Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியா நிராகரித்ததால் சீனாவை அழைத்தோம் --மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா நிராகரித்ததால் சீனாவை அழைத்தோம் --மகிந்த

Edited by nunavilan

சீனாவின் அழகிய திருவிளையாடலும் அதற்கேற்றாற்போல் தாளம் போடும் சிறிலங்காவையும் இந்தியா அறியாமலில்லை. ஆனாலும் தற்சமயம் இந்தியாவால் எதுவும் செய்ய முடியாமலுள்ளது என்பது உண்மை.

சீனாவின் அழகிய திருவிளையாடலும் அதற்கேற்றாற்போல் தாளம் போடும் சிறிலங்காவையும் இந்தியா அறியாமலில்லை. ஆனாலும் தற்சமயம் இந்தியாவால் எதுவும் செய்ய முடியாமலுள்ளது என்பது உண்மை.

தனது 'முட்டாள் அரசியலால்' தான் இந்த நிலைக்கு அது ஆளானது.

நாட்டின் நலனை விட்டு தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து முன்னெடுக்கும் கொள்கைகள் மாறும்வரை இந்தியா அழிவுப்பாதையை நோக்கி செல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் அழகிய திருவிளையாடலும் அதற்கேற்றாற்போல் தாளம் போடும் சிறிலங்காவையும் இந்தியா அறியாமலில்லை. ஆனாலும் தற்சமயம் இந்தியாவால் எதுவும் செய்ய முடியாமலுள்ளது என்பது உண்மை.

ஏன் இந்தியாவிற்கு இப்போ முடக்கு வதாமோ?

இப்போதில்லை இனிமேலும் இந்தியாவால் எதுவும் செய்யமுடியாது. ஆட்சியில் இருப்பவர்கள் இருக்கபோபவர்கள் அப்படியானவர்கள். இவர்களால் இந்தியாவிற்கு எந்த நலனும் இல்லை. உண்மையை சொன்னால் இன்னும் சிறிது காலத்தில் இந்திய அரசியலை அமெரிக்க முதலாளிகளே நிர்ணயிக்கபோகிரார்கள். உலக பணக்காரரோடு போட்டியில் இருக்கும் ஆட்சி காரருக்கு பணம்தான் இப்போ முக்கிய விடயம்.

சிறிலங்கவில்தான் இப்போது கால்பதிக்கிறது சீனா. அமெரிக்க தரகர்கள் மூலம் பின் கதவாலே வந்து இந்தியாவையும் சீனாதான் விளுங்கபோகிறது. உலகமயமாதல் உலகமயமாதல் என்று எல்லோரும் நல்ல புத்தகமும் தியோரி களும் எழுதினார்கள் அனால் சீனாதான் அதை சரிவர செய்கிறது. மற்றைய இடங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அமெரிக்காவில் எப்போது எலெக்சன் வந்தாலும் ஈரான் மீது குண்டு போட ஒரு தேவையும் வருகிறது .............. அது ஏன் எலெக்சன் வரும் வேளைகளில்தான் வருகிறது? இப்போதான் பணம் பாதாளம் வரை பாயும் நேரம்.

கடந்த ஆறு வருடங்களில் மன்மோகன் சிங்கும் சோனியா குடும்பமும் அடித்த மொத்த தொகை எவ்வளவு என நினைக்கின்றீர்கள்? இந்த தொகையை அடிப்பவனுக்கு மற்றவிடயம் பற்றி யோசிக்க நேரம் இருக்குமா?

நல்லது சீனாவின் வரசு நல்வரவாகட்டும்.

சிங்கள நாட்டில் சீனா இராணுவ பிரசனத்தை உருவாக்கினால் பெரியளவில் மேற்குலக கரிசனை எமது மீது வரும்.

அண்மைய அமெரிக்க சனாதிபதியின் அவுஸ்திரேலிய பிரயாணமும் அங்கு அமெரிக்க துருப்புக்கள் பேரை அளவில் நிலை நிறுத்துவது என்பதும் - நேரடியாக சீனாவுக்கு எதிராக விடுக்கப்பட்ட சவால்களே.

இதற்கு சீனா என்ன பதில் நடவடிக்கை எடுக்கும்? அமைதியாக இருக்க முடிவு எடுக்குமா? இல்லை இந்த பிராந்தியத்தில் நானே இராசா என்பதை உறுதி செய்ய முயலுமா?

சிங்கள நாட்டில் சீனா இராணுவ பிரசனத்தை உருவாக்கினால் பெரியளவில் மேற்குலக கரிசனை எமது மீது வரும்.

