Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிழலிக்கு பிடித்த பாடல்கள்:

Featured Replies

ரதியின் திரியை பார்த்த பின் தான் எனக்கு பிடித்த பாடல்களை மட்டும் இணைக்க (வேறு எவரும் தம் விருப்ப பாடல்களை இணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு) இந்த திரியை உருவாக்குகின்றேன். உங்களின் அனைவரின் விமர்சனங்களும், அனுபவங்களும் மிக மிக வரவேற்படுகின்றன

பாடல் 1

என் தலைமுறையிலும் அடுத்த தலைமுறையிலும் கூட இந்தப் பாடலை கேட்டு இருப்பீர்கள். ஆனால் அதன் காணொளியை கண்டவர் குறைவு

பாட்டு: மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்

Edited by நிழலி

  • தொடங்கியவர்

சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே..............

http://www.youtube.com/watch?v=niHfaSBItDw

நிழலி சார் இணைத்த முதல் பாடலில் வரும் அந்த ஓரா ஒர்ரா என்ற இசை கேக்க பிடிக்கும் அதை விட அடிக்கடி அந்த பாடல் கேட்டு இருக்கேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி நீங்கள் இணைத்த பாட்டுகள் எனக்கு பிடித்திருக்கு...ஒரு நெருடல் நீங்கள் தப்பாக நினைக்க வேண்டாம் நீங்களும்,நானும் ஒரே தலைப்பை வைத்திருந்தால் படிப்பவர்கள் குழம்பிப் போக மாட்டார்களா?

  • தொடங்கியவர்

நிழலி நீங்கள் இணைத்த பாட்டுகள் எனக்கு பிடித்திருக்கு...ஒரு நெருடல் நீங்கள் தப்பாக நினைக்க வேண்டாம் நீங்களும்,நானும் ஒரே தலைப்பை வைத்திருந்தால் படிப்பவர்கள் குழம்பிப் போக மாட்டார்களா?

ஓம் ரதி...சுட்டிக் காடியதற்கு நன்றி,, மாற்றி விடுகின்றேன்

  • தொடங்கியவர்

பாட்டு: சித்திரைச் செவ்வானம் சிரிக்க கண்டேன், முத்துக்கு முத்தான முத்தம்மா...

படம்: காற்றினில் வரும் கீதம்

  • தொடங்கியவர்

காற்றினில் வரும் கீதம் படத்தில் இருந்து இன்னுமொரு பாடல்: கண்டேன் எங்கும் அதிசயம்

ஜானகி அம்மாவின் அற்புத குரலில் இழைந்து ஓடும் ஒரு இனிய பாடல்

http://www.youtube.com/watch?v=od2N2tZnu14&feature=related

நிழலி இணைத்த பாடல்களில் நாடோடித்தென்றல் கனடாவில் பல்கலைக்கழக முதலாண்டில் இருக்கும் போது வந்ததால் நினைவுககள் கனடாசார்ந்து நெருடலை ஏற்படுத்துகின்றன. மீன்கொடித்தேர் மற்றும் சித்திரைச் செவ்வானம் பாடல்கள் ஊரில் மிகச் சிறிய பராயத்தை ஞாபகப்படுத்தி நெருடல் ஏற்படுத்துகின்றன.

இதைப்போன்றே பிரியா படப்பாடல்கள் (குறிப்பாக அக்கரைச்சீமை அழகினிலே மற்றும ;டார்லிங் டார்லிங் டார்லிங்), ஏ ராசாத்தி ராசாத்தி ராசாத்தி என்ற பாடல் (ஏதோ ஒரு பாரதிராஜா படமாக இருக்க வேண்டும். கனடா வந்த ஆரம்ப காலங்களில் அதிகம் கேட்டபாடல்) ஆகியனவும் ஏதோ ஒரு நெருடலை எப்போதும் உண்டுபண்ணுவதால் கேட்காது தவிர்த்துக் கொள்ளுவது வழக்கம்.

முதன்முதலாக காதல் டூயட் பாடவந்தேனே என்ற பாடல் நெருடலிற்குப் பதில் முறவல் ஏறபடுத்தும். நாங்க சிச்சுவேசன் சாங்க நல்லா யூஸ் பண்ணினிமில்ல!

  • தொடங்கியவர்

நிழலி இணைத்த பாடல்களில் நாடோடித்தென்றல் கனடாவில் பல்கலைக்கழக முதலாண்டில் இருக்கும் போது வந்ததால் நினைவுககள் கனடாசார்ந்து நெருடலை ஏற்படுத்துகின்றன. மீன்கொடித்தேர் மற்றும் சித்திரைச் செவ்வானம் பாடல்கள் ஊரில் மிகச் சிறிய பராயத்தை ஞாபகப்படுத்தி நெருடல் ஏற்படுத்துகின்றன.

இதைப்போன்றே பிரியா படப்பாடல்கள் (குறிப்பாக அக்கரைச்சீமை அழகினிலே மற்றும ;டார்லிங் டார்லிங் டார்லிங்), ஏ ராசாத்தி ராசாத்தி ராசாத்தி என்ற பாடல் (ஏதோ ஒரு பாரதிராஜா படமாக இருக்க வேண்டும். கனடா வந்த ஆரம்ப காலங்களில் அதிகம் கேட்டபாடல்) ஆகியனவும் ஏதோ ஒரு நெருடலை எப்போதும் உண்டுபண்ணுவதால் கேட்காது தவிர்த்துக் கொள்ளுவது வழக்கம்.

