Jump to content

வடலியின் நான்கு நூல்கள் வெளியீடு


Recommended Posts

இடம் -150 borough drive,scarborough,ont

காலம்-09/oct/2011. 3.30- 6.00 p.m.

வடலி பதிப்பகத்தின் நான்கு நூல்கள் வெளியீடும் விமர்சனமும்.

1-தேவதைகளின் தீட்டுத்துணி.

2.கொலை நிலம்.

3.அபராதி கவிதைத்தொகுதி.

4.ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா ?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தலைப்பு.

Link to comment
Share on other sites

இன்று இந்த வெளியீட்டு நிகழ்வின் இறுதிப் பகுதி நடக்கும் போது போயிருந்தேன். வழக்கமாக தமிழ் நிகழ்வுகள் சொன்ன நேரத்துக்கு நடப்பதில்லை என்பதால் மூன்றரை மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வுக்கு சரியாக நாலரைக்கு என் நண்பன் சேதுவுடன் சென்று இருந்தேன். ஆனால் நான் போன நேரம் நான்காவது புத்தகமான 'ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா ?.' எனும் தலைப்பை பற்றி ஒருவர் அறுவையுரை, மன்னிக்கவும் அறிமுகவுரை நிகழ்த்திக் கொண்டு இருந்தார். ஏனைய மூன்று புத்தகங்கள் பற்றிய அறிமுகவுரை முடிந்து இருந்தது (தப்பித்தேன்)

கொழும்பில் வாழும் போது அநேகமான புத்தக வெளியீடுகளுக்கு சரிநிகர் பத்திரிகை நண்பர்களுடன் போன அனுபவங்கள் நிறைய உள்ளது. ஆனால் கனடா வந்த பின் நான் போன முதலாவது நூல் வெளியீட்டு நிகழ்வு இதுதான. அத்துடன் என்னை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும் போது 'நிழலி' என்ற பெயரில் அறிமுகமானதும் இன்றுதான் (வேலியில் போற ஓணாணை வேட்டிக்குள் விட அப்படி ஒரு ஆசை)

யோ கர்ணணின் 'தேவதைகளின் தீட்டுத் துணி' யை மட்டும் நிகழ்வில் வாங்கினேன். வடலியின் முன்னைய சில வெளியீடுகளையும் வைத்திருந்தனர். அவற்றில் சிலவற்றை ஏற்கனவே வாங்கி விட்டதால் வாங்கவில்லை.

இன்றைய நிகழ்வுக்கு போனதால் என்னால் சந்திக்க முடிந்தவர்கள்

1. இளம் எழுத்தாளர் 'அகிலன்' ('மரணத்தின் வாசனை' தொகுப்பை எழுதியவர்): இன்றுதான் முதன் முதலில் சந்தித்தேன்.

2. கவிஞர் சேரன்: இலங்கையில் பலதடவை சந்தித்து இருந்தாலும் கனடா வந்த பின் தொலை பேசியில் சில தடவை கதைத்தது மட்டும்தான். இன்று மீண்டும் சந்தித்தது மகிழ்சியாக இருந்தது

3. சரிநிகரில் முன்னர் என்னுடன் வேலை செய்த 'ரமேஸ்' (இவர் கனடாவில் இருப்பது தெரிந்து இருந்தாலும் ஏனோ சந்திக்க முயலவில்லை)

4. இவர்களுடன்.................யாழ் கள உறவு நமது 'அர்ஜுன்': என்னை நிழலி என்று அறிமுகப்படுத்தியவுடன் 'நான் உங்களை பற்றி வைத்து இருந்த பிம்பம் இப்படி இருக்கவில்லை...நல்ல உயரமாக வேறு விதமாக இருப்பீர்கள் என நினைத்தேன்' என்றார். அர்ஜுன் பற்றிய என் மனது கீறி வைத்து இருந்த பிம்பமும் மிகவும் வேறு விதமாக இருந்தது. குண்டாக, வயதான தோற்றத்துடன், வழுக்கை தலையுடன் இருப்பார் என்று நினைத்து இருந்தேன். ஆள் பார்க்க ஒரு professional look உடன் 'ஜம்' என்று இருந்தார்

நிகழ்வின் முடிவில் கேள்விகள் கேட்கலாம் என்று சொன்னார்கள். அரசியல் சார்ந்த சில வாதங்களைக் கேட்கக் கூடியதாக இருந்தாலும் வழக்கமான புலி எதிர்பு, புலி ஆதரவு என்ற புளிச்சுப் போன விடயங்களே கேட்கக் கூடியதாக இருந்தன

----------- கிளிநொச்சியை ஆமி பிடிக்கும் போது சனம் கிளர்ந்து எழுந்து ஊர்வலம் போச்சு ஆனால் அதற்கு முதல் வாகரையில் சனம் அதே மாதிரி கஷ்டப் படும் போது ஒன்றும் செய்யேல..ஏனென்டால் அதுகள் கிழக்கு மக்கள். கருணாவின் ஆதரவு மக்கள் என்றதால் அப்படியே விட்டு விட்டினம்

---------- காட்டிக் கொடுத்தார்கள் என்று முஸ்லிம்களை வெளியேற்றினார்கள்..அப்படி என்றால் ஏன் வல்வெட்டித் துறை மக்களையும், பொலிகண்டி மக்களையும் மாத்தையா காட்டிக் கொடுத்த போது வெளியேற்றவில்லை

------- புலிகள் மூன்று தலைமுறைகளை ஒன்றாக கூட்டிக் கொண்டு போய் கொன்று விட்டார்கள்..

---- தமிழ் தேசிய எழுச்சி சாதி கட்டமைப்பு எனும் குறைபாட்டுடன் தான் முன்னேறும்..அதுக்கு ஒன்றும் செய்ய ஏலாது. ஏனென்றால் வரலாற்றில் அப்படி தான் நடந்து இருக்கு

:அன்பே சிவம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.