Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னுடன் வந்தவன்.

Featured Replies

கடிதத்தை பிரித்தேன்,

தோழர் ---------------க்கு ,

உம்முடன் லண்டனில் இருந்து வந்த தோழர் ----------, சில விசம பிரசாரங்களிலும்,இயக்க கட்டுப்பாடிற்கு விரோதமான செயற்பாடுகளிலும் ஈடுபட்டதற்காக விசாரணைக்காக முகாம் B யில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நீர் உடன் உரத்தநாடு சென்று அவரை விசாரணை செய்து அறிக்கை தருமாறு வேண்டுகின்றேன்.

இப்படிக்கு

செயலதிபர்

முகுந்தன்

குறிப்பு - உரத்தநாடு போகுமுன் மாதவனை சந்திக்கவும்.

கடிதத்தை மடித்து பொக்கெற்ருக்குள் வைத்துவிட்டு மாதவனை சந்திக்க போகின்றேன்.உரத்தநாடு போய் வருவதற்கு செலவு காசும்,அதைவிட ஒரு பாசலும் தந்தார்.இதில் ஒன்பது லட்சம் ருபா இருக்கின்றது அனைத்துமுகாம் பொறுப்பாளர் கருணாவிடம் கொடுத்துவிடவும் என்றார்.மாலை திருவள்ளுவர் போய் தஞ்சாவூர் பஸ் ஏறுகின்றேன். பணத்தை எடுத்து இடுப்புடன் கட்டிவிட்டு கடிதத்தை மீண்டும் வாசிக்கின்றேன் .

குமார்,லண்டனில் வந்து எங்களுடன் எப்படி ஒட்டினான்,ஒரு ஊர்வலத்தில் முதன் முதல் இவனை எனது நண்பனுடன் சந்தித்தேன் ,என்னைவிட ஒரு ஆறு,ஏழு வயது குறைய இருக்கும் .எனது அதே ஊர்,இவர்கள் குடும்பத்தையே எனக்கு ஊரில் தெரியும் .மிகவும் வசதி வாய்ந்த குடும்பம் எழுபதுகளிலேயே லண்டன்,அமெரிக்கா என இவனின் சகோதரங்கள் பறந்துவிட்டார்கள்.இவன் கடைசி பிள்ளை 83 கலவரம் வர இவனையும் பிடித்து லண்டன் அனுப்பிவிட்டார்கள்.ஊர்வலம் முடிய எமது ஈஸ்ட்காம் அலுவலகத்திற்கு இவனும் வந்தான்.அதன் பின் அடிக்கடி அலுவலகத்தில் அவனை பார்தேன்.வீட்டில் இருந்து அக்கா செய்து தந்தவா என்று ரோல்ஸ்,கட்லட் எல்லாம் கொண்டுவருவான்.தனது பல நெருங்கிய நண்பர்கள் எல்லாம் புளோட்டில் சேர்ந்து ஆயுத பயிற்சிக்கு இந்தியா போய்விட்டதாக சொல்வான்.தனக்கும் அவர்களுடன் போகும் எண்ணம் இருந்ததை அறிந்ததால் தான் A/L எடுத்த கையுடன் தன்னை பிடித்து அனுப்பிவிட்டதாக மனவருத்தப்படுவான்.ஆள் மிக சுறுசுறுப்பு ,ஒரு மோட்டார் சயிக்கில் வேறு வாங்கி பாடசாலை ,வீடு ,வேலை எமது அலுவலகம் என ஒரே சுற்று .இதை அறிந்த அவனின் அண்ணை இனி நீ மோட்டார் சயிக்கில் ஓடுவது கண்டால் நடப்பது வேறு என்று எச்சரித்துவிட்டார்,சில மாதங்களின் பின் தமையனை சந்திக்கபோனவர் மோட்டார் சயிக்கிளை தூர நிறுத்தி விட்டு போயிருக்கின்றார் .என்னத்தில் வந்தனி என அண்ணன் கேட்க டியுப் என்றிருக்கின்றார் கையில் கெல்மெட்ருடன் ,அப்படிப்பட்ட ஒரு வீச்சான காய் தான் ஆள் .பின்னர் நான் இந்தியா வெளிக்கிட தானும் வீட்டிற்கு அகதிகளுக்கு மருந்து கொண்டுபோய் கொடுத்துவிட்டு திரும்பி வருவதாக சொல்லி என்னுடன் வருவதாக சொன்னார்.இருவரும் ஒன்றாகத்தான் இந்தியா போனோம்.

