Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஞ்சதந்திரம் – தொடர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு

  • Replies 72
  • Views 19.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பஞ்சதந்திரம் தொடர் 14 நீல நரி அன்னபூர்னா ஈஸ்வரன்
 
 
நீல நரி

 

 

ரு நகரத்தின் அருகில் இருந்த குகையில் ஒரு நரி இருந்தது. அதன் பெயர் சண்டரவன். ஒருநாள் பசியால் வாடிப்போன அந்த நரி இரவானவுடனே இரைதேடப் புறப்பட்டுத் திரிந்தபடியே நகரத்திற்குள் நுழைந்தது. அதைக்கண்டவுடன் ஊர் நாய்கள் பயங்கரமாய்க் குரைத்தன; ஓடிவந்து அதன்மேல் விழுந்து கூரிய பற்களால் கடித்துவிட்டன. குலைக்கும் சத்தம் கேட்டுப் பயந்துபோய், உடம்பெல்லாம் காயங்கள் உண்டாகி, திக்குத் திசை பாராமல் நரி தாவியோடியது. ஓடுகிற ஓட்டத்தில், யாரோ ஒரு சாயப் பூச்சு வேலை செய்பவனின் வீட்டில் புகுந்தது. அங்கே நீலச் சாயம் நிரம்பியிருந்த ஒரு தொட்டி இருந்தது. அதில் போய் நரி விழுந்தது. நரியைத் துரத்திக்கொண்டு வந்த நாய்கள் திரும்பிச் சென்றுவிட்டன. நரிக்கு ஆயுள் கொஞ்சம் மீதியிருந்தது போலிருந்தது. நீலச்சாயத் தொட்டியிலிருந்து வெளியே வந்து காட்டுக்குள் ஓடிப்போயிற்று. அதன் உடம்பெல்லாம் ஒரே நீல நிறமாகி விட்டது. பக்கத்திலிருந்த மிருகங்கள் எல்லாம் இதைப் பார்த்துவிட்டன. ”இது என்ன மிருகம்? அபூர்வமான நிறத்தோடு இருக்கிறதே!” என்று கூச்சல் போட்டுக்கொண்டு, பயத்தினால் விழிகள் உருள, மிருகங்கள் எல்லாம் ஓட்டம் பிடித்தன. ஓடிக்கொண்டே, ”என்ன ஆச்சரியம்! இந்த அபூர்வமான மிருகம் எங்கிருந்தோ வந்திருக்கிறது! அதன் பலம் என்ன, நடத்தை எப்படி இருக்கும் என்பது ஒன்றும் தெரியவில்லை. ஆகவே அதைவிட்டு வெகுதூரம் விலகி ஓடுகிறோம். ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

ஒருவனுடைய குணமும் குலமும், பலமும் ஏது எப்படி என்று தெரிந்துகொள்ளாமல் அவனைப் புத்திசாலிகள் நம்பிச் சேர மாட்டார்கள்

 

என்று கத்திக்கொண்டே ஓடின.

 

அவை ஓடிப்போவதற்குக் காரணம் பீதியும் கவலையும்தான் என்று நரி தெரிந்துகொண்டது. உடனே, ”ஏ காட்டு மிருகங்களே! என்னைக் கண்டு ஏன் பயந்து ஒடுகிறீர்கள்? உங்களுக்கு அரசன் யாருமில்லை என்று அறிந்த இந்திரன் என்னை உங்களுக்கு அரசனாக மகுடாபிஷேகம் செய்திருக்கிறான். என் பெயர் சண்டரவன். ஆகவே, என் புஜபல பராக்கிரமத்தின் ஆதரவிலே நின்று நீங்கள் நிம்மதியோடு வாழலாம்” என்று சொல்லிற்று.

 

இந்தப் பேச்சைக் கேட்டதும் சிங்கம், புலி, சிறுத்தை, குரங்கு, முயல், மான், நரி முதலிய எல்லா காட்டு மிருகங்களும் ஒன்றுகூடி அதை வணங்கின. ”அரசே! நாங்கள்என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுங்கள்” என்றன.

