Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலையும் ஆக்கிரமிப்பும்

Featured Replies

திருகோணமலையும் ஆக்கிரமிப்பும்!

தமிழ் மக்களின் வாழ்விடங்களில் இராணுவத்தை நிலை கொள்ளச் செய்தல், திருகோணமலை நகர்ப்பகுதியிலும் நகரை அண்டியிருக்கும் பகுதிகளிலும் மேலும் சிங்கள ஆக்கிரமிப்பை விஸ்தரித்தல். இவையே புத்தர் சிலையின் பின்னாலுள்ள கபட அரசியலாகும் சமீபத்தில் திருகோணமலை சென்றிருந்தபோது அங்கு சில விடயங்களை அவதானிக்கவும் நிலைமைகள் குறித்து சிலருடன் உரையாடவும் முடிந்தது. அவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுடன் சில விடயங்களை பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மணிக்கூண்டுக் கோபுரத்தின் அருகில் திடீரென புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை திருகோணமலையின் இயல்பு நிலை சீராக இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த பதற்றமும் ஒருவகையான அச்சமுமே காணப்படுகிறது எனலாம். புத்தர் சிலை விவகாரத்திற்கு, தமிழ் மக்கள் தமது சாத்வீகரீதியான எதிர்ப்பைத் தெரிவித்தபோதும் சிங்கள ஆளும்வர்க்கம் அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக சிறிலங்கா அரசு, புத்தர் சிலையை அடிப்படையாகக் கொண்டு திருகோணமலை நகரையும் நகரை அண்டிய பகுதிகளையும் இராணுவ நிர்வாகத்திற்கு உட்படுத்தியது. இந்த இராணுவத்தினரை அகற்றும்படியும், இராணுவத்தினர் தமது இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கின்றனர் எனக்கூறி தமிழ் மக்கள் பல தடவை தமது சாத்வீக ரீதியான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர் என்பதும் இந்த இடத்தில் நோக்கற்பாலது. உண்மையில் இன்று நகர்ப்பகுதிவாழ் தமிழ் மக்கள் ஒரு இராணுவ மேலாதிக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். அதன் உச்சக் கட்டமாகவே ஐந்து அப்பாவி மாணவர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதன் பின்னர் நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கிறது.

