Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூல்: 'ஒரு புலமை சகாப்தம்'

Featured Replies

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு புலமை சகாப்தம் நூல்

siva-nool.jpg

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவையொட்டி வெளியிடப்பட்டுள்ள நினைவு மலர்.

ஒருவருடைய மரணம் நடைபெற்றால் அந்தியட்டி கிரியைகள் நடைபெறும்போது தேவாரம், திருவாசகம், பஞ்சபுராணங்களை அச்சிட்டு, அத்தோடு இரங்கல் பாடல்களையும் இணைத்து, வம்ச பரம்பரைக்கு ஓர் அட்டவணையும் போட்டு ஒரு மலர் வெளியிடுவது பொதுவான மரபு. இதிலிருந்து வேறுபட்டு, இவைகளில் எதுவும் இடம் பெறாமல் வெளிவந்துள்ளது இந்த மலர். மரணித்த ஒருவருக்காக மலர் வெளியிடும் மரபில் புதியதேர் முயற்சியாக இத்தொகுப்பு வந்துள்ளது மகிழ்வு தருகிறது.

க.குமரன் அவர்களால் கொழும்பு குமரன் புத்தக இல்லத்தில் இத்தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 151 பக்கங்கங்கள் கொண்ட இந்தத் தொகுப்பில் பேராசிரியரை அறிந்த கல்விமான்களில் பெரும்பான்மையானவர்கள் எழுதியுள்ளார்கள். கா.சிவத்தம்பி அவர்களுடைய மாணவியும் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியையுமான அம்மன்கிளி முருகதாஸ் எழுதிய ஆக்கத்தில் இருந்து, பேராசிரியர்களான மௌனகுரு, அ. சண்முகதாஸ், சி.பத்மநாதன், இளையதம்பி பாலசுந்தரம், நாகராஜ சுப்பிரமணிய ஐயர், குழந்தை ம.சண்முகலிங்கம், எஸ்.சிவலிங்கராசா, எம்.ஏ.நுஃமான் என்று தமிழ் இலக்கிய உலகில் பிரபலமான முகங்கள் அத்தனைபேரின் ஆக்கங்களும் இடம் பெற்றுள்ளன.

பேராசிரியர் கா. சிவத்தம்பியை இதுவரை அறிந்தாலும், அவரைப்பற்றிய பன்முகப் பார்வைகளை அறியாதவர்களுக்கு இந்த நூல் அவரைப்பற்றிய நேர்கோட்டுத் தகவலை துல்லியமாகத் தருகிறது. மேலும் இந்த நூலில் ஆக்கங்களை படைத்துள்ள அறிஞர்கள் ஒவ்வொருவரும் தமது வாழ்வில் தாம் அறிந்த கா.சிவத்தம்பியை தமது பேனாவுக்குள்ளால் குறுங்காலத்தில் அடையாளப்படுத்தியுள்ளனர்.

முதலாவது கட்டுரையிலேயே திருமதி. அம்மன்கிளி முருகதாஸ் அவருடைய வாழ்க்கை வரலாற்றை காலவரையறைப்படி எழுதிவிட்டார். அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு துறைசார்ந்தவர்களும் தாம் பேராசிரியரை எப்படிப் பார்த்தோம், அவர்பற்றி என்ன அறிந்தோம் என்பதை எழுதிச் செல்கிறார்கள். ஒருவகையில் பேராசிரியருக்கும் இவர்களுக்கும் இடையே உள்ள உறவை இந்த ஆக்கங்களால் அறிந்து கொள்கிறோம்.

மேலும் மூத்த பேராசிரியர்களாக இருந்து மறைந்த கைலாசபதி, வித்தியானந்தன், கணபதிப்பிள்ளை, செல்வநாயகம் போன்றவர்களுடைய மறைவுக்காக இதே பேராசிரியர்கள் அவ்வப்போது எழுதிய ஆக்கங்களுக்கும் இப்போது பேராசிரியர் கா.சிவத்தம்பிக்காக வெளிவந்த ஆக்கங்களும் ஒப்பிட்டு நோக்கப்பட வேண்டியவை. ஈழத்தின் பல்கலைக்கழக கல்வியியலாளரின் பார்வை போருக்கு பின் கூர்மை பெற்றுள்ளதா இல்லையா என்பதை அவதானிக்கவும் இந்த ஆக்கங்கள் எமக்கு ஒப்பீட்டு ஆய்வுப் பொருளாக உதவுகின்றன.

