Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வேந்திர சில்வா வீட்டுக் கதவை தட்டிய தமிழர்கள் : அதிர்ந்த சர்வேந்திர சில்வா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வேந்திர சில்வா வீட்டுக் கதவை தட்டிய தமிழர்கள் : அதிர்ந்த சர்வேந்திர சில்வா (Video in )

  • Friday, September 30, 2011, 13:32

சமீபத்தில் அமெரிக்காவில் தங்கியுள்ள சர்வேந்திர சில்வாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டமை யாவரும் அறிந்ததே. 58ம் படைக்கு தளபதியாக இவர் இருந்த கால கட்டத்தில் யுத்தக்குற்றங்கள் இழைத்தார் என இவர்மேல் வழக்கு தொடரப்பட்டு நஷ்ட ஈடும் கோரப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு விடுத்த அழைப்பாணையின் பிரதியை சர்வேந்திர சில்வாவின் வீட்டிற்குச் சென்று சிலர் வழங்கியுள்ளனர். நியூயோர்க்கில் உள்ள தொடர்மாடி ஒன்றில் வசித்துவரும் அவர் வாசல்ஸ்தலதைத் தட்டி அங்கே இருந்த அவரது உதவியாளிடம் இந்த அழைப்பாணையின் பிரதி கையளிக்கப்பட்டுள்ளது. இதனை இவர் இனி மறுக்க முடியாது. காரணம் அனைத்தும் படமாக்கப்பட்டு அவை ஆதாரமாக மாற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க சட்டத்துக்கு அமைவாக நீதிமன்றத்தால் வழங்கப்படும் சில அழைப்பாணை 120 நாட்களுக்கே செல்லுபடியாகும். அதனை 120 நாட்களுக்குள் குறிப்பிட்ட நபரின் கைகளில் சேர்க்கவேண்டும். அப்படி சேர்க்காவிட்டால் போட்ட வழக்கு காலாவதியாகிவிடும். எனவே சர்வேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்கை தொடுத்த அலி பவுடா என்னும் வழக்கறிஞர் சாதூரியமான முறையில் இந்த அழைப்பாணையை சர்வேந்திர சில்வாவிடம் ஒப்படைத்துள்ளார். அதுமட்டுமல்லாது அதனை படமாக்கி ஆதாரத்தையும் திரட்டிவிட்டார். எனவே இனி நிச்சயமாக சர்வேந்திர சில்வா நீதிமன்ற வாசல் ஏறியே தீரவேண்டும். அது உறுதியாகிவிட்டது. இவ்வழக்கைத் தொடுக்க உலகத் தமிழர் பேரவை(GTF) வழக்கறிஞர் அலி பவுடாவுக்கு உறுதுணையாக நின்றமை பாரட்டத்தக்கவிடையமாகும்.

இதனையே செயல் திறன் என்று அழைப்பார்கள். அதை விடுத்து நான் வழக்கைப் போட்டு விட்டேன். போடப் போகிறேன் என்று கதை அளப்பதும் கண்ணாம்பூச்சி காட்டுவதையும் விடுத்து ஆக்கபூர்வமான செயலில் ஈடுபடுவது நல்லது. ஆதாரங்களை தகுந்த முறையில் வெளியிடுவது நல்லது. அறிக்கையை மட்டும் விட்டு விட்டு செயல் திறன் இல்லாமல் இருக்கும் ஒரு சில அமைப்புகளைப் பற்றி நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தோம். அவர்களுக்கு இது நல்லதொரு முன் உதாரணமாக அமையும். தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு அதனை இதனைச் சொல்லி ஏமாற்றுவதை விடுத்து செயல்திறன்கொண்ட இனமாக நாம் மாறவேண்டும். உண்மையை எழுதினால் “பொய் கூறும் இனமாக எம்மைச் சித்தரிக்கவேண்டாம்” என கவிதைகளை பாடுகிறார்கள். கவிதை கட்டுரை எல்லாவற்றையும் ஒரு புறம் மூட்டை கட்டிவிட்டு 40,000 தமிழர்களைக் கொன்ற சிங்களதேச அரசியல்வாதிகளையும் இராணுவத்தையும் யுத்தக் குற்றக் கூண்டில் ஏற்ற அனைவரும் ஒன்றாக முயலுவோண்டும்.

http://www.tamilthai.com/?p=27422

இவ்வழக்கைத் தொடுக்க உலகத் தமிழர் பேரவை(GTF) வழக்கறிஞர் அலி பவுடாவுக்கு உறுதுணையாக நின்றமை பாரட்டத்தக்கவிடையமாகும்.

