Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் தேசிய அரசு ?

Featured Replies

இலங்கையில் தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முற்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சி வெற்றிபெற்றால், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு, பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படுமெனவும், ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலருக்கு அமைச்சு பொறுப்புகள் வழங்கப்படுமெனவும் கூறப்படுகின்றது.

மார்ச் மாதம் 19ம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடருக்கு முன்பு, தேசிய அரசாங்கத்தை அமைப்பதென ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணங்கியுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றில் இருந்து இலங்கையின் இறைமையையும் படையினரையும் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கில் தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க வேண்டுமென ரணில் விக்கிரமசிங்க கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுத்ததாக ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள்.

இலங்கையின் இறைமை மற்றும் இலங்கை படையினர் பயங்கரவாதத்துக்கு எதிராக நிலை நாட்டிய வெற்றி போன்றவற்றை காட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு அனைத்துப் பொதுமக்களுக்கும் உள்ளதாக ரணில் விக்கிரமசிங்க கட்சியின் பிரதேச அமைப்பாளர்களிடம் கூறி வருவதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=10181

  • தொடங்கியவர்

ஆணைக்குழுவின் அறிக்கையை பான் கீ மூன், நவநீதம் பிள்ளைக்கு அனுப்புவது சிறந்தது: சமரசிங்க

ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதன் பிரதிகளை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்துக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கும் சமர்ப்பிப்பது சிறந்ததாகும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். __

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=35273

  • தொடங்கியவர்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைய வேண்டும் மனோ

தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாத கட்டத்தை அடைந்துவிட்டது. இது தொடர்பாக அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து அழுத்தம் தர வேண்டும். என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆளுந்தரப்பு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரும் எதிர்த்தரப்பில் கூட்டமைப்பும் இணைந்து செயற்பட வேண்டும். இதன் மூலம் நீண்டகாலமாக இழுபறிப்படும் இப்பிரச்சினைக்கு இறுதி தீர்வு காணவேண்டியதற்கான அவசர தேவையை அரசாங்கத்தின் உயர்பீடத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் உணர்த்த முடியும். எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் தமிழ் சிறைக்கைதிகள் தாக்கப்பட்டும், நிர்வாணப்படுத்தப்பட்டும் அவமதிக்கப்பட்டும் உள்ளார்கள். அதற்கும் மேலாக சிறைச்சாலையிலிருந்த இந்து ஆலயம் சேதமாக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் செய்துவிட்டு “இன்றைய தினத்திற்கு உங்களுக்கு நாங்கள் தருகிற பரிசு இது” என சொல்லி இத்தகைய கீழ்த்தரமான நடவடிக்கையை சில இனவாத அதிகாரிகளும், சக கைதிகளும் நியாயப்படுத்தி உள்ளார்கள்.

இது முதன் முறையாக நடைபெறும் சம்பவமல்ல நீண்டகாலமாக நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தமிழ்க் கைதிகள் மீது வன்முறை தாராளமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அனுராதபுரத்தில் இதற்கு முன்னரும் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது. கண்டி போகம்பரை, நீர்கொழும்பு, கொழும்பு மகஸின், களுத்துறை என நீண்ட வரிசையில் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. என மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரணடைந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஏதோ ஒரு அடிப்படையில் புனர்வாழ்வு பயிற்சி வழங்கப்பட்டு கட்டங்கட்டமாக விடுவிக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது. இந்த விடுவிப்புகளை கருணா அம்மான், கேபி ஆகியோர் கண்காணிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் புலிகள் இயக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள் என்ற சந்தேகங்களின் அடிப்படையில் பெரும்பாலானோர் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவிப்பது நியாயமாகாது. இவர்களில் தீர்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படலாம். விசாரணைகள் முடிவடையாத தரப்பினரை புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றி படிப்படியாக விடுவிக்கலாம். இதற்கு புதிய சட்டதிருத்தங்கள் தேவையானால் பாரளுமன்றத்தில் அனைத்து கட்சிகள் ஆதரவுடன் அவற்றை கொண்டுவரலாம். என்றார்.