 

சிங்கத்தை நரி தனது மந்திரியாக்கிக்கொண்டது. தனது படுக்கையறை காவலாளியாகப் புலியை நியமித்தது. தனது வெற்றிலைத் தோட்டத்தின் காவலாளியாகச் சிறுத்தையை நியமித்தது. யானைக்கு வாயில்காப்போன் வேலையும், குரங்குக்கு வெண்குடை ஏந்தி நிற்கும் வேலையும் கொடுத்தது. ஆனால், தன் இனத்தைச் சேர்ந்த நரிகளையெல்லாம் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டது. இப்படியே ராஜ்யபாரம் நடத்தி நரி சுகமாகக் காலங்கழித்தது. சிங்கம் முதலியவை மிருகங்களைக் கொன்று அதன் முன் கொண்டுவந்து வைத்தன. ராஜதர்மப்படி அந்த உணவை எல்லோருக்கும் நரி பங்கிட்டுத் தந்தது.

 

இப்படிச் கொஞ்ச காலம் கழிந்தது. ஒருநாள் ராஜ சபையில் நரி வீற்றிருந்த சமயத்தில் அருகாமையில் பல நரிகள் கூட்டங்கூடி ஊளையிட்டன. அந்தச் சத்தத்தை நரி கேட்டுவிட்டது. உடனே நரிக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைந்தது. உற்சாகத்தோடு உடலைச் சிலிர்த்துக்கொண்டு எழுந்து நின்று உச்சஸ்தாயியில் தானும் ஊளையிடத் தொடங்கியது. இதைக் கேட்ட சிங்கம் முதலிய மிருகங்கள் எல்லாம், ”அடடே, இது நரியாயிற்றே!” என்று புரிந்துகொண்டன. ஒரு வினாடி வெட்கித் தலைகுனிந்து நின்றன. பிறகு எல்லாம் சேர்ந்துகொண்டு, இந்த நரி நம்மை ஏமாற்றிவிட்டது. பிடித்துக் கொல்லுங்கள்!” என்று கத்தின. நரி ஓட்டம் பிடிக்கப் பார்த்தது. ஆனால் புலி அதன்மேல் பாய்ந்து கிழித்துக் கொன்றது.

 

ஆகையால்தான் ‘ஆப்த நண்பர்களை விட்டுவிட்டு’ என்றெல்லாம் சொல்கிறேன்” என்றது தமனகன்.

 

அதற்குப் பிங்களகன், ”அது சரி, சஞ்சீவகன் ராஜத் துரோகி என்று நான் எப்படித் தெரிந்து கொள்வது? அது சண்டை செய்யும் விதம் என்ன?” என்று கேட்டது.

 

”முன்பெல்லாம் தங்கள் அருகில் வரும்போது சஞ்சீவகனின் உடம்பு சோர்ந்து தளர்ந்து இருக்கும்.  இன்றைய தினம் வரும்போது கொம்புகளால் குத்திக்கொல்லக் கருதியவன்போல் தலையைக் குனிந்துகொண்டு நெருங்கும். அதிலிருந்தே துரோக சிந்தனையுடன் வருகிறது என்று தெரிந்து கொள்ளலாம்” என்றது தமனகன்.

 

இப்படிச் சொல்லிவிட்டு, தமனகன் சஞ்சீவகனிடம் போயிற்று. மனமுடைந்து போனதுபோல் நடித்து, தளர்ந்த நடையில் நடந்தபடியே நெருங்கியது. நரியைக் கண்ட சஞ்சீவகன், ”நண்பனே, சௌக்கியந் தானே?” என்று விசாரித்தது.

 

”அண்டிப் பிழைப்பவர்களுக்குச் சுகம் எங்கே இருக்கப்போகிறது?” என்றது தமனகன். மேலும், ”உனக்குத்தான் தெரியுமே!

 

ராஜசேவை செய்பவன் தனது செல்வம் ராஜாவின் பலத்தைப் பொறுத்திருக்கிறது என்று உணர்கிறான். அவனுக்கு மன நிம்மதியும் கிடையாது. தன் உயிர்மீதும் நம்பிக்கை கிடையாது.  

பிறந்ததும் துன்பம் கூடவே பிறக்கிறது; பிறகு சாகிறவரைக்கும் பின் தொடர்ந்து வருகிறது. ராஜசேவை செய்வதென்றால் துன்பங்களுக்கு முடிவே இல்லை.

 

தரித்திரன், நோயாளி, மூடன், நாடு கடத்தப்பட்டவன், ராஜசேவகன் இந்த ஐந்து பேரும்  உயிரோடிருந்தும் இறந்தவர்கள் மாதிரிதான், என்று வியாசர் கூறுகிறார்.

