Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு

Featured Replies

யாழ். நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு

5ceb88318892726a0e381cf8b67c2aa0.JPG

யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் மீள்குடியேற்றம் குறித்தும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அரச அதிபருடன் கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அமெரிக்கத் துணைத்தூதுவர் கத்தரீன் வொன்டி மற்றும் தூதரகத்தைச் சேர்ந்த எமிலி பிளெக்னெல் ஆகியோர் இன்று காலை யாழ். மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை சந்தித்து உரையாடியுள்ளனர்.

அதன்போது யாழ். மாவட்டத்தில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசின் பங்களிப்பு, மற்றும் மாவட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விரிவாக அமெரிக்க அதிகாரிகள், அரச அதிபரைக் கேட்டறிந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் கண்ணிவெடி அகற்றல் தொடர்பாக அவர்களுக்கு அரச அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டது.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=18853676930880983

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தின் ஊது குழலிடம் இருந்து எப்படி உண்மை வரும்??

  • தொடங்கியவர்

வளலாய் மீள்குடியமர்வு; சென்ற மக்கள் கண்ணீர்

45.GIF

சுமார் 20 வருடங்களின் பின்னர் வளலாய் மக்களில் ஒரு பகுதியினர் தமது சொந்த வீடுகளையும் காணிகளையும் நேரில் பார்ப்பதற்கு இராணுவத்தினர் நேற்று அனுமதியளித்தனர். அவற்றைப் பார்த்த மக்கள் தமது சொத்துக்களின் நிலை கண்டு கண்ணீர்விட்டனர்.

தமது வீடுகளைக் காணிகளைப் பார்ப்பதற்காக வெளிநாட்டில் இருந்துகூடச் சிலர் வந்திருந்தனர். அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வளலாய் சித்தி விநாயகர் கோயிலில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹந்த ஹத்துருசிங்க மற்றும் அரச அதிபர் ஆகியோர் உரையாற்றினர். அத்துடன் வளலாய் மீள்குடியமர்வு ஆரம்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மக்கள் தமது இருப்பிடங்களுக்கு நேற்றே திரும்பினர். கோயிலில் நடந்த நேற்றைய கூட்டத்தில் மீளக்குடியமரும் மக்கள் மிதிவெடிகள் குறித்து விழிப்பாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். இதனால், மீளக்குடியமரும் ஆவலுடன் தமது வீடுகளையும் காணிகளையும் துப்புரவு செய்யும் ஆவலுடன் வந்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். "இது மீள்குடியமர்வா அல்லது காடு காட்டுதலா?'' என்று அவர்கள் முணுமுணுத்துக் கொண்டனர்.

மக்களின் நீண்ட வலியுறுத்தலுக்குப் பின்னரே அவர்களின் வீடுகள் காணிகளைப் பார்ப்பதற்குக்கூடப் படையினர் அனுமதி வழங்கினர். அதுவும் வளலாய் விமான நிலைய வீதியில் வளலாய் சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் வரை நடந்து சென்ற மக்கள் அதன் இரு மருங்கிலும் இருந்த வீடுகள், காணிகளைக் கண்களால் விழுங்கிக் கொண்டனர். அதற்கு மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மீள்குடியேற இன்னமும் அனுமதிக்கப்படாத பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிலர் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து, அவர்கள் வந்திருந்த மினி பஸ் தொண்டமானாறு பலாலி வீதி வழியே செல்ல அனுமதிக்கப்பட்டது. "இடையில் எங்கும் இறங்கக்கூடாது'' என்ற நிபந்தனையுடனேயே அந்த அனுமதி வழங்கப்பட்டது. "வீதியில் இருந்து பார்த்தபோது காட்டையும் மரங்களையும் தவிர இராணுவத்தினரும் தெரிந்தனர். எனது வீட்டைப் பார்க்க முடியவில்லை'' என்று தெரிவித்தார் வளலாய் வாசி ஒருவர்.

new.jpg02.jpg

03.jpg04.jpg

http://184.107.230.1...139675430627182

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.