அத்துடன், தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலே கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசுகின்றது. இப்பேச்சுவார்த்தைகள் ஒரு கட்டத்தினை அடைந்த பிறகு அதில் அரசாங்கத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கின்ற ஏனைய தரப்பினர்களும் இணைந்துகொள்வார்கள். ஆனால் தமிழ் தடுப்புக் காவல் கைதிகள், காணாமல்போனோர் ஆகியோரது பிரச்சினைகள் தொடர்பில் அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றே இணைந்து செயற்படவேண்டிய நிலைமை தற்போது உருவாகியுள்ளது. ஏனென்றால் இவை இன்று எரிந்துகொண்டிருக்கும் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளாகும்.

தடுப்புக்காவல் கைதிகளாக வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு ஆகிய அனைத்துப் பிரதேசங்களை சேர்ந்த தமிழர்களும் இருக்கின்றார்கள். ஆண்களும், பெண்களும், வயோதிபர்களும், மதகுருமார்களும் இருக்கின்றார்கள். கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் சில தமிழ்ப்பெண் கைதிகள் தங்களது குழந்தைகளுடன் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள் கடுமையான சுகயீனமான கைதிகளும் இருக்கின்றார்கள்.

எனவே ஆளுந்தரப்பிலும், எதிர்த்தரப்பிலும் இருக்கின்ற அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது அரசியல், பிரதேச பேதங்களை கடந்து ஒரேகுரலில் ஜனாதிபதியை வலியுறுத்தவேண்டும். இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை என்பதால், இத்தகையதொரு கூட்டுக் கோரிக்கையை அரசாங்கத்தால் சுலபமாக நிராகரிக்க முடியாது. இன்று நிலவுகின்ற சர்வதேச சூழலைப் பயன்படுத்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை ஆளுமையுடன் சாத்தியமாக்க வேண்டும்.

http://www.alaikal.com/news/?p=89352

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியக்கட்சியா? சர்வாதிகாரத்திற்கு சூப்பர் நேமப்பா!

ஒருகாலத்தில் இலங்கைக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்து தனிபெரும் கட்சியாக இருந்தது ஐ.தே.க. இறுமாப்படைதிருந்த டி.எஸ் ஆல், தனக்கு சரிக்கு சரியாக இயங்ககூடிய ஒரு எதிர்கட்சியை நாளடைவில் தேடிக்கொண்டது.

1977 தேர்தலில் ஐ.தே.கட்சிக்கு 140 உறுப்பினர்களைப்பெற்று, 8 உறுப்பினர்களை பெற்ற சி.சு.கட்சியை இனி ஒருதடவையும் பதவிக்கு வரமுடியாதபடி அரசியல் அமைப்பை திருத்தம்செய்தார் ரணிலின் மாமா. இன்று ரணில் முழு கட்சியையும் அடகுவைத்து தனது கட்சி பதவியை தக்க வைக்க முயல்கிறார்.

வாழ்க்கை வண்டி சக்கரமென்பதற்கு உதாரணம் ஐ.தே,க.

ஆனாலும் ஐ.தே.கட்சி இன்னொருதடவை மேலே வருமா தெரியாது.

  • தொடங்கியவர்

மகிந்தாவுக்கு போர்குற்றங்களில் இருந்து தப்ப இரணில் தேவை

இரணிலுக்கு எப்படியாவது ஆட்சியை பிடிக்க ஆசை

ஜூலியஸ் சீசர் கேட்டது போன்று, புரூட்டஸ் நீயுமா என்று மகிந்த கேட்கும் காலம் விரைவில்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை தமிழ் அரசியல் கட்சிகளில் மனோ கணேசன் ஒருவராவது விபரமானவராக இருப்பது சந்தோசமே, தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு கூட வாங்கித்தர முடியாத இவர்கள் வானமேறி வைகுண்டம் வாங்கித்தரப்போகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.