Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம்! தென் கொரியா

Featured Replies

இந்திய "எதிர்ப்புவாதம் வேண்டாம்" என்ற போலிக் கோஷத்தினுள் மறைந்திருப்பது ஈழத்தமிழரின் நலன்களைப் பாதுகாக்கும் முயற்சியல்ல, மாறாக இக்கட்டில் மாட்டியுள்ள இனப்படுகொலையாளிகளைக் காப்பாற்றி, மீண்டும் தமிழின விரோத நடவடிக்கைகளை முன்னிறுத்த உதவும் முயற்சியே என்பது இங்கு முன்வைத்த கருத்துக்களில் தெளிவாகத் தெரிகிறது.

மிக நீண்ட கட்டுரை எழுதியவர், சிங்களத்திடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று தொடக்கி எங்கு செவதேன்று தெரியாமலே கட்டுரைக் கொண்டு சென்று, ஈற்றில் எந்தப் பொருத்தமுமில்லாமல் இந்திய எதிர்ப்பை கைவிட வேண்டும் என அலம்பியுள்ளார். அவர் கூறிய சிங்களமே தன்னிடமுள்ள ஆதாரங்களை வைத்து இன்று இந்திய பிச்சைக்கார ராஜதந்திரிகளை எதிர்த்து விளையாடும் போது, இனவழிப்புக்கான சகல ஆதாரங்களையும் கொண்ட தமிழினம் சரணடைய வேண்டும் என நினைப்பது, இனப்படுகொலையாளர்களின் கைக்கூலிகள் செய்யும் வேலைகளை விடக் கேவலமாக உள்ளது. உளவியல் போர் என்று ஆரம்பித்து, குறிப்பாக புலம்பெயர் தமிழர்களை மிரட்ட முயன்று தோற்றவரே இந்த வேலைவெட்டியில்லாத எழுத்தாளர்.

ஜனநாயக வேடம் பூண்டு பயங்கரவாதம் செய்யும் சிங்கள, இந்திய அரசுகளின் நோக்கங்கள் ஒன்றே - அது தமிழின அழிப்பு. இதை அறிந்த மாதிரிக் காட்டிக்கொள்ளும் சிலர், தமிழர்களும் தன்னை அழிப்பதையே ஒரே நோக்கமாகக் கொண்டிருக்கும் இந்திய இனப்படுகொலையாளர்களின் ஆதரவை சிங்களப் பயங்கரவாதிகளைப் போல், பெறவேண்டும் என வழிகாட்டுவது அழிவை நோக்கிச் செல்லும் செயல்.

இங்கு தமிழின அழிப்பை தொடர்ந்து மேற்கொண்ட காட்டுமிராண்டிகளை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கண்டுபிடித்த பலரும் எடுத்துக் காட்டிய ஒரு விடயம், காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளான இந்தியாவை மேற்குலகானது நாடிவருகிறது என்பதையே.

மேற்குலகானது, சீனாவைக் கட்டுப்படுத்த காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளான இந்தியாவை ஒரு பகடைக்காயாக மட்டுமே பாவித்து வருகிறது. இதனுள் வகையாக மாட்டுப்பட்டுள்ள காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளான இந்தியா, மேற்குலகின்றி நிலைக்கமுடியாத சூழ்நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதை அறிந்தோ, அறியாமலோ சிலர் காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளான இந்தியாவின் காலடியில் வீழ்ந்து தமிழினம் அழிய வேண்டும் எனவே நினைக்கிறார்கள்.

அப்பட்டமாக வெளித்தெரியும் உண்மைகளை ஏற்கத் திரணியற்றவரகள்தாள் போலி வீராவேஷம் பூண்டுள்ளார்கள். வெட்டுவோம் வீழ்த்துவோம் என்று முழங்கிவிட்டு, அந்த வீரத்துள் தம்மை ஒழித்துக்கொள்வது மட்டுமன்றி அப்பாவிமக்களையும் பலிகொடுக்க முனைகிறார்கள்.

வீரம் என்பது வெறும் எதிர்ப்பு மட்டுமல்ல தோல்வியை ஏற்றுக்கொள்வதும்தான். இதுகாலவரையில் போராடி அழிவை மட்டுமே முடிவாகக் கொண்ட தமிழினம் கொஞ்சமாவது மூச்சுவிடுவதற்கு வழிசமைக்காது வரட்டு வீரம் பேசும் கோழைகளால் எதுவும் நடக்கப்போவதில்லை.

இந்தியா என்ன மாற்றங்களை நினைக்கின்றதோ அதுதான் இலங்கையில் நிகழும். அது தவிர வேறெந்த சக்தியும் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்தாது. இதில் மேற்குலகம் சீனா உட்பட.

இந்தியாவின் தந்திரத்தைப் புரிந்து கொண்டுதான் தமிழர் தம் நகர்வைச் செய்ய வேண்டும். அதுதான் தற்போதையதும் கடந்த காலத்தினதும் நிலைப்பாடாக இருக்கிறது. வராலாற்று நிலையே இவ்வாறிருக்கும் போது ஒரு சிறிய இனத்தின் சிறுபிரிவினர் சீறிச் சினந்து எதைக் காணப்போகிறார்கள். இந்திய எதிர்ப்புவாதம் என்பது தமிழருக்கான தடைக்கல்லல்ல. அது இந்தியாவிற்கான தேவையும் கூட. அந்த நிலைப்பாடு தமிழரிடம் இருக்கும்வரை இந்தியாவிற்கு சிங்களத்திடமிருந்து சாதகமான சமிக்கைகள்தான் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறைவன் இந்திய எதிர்ப்பு வாதம் என்பது எமது மனதளவில் இருக்கின்றதே தவிர, செயலளவில் கிடையாது. நாங்கள் ஒன்றும் போய் இந்தியாவில் குண்டை வைக்கப்போவதில்லை.