இதனையே செயல் திறன் என்று அழைப்பார்கள். அதை விடுத்து நான் வழக்கைப் போட்டு விட்டேன். போடப் போகிறேன் என்று கதை அளப்பதும் கண்ணாம்பூச்சி காட்டுவதையும் விடுத்து ஆக்கபூர்வமான செயலில் ஈடுபடுவது நல்லது.

நன்றி உலகத்தமிழர் பேரவைக்கு. ஆக்கபூர்வமான செயல்.

இந்த குற்றவாளி மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு வந்தால் உண்மைகளை உளறும் சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவர்கள் அழைப்பாணையைத்தான் கொடுத்துச் சென்றார்கள் என்பதையும் அத்தாட்சிப்படுத்தியிருந்தால் நன்றாயிருக்கும்.

ஏனென்றால் அவர்கள் வாசலில் வைத்து கொடுத்துச் சென்றது என்ன என்ற விபரம் அவர்கள் சொல்லுவதை வைத்துத்தான் தெரிகிறது.

அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா? வேறு மாதிரி பார்த்தால் வீட்டில் நின்ற நபர் சவேந்திரசில்வாவை அதற்குப்பின் சந்திக்கவில்லையென்று சொன்னால் என்ன செய்வது?

எனக்கென்னவோ இது வேலை செய்யும்போல் தெரியவில்லை.

அதுபோக நீங்கள் சொல்வது போல் அழைப்பாணை 120 நாட்கள் வரைக்கும்தான் செல்லுபடியாகுமென்றால் அரசதரப்பில் அழைப்பாணையை ஆதாரத்துடன்

ச. சில்வாவிடம் சேர்ப்பதற்கு என்ன வழிமுறைகள் முயற்சிக்கப்பட்டன?

வீட்டு கதவில் ஒட்டி விட்டாலே போதும் என்பார்கள்.

- கனடாவில் பதிவுத்தபால் மூலமாக கூட அழைப்பாணையை அனுப்பிவிடுவார்கள்.

- சவெந்திர சில்வாவின் பணியாள் ஒருவர் கைநீட்டி வேண்டியுள்ளார். அவரின் பெயரும் பதிவாகி உள்ளது.

- மகிந்தர் ஏற்காத அழைப்பாணையை இவர் ஏற்றுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தை எல்லோரும், கையில் எடுத்தால்.. பயங்கரவாதி முத்திரை விழாதா?

மற்றவனின் வீட்டுக் கதவை, உரிமை உள்ளாத.. நான் எப்படி தட்ட முடியும்.

சட்டத்தை எல்லோரும், கையில் எடுத்தால்.. பயங்கரவாதி முத்திரை விழாதா?

மற்றவனின் வீட்டுக் கதவை, உரிமை உள்ளாத.. நான் எப்படி தட்ட முடியும்.

தமில் சிறி யாரிட்டையோ கையூட்டு பெற்றுட்டார்.

சட்டத்தை எல்லோரும், கையில் எடுத்தால்.. பயங்கரவாதி முத்திரை விழாதா?

மற்றவனின் வீட்டுக் கதவை, உரிமை உள்ளாத.. நான் எப்படி தட்ட முடியும்.

வழக்கறிகஞர்கள் தமது ஏஜண்டுகள் மூலம் செய்கிறார்கள். கோடுகளும், வழககறிஞர்களும் வேறு வேறு வகைகளான ஏஜண்டுகளை உபயோகிக்கிறார்கள். அமேரிக்க தபால் நிலையம் ஒரு கோபரேசனே. அதற்கு தபால் பரிவர்த்த்னையில், மற்ற நாடுகளில் இருப்பது போன்ற ஏக போக உரிமை கிடையாது. "Without Prejudice" ஆன முறைகளில் செய்கிறாகள் போலுள்ளது. "சட்டத்தை எல்லோரும், கையில் எடுத்தால்" பாணியில் அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.