Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலை ஆவாரா டக்ளஸ் தேவானந்தா?-குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வசந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை ஆவாரா டக்ளஸ் தேவானந்தா?-குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வசந்தன்

23 செப்டம்பர் 2011

இந்திய அரசின் ஆதரவோடு போராளிக்குழுக்கள் இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் நடந்த கொலை வழக்கு இது. சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தா அதே பகுதியைச் சார்ந்த திருநாவுக்கரவு என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். கொலை வழக்காக பதியப்பட்ட இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாகக் சேர்க்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்தது நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தது சென்னை போலீஸ். இந்த வழக்குக்கு இன்னமும் 6-வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்காக நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற டக்ளஸ் தேவானந்தா இலங்கைக்குக் தப்பிச் சென்றார் இதனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக 1994-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் 2009-ஆம் ஆண்டு கொடூரமான இன அழிப்பு மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது இலங்கை அரசு. போர் முடிவுற்றதைத் தொடர்ந்து இந்தியாவின் அழைப்பின் பேரில் ராஜபஷே இந்தியா வந்த போது அவருடன் டக்ளஸ்தேவானந்தாவும் இந்தியா வந்திருந்தார். இந்நிலையில் சென்னையைச் சார்ந்த புகழ் பெற்ற வழக்கறிஞராக புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை இந்தியா வரவேற்றுள்ளது. இந்தியா வந்துள்ள அவரை கைது செய்ய வேண்டும் என்று நீதிமனறத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்குத் தொடரப்பட்டவுடன் அவசரம் அவசரமாக டில்லியை விட்டு வெளியேறினார் டக்ளஸ் தேவானந்தா. இந்த மனு மீது தமிழக அரசின் கருத்தையும் மத்திய அரசின் கருத்தையும் அரிய விரும்பிய நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த மனுவுக்கு பதிலளித்த தமிழக அரசு. டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி அவர் மீதான கொலை வழக்கை வாபஸ் பெற முடியாது. அவர் தமிழகம் வந்தாலோ, இந்தியா வந்தாலோ கைது செய்யும் உரிமை உள்ளது என்று தமிழக அரசு பதிலளித்தது. இந்நிலையில் இன்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சாபில் இலங்கைக்கான வெளியுறவு துறை சார்பு செயலாளர் கே.எம்.பி.சர்மா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்தப் பதிலில் // கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இலங்கையுடன் இந்தியா எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் கைதிகள் பரிமாற்றம் சட்டத்தின்கீழ் இரு நாடுகளுக்கு இடையே 1978-ல் கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தா அந்நாட்டு அமைச்சராக உள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரை கைது செய்ய முடியாது. அவரை கைது செய்வது என்பது இரு நாடுகளுக்கிடையேயான தூதரக உறவுக்கு எதிரானதாகும்.ஆகவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்// என்று கூறப்பட்டு உள்ளது.மத்திய அரசின் பதிலை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்யாமல் நான்குவாரங்களுக்கு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

விடுதலை ஆவாரா டக்ளஸ்?

.....................................................

துப்பாகியால் சுட்டு ஒருவரைக் கொன்ற போது டக்ளஸ் தேவானந்தா எந்த நாட்டின் அமைச்சரும் கிடையாது. கொலையை நடத்தி விட்டு கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்றவர் இலங்கைக்குத் தப்பிச் சென்று இலங்கை அரசோடு இணைந்து இன்று அமைச்சர் ஆகி விட்டார். ஆகவே கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவருக்கு பின்னாளில் உருவாகும் சமூக, அரசியல் அந்தஸ்து காரணமாக அரசியல் சட்டமோ, நீதிமன்றமோ எந்த விதமான விதிவிலக்குகளையும் அளிக்க முடியாது.அதற்கு சட்டத்திலும் இடமில்லை. தவிறவும் சம்பவம் நடந்த மாநிலமான தமிழக அரசு டக்ளஸ் மீதான வழக்கை வாபஸ் வாங்க மறுத்திருக்கிறது. அவர் இன்னும் நீதிமன்றத்தாலும் போலீசாலும் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார்.அப்படியான ஒரு குற்றவாளி முதலில் தனது பழைய வழக்கிற்காக நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் கோர வேண்டும். பின்னர் ஜாமீனில் வெளிவந்து நீதிமன்றம் போடுகிற நிபந்தனைகளை ஏற்று அவர் வழக்கை எதிர்கொண்டு தீர்வைத் தேட வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் இந்திய அரசோ, தனது இலங்கை அரசின் ஆதரவுப் போக்கால் டக்ளஸ் தேவானந்தாவையும் விடுவிக்கக் கோரி மனுவையே தள்ளுபடி செய்யக் கோருகிறது.இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ள இலங்கைக்கான வெளியுறவுத்துறை அதிகாரியான சர்மா மீது நாட்டின் குடிமக்களுக்கு அச்சுறுத்தலானவர் என்றே வழக்குத் தொடர முடியும். தனது சொந்தக்குடி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் இந்த நாட்டின் அதிகாரியே கொலையாளியை விடுவிக்கக் கோரும் நிகழ்வு வேறு எங்கும் நடக்குமா? என்று தெரியவில்லை.