அண்மைய அமெரிக்க சனாதிபதியின் அவுஸ்திரேலிய பிரயாணமும் அங்கு அமெரிக்க துருப்புக்கள் பேரை அளவில் நிலை நிறுத்துவது என்பதும் - நேரடியாக சீனாவுக்கு எதிராக விடுக்கப்பட்ட சவால்களே.

இதற்கு சீனா என்ன பதில் நடவடிக்கை எடுக்கும்? அமைதியாக இருக்க முடிவு எடுக்குமா? இல்லை இந்த பிராந்தியத்தில் நானே இராசா என்பதை உறுதி செய்ய முயலுமா?

இல்லை அப்படிச் செய்து மூக்குடைபடாது. முதலில் எனது மிகப் பெரிய விருப்பம் சீனாவின் பிரசன்னம் அதிகரிப்பதுதான். அவ்வாறு நிகழின் மேற்குலகினதும் இந்தியாவினதும் பகடைக்காய்கள் மீண்டும் நாங்களாவோம். அப்படிப்பட்ட நிலையொன்று வரின் தமிழர் நாம் பெற்ற அனுபவங்கள் எங்களது நிலையை மேம்படுத்துவதற்கு உதவ வேண்டும்.தற்போதய நிலையில் மேற்குலகுடனோ இந்தியாவுடனோ மோதிக்கொள்ளும் வாய்ப்பை சீனா ஏற்படுத்தாது. காரணம் சீனாவின் கடல் வழிப்பாதை தடைப்படுவதையோ அல்லது தடங்கல் வருவதையோ அது சற்றும் விரும்பாது. தனது முதலீடு என்ற ஒன்றைமட்டுமே வைத்து இலங்கை மீது ஆதிக்க நிலையை உருவாக்க முயலும்.இதை இந்தியா தடுப்பதாகவிருந்தால் அல்லது மட்டுப்படுத்தி அகற்றுவதாகவிருந்தால் உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்துவதன் மூலமாகத்தான் செய்யலாம்.

இல்லை அப்படிச் செய்து மூக்குடைபடாது. முதலில் எனது மிகப் பெரிய விருப்பம் சீனாவின் பிரசன்னம் அதிகரிப்பதுதான். அவ்வாறு நிகழின் மேற்குலகினதும் இந்தியாவினதும் பகடைக்காய்கள் மீண்டும் நாங்களாவோம். அப்படிப்பட்ட நிலையொன்று வரின் தமிழர் நாம் பெற்ற அனுபவங்கள் எங்களது நிலையை மேம்படுத்துவதற்கு உதவ வேண்டும்.தற்போதய நிலையில் மேற்குலகுடனோ இந்தியாவுடனோ மோதிக்கொள்ளும் வாய்ப்பை சீனா ஏற்படுத்தாது. காரணம் சீனாவின் கடல் வழிப்பாதை தடைப்படுவதையோ அல்லது தடங்கல் வருவதையோ அது சற்றும் விரும்பாது. தனது முதலீடு என்ற ஒன்றைமட்டுமே வைத்து இலங்கை மீது ஆதிக்க நிலையை உருவாக்க முயலும்.இதை இந்தியா தடுப்பதாகவிருந்தால் அல்லது மட்டுப்படுத்தி அகற்றுவதாகவிருந்தால் உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்துவதன் மூலமாகத்தான் செய்யலாம்.

ஆசியான் மாநாட்டில் சீன - இந்திய - அமெரிக்க தலைவர்கள் கலந்துகொள்ளுகிறனர்.

இதனிடையே, சீனப் பிரதமர் வென் ஜியாபாவோவையும் சந்தித்துப் மன்மோகன் சிங் பேசினார். தென் சீனக் கடலில் வியட்நாமின் ஒத்துழைப்புடன் எண்ணெய் துரப்பணப் பணியில் இந்தியா ஈடுபடுவதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சீனப் பிரதமர் அந்தப் பிரச்சினையை எழுப்பியபோது, தென் சீனக் கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணியில் இந்தியாவின் ஈடுபாடு முழுக்க முழுக்க வர்த்தக நோக்கக் கொண்டது என்று மன்மோகன் சிங் எடுத்துரைத்ததாக கிழக்காசிய நாடுகளுக்கான இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/india/2011/11/111118_manmohanobama.shtml

மொத்தத்தில் கடல்வழி போக்குவரத்தும் எண்ணெய் வள தேடலும் மேலும் சிக்கல்களை உருவாக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.