Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரிசி ஆலை அமைப்பதற்கான கடன் உதவி கோரல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

logo.pngயுத்தத்தால் பாதிப்புற்றவர்களுக்கான தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் சிறு சிறு தொழில் முயற்சிகளுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

இவ்வகையில் வவுணதீவு மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசம் என அழைக்கப்படும் மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அரிசியாலை அமைப்பதற்கான ஏற்பாடொன்றினை மேற்கொள்கிறோம்.

யுத்தத்தால் பாதிப்புற்ற குடும்பங்கள் சிலவற்றைத் தெரிவு செய்து முதல்கட்டம் 4குடும்பங்களை உள்வாங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்பினை ஏற்படுத்த இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

மேற்படிபிரதேசத்தில்அரிசியாலைஅமைவதனால்ஒப்பீட்டளவில்அதிகபலனைப்பெறமுடியும்.

(அ) இந்த ஆலை அமையும் பிரதேசத்தில் அரவை ஆலை ஒன்று இல்லாதிருத்தல்.

(ஆ) இந்த பிரதேசத்தில் உள்ள 90 சதவீதமான பகுதி நெற்பயிர் செய்யப்படும் பிரதேசமாகும்.

திட்டத்திற்கு செலவாகும் மொத்தச் செலவு 750000.00ரூபா (அண்ணளவாக 5000.00€ஐயாயிரம் யூரோ)

மாதமொன்றுக்கு எதிர்பார்க்கப்படும் அண்ணளவான வருமானம் 50000.00ரூபா.

எதிர்காலத்தில் வருவாவைப் பெருக்கிக் கொள்வதற்கான வெவ்வேறு திட்டங்களையும் திட்டமிட்டிருக்கிறோம்.

உ+ம் – அரிசிமா ,மிளகாய்த்தூள் போன்றவற்றை தயாரித்து விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் உத்தேசித்துள்ளோம்.

திட்டத்திற்கானசெலவுவிபரம்

கட்டடம் அமைப்பதற்கான செலவு 250000.00ருபா

அரவை இயந்திரமும் அதற்கான பொருட்களும் 500000.00ரூபா

இதன் மூலம் கிடைக்கிற வருவாயை முதலாகக் கொண்டு மேலும் பலருக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். வெவ்வேறு சிறு தொழில் முயற்சிக்கும் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பினையும் இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்தில் உறவுகளாகிய உங்களின் ஆதரவினை வேண்டுகிறோம். உங்கள் உதவியை கடன் உதவியாகச் செலுத்தினால் குறித்த காலத்தில் அதனைத் திருப்பி வழங்குவோம். அத்தோடு பலரது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உங்கள் உதவியும் பயன்படும்.

உதவவிரும்புவோர் தொடர்பு கொள்ள :-

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Shanthy Germany – 0049 6781 70723

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

நேசக்கரம் என்ற அமைப்பின் மூலம் நீங்கள் செய்து வரும் பணிக்கு முதலில் எனது தலை வணக்கம்.

உங்களது முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

சாந்தி,

என்னால் முடிந்தது, USD 200 கடனாக தரமுடியும். திட்டம் அமுல்படுத்த தயாராகும் போது அறியத்தாருங்கள். அனுப்பி வைக்கிறேன். எப்போது உங்களால் மீளளிக்க முடியுமோ அப்போது மீளளித்தால் சரி.

ஏனய அன்பர்களையும் ஆதரவளிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன்.

சாந்தி அக்கா..இதில் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ளுங்கள்....அரிசி ஆலை அமைப்பதற்கான சில அனுமதிப்பத்திரம் தமிழர்கள் என்பதனால் சூழல் பிரிவு போன்ற அனுமதிகள் தாமதமாகலாம்..இவ்வாறு திருக்கோயில் பிரதேசத்தில் ஒரு அரிசி ஆலை இயங்காமல் உள்ளது எண்டு கேள்விப்பட்டேன்...இதை கவனமெடுக்கவும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் என்ற அமைப்பின் மூலம் நீங்கள் செய்து வரும் பணிக்கு முதலில் எனது தலை வணக்கம்.

உங்களது முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

நன்றிகள் கிளியவன்.

சாந்தி,

என்னால் முடிந்தது, USD 200 கடனாக தரமுடியும். திட்டம் அமுல்படுத்த தயாராகும் போது அறியத்தாருங்கள். அனுப்பி வைக்கிறேன். எப்போது உங்களால் மீளளிக்க முடியுமோ அப்போது மீளளித்தால் சரி.

ஏனய அன்பர்களையும் ஆதரவளிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன்.

இச்செய்தி கீழிறங்கிவிட்டதால் பலரால் பார்க்க முடியாதுள்ளது.

உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் ,ஈசன். ஏற்பாடுகள் தயராக உள்ளது. இடம் அனுமதி தொழிலுக்குரிய ஆட்கள் யாவும் தயார். பணம் தான் இன்னும் சேகரித்து முடியவில்லை. முதலாவது உதவியாக உங்கள் உதவிதான் வந்துள்ளது ஈசன்.

சிறுசிறுதுளியாய் உறவுகள் ஆதரவு தந்தால் பெரியதொரு திட்டமாக இதனை முன்னெடுக்கலாம். மற்றும் பலருக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த இது உதவியாகவும் இருக்கும்.

சாந்தி அக்கா..இதில் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ளுங்கள்....அரிசி ஆலை அமைப்பதற்கான சில அனுமதிப்பத்திரம் தமிழர்கள் என்பதனால் சூழல் பிரிவு போன்ற அனுமதிகள் தாமதமாகலாம்..இவ்வாறு திருக்கோயில் பிரதேசத்தில் ஒரு அரிசி ஆலை இயங்காமல் உள்ளது எண்டு கேள்விப்பட்டேன்...இதை கவனமெடுக்கவும்....

நன்றிகள் சிறிலிங்கம். அனுமதி மற்றும் சட்டரீதியான அலுவல்களை பயனாளர்கள் செய்து இட ஒழுங்கு அமைவிடம் யாவையும் செய்து விட்டார்கள். பண உதவிதான் எம்மால் திரட்ட முடியாதுள்ளது. ஆயினும் முயற்சிப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.