Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மர்ம மனிதர்களை தாக்கக் கூடாது!

Featured Replies

மர்ம மனிதர்களை தாக்கக் கூடாது!

இராணுவம் கூறுவது எதற்கு? உயர் மட்ட மாநாட்டில் கேள்வி

0marma_manithan_80_80.jpg

வீட்டில் இருப்பவர்களை மர்ம மனிதர்கள் தாக்கிக் காயப்படுத்தும் போது அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்யாதீர்கள் என்று இராணுவத்தினர் கூறுவது சமாதான சூழலில் தான் நாம் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

யாழ். குடாநாட்டு மக்களிடையே அண்மைக் காலமாக நிலவி வருகின்ற பீதி மற்றும் பதற்றநிலை தொடர் பில் ஆராய்ந்து அதற்கான தீர்வு காணும் வகையில் நேற்று யாழ். மாவட்ட கேட்போர் கூடத்தில் உயர்மட்ட மாநாடு ஒன்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டின்போதே மக்களினால் மேற்படி குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக பொது மக்கள் சார்பாக பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாவாந்துறைப் பகுதியில் மக்கள் மீது இராணுவத்தினராலும் பொலிஸாராலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மர்ம மனிதன் என சந்தேகிக்கப்படும் நபர்கள் அப்பகுதியில் நடமாடுவதை அறிந்த மக்கள் அவர்களை துரத்திச் சென்றனர். ஆனால், மர்ம நபர்கள் இராணுவ முகாமிற்குள் சென்று மறைந்த தையடுத்து அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள் என இராணுவத்தினருடன் பொதுமக்கள் முரண்பட்டனர்.

ஆனால் அவர்களை ஒப்படைக்க இராணுவத்தினர் மறுத்ததையடுத்து அங்குகூடிய மக்கள் சில நிமிடங்களில் அந்த இடத்தை விட்டு தமது வீடுகளுக்கு சென்று விட்டனர். பதற்றநிலை கட்டுப்பாட்டுக்குள் வந்து பல மணி நேரத்திற்கு பின்பு வந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் மக்களைக் கதறக் கதற அடித்துக் காயப்படுத்தினர். அந்த தாக்குதல் சம்பவத்தில் நாவாந்துறையில் காயப்படுத்தப்படாதவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

காயமடைந்தவர்கள் வைத்திய சாலைக்கு சென்றுவருவதற்கு கூட பயப்பட்டனர் என நாவாந்துறையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொது மக்கள் சார்பில் விபரிக்கப்பட்டது. இது தொடர்பில் தெரிவித்த மற்றொருவர்; இராணுவத்தினரும் பொலிஸாரும் மக்களை நேசிப்பவர்கள் என்றால் எவ்வித நிபந்தனையும் இன்றி எங்கள் பகுதிகளில் கைது செய்த பொது மக்களை விடுதலை செய்ய வேண்டும்.

இதந்தக் கலவரம் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது என இராணுவத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுவொன்றும் திட்டமிடப்பட்டதல்ல. மக்கள் மர்ம மனிதன் என சந்தேகிக்கப்பட்ட நபர்களைத் துரத்திச் செல்லும்போது இராணுவத்தினர் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் ஏற்பட்டதே என அவரால் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான சம்பவங்கள் யாழ். குடாநாட்டில் எதிர்வரும் காலங்களில் இடம்பெறாது மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சார்பாக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்ட சமாதானம் எல்லா மக்களும் நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்டது. அதில் மக்கள் சந்தேகம் கொள்ளும் வகையில் இராணுவத்தினர் நடந்து கொள்ளக் கூடாது எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

கிறீஸ் மனிதனை மக்கள் துரத்தி வரும்போது உடனடியாக அந்த இடத்திற்கு இராணுவத்தினர் வந்து அவர்களை மக்களிடமிருந்து காப்பாற்றுவதோடு மக்களை அடித்து காயப் படுத்துகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க இராணுவத்தினர் உள்ளனரா அல்லது கிறீஸ் மனிதனுக்கு பாதுகாப்பு வழங்க இராணுவத்தினர் உள்ளனரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இந்த கிறீஸ் மனிதன் பின்னணியில் அரசாங்கம் செயற்படுவதாகவும் அதற்கு இராணுவத்தினர் துணை போவதாகவும் மக்கள் அச்சப்படுகின்றனர். 6 மணிக்கு முன்பு வீடுகளிற்கு சென்று விட வேண்டும் என இராணுவத்தினர் மக்களிடம் பகிரங்கமாக அறிவித்து வருகின்றனர்.