 

சாப்பாட்டிலும் மனம் செல்லாது; நிம்மதியாகவும் தூங்கமுடியாது; விழித்திருந்தாலும் மனவிழிப்பு இருக்காது. சுயேச்சையாக எதுவும் பேசமுடியாது. இதுதான் ராஜசேவகன் வாழ்க்கையின் லட்சணம்.

 

வேலையாளைப் பார்த்து, ”உன் பிழைப்பு நாய்ப் பிழைப்பு’ என்று சொல்வது தவறு. ஏனென்றால் நாயாவது தன்னிஷ்டம்போல் சுற்றித் திரிகிறது. வேலையாளோ அரசன் இஷ்டத்திற்குத்தான் ஓடித் திரிய முடியும். தரையிலே படுத்து, பிரம்மச்சாரியாக வாழ்ந்து, உடல் மெலிந்து, உணவு சுருக்கி வாழ்கிற சந்நியாசியின் வாழ்க்கைதான் ராஜசேவகனும் வருகிறான் என்றபோதிலும் புண்ணியத்திற்குப் பதிலாக் பாவம்தான் அவனைச் சேருகிறது.

 

ராஜசேவகன் தன்னிஷ்டப்படி நடக்க முடியாது. பிறர் மனத்துக்கு இசைந்தபடிதான் தான் நடக்க வேண்டும். அவன் தனது உடலையே பிறருக்கு விற்கிறான். பிறகு அவனுக்குச் சுகம் எங்கிருந்து கிடைக்கும்?

 

அரசனுக்குப் பணிவிடை செய்வதற்காக ராஜசேவகன் எவ்வளவுக் கெவ்வளவு நெருங்கிப் பழகிறானோ அவ்வளவுக்கவ்வளவு அரசனைக் கண்டு பயப்படுகிறான்.

 

வெவ்வேறு பெயர் கொண்டிருந்தாலும், அரசனும் நெருப்பும் ஒன்றுபோலத்தான். நெருங்கி வந்தால் சுட்டெரிக்கும். விலகி நின்றால் இதமாக இருக்கும்.

 

ஒரு தின்பண்டம் மென்மையாகவும், மணம் நிறைந்தும் இருக்கலாம். வாயில் வைத்தவுடன் கரைகிறதாய் மிக நன்றாயிருக்கலாம். என்றாலும் அடிமைத் தொழில் புரிந்து அதைப் பெறுவதில் ஆனந்தம் உண்டா?

 

மொத்தத்தில் பார்க்கப்போனால்,

 

நான் எங்கிருக்கிறேன்? எத்தனை நாள் இருப்பேன்? என் நண்பர்கள் யார்? நான் எதைத் தரலாம்? எதைப் பெறலாம்? நான் யார்? என் திறன் என்ன? என்று தான் ராஜ சேவகன் அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது”  

 

என்றது தமனகன்.

 

எதையோ மனதில் வைத்துக்கொண்டு தமனகன் பேசுவதைக் கண்ட சஞ்சீவகன் ”நண்பனே, நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?” என்று கேட்டது.

 

”இதோ பார், நீ என் சிநேகிதன். உன்னிடம் கட்டாயம் உள்ளதைச் சொல்லித் தீரவேண்டும். பிங்களகன் உன்மேல் மிகவும் கோபம் கொண்டிருக்கிறது. ‘சஞ்சீவகனைக்கொன்று எல்லா மிருகங்களுக்கும் விருந்து வைக்கப்போகிறேன்’ என்று இன்றயை தினம் சொல்லியிருக்கிறது. அதைக் கேள்விப்பட்டதும் எனக்கு ஒரே கவலையாய்ப் போயிற்று. இனி நீ செய்கிறதைச் செய்” என்றது தமனகன்.

 

இந்தச் சொற்களைக் கேட்டதும் சஞ்சீவகனுக்குத் தலையில் பேரிடி விழுந்தமாதிரி இருந்தது. பெருங் கவலையில் ஆழ்ந்து விட்டது. தமனகன் பேச்சில் எப்பொழுதும் போலவே உண்மை இருக்கும் போல் பட்டது. யோசிக்க யோசிக்க, மனக்கலவரம் அதிகமாயிற்று. கடைசியில், மனமுடைந்து பேசத் தொடங்கியது: ”சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்!

