Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே..கூட்டமைப்பு எம்.பி சிறீதரனுக்கு கல்வியமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Dec

06

த.தே..கூட்டமைப்பு எம்.பி சிறீதரனுக்கு கல்வியமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை!

resize_20111206050610.gif

வடக்கில் நடைபெறும் கல்வித்துறை வைபவங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்கவேண்டாம் என கல்வி அதிகாரிகளிடம் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

வடக்கின் கல்வித்துறை அபிவிருத்திக்கு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தடங்கலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிளிநொச்சி பாடசாலைகளின் பெயர்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக மாற்றம் செய்யப்படுவதாகவும் பாடசாலைகளின் பெயர் மாற்றத்தின் பின்னணியில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வடக்கு கிழக்கில் ஆசிரியர்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடாளுமன்றத்தில் ஆளுநரை விமர்சிக்கவேண்டாம் என்றும் தெற்கிலுள்ள பிள்ளைகளுக்கு வழங்கப்படும் வசதிகளைப் போன்றே வடக்கிலுள்ள பிள்ளைகளுக்கும் வசதிகள் வழங்கப்படுவதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு

வடக்கு ஆளுநரின் செயற்பாடுகளால் கல்வித்துறையில் பாரிய தாக்கம்! நிகழ்வுகளில் இராணுவப் பிரசன்னம்!- சிறிதரன் எம்.பி. அதிருப்தி

வடமாகாண பாடசாலைகளின் மற்றும் யாழ். பல்கலைக்கழகத்தின் விசேட நிகழ்வுகளின் போது சீருடையுடன் ஆயுதம் தரித்த இராணுவப் பிரசன்னம் அதிகரித்து வருவதாக விசனம் தெரிவித்த கூட்டமைப்பு எம்.பி. எஸ்.சிறிதரன், தென்பகுதி பாடசாலைகளின் விசேட நிகழ்வுகளின் போது ஆயுதம் தரித்த இராணுவப் பிரசன்னம் இருக்கின்றதா என்றும் கேள்வியெழுப்பினார்.

மேலும் வடமாகாண ஆளுநரின் யெற்பாடுகள் வடமாகாண கல்வித்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் அதிருப்தி வெளியிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீட்டின் மீதான குழுநிலை விவாதத்தில் பேசுகையிலேயே சிறிதரன் எம்.பி.

மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

கிளிநொச்சி மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் அங்கு 2009ஆம் ஆண்டுக்கு முன்பதாக 105 பாடசாலைகள் இயங்கி வந்தன. தற்போது அங்கு 91 பாடசாலைகளே இயங்குகின்றன. மிகுதி 14 பாடசாலைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.

அதேபோன்று 2009 ஆம் ஆண்டுக்கு முன்பதாக கிளிநொச்சி மாவட்டத்தில் 38, 663 மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். எனினும் தற்போது 28 ஆயிரம் மாணவர்களே உள்ளனர். இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.

கிளிநொச்சியானது ஒரே கல்வி வலயமாகவே இயங்கி வருகின்றது. இதனை இரண்டு கல்வி வலயங்களாக ஆக்குமாறு கேட்கப்பட்டிருக்கின்ற போதும் அது நடைபெறவில்லை. தற்போது அங்கு 2116 ஆசிரியர்களுக்கான தேவை இருக்கின்ற அதேவேளை 1686 ஆசிரியர்களே கடமையில் உள்ளனர். இங்கு 430 ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் வடமாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறியின் செயற்பாடுகள் கல்வித்துறையில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றன.

பளையிலுள்ள பாடசாலையொன்றில் இருந்து வெளியிடுவதற்கான நூலில் எனது வாழ்த்துச் செய்தி பதிக்கப்பட்டிருந்த காரணத்தால் குறித்த நூல் வெளியிடுவதற்கு ஆளுநர் தடைவிதித்துள்ளார். இதனை ஆதாரபூர்வமாகவே இந்தச் சபையில் கூறுகிறேன்.

இதேபோன்று கிளிநொச்சியின் பாடசாலையொன்றில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தேன். இதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான எமக்கே இவ்வாறு உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

இது எமது சிறப்புரிமைகளை மீறுகின்ற செயற்பாடுகளாகும்.

வடக்கைப் பொறுத்தவரையில் அங்கு இடம்பெறுகின்ற எந்தவொரு பாடசாலை நிகழ்வுகளிலும் சீருடையுடன் ஆயுதம் தரித்த இராணுவப் பிரசன்னம் காணப்படுகின்றது. மாணவர்களை மாணவர்களாக கல்வி கற்பதற்கான நிலைமை வடக்கில் இல்லாதிருக்கின்றது.

தெற்குப் பகுதி பாடசாலைகளின் நிகழ்வுகளில் இவ்வாறு இராணுவப் பிரசன்னங்கள் இருக்கின்றனவா. எனவே மாணவர் கற்பதற்கு வழிவிடுங்கள் என்றே கேட்கிறோம். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவத்தின் தலையீடுகளால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

மேலும் கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பொறியியல் பீடங்களை கிளிநொச்சிக்கு மாற்றுவதாகவும் அதற்கான பணிகள் மூன்று மாதங்களுக்குள் நிறைவடையும் என்றும் கூறப்பட்டது.

எனினும் 2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்டு விட்டது. இதுவரையில் அந்தப் பீடங்களை கிளிநொச்சிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே கூடிய விரைவில் இதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

http://www.thedipaar...ws.php?id=37903

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.