சரி இந்திய ஆதரவு என்று வந்தால் ... இந்தியா நம்மிடம் நட்பையா பாராட்ட விரும்புகிறது? இல்லையே. அதன் விருப்பெல்லாம் ஈழத்தமிழர் இனம் என்பது இலங்கை தொடர்பான தனது பிராந்திய நலனில் உருட்டி விளையாடும் ஒரு பந்தாக இருக்க வேண்டும் அவ்வளவு தான். அதனால் இந்தப் பந்துக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதே என் கருத்து.

சரி அது நிற்க ... இன்று எமது விருப்பு வெறுப்புக்கப்பால், நாம் இன்று இந்தியாவின் பிடியுக்குள் பெருமளவில் சிக்கி விட்டோம். த.தே.கூ ஒரு குசு விடுவதற்கு கூட டிலிக்கு போய் அனுமதி கேட்க வேண்டியிருக்கிறது. புலத்திலும் பல அமைப்புகளையும் தனி நபர்கள் பலரையும் றோ தன் கைப்பிடிக்குள் கொண்டுவந்துவிட்டதாகவே தென்படுகிறது. ஆக நாம் இந்தியாவை எப்படி கையாளப் போகின்றோம் என்பது அர்த்தமற்றதாகி, இந்தியா நம்மை வைத்து என்ன செய்யப்போகின்றது என்பது தான் இன்றுள்ள நிலை.

இன்று நாம் ஒரு தலமை அற்ற இனம். எனவே எம் நடவடிக்கைகளும் ஒருமுகப்படாமலிருப்பதே சிறந்தது. அதாவது ஒரு சம்பந்தன் இந்தியாவின் அடியொற்றி நடக்கட்டும். மற்றவர்கள் போர் குற்றகளை உலக அரங்கில் கொண்டு வர முனையட்டும். ஏதொ அவரவருக்கு சரி என்ற திசைகளில் நடப்போம்.

Edited by காட்டாறு

சீனாவின் அபரீத பொருளாதார வளர்ச்சியை அது தக்க வைக்க இரண்டு காய்களை அது நகர்த்துகின்றது. ஒன்று தனது பாதுகாப்புக்கு தனது இராணுவத்தை ( மசகு எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பாரிய கப்பல் தாங்கிகளை உருவாக்கி கொண்டு ஸ்டெல்த் வரை ) பலப்படுத்துகின்றது. மற்றையது புதிய சந்தைகளை முதலீட்டுக்கும் விற்பனைக்கும் தேடுவது.

இந்த இரண்டையுமே அது இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் என இந்தியாவைச்சுற்றி செய்கின்றது. வங்கதேசத்தில் சீனாவின் விரிவாக்கத்தை தடுக்க மன்மோகன் சென்றுள்ளார். இலங்கைக்கும் வர இருக்கின்றார்.

மொத்தத்தில் நாம் இந்தியாவை எதிர்த்தாலும் எதிர்க்கவிட்டாலும், இந்தியா எம்மை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யதார்த்தம் இந்தியாவை இறுதியில் எம்பக்கமே திரும்பவைக்கும். காரணம் சீனாவை சிங்களம் விரும்பினாலும் நிறுத்த முடியாது.

அதுதான் தேவை யதார்த்தம் உணரப்பட்டு அதன் வழி செல்வதுதான் சரி. அதைவிடுத்து யாதார்த்தம் என்பதை நெருங்காமல் அது நெருப்பு சுடும் என்று நினைத்தால் குளிர்காய்வது எப்படி?

இன்று சிங்களத்திற்கு (மகிந்தவிற்கு) தேவையானது இரண்டு: ஒன்று போர்குற்றங்களில் இருந்து தப்புவது. மற்றையது பொருளாதார நெருக்கடிகளை தவிர்ப்பது. இந்த இரண்டிற்கும் அது மலைபோல நம்பியுள்ளது சீனாவை.

சீனாவுக்கும் இந்த சிங்கள பலவீனம் தெரியும். அதை தெரிந்து அதை தனக்கு சாதகமாக பாவித்து வருகின்றது. தனது கடனை அடைக்க தானே கடன் கொடுக்கின்றது, முக்கிய நிலங்களை வாங்குகின்றது, பாறாங்கல்லை அகற்ற இருபது மில்லியன்கள் வேண்டுகின்றது. அதேவேளை இந்த உதவிகள் மூலம் தனது இராணுவத்தை அதன் கண்கள் காதுகளை பொருத்துகின்றது.

எந்தளவுக்கு இந்தியா பொறுக்கும் இல்லை முற்றுமுழுதாகவே கையை விட்டுவிடுமா?

முற்றுமுழுதாக கையை விடாது என எண்ணலாம். ஆனால் அந்த முடிவை எடுக்க வைப்பது பல காரணிகளில் தங்கியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர், தமிழரின் (தமிழகம் உட்பட) அரசியல் தாக்கம், அமெரிக்காவின் ஆதரவு என்பன அவற்றில் சில.

சரியான கருத்து அகூதா. எமது தமிழ் அரசியல் வாதிகள் சிலரிடமிருக்கு இந்திய எதிர்ப்புவாதம் மறைக்கப்படவேண்டும். காட்டாறு கூறியதுபோல் மனத்தளவில் இருந்தாலும் தேவை கருதி மறைத்துத்தானாக வேண்டும். உள்களது எதிர்பார்ப்புப்போல் மாறுதல்கள் ஏற்படின் அதுதான் நமது விடிவுக்கும் வழியேற்படுத்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.