 

நடத்தை கெட்டவனிடம் தான் பெண் சோரம் போகிறாள்; அயோக்கியர்களுடன்தான் அரசன் ஒட்டிக்கொள்கிறான்; கருமியிடம்தான் பணம் மேலும் மேலும் வந்து சேர்கிறது. மலைமீதும் கடல்மீதும்தான் மழை அதிகமாகப் பெய்கிறது.

 

ஐயோ, இனி நான் என்ன செய்வது? எப்படிப்பட்ட அபாயம் எனக்கு வந்திருக்கிறது!

 

அரசனுக்கு உண்மையாகச் சேவை செய்தேன். அதில் அதிசயம் எதுவும் இல்லை. ஆனால்,

 

சேவைக்குப் பிரதிபலன் பகைமையே என்பதுதான் விந்தையா யிருக்கிறது. காரணத்துடன் யாராவது கோபித்தால் அந்தக் காரணத்தைப் போக்கியவுடன் அவன் மகிழ்ச்சியடைகிறான். காரணமில்லாமல் துவேஷம் பாராட்டுகிறவனை எப்படித் திருப்திப்படுத்த முடியும்?

 

காரணமில்லாமலேயே துவேஷிக்கிறவனையும், சாதுரியமுள்ள துஷ்டனையும், கல்நெஞ்சனையும் கண்டு யார்தான் பயப்படமாட்டார்கள்? பெரிய பாம்பின் வாயிலிருந்து விஷம் சொட்டுகிற மாதிரி அவர்கள் வாயிலிருந்து விஷம் சொட்டிக்கொண்டே இருக்கும்.

 

வெள்ளை மனம் படைத்த அன்னப்பறவை இருட்டிலே ஏரி நீரில் நட்சத்திரங்களின் பிம்பங்களைக் காண்கிறது. அவை வெண்தாமரை என்று நினைத்து, கொத்திப் பார்த்து ஏமாந்து போகிறது. பகலிலே தாமரைகளைக் கண்டு அவை நட்சத்திரங்கள் என்று நினைத்துப் பயந்து கொத்தாமலே இருந்து விடுகிறது. அதுபோல, சூது வாதுள்ளவர்களைக் கண்டு உலகமே பயப்படுகிறது. அவர்களை விட்டுத் தூர விலகி ஆபத்தைத் தவிர்க்கிறது.

 

என்ன கஷ்டகாலம்! நான் பிங்களகனுக்கு என்ன தீமை செய்தேன்?” என்றது சஞ்சீவகன்.

 

”நண்பனே, அரசர்கள் காரணமில்லாமலே தீமை செய்கிறவர்கள், பிறரைப் பலவீனப்படுத்துவதிலேயே நாட்டங் கொண்டவர்கள் அவர்கள்” என்றது தமனகன்!

 

”நீ சொல்வது ரொம்பவும் நிஜம். இந்தப் பழமொழிகளும் சரியாகத்தன் சொல்கின்றன!

 

சந்தன மரத்தில்  பாம்புகள் இருக்கின்றன. தாமரைத் தடாகத்தில் முதலைகள் இருக்கின்றன. அதுபோலவே, நற்குணங்களைக் கெடுக்கத் துஷ்டர்கள் இருக்கிறார்கள். சுகத்துக்குத் தடங்கல்கள் இல்லாமல் இருக்காது.

 

மலையுச்சியில் தாமரை மலர்கிறதில்லை; துஷ்டனிடம் நல்ல செய்கைகள் பிறப்பதில்லை; சந்நியாசிகள் என்றும் மன வேறுபாடு அடைவதில்லை; கோதுமையிலிருந்து நெல் முளைக்கிறதில்லை.

 

உத்தமமான துறவிகள் உன்னதமான மரியாதையுடையவர்கள்; அவர்கள் தீச்செயல்களை மறந்துவிட்டு என்றென்றும் நற்செய்கைகளையே நினைவில் வைக்கின்றனர்”

 

என்றது சஞ்சீவகன்.

 

மேலும் தொடர்ந்து, ”இதெல்லாம் என் குற்றமே. ஒரு வஞ்சகனிடம் அல்லவா நான் சிநேகம் பாராட்டினேன்! ஒரு கதை தெரிவிப்பது போல,

 

காலப் பொருத்தமற்ற காரியம் செய்யக்கூடாது; அபாண்டமான வார்த்தை பேசக்கூடாது; நயவஞ்சகனுக்குச் சேவை செய்யக்கூடாது. தாமரைக் குளத்தின் அருகே தூங்கிக் கொண்டிருந்த அன்னப் பறவையை அம்பு கொன்றது.”