முதன்முதலாக காதல் டூயட் பாடவந்தேனே என்ற பாடல் நெருடலிற்குப் பதில் முறவல் ஏறபடுத்தும். நாங்க சிச்சுவேசன் சாங்க நல்லா யூஸ் பண்ணினிமில்ல!

சிறு பராயத்தில், முதல் காதல் பருவத்தில், காலம் வரலாறாய் மனதில் பதிந்த நேரத்தில் கேட்ட பாடல், கேட்ட இசை, முகர்ந்த மலர்களின் வாசம், சந்தித்த ஒரு சொல் என்பனவற்றை மீண்டும் கேட்கையில் எம்மை அதை கேட்ட காலத்துக்கே இட்டுச் செல்லும். மனதின் ஓரத்தில் ஒரு சிறு வலியை ஏற்படுத்தி அந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வரும். அந்தப் பாடல், இசை, சொல் கேட்ட காலத்தில் பெய்த மழையில் எழுந்த புழுதி மணலின் வாசம், அப்பா அம்மாவின் அரவணைப்பு, காதலியின் மார்பை தொட்ட முதல் தொடுகை, நண்பர்களுடன் சேர்ந்து முதல் ஊதித் தள்ளிய சிகரட்டின் மிச்சமிருக்கும் பகுதி என்பன நினைவில் வந்து இன்றைய வாழ்வின் சந்தோசங்களை பரிகசிக்கும்

எனக்கு இந்தப் பாடல்கள் கேட்கையில் என் வாழ்வில் அன்று நடந்த அனைத்தும் ஒரு வினாடியில் விரிந்து அன்று என் உடல் கொண்ட மொத்த உணர்வு வந்து தொற்றிக் கொள்ளும். அதனால் தான் மிகப் பிடித்த பாடல்களாக சின்ன வயதில் கேட்ட பாடல்களை முதலில் இணைக்கின்றேன்

கால இயந்திரம் (Time machine) என்பது எம் நினைவுகளின் ஆழம்தான் போலும்

  • தொடங்கியவர்

ஏதோ நினைவுகள் கனவுகள் ...

முப்பது வருடங்களுக்கு முன் வந்த பாடல் என்றாலும் என்று கேட்டாலும் புத்துணர்வை தரும் பாடல். யேசுதாசின் கம்பீரக் குரல், இளையராஜாவின் இனிய இசை...(ஆனால் நடிகர்கள் தான் 'அட கடவுளே' ரகம்)

என் இனிய பொன் நிலாவே. பாடல் அருமை. பாடல் இடம்பெற்ற 'மூடுபனி' படமும் மாறு மாறுபட்ட சினிமா.

Edited by நிழலி

  • 5 weeks later...
  • தொடங்கியவர்

"பிறையே பிறையே...." எத்தனை முறை கேட்டாலும் மனம் ஊடுருவும் பாடல்

http://www.youtube.com/watch?v=OV9sON4712I

  • தொடங்கியவர்

புதுப்பேட்டை படத்தில் வரும் "ஒரு நாளில் வாழ்க்கை என்ற எண்ணம்" பாடல். முன்னர் ஒரு முறை இணைக்கும் போது கூறியது போல எம் போராட்ட காலத்தை நினைவுபடுத்தி அழுத்தமாய் கடக்கும் பாடல்

"

போர்களத்தில் பிறந்துவிட்டோம், வந்தவை போனவை வருத்தமில்லை

காட்டினிலே வாழ்கின்றோம், முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை

இருட்டினிலே நீ நடக்கயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்

நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும்

தீயோடு போகும் வரையில், தீராது இந்த தனிமை

கரை வரும் நேரம் பார்த்து,கப்பலில் காத்திருப்போம்

எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்

ஓஓஓஓஓஓ, அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே

ஓஓஓஓஓஓ, இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே

ஓஓஓஓஓஓ, மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே

ஓஓஓஓஓஓ, அந்த கடவுளை கண்டால்

ஓஓஓஓஓஓ …

அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனிக்கணக்கு

அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர்க்கணக்கு

உனக்குமில்லை இது எனக்குமில்லை, படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்

நல்லவன் யார், அட கெட்டவன் யார், கடைசியில் அவனே முடிவு செய்வான்

பழி போடும் உலகம் இங்கே,பலியான உயிர்கள் எங்கே

உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்

நடப்பவை

நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்

ஓஓஓஓஓஓ, பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்,

ஓஓஓஓஓஓ, பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்,

ஓஓஓஓஓஓ, கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்,

ஓஓஓஓஓஓ, மறு பிறவி வேண்டுமா

ஓஓஓஓஓஓ …"

Edited by நிழலி

  • தொடங்கியவர்

"இரவு பகலை தேட" பாடல் கண்ணுக்குள் நிலவு படத்தில் இருந்து. கண்ணை மூடிக் கொண்டு கேட்கும் போது யேசுதாசின் குரல் மனசெல்லாம் பரவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.