திருகோணமலையைப் பொறுத்தவரையில் திருகோணமலையின் மீதான சிங்கள ஆக்கிரமிப்பிற்கு நெடிய வரலாறுண்டு. கடந்த அரை நூற்றாண்டுகளாக திருகோணமலை தமிழ் மக்களின் பாரம்பரிய இருப்பை பலவீனப்படுத்தும் வகையில் சிங்கள ஆளும்வர்க்கம் திட்மிட்டவகையில் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வந்திருக்கிறது. இத்தகைய ஆக்கிரமிப்புக்களை சிங்கள குடியேற்றம் என்ற நிலையில் நாம் ஆராய முற்படுவோமாயின் நமது கணிப்பு பிழைத்துப் போய்விடும். இது குறித்து மாகாணசபை நிர்வாக அதிகாரி ஒருவருடன் உரையாடும்போது அவரது அவதானம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத் தெரிந்தது. அவர் கூறிய கருத்துக்களை அப்படியே பதிவு செய்கிறேன். நாம் குடியேற்றம் என்னும் நோக்கில் பார்த்தால் சேருவாவில், மொறவேவா போன்ற சில குடியேற்றங்களை மட்டுமே சுட்டிக்காட்ட முடியும். அப்படியானால் மற்றைய சிங்களவர்கள் எவ்வாறு குடியமர்த்தப்பட்டனர்? அவர்களது குடியமர்வு வர்த்தமானியில் அறிக்கையிடப்படாத குடியமர்வுகளாகும். இது எவ்வாறு சாத்தியப்பட்டது. எனவே திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள ஆக்கிரமிப்பை நாம் திட்டமிட்ட சிங்கள ஊடுருவல் என்ற கருத்துருவாக்கத்தின் ஊடாகவே அணுக வேண்டியிருக்கிறது. இத்தகைய ஊடுருவலின் பின்னால் சிங்கள இராணுவம், சிங்கள தனியார் துறையினர், சிங்கள பௌத்த மதபீடம், ஆகிய மூன்று பிரிவினரினதும் கூட்டுச் சேர்க்கையான பங்களிப்பு இருக்கிறது. முதலில் ஒரு சோதனைச்சாவடியை உருவாக்குதல் பின்னர் அதில் உள்ளவர்களின் உறவினர்களை குடியமர்த்தல் பின்னர் அதிலுள்ள ஒருவரை ஊர்க்காவல் படையில் சேர்த்தல். இவ்வாறு படிப்படியாக ஆட்களின் எண்ணிக்கையை அதிகரித்தல். சாதாரணமாகப் பார்க்கும்ேபாது இதனைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். ஆனால் இவ்வாறு குடியமர்ந்தவர்கள்தான் இன்று நகர்ப்பகுதியை ஆக்கிரமித்திருக்கின்றனர். இதனை அரசு கண்டும்காணாமல் விடுவதன் மூலம் அரசு இவ் ஊடுருவலுக்கு உதவிவருகிறது. குடியேற்றம் என்பது குறிப்பிட்ட தொகையான குடும்பங்களை ஒரு குறிப்பிட்ட எல்லைப் பரப்பினுள் ஒரேயடியாக குடியமர்த்துவதாகும் என்றார் அந்த அதிகாரி. ஒரு தகவலுக்காகவே இதனைப் பதிவு செய்தேன். இது விரிந்த ஆய்வுக்கும் கணிப்புக்கும் உரியதாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது தொடர்பான ஆய்வுகளோ தகவல்களோ போதியளவு இல்லை. இராணுவமும் சிங்கள பௌத்த மதபீடத்தினரும் திருகோணமலையை முழுமையாக சிங்கள மேலாதிக்கத்தின் பிடியில் தக்கவைத்து வருவதன் நீட்சியாகவே இன்றைய நிலைமைகளை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உண்மையில் திருகோணமலையில் இரவோடு இரவாக புத்தர் சிலையை வைத்ததன் பின்னால் இருந்த நிழல் நோக்கம் மதத்தை அடித்தளமாகக் கொண்ட இராணுவ மேலாதிக்கமாகும். இராணுவத்தினரை திருகோணமலையில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் நிலைகொள்ளச் செய்வதற்கான ஒரு நிழல் கருவியே புத்தர் சிலை. இங்கு மிகவும் திட்டமிட்டவகையில் சிங்கள ஆளும்வர்க்கம் தொழிற்பட்டிருக்கிறது. முதலில் புத்தர்சிலை பின்னர் சிலையை பாதுகாப்பதற்காக சிங்கள பௌத்த இராணுவம் நிலை கொள்ளல் என்றவகையிலேயே இத்தொழிற்பாடு அரங்கேறியிருக்கிறது. இங்கு சிங்கள இராணுவத்தினதும் சிங்கள பௌத்த மதபீடத்தினரதும் அவதானம் என்னவென்றால் மதத்தின் மீதான சிங்கள மக்களின் இயல்பான அபிமானத்தையும் விசுவாசத்தையும் அரசியலாக்குவதன் ஊடாக இராணுவக் குவிப்பைச் செய்வதாகும். புத்தர்சிலை விவகாரத்திற்கு முன்னரே அரசும் இனவாத ஊடகங்களும் விடுதலைப்புலிகள் திருகோணமலையை சுற்றிவளைத்திருக்கின்றனர், விடுதலைப்புலிகள் சம்பூர்பகுதியில் விமான ஓடுதளத்தை உருவாக்கிவருகின்றனர் போன்ற பிரசாரங்களை திட்டமிட்டவகையில் முடுக்கிவிட்டிருந்தன என்பதையும் நாம் இந்த இடத்தில் நினைவு கொள்ளலாம். ஆகவே திருகோணமலையில் இராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக் கொண்ட சிங்களப் படைத்துறை இறுதியில் மதத்தை துணைக்கழைத்தது. படைத்துறையின் இலக்கு இவ்வாறிருக்க திருகோணமலையில் இருக்கும் சிங்கள பௌத்த மதபீடமும் அதனுடன் கைகோர்த்து இயங்கும் இனவாத அமைப்புக்களும் புத்தர்சிலையை அடிப்படையாகக் கொண்டு நகர்ப்பகுதியில் அத்துமீறி குடியமர்ந்திருக்கும் சிங்களவர்களின் சனச்செறிவை மேலும் விஸ்தரிக்கும் திட்டத்தை வகுத்தனர். புத்தர் சிலை நிறுவப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் ஜே.வி.பி. இரவோடு இரவாக திருமலை இந்துக் கல்லூரிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் சிங்களவர்களை குடியமர்த்த முற்பட்டதும் பின்னர் தமிழ் மக்களின் எதிர்ப்பினால் அம்முயற்சி தோல்வியில் முடிந்ததையும் நாம் புத்தர் சிலை விவகாரத்துடன் இணைத்துப் பார்க்கலாம். ஏற்கனவே இராணுவம் தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டுத்தலங்களில் ஒன்றான கோணேசர் ஆலயத்தை பௌத்தமயப்படுத்திவருகிறது. கோட்டைவாயிலுக்கு அருகிலேயே மிகப் பிரமாண்டமானதொரு விகாரை அமைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் நகரின் மையப்பகுதியான மணிக்கூண்டுக் கோபுரப்பகுயில் புத்தர் சிலை நிறுவுவதற்கான எந்தவிதமான வழிபாட்டியல் சார்ந்த காரணமும் கிடையாது. தமிழ் மக்களின் வாழ்விடங்களில் இராணுவத்தை நிலை கொள்ளச் செய்தல், திருகோணமைல நகர்ப்பகுதியிலும் நகரை அண்டியிருக்கும் பகுதிகளிலும் மேலும் சிங்கள ஆக்கிரமிப்பை விஸ்தரித்தல். இவையே புத்தர் சிலையின் பின்னாலுள்ள கபட அரசியலாகும்.

தமிழர் தாயகக் கோட்பாட்டை புவியியல் ரீதியாக பலவீனப்படுத்தும் வகையிலேயே சிங்கள ஆளும்வர்க்கம் இவ்வாறான திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களையும் ஊடுருவல்களையும் மேற்கொண்டு வந்திருக்கிறது. இதனடிப்படையிலேயே வடக்கு,கிழக்கு இணைந்த தமிழர்களின் அரசியலைச் சிதைக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டவகையில் குடியேற்றங்களை நிறுவி சிங்கள மக்களின் சனச் செறிவை அதிகரித்தது. 1949ஆம் ஆண்டு பட்டிப்பளை என்னும் தமிழ் மக்களின் பாரம்பரிய இடம் கல்லோயா எனப் பெயர் மாற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதிலிருந்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பயனுடைய தகவல் பகிர்வுக்கு நன்றி....

"கோணமலை எங்கள் கோட்டை

விடுவோமா எங்கள் நாட்டை"

என்ற பாடல் வரிகளின்

வரலாற்று சத்தியத்தைப் பேச முயலும் கட்டுரை..

மீளவும் இணைப்பிற்கு நன்றிகள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.