தவிறவும் இந்தியா சொல்லும் காரணம் அவர் இலங்கையைச் சார்ந்தவர். இலங்கையோடு கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தம் எதையும் இந்தியா செய்து கொள்ளவில்லை ஆகவே கைதிகளை பரிமாறிக் கொள்ள இயலாது என்று கூறியிருக்கிறது. புகழேந்தி தொடர்ந்த வழக்கே கைதிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பான வழக்கு அல்ல. அது தேடப்படும் குற்றவாளியான ஒருவர் நம் நாட்டிற்கு வருகிறார் அவரைக் கைது செய்யுங்கள் என்று நீதிமன்றம் மூலம் கோருகிறார். இங்கே கைதிகள் பரிமாற்றம் எங்கே வந்தது. ஆக இந்த வழக்கு இப்போது தமிழகத்திற்கும் மத்திய அரசுக்குமான மோதலாக உருவாகும் சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் ஒரு தேடப்படும் குற்றவாளியை, ஒரு கொலையை நிகழ்த்தி விட்டு தப்பிச் சென்றவரை மாநில அரசு தேடிக் கொண்டிருக்கிறது மத்திய அரசோ பாதுகாக்கிறது. அவரை விடுவிக்கச் சொல்கிறது. 2009- ஈழப் படுகொலைகளின் பின்னர் தமிழகத்தில் இலங்கை தொடர்பான அதிருப்தியலை இன்னும் வீசிக் கொண்டிருக்கிறது, மூவரின் தூக்குத் தண்டனைக்கு எதிராக முழு வீச்சில் நடந்த போராட்டங்கள் நீதிமன்றத்தில் வெற்றி பெற மக்கள் போராட்டங்களே அடித்தளமாக இருந்தது. எல்லா அரசியல் கட்சிகளின் போராட்டங்களிலும் பதவி வேட்டையும், அரசியல் லாபமுமே பிரதான நோக்கமாக இருக்க அதிருப்தியடைந்து விட்ட பல்லாயிரம் மக்கள் இப்போது ஈழ மக்களுக்காகவும் அது சார்ந்த பிரச்சனைகளுக்காகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நேரத்தில் தமிழகத்தின் அதிருப்தியை சந்திக்கும் வகையில் மத்திய அரசு நீதிமன்றத்தில் இப்படி ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறது. இதில் நிச்சயமாக மத்திய அரசு டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்யாமல் காப்பாற்ற முடியும். ஆனால் இந்த கொலை வழக்கிலிருந்து காப்பாற்ற முடியாது. ஏனென்றால் கீழ் நீதிமன்றமாக இருந்தாலும் ஒரு அதிகாரி நீதிமன்றத்திற்கு உத்தரவிட முடியாது. உத்தரவிட்டு ஒரு குற்றவாளியைக் காப்பாற்றவும் முடியாது.

தமிழகத்தில் ஆவேசம்.

...........................................

டக்ளஸ் தேவானந்தாவைக் காப்பாற்றும் மத்திய அரசின் முடிவுக்கு நேற்றே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மரண தண்டனைக்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் வைகோ, கொளத்தூர் மணி உள்ளிட்டோர் பேசினார்கள். அவர்களுடைய பேச்சில் இந்த பிரச்சனை காட்டமாக வெளிப்பட்டது. இதெல்லாம் நீதிமன்றப் போராட்டம் மட்டுமல்ல இது தமிழர்களின் இறையாண்மை என்று அனைவரும் பேசினார்கள். மூவரின் தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டத்தை மாபெரும் மக்கள் போராட்டமாக மாற்றியது போல டக்ளஸ் தேவானந்தாவை தண்டிப்பதற்காகவும் நீதிமன்றத்தில் போராடுவோம்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/67633/language/ta-IN/article.aspx

ஆம்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி இணைப்பிற்கு, பிடிவிறந்து அவனுக்கு இன்ரபோல் ஊடாக விடுவிக்கனும்

நன்றி கறுப்பி இணைப்பிற்கு, பிடிவிறந்து அவனுக்கு இன்ரபோல் ஊடாக விடுவிக்கனும்

ஏற்கனேவே அப்படி பல தேடுதலைகள் இன்ரர்போல் ஊடாக விடுக்கப்பட்டும் ஒன்றும் நடக்கவில்லை. உண்மையான அரசியல் விருப்பம் தேவை நீதியை பெற.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக அமைப்பினர் ஒன்றுபட்டு போராடினால் கண்டிப்பாக "புழல்" இல் தள்ள முடியும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.