Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்க்கப்பல்களைக் கேட்கிறது சிறிலங்கா – நழுவுகிறது இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gota-Galle-con..jpg

சிறிலங்கா கடற்படையை பலப்படுத்த இந்தியாவிடம் இருந்து இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை கொள்வனவு செய்யும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.

ஆனால் சிறிலங்காவுக்கு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வழங்குவது தொடர்பாக இந்தியா இன்னமும் உறுதியான எந்தப் பதிலையும் வழங்காமல் இழுத்தடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் நேற்று இந்திய ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, இந்தியாவின் உதவியுடன் கடற்படையை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

“உலகின் பரபரப்பான கடற்பாதையைக் கொண்டுள்ள சிறிலங்கா, கடற்கொள்ளை மற்றும் போதைப்பொருள் தீவிரவாதம் ஆகியவற்றை முறியடிக்க இந்தியாவின் உதவியுடன் சிறிலங்கா கடற்படையை விரிவாக்கவுள்ளது.

நட்புநாடுகளின் உதவி கிடைத்தால், சிறிலங்காவினால் ஆழ்கடலில் செயற்படும் கடற்கலங்களின் திறனைப் பெறமுடியும். இதன்மூலம் எமது ஒட்டுமொத்த பலம் கூடி விடும்.

பிராந்தியத்தின் பிரதான கடல்சக்திகளுடனான உறவுகளை அதிகரிப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.

இந்து சமுத்திரப் பிராந்தியம் முழுவதினதும் கடல்சார் பாதுகாப்பில் சிறிலங்கா மிகப்பெரிய பாத்திரம் வகிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இதன்மூலம் பிராந்திய நாடுகளுக்கு மட்டும் நன்மையல்ல. உலகத்துக்கே நன்மையாக அமையும்.

இந்தியாவிடம் இருந்து இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வாங்குவதற்கு சிறிலங்கா அணுகியுள்ளது. இதற்கான முயற்சிகள் சில மாதங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் இந்தியத் தரப்பில் இதற்கான முயற்சிகள் மெதுவாகவே இடம்பெறுகின்றன. அமைச்சரவை உள்ளிட்ட உயர்மட்ட முடிவுகளும் தேவைப்படுகிறது. நிதிப் பிரச்சினையும் உள்ளது.

காலியில் நடத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கு வெற்றிகரமானது. அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தக் கருத்தரங்கிற்கு உயர்நிலை அதிகாரிகளை அனுப்பி வைத்தன.

ஆனால் கப்டன் நிலையில் உள்ள அதிகாரி ஒருவரையே இந்தியா அனுப்பியது“ என்றும் கோத்தாபய ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.

http://www.tamilthai.com/?p=30608

  • கருத்துக்கள உறவுகள்

சீனா குடுக்கப்போற கப்பல்கள் அங்கால ரெடியா நிக்குது..! :rolleyes: இந்தியாவிடம்தான் முதலில் கேட்டோம் எண்டு பின்னாளில் அறிக்கை வரும்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தநிலையில் நேற்று இந்திய ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, இந்தியாவின் உதவியுடன் கடற்படையை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

“உலகின் பரபரப்பான கடற்பாதையைக் கொண்டுள்ள சிறிலங்கா,மீன்வர்களின் கடற்கொலை மற்றும் போதைப்பொருள் கடத்துதல் அரசதீவிரவாதம் ஆகியவற்றை இந்தியாவின் உதவியுடன் சிறிலங்கா கடற்படையை விரிவாக்கவுள்ளது."

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

photo1.jpg

............... :unsure::blink:

ஆயுத போட்டியில் அமெரிக்காவுக்கு சவால் விடும் சீனா இது வரையில் நம்பதகமான கனத்த ஆயுதங்களை இலங்கையின் கையில் கொடுத்திருப்பதாக தெரியவில்லை. தனிய(3D Radar தவிர) பைலட் ரெயினிங்க் விமானங்கள் தான் கொடுத்திருப்பதாக வாசித்த ஞாபகம். இலங்கை பாவித்த கப்பல்களும் விமானங்களும் இந்தியா, அமெரிக்கா, ஸ்ரேல், ரூசியா போன்றவற்றினதே. தனது விமானம் தாங்கியை இலங்கையில் கொண்டுவந்து பரீட்சைகள் நடத்தவிருக்கு. இந்த பரீட்சைக்காக இந்தியாவிடம் போர்கப்பல்கள் வாங்க சீனா கடன் கொடுக்கும் போலிருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.