சென்னை போனதும் அடுத்த நாளே ஆள் முகாம்களுக்கு போய்விட்டார் ,நான் ஒரு கிழைமை சென்னையில் இருந்து டெல்கி போனேன்.இடையில் நின்ற நாட்களில் நாம் முகாம்களுக்கு போன போது ஒருமுகாமில் ஒட்ட வெட்டப்பட்ட மயிருடன் மிகவும் வெள்ளையான அவர் சிவந்து போய் கிணறு வெட்டிக்கொண்டு இருக்கின்றார் ,அங்குதான் பிரான்ஸ் இருந்து வந்த இன்னுமொரு நண்பரையும் சந்தித்தேன்.தமிழிழத்தின் படிக்கட்டுகள் இவைகள் என எண்ணியபடி பெரிதாக சுகம் கூட விசாரிக்காமல் அடுத்தமுகாம் சென்று சென்னை திரும்பி டெல்கி வந்து ஆறு மாதங்களாகிவிட்டிருந்தது.

திரும்ப சென்னை சென்றபோது முகாம் வாழ்க்கை முடித்து சென்னைவந்திருந்தான்,லண்டனில் இருந்து வந்தபடியால் இங்கு கொண்டுவந்து டெலிபோன் ஆன்சர் பண்ண விட்டிருக்கின்றார்கள் அல்லது தான் முகாமில் பயிற்சியும் பட்டினியும் தன்னால் முடியாமல் போயிருக்குமென மெதுவாக சொன்னான்.பின்னர் புலனாய்வு துறையுடன் மோட்டார் சயிக்கிளில் அந்தமாதிரி சுத்துவதை பலமுறை கண்டேன்.அப்போது ஒரு நாள் தான் நாட்டிற்கு போவதாக சொன்னான் ,அன்று அவருடன் நானும் கரை வரை சென்று வந்தேன்.

இரண்டுமாதங்கள் வடக்கு கிழக்கு எல்லாம் சுத்தியடிச்சு, திரும்ப சென்னை வந்து தன்னுடன் நெருங்கியவர்களுக்கு "we missed the bus" என்று சொல்ல தொடங்கியிருக்கின்றார்.அத்துடன் திரும்ப வெளிநாடு வெளிக்கிடும் நோக்குடன் அமெரிக்காவில் இருக்கும் அக்காவிற்கு நிலைமையை விளக்கி கடிதம் போட, அவாவும் அக்கமடேசன் கடிதம் ,உலக சுற்றுலா டிக்கெட் ஒன்று அனுப்பியிருக்கின்றா .அப்படியே பறக்க வேண்டியவர் தன்னுடன் மிக நெருக்கமான தோழருக்கும் அதை சொல்லி அவரையும் போய் கூப்பிடுவதாக சொல்லியிருக்கின்றார்.

பிளைட்டிற்கு இரண்டு நாட்கள் முதல் இடம்வேறு மாறிவிட்டார்.இவரை காணவில்லை எனத் தேட வெளிக்கிட்டபோது நெருங்கிய தோழர் பயத்தில் விஷயத்தை போட்டுடைத்துவிட்டார்.ஆனால் அவருக்கு இவர் இருக்குமிடம் தெரியாது.தற்செயலாக தகவல் ஏதும் வந்தால் சொல்ல சொல்லி இவருக்கு உத்தரவு .விசர்பிள்ளை போனும் பண்ணி போக முதல் சந்தித்துவிட்டுபோவதாக இடம் ஒன்றை வேறு சொல்லியிருக்கின்றார்.மாலை ஆறு மணி தோழரும் நம்மட இண்டேளியன்ஸ்சும் எதிர் பார்த்திருக்க கார் சாரதி சொல்லியிருக்கின்றார் என்ன விசரனா அவன் வருவதற்கு வீண் வேலை காத்திருப்பதேன்று,( சாரதி இப்போ பிரான்ஸ்சில் இருப்பதாக அறிகின்றேன் ).

பாவிப்பயல் இடிப்பில் கிரிநேட்டும் கொழுவியபடி வந்திருக்கின்றார் அப்படியே அப்பி மயக்கஊசி போட்டு இரவோடிரவாக உரத்தநாட்டிற்கு கொண்டுபோய்விட்டார்கள் .

விசாரணக்கு கடிதம் வரமுதலே நடந்த இவ்வளவு விடயங்களும் எனக்கு தெரியும் அதைவிட நேற்று முகாமில் இருந்து அவரை தப்பி ஓடப் பண்ணியதும் தெரியும் இருந்தும் உரத்தநாட்டு பஸ்சில் போய்கொண்டிருக்கின்றேன்.

(தொடரும் ஒரு சொட்டு தான் மிகுதி )

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: படிக்கட்டுக்களாக வேண்டியவர்கள் வேற்று மண்ணில் உரமானார்களோ?
  • கருத்துக்கள உறவுகள்

உரத்த நாடு தமிழ் நாட்டில் எங்கே இருக்குது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.