதம் ஒழிக்கப்பட்டு விட் டது என்று கூறுகின்றீர்கள். அப்படியானால், எதற்கு அவசரகாலச் சட்டம்?

உடனடியாக அவசரகாலச் சட்டம் நீக்கப்படவேண்டும். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி யுத்தம் முடிவுற்றதாக அரசு பிரகடனப்படுத்தியது. அன்றுமுதல்தான் எமது இனம் திட்டமிடப்பட்டு ஒழிக்கப்படுகின்றது. இன அடையாளங்கள் ஒழிக்கப்படுகின்றன. தமிழ்ப் பிரதேசம் திட்டமிடப்பட்டு சிங்கள, பௌத்த மயப்படுத்தப்படுகின்றது. இது போர்க் குற்றச்சாட்டுகளைவிட மிகவும் பயங்கரமானது.

நாம் தனிப்பட்ட முறையில் இராணுவத்தை குறை கூறவில்லை. இராணுவமும், அரசும் ஜனாதிபதியின் தலைமையிலேயே இயங்குகின்றன. ஜனாதிபதியே பொறுப்பு கூறவேண்டும்.இறுதி யுத்தத்தின்போது முல்லைத்தீவில் 4 இலட்சத்து 20 ஆயிரம் பேர் இருந்தனர் என்று அரச பதிவுகள் சான்று பகிர்கின்றன.

ஆனால், அரசிடம் சரணடைந்தவர்களில் 3 இலட்சத்து 17 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களின் பதிவுகளின்படியே பார்த்தால் எஞ்சியுள்ள ஒரு இலட்சத்து மூவாயிரம் பேரும் எங்கே என்று கேட்கின்றேன்.

இறுதி யுத்தத்தின்போது பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்று கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க, இந்த ஒரு லட்சத்து மூவாயிரம் பேரும் எங்கே இருக்கின்றனர் என்பதைக் கண்டுபிடித்துக் கொடுப்பாரா என்று சவால் விடுக்கின்றேன்.

எமது நிலம் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்படுகின்றது. கடல் வளம் தென்பகுதி சிங்கள மீனவர்களால் சூறையாடப்படுகின்றது. எமது மண்ணில் அரைவாசிக்கும் மேல் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. சம்பூர் மக்கள் இன்றும் தமது சொந்த மண்ணில் கால் பதிக்க முடியவில்லை.இப்படியான நிலையில்தான் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெற்றன. எமது மக்கள் தொடர்ச்சியாக அறுபது ஆண்டுகளாக ஏற்பட்டுவரும் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் கருணா அம்மான் முரளிதரன் கூட தமிழ் மக்கள் அபிவிருத்தியை அல்ல, உண்மையான அரசியல் தீர்வையே விரும்புகின்றனர் என்றார். இதனை ஜனாதிபதி பொறுப்புடன் அவதானித்து செயல்படவேண்டும் எனக் கூறியுள்ளார். அதனைப் பாராட்டுகின்றேன்.எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் வெறும் பேச்சில் மட்டுமே. ஆனால், தேர்தல் முடிந்த சூட்டோடு உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் குகநாதன் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளார். ஆனால், இன்றுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.இதுவரை எத்தனை ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; தாக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், சிவமகாராசா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். அரசு இக்கொலைகளுடன் தொடர்புடைய ஒருவரையாவது கைதுசெய்துள்ளதா என்று கேட்கிறேன்.

கிளிநொச்சியில் எமது இளைஞர் அணித் தலைவர் தாக்கப்பட்டார். இந்த நிலைமைகளைப் பார்த்தால் அரசே ஜனநாயகத்தை ஒழித்துக்கட்ட முனைகின்றது. இவற்றுக்கு எல்லாம் பாதுகாப்பதற்காகவே அரசு அவசரகாலச் சட்டத்தை நீடித்துக்கொண்டே செல்கின்றது. இதனை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/65467/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதை செய்ய உங்களால் முடியுமா மாவை ஐயா அவர்களே .....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.