Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் கனவுகளும், புலம்பெயர் ‘கும்கிகள்’ ஊடான சிங்களத்தின் சதிகளும்!

Featured Replies

தமிழ் மக்களது நியாயமான அரசியல் அபிலாசைகளை நிராகரித்த சிங்கள அரசின் பக்கம் நின்று, ஈழத் தமிழர்கள்மீது இன அழிப்பை நிகழ்த்தியதன் தார்மீகப் பொறுப்பிலிருந்து சர்வதேச சமூகம் விடுபட முடியாமல் தவிக்கின்றது.

ஈழத் தமிழர்கள் மீது கொடூரமான போரை நிகழ்த்திய சிங்கள அரசைத் தடுத்து நிறுத்தாத குற்றத்திற்குப் பரிகாரம் காணும் நோக்கில் உலக நாடுகள் பலவும் சிங்கள அரசு மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன.

இருந்தபோதும், எல்லாவற்றையும் இழந்தேனும், இலங்கைத் தீவை சிங்கள தேசமாக்கும் மகாவம்சக் கனவின் பாதையிலேயே பயணிப்பதையே சிங்கள ஆட்சியாளர்கள் குறியாகக் கொண்டுள்ளார்கள். இறுதிப் போரின் பின்னரான தமிழீழ மக்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி, தமிழ்ப் பிரதேசங்களினுள் வியாபித்து, அங்கு நிலையாகக் கால் பதிப்பதன் மூலம் தமிழ் மக்களது தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதை இலக்காகக் கொண்டு நகர்கின்றார்கள்

maaveerarvisuvamadudest.jpg

பல்லாயிரக்கணக்கான சிங்களச் சிப்பாய்கள் நிறைந்து வழியும் யாழ். குடாநாடு, தற்போதைய சிங்கள சுற்றுலாப் பயணிகளாலும், வர்த்தக மேலாதிக்கத்தினாலும் திணறுகின்றது. வேகமாக்கப்படும் சிங்களக் குடியேற்றங்களால், தென் தமிழீழம் போன்றே, வடக்கும் தனது தனித்துவத்தைப் பறிகொடுத்து வருகின்றது. திட்டமிட்ட கலாச்சாரச் சீர்கேடுகள் சிங்கள அரச தரப்பால் ஊக்குவிக்கப்படுகின்றது. வெளிநாடுகளிலிருந்து சுளை, சுளையாக உறவுகளிடம் வந்து சேரும் பணத்தினைக் குறி வைத்து அத்தனையும் நிகழ்த்தப்படுகின்றது. களியாட்டங்களும், வெறியாட்டங்களும் ஒரு பகுதியைக் கவர்ந்து செல்ல, மற்றொரு பகுதி கொள்ளையர்களால் சூறையாடப்பட வைக்கப்படுகின்றது.

தமிழ் மக்களை அச்சத்தினுள் நிரந்தரப்படுத்துவதற்காய் ஏவப்பட்ட கிறிஸ் பூதமும், மர்ம மனிதர்களும் தற்போது குறைந்து விட்டபோதும், தமிழ் இளையோரைக் குறி வைத்து நிகழ்த்தப்படும் பாலியல் வக்கிரங்கள் இப்போதும் தொடர்கின்றன. இழப்பினால் துவண்டு, அவலத்தினுள் வாழும் இளம் பெண்கள் சிங்கள வல்லுனர்களால் பாலியல் பணிக்கு வலிந்து இழுக்கப்படுகின்றார்கள். வணங்கா மண்ணில் நிமிர்ந்து நின்ற வன்னி மக்கள் தலை நிமிரா வண்ணம் வதைக்கப்படுகின்றனர். ஊருக்கே சோறு போட்டவர்கள், தம் பிள்ளைகளுக்கே ஊட்ட முடியாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். முள்ளிவாய்க்காலில் சிதறடிக்கப்பட்டவர்கள், நடை பிணங்களாகத் தெருக்களில் விடப்பட்டுள்ளார்கள்.

தம் உறவுகளுக்காக நீதி கேட்டுப் புலம்பெயர் தமிழர்கள் பொங்கி எழுந்துவிடக் கூடாது என்பதிலும் சிங்கள தேசம் வெகு நேர்த்தியாகவே காய் நகர்த்தி வருகின்றது. புலம்பெயர் தமிழர்களது ஒன்றுபட்ட எழுச்சியே சர்வதேச சமூகத்தை தமக்கு எதிராகத் திருப்பி வருகின்றது என்பதைப் புரிந்து கொண்ட சிங்கள அரசு, புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைப் பிளவு படுத்துவதன் மூலம் தமிழீழ மக்களது இறுதிப் பலத்தையும் சிதைத்துவிடலாம் என்று நம்புகின்றது. சிங்களவர்களைக் குரோதத்துடன் நோக்கும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சிங்கள அடையாளங்களுடன் ஊடுருவ முடியாது என்பதனால், புலம்பெயர் தேசங்களில் வாழும் சில புல்லுருவிகளைப் பயன்படுத்தித் தமக்கான தளத்தினை உருவாக்கிப் பலப்படுத்தி வருகின்றது.