இவ்வாறு இராணுவத்தினர் மக்களிடம் கூறுவது மக்களை அச்சமடைய வைத்துள்ளது என மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதேவேளை இந்த மாநாட்டில் மத குருமார்கள் தமது கருத்துக்களை கூறும்போது நாட்டில் ஏற்பட்ட சமாதானம் நிலைத்து இருக்க வேண்டும். மக்கள் நீண்ட காலத்திற்கு பின்புதான் நிம்மதியாக வாழும்சூழல் ஏற்பட்டது எனவும் கூறினர்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=22595

  • தொடங்கியவர்

மக்கள் துணிந்துவிட்டால் பூதம் என்ன செய்துவிட முடியும்?

குடாநாட்டைக் கலக்கி வரும் பூதம் தொடர்பில் இப்போதுதான் அரசியல் தரப்பில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் உயர்மட்ட மாநாடு கூட்டப்பட்டு பூதம் பற்றி ஆராயப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக எதிர்வரும் பத்தாம் திகதி அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுப்பதற் கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவை அரசியல் மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றதாக இருக்க, பொதுமக்களோ அரசியல், நீதிபரிபாலனம் இவை எவற்றிலும் நம்பிக்கை அற்ற நிலையில், தமக்கான பாதுகாப்புக்குத் தாமே பொறுப்பு என்று முடிபெடுத்து விட்டார்கள். அதன் காரணமாக எந்த அரசியல் தலைமைகளினதும் வழிகாட்டல் இன்றி மக்களிடையே மகத்தான ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. இந்த ஒற்றுமைக்கான பெறுமானத்தை அளவிடுவதற்கு கருவிகள் மனித மொழிகள் ஏதுமில்லை எனலாம்.

இருண்ட வேளை மர்மப் பூதத்தை துரத்தும் மக்கள் பூதம் ஒளியும் (மறையும்) இடம்வரை சென்று வாதம் புரின்றனர் என்றால், அது சாதாரண விடயம் அன்று. என்ன செய்வது! மக்களின் கரங்கள் வெறுமையானவையாக இருக்கின்றன. மறுபுறத்தில் கெந்தகக் குண்டுகளோடு ஒருதரப்பு.

இப்போதும் துட்டகைமுனுக்கள் இருப்பார்களாயின் நேருக்குநேர் என்ற பண்பாட்டின் கீழ் பலம் பார்க்கப்படலாம். அப்படிப் பலத்தை நிருபிக்க முற்பட்டால் எல்லாளனின் வழிவந்தார்க்கு வெற்றி நிச்சயம் என்போம்.

இங்கும் ஒரு நிபந்தனை. தமிழ் அரசியல் தலைமைகள் எதுவும் தலைகாட்டலாகாது. அவ்வாறு தலைகாட்டினால் எல்லாளன் பரம்பரைக்கு பேராபத்து ஏற்பட்டுவிடும். நேற்றைய தினம் கூட ஒரு அன்பரைச் சந்தித்தேன். பெரிய பூவரசு ஒன்றில் ஏறி நின்று கதியால் வெட்டிக் கொண்டிருந்தார். வேலியடைப்புப் போலும் என்றேன்.

மெல்லச் சிரித்தார். வேலியடைப்பு அல்ல. பூதத்தைக் கலைப்பதற்கு என்றார். நிலைமையை புரிந்து கொள்ளாமல் நின்று பார்த்தேன். வெட்டப்பட்ட கதியால் மண்வெட்டிப்பிடி அளவிற்கு சரிசெய்யப்பட்டது. பயந்தால் வாழமுடியாது. நிம்மதியான வாழ்வு தேவை. படுக்கையில் இது இருந்தால் தான் பூதத்தை துரத்தலாம் என்றார். அவர் சர்வ சாதாரணமாகக் கூறியிருந்தாலும், என் கன்னத்தின் ஓரம் நனைந்து கொண்டன. அட! தமிழன் வீரனடா என்று நினைத்து என் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டேன். பூதம் முடிய இந்தப் பொல்லை என்ன செய்வீர்கள் என்று மெல்லக் கேட்க, அடுத்த தேர்தலுக்கு ஆட்கள் வீடுதேடி வருவார்கள். அப்போது பொல்லு உதவும் என்றார். எனக்கு அவர் கூறியது புரியவே இல்லை.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=22602

  • கருத்துக்கள உறவுகள்

அடிவருடி முண்டம் டக்ளஸ் ஏன் தாக்கக்கூடாது என்கிறார். இவர் தானோ மக்களின் தலைவர்?? .அர்ஜுன் போன்ற அறிவு கொழுந்துக்கள் மேற்படி டக்ளசின் கருத்துப்பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்? பிரபாகரன் பங்கரில் இருந்த படியால் அவர் தலைவர் இல்லை என பினாத்த தெரிந்தவருக்கு மிதிவண்டியில் அடிதடிகளுடன் இப்படி கேவலம் கெட்ட கருத்துக்களை கூறுபவர் எப்படி தலைவராவார் என கூற முடியுமா?

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.