Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்தனர்

Featured Replies

ஈரானிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்தனர்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பிரிட்டனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மாணவர்கள் பிரித்தானிய தூதுரகத்திற்குள் புகுந்துள்ளளனர்.

கதவை உடைத்து உட்புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து காகிதாதிகளை வீசியெறிந்ததாகவும் பிரித்தானிய தேசியக் கொடிக்கு பதிலாக ஈரானிய தேசிய கொடியை பறக்கவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு ஈரானிய வங்கிகள் உதவியளிப்பதாக தெரிவித்து அவ்வங்கிகளுக்கு பிரித்தானிய திறைச்சேரி தடைவிதித்திருந்தது. இதனால் பிரிட்டனுடனான இராஜதந்திர தொடர்புகளை குறைப்பதற்கு ஈரானிய நாடாளுமன்றம் ஆதரவு தெரிவித்தது.

ஈரானிலுள்ள பிரித்தானிய தூதுவரை இரு வாரங்களுக்குள் வெளியேற்றுவதற்கும் ஈரானிய நாடாளுமன்றம் நேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://tamilmirror.l...9-13-02-02.html

  • தொடங்கியவர்

UK warns Iran after embassy stormed

UK Prime Minister David Cameron has warned Iran of "serious consequences" after protesters stormed the British embassy and a UK compound in Tehran.

  • தொடங்கியவர்

ஈரானில் இருந்து பிரித்தானிய ராஜதந்திரிகள் வெளியேற்றம்.

ஈரானின் தலைநகர் ரெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதரகம் நேற்றுத் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து தமது ராஜதந்திரிகளை பிரித்தானியா மீள அழைத்துள்ளது.

ஈரான் மீது பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து, தீவிரவாத மாணவர்களின் குழுவொன்று நேற்று பிரித்தானிய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், சொந்தப் பாதுகாப்புக்காக பணியாளர்கள் சிலர் ஈரானில் இருந்து வெளியேறுவதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சுத் தெரிவித்தது.

அனைத்து ராஜதந்திரிகளும் ஈரானை விட்டு வெளியேறுவார்களா என்ற விடயத்தை பிரித்தானிய அரசு உறுதி செய்யவில்லை.

ஈரான் பாரதூரமான பின் விளைவுகளை எதிர்நோக்குமென பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் கமெறோன் எச்சரிக்கை செய்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை என்பன நேற்றைய தாக்குதலைக் கண்டித்துள்ளன.

பாதுகாப்புப் காரணங்களை முன்னிட்டு ரெஹ்ரானில் உள்ள தூதரகத்தை மூடுவதாக நோர்வே இன்று அறிவித்தது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=10212

  • தொடங்கியவர்

பிரிட்டனிலுள்ள ஈரானிய ராஜதந்திரிகள் வெளியேறுவதற்கு 48 மணித்தியால காலக்கெடு

பிரிட்டனிலுள்ள ஈரானிய ராஜதந்திரிகள் அனைவரும் வெளியேறுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் 48 மணித்தியால காலக்கெடு விதித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் இன்று புதன்கிழமை இவ்வறிவிப்பை விடுத்தார்

ஈரானிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்குள் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்து தாக்கியதைத் தொடர்ந்து பிரிட்டன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதேவேளை ஈரானிலுள்ள தனது தூதரகத்தையும் பிரிட்டன் மூடியுள்ளதுடன் அங்குள்ள பிரித்தானிய ராஜதந்திரிகள் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களையும் வாபஸ் பெற்றுள்ளதாகவும் பிரிட்டன் அறிவித்துள்ளது.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/31783--48-.html

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானுக்கு விரைவில்.... அமெரிக்கன், இங்கிலாந்து, இஸ்ரேல் எல்லாரும் சேர்ந்து... கும்மப்போறாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.