கருணா மூலமாகத் தமிழீழத்தைச் சுடுகாடாக்கிய சிங்கள ஆட்சியாளர்கள், அதே சூத்திரத்தினுடாகப் புலம்பெயர் தமிழர்களையும் தோற்கடிக்கும் முயற்சியில் தீவிரமாகியுள்ளார்கள். கே.பி. ஊடாக மேற்கொண்ட சிங்கள தேசத்தின் நகர்வுகளில் சிறிது முன்னேற்றத்தைக் கண்ட சிங்கள அரசு, தனது அடுத்த கட்ட பாய்ச்சலுக்கும் கே.பி. குழுவையே களம் இறக்கியுள்ளது.

மாவீரர் தினத்தைக் குறி வைத்து சிங்கள அரசு மேற்கொள்ளும் இந்தச் சதி வலைக்குள் தெரிந்தோ, தெரியாமலோ சில முன்னாள் விடுதலைப் போராளிகளும் பலியாகியுள்ளனர். இறுதிப் போர்க் களத்திலிருந்து தப்பி, புலம்பெயர் தேசங்களில் தஞ்சமடைந்துள்ள போராளிகள் இந்த சதி வலைக்குள் உள்ளிழுக்கப்பட்டும் உள்ளார்கள்.

தேசியத் தலைவர் அவர்களால், போர்க் களங்களில் எதிரியை வேட்டையாடுவதற்கான நுண்ணறிவு வழங்கப்பட்ட போராளிகள் புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களில் தமது மேலாதிக்கத்தை நிலைநாட முயற்சிப்பதன் பின்னணியில் சிங்கள அரசு செயற்படுவது வெளிப்படையானது. அவலங்களை எதிர்கொண்டு, அதிர்ச்சியுடனும், விழுப்புண்களுடனும் புலம்பெயர் மண்ணில் காலடி வைக்கும் தருணத்திலேயே சிங்கள உளவாளிகள் பொறி வைத்துக் காத்திருப்பது புரியாமல் சிலர் திசை தப்பிப் போகின்றார்கள்.

களத்தில் எதிரியின் சவால்களுக்கு முகம் கொடுத்தவர்கள் நிராயுதபாணிகளாக, எதிரியின் சதி வலைக்குள் தம்மை அறியாமல் புதைந்து போகின்றார்கள். காட்டு யானைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ‘கும்கி’ என்ற பழக்கப்பட்ட யானைகளைப் பயன்படுத்துவது போல், தேசத்தின் விடுதலைக் கனவுடன் புலம்பெயர் நாடுகளுக்குத் தப்பி வரும் போராளிகளும் ஏற்கனவே, கே.பி. மூலமாகக் ‘கும்கி’களாக்கப்பட்ட முன்னாள் முதன்மைப் போராளிகளால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றனர்.

இறுதி யுத்தத்த காலத்தில் புலம்பெயர் தமிழர்களிடம் திரட்டப்பட்ட பெருமளவு நிதி புலம்பெயர் தேசியக் கட்டமைப்புக்களினால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், புலம்பெயர் கட்டமைப்புக்களைக் கைப்பற்றுதல் அல்லது சிதைப்பதினூடாக அதனைக் கைப்பற்ற முடியும் என்ற கும்கிகளின் வழிகாட்டல்களில் பலர் இலக்குத் தவறிய பாதைகளில் நகர முற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. உலகத்தையே விலையாகக் கொடுத்தாலும் மீட்க முடியாத மாவீரர்களின் ஈகத்துக்காகச் சில ஆயிரம் ஈரோக்களின் கணக்குப் பார்த்தலுடன் ஈடுகட்ட முயல்கிறார்கள்.

தேசியத் தலைவரது கட்டளைப்படி, தேசத்தின் விடுதலைக்காகப் புலம்பெயர் தமிழர்களிடம் திரட்டப்பட்ட நிதி வீணாக்கப்பட்டது அல்லது அமுக்கப்பட்டது என்ற ஆதாரமற்ற சுலோகங்களுடன் தேசிய விடுதலைக்கான இறுதிப் பலத்தையும் சிதைக்க முற்படுவதில் யார் பயன்பெறப் போகின்றார்கள்? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். புலம்பெயர் தேசங்களில் கணக்குக் கேட்டு மாவீரர் தினத்தை முன்நிறுத்திப் புலம்பெயர் தமிழர்களது பலத்தைச் சிதைக்கும் ‘கும்கி’களின் முயற்சிக்கும், பிராந்திய வேறுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் முன்நிறுத்தி தமிழீழ மண்ணை இரு கூறாக்கி, அழிவுக்குத் தணை போன கருணாவின் முயற்சிக்கும் அதிக வேறுபாடுகளைக் காண முடியாது.

தமிழீழ மண்ணின் விடுதலைக்கான காத்திரமான அடுத்த கட்ட நகர்வு புலம்பெயர் தமிழர்களது பலத்தில் மட்டுமே உள்ளது. அதற்கான விலையைச் செலுத்துவதற்கு புலம்பெயர் தமிழர்களும் தயாராகவே உள்ளார்கள். அந்த ஒன்றுபட்ட உணர்வினை முன்நகர்த்திச் செல்வதற்கான தளமாகவே மாவீரர் தினம் உள்ளது. அதனால்தான் சிங்கள தேசமும், அவர்களால் உருவாக்கப்பட்ட ‘கும்கி’களும் மாவீரர் தினத்தைக் குறிவைத்துள்ளன. அதனை முறியடிப்பதிலேயே மாவீரர்களது கனவு நனவாகும் என்பதை உணர்ந்து, நாம் அனைவரும் ஒன்றாக எழுவோம்!

- அகத்தியன்

http://www.tamilkathir.com/news/5425/58//d,view.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.