Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவும் மன்மோகனும் மாலைதீவில் சந்திக்கின்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

india-sri-lanka.jpg

சார்க் மாநாட்டில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகள் தேக்கமடைந்துள்ள பின்னணியில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இந்திய நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசுடன் இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு தொடர்பாக பேச்சு நடத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இடைநிறுத்திய பேச்சுக்களை மீள ஆரம்பித்த போதும் எந்த முன்னேற்றங்களும் எட்டப்படாத நிலையில், அமெரிக்க, பிரித்தானிய, கனேடிய அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டுப் பயணங்கள் சிறிலங்கா அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை.

சிறிலங்கா அமைச்சர்கள் பலரும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்ற நிலையிலேயே, இந்தியப் பிரதமரும் சிறிலங்கா அதிபரும் மாலைதீவில் சந்திக்கவுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் பேர்த்தில் நடைபெற்ற கொமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளவில்லை.

அதற்கு முன்னதாக கடந்த செப்ரெம்பர் மாதம் நியுயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த போதே மகிந்த ராஜபக்சவும் மன்மோகன்சிங்கும் சந்தித்துப் பேசியிருந்தனர்.

இந்தச் சந்திப்பின்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக இருவரும் கலந்துரையாடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த அறிக்கை எதிர்வரும் 15ம் நாள் அளவில் சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது.

சார்க் மாநாட்டில பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபரும், இந்தியப் பிரதமரும் நாளை மாலைதீவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.eeladhesa...ndex.php?option

கழுதையும் கோவேறு கழுதையும் சந்திக்க போகின்றது :D

மாநாட்டுக்கு முன்னராக தனது 'முழு அளவிலான' தூதுவராலயத்தை திறந்து சீன தனது செய்தியை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சொல்லுகின்றது.

2007 இல் தனது தூதுவராலயத்தை திறந்தது.

China opens embassy in Maldives ahead of key summit

China opened a full diplomatic mission in the Maldives today, two days ahead of a key South Asian summit in the Indian Ocean archipelago, an official said.

http://ibnlive.in.com/generalnewsfeed/news/china-opens-embassy-in-maldives-ahead-of-key-summit/892113.html

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான பிரச்சனைகளை, இரு தலைவர்களும் ஆராய்வார்கள்!!!

250px-Baudet.jpg

post-8395-0-13523100-1320794667_thumb.jp

Edited by புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.