மலராக்கத்தில் புதுமைக் கருத்துக்களை இணைத்து வந்த அறுபதுகளின் பேராதனை பல்கலைக்கழகக் கால மலரமைப்புக்களுடன் ஒப்பிட்டால் இன்றைய சிந்தனை, தேடல் என்பவற்றின் வளர்ச்சி எவ்வாறாக நகர்ந்துள்ளது என்பதை உய்த்துணரவும் இந்த நூல் பேருதவியாக அமைகிறது.

மேலும் அரசியல் விடயங்களில் சிறீலங்கா அரசை பகைத்துக் கொள்ளாத ஆக்கங்களை சேர்க்க வேண்டிய தேவை வெளியீட்டாளருக்கு இருந்திருப்பதை அனைத்து ஆக்கங்களும் பிரதிபலிக்கக் காண்கிறோம்.

மரணமடைந்த ஒரு மாத காலத்திற்குள் எழுத வேண்டும், அவற்றை தேடித் தொகுக்க வேண்டும் என்ற கட்டாயம் பதிப்பாளருக்கு இருந்திருப்பது உண்மையே. இந்தளவு குறுகிய காலத்தில் அனைவருடனும் தொடர்பு கொண்டு அவர்களின் ஆக்கங்களை பெற்று ஆவணப்படுத்தியிருப்பது பாராட்டப்பட வேண்டிய பணியாக உள்ளது.

ஆனால்…

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் வாழ்க்கை சம்பவங்களை பல கட்டுரைகள் திரும்பத்திரும்ப சொல்லுகின்றன. எனவே தலையங்கங்களை வழங்கி விடயங்களை பிரித்திருந்தால் கூறியது கூறலை தவிர்த்திருக்கலாம்.

மேலும்…

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களை இன்றைய உலக அறிவியல் முன்னேற்றத்துடன் ஒப்பிட்டால் உலக அறிஞர் மட்டத்தில் அவருடைய இடம் என்ன, புரிதல் என்ன என்ற உலகளாவிய ஒப்புமை இடம் பெற்றிருந்தால் மேலும் நூல் சிறப்படைந்திருக்கும்.

உலகப் பெரும் படைப்பாளர்கள், திறனாய்வாளர்கள், மார்க்சிய சிந்தனையாளருடன் அவருடைய பணியை ஒப்பிட்டு உலக மன்றில் அவருடைய உன்னத இடத்தை வெளிச்சம்போட்டுக்காட்ட சில ஆக்கங்கள் சேர்க்கப்பட்டிருந்தால் மேலும் மகிழ்வு தந்திருக்கும். இலங்கை பல்கலைக்கழக எழுத்துக்களில் இருந்து வேறுபட்ட ஒரு வீரியமும் வெளிப்படையும் அமைந்திருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்.

அவருடைய பாரியார் விமலா சிவத்தம்பியின் பாத்திரம் அவருடைய வாழ்வில் எத்தகைய உன்னதமானது என்ற பார்வை சேர்க்கப்பட்டிருந்தால் மேலும் சிறப்பு கூடியிருக்கும்.

பேராசிரியர் சிவத்தம்பியின் வீரவரலாறு என்று ஒன்று இருக்கிறது, சிங்கள இராணுவ துப்பாக்கி மழைகளுக்குள்ளாக அவர் ஆற்றிய பணிகள் இருக்கின்றன. யாழ்ப்பாண சாதிய, தமிழ் தேசிய உணர்வுகள் சார்ந்து அவருக்கு ஒரு மறுபக்கம் இருக்கிறது இவைகளும் வருங்காலத்தில் பதியப்பட வேண்டும் என்ற எண்ணத்தையும் நூல் ஏற்படுத்துகிறது.

வெளிநாடுகளுக்கு வந்து அவர் வாய்மொழியாக சொல்லிச் சென்ற இரகசியங்கள் தனி நூலாக எழுதப்பட வேண்டிய செய்திகளாக குவிந்து கிடக்கின்றன.

புத்தகத்தின் நிறைவுப்பக்கத்தை மூடும்போது…

பேராசிரியர் பற்றிய புதிய அதி நவீன பார்வைகளை எதிர் காலத்திற்கு கொடுக்க ஆவன செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் விரிவடைந்து செல்கிறது..

பாராட்டப்பட வேண்டிய முயற்சி…

http://www.alaikal.com/news/?p=83555

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா பகிர்விற்க்கு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.