 

என்றது சஞ்சீவகன்.

 

”அது எப்படி?” என்று தமனகன் கேட்க சஞ்சீவகன் சொல்லலாயிற்று.

 

http://puthu.thinnai.com/?p=5324

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பஞ்சதந்திரம் தொடர் 15 - அன்னமும் ஆந்தையும் அன்னபூர்னா ஈஸ்வரன்
 
 

அன்னமும் ஆந்தையும்

 

ரு காட்டில் பெரிய ஏரி ஒன்றிருந்தது. அங்கே மதரக்தன் என்கிற  அன்னப்பறவை ஒன்று இருந்தது. அது பலவிதமாய் விளையாடி ஆனந்தமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தது. இப்படி வெகு காலம் சென்றபிறகு,  ஒருநாள் அதற்கு யமனாக ஒரு ஆந்தை அங்கு வந்து சேர்ந்தது. அதைப் பார்த்த அன்னம், ”எங்கிருந்து வருகிறாய் நீ? இது ஜன சஞ்சாரமில்லாத காடாயிற்றே!” என்று கேட்டது.

 

அதற்கு ஆந்தை; ‘உன் குணங்களைக் கேட்டுத்தான் இங்கு வந்தேன். நான் நற்குணத்தைத் தேடி உலகம் முழுவதையும் சுற்றிப் பார்த்தேன். உன்னைப்போல் நல்ல குணமுடையவர்கள் வேறு யாருமில்லை. அதனால்தான் உன்னிடம் வந்தேன். உன்னோடிருந்து உன் நட்பை நான் கட்டாயம் பெறவேண்டும்.

 

கங்கையில் சேருவதால் பாவம் புண்ணியமாக மாறுகிறதல்லவா? சங்கு என்பது ஒரு எலும்புத் துண்டுதான். என்றாலும் அது விஷ்ணுவின் கையை அடைந்து பரிசுத்தமடைகிறது.

நல்லவர்களோடு சேர்ந்தால் யாருக்குத்தான் நன்மை உண்டாகாது?’ என்று பதிலளித்தது.

 

இதைக் கேட்ட அன்னம், ஆந்தை அங்கேயே இருந்து காலங்கழிக்கச் சம்மதித்தது. ”நண்பனே, இது ஒரு சுகமான காடு. பரந்த ஏரியும் இருக்கிறது. ஏரிக்கருகில் என்னோடு இருந்துகொள்” என்றது. பிறகு அவையிரண்டும் ஒன்றாய்க்கூடி விளையாடிச் சுகமாகக் காலங்கழித்தன.

 

ஒருநாள் ஆந்தை அன்னப்பறவையைப் பார்த்து, ”பத்மவனம் என்ற என் ஜாகைக்கு நான் போகப்போகிறேன். உனக்கு என்மீது கொஞ்சமாவது மதிப்போ அன்போ இருக்குமானால் கட்டாயம் என் விருந்தாளியாக நீ வர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு போய்விட்டது.

 

பல நாட்கள் சென்றன. அன்னப்பறவை யோசித்தது. ‘இங்கேயே நான் காலங்கழித்துக் கிழமாகிவிட்டேன். வேறு எந்த இடமும் எனக்குத் தெரியாது. இப்போது என் பிரிய நண்பன் ஆந்தையின் இருப்பிடத்துக்குப் போனால் என்ன? அங்கே பல புதிய விளையாட்டு இடங்களும், புதிய இரையும் கிடைக்குமே!” என்று எண்ணமிட்டு ஆந்தையிருக்கும் குளக்கரைக்குச் சென்றது. ஆனால் அங்கே ஆந்தை காணப்படவில்லை. மிகவும் உன்னிப்பாய் இங்கும் அங்கும்அன்னம் தேடிப் பார்த்தது. கடைசியில், பகல் குருடாகிய அந்த ஆந்தை ஒரு மரப் பொந்தில் உட்கார்ந்திருப்பதை அன்னம் கண்டு விட்டது. உடனே, ”நண்பனே, வெளியே வா, நான்தான், உன் ஆப்த நண்பனாகிய அன்னப்பறவை, வந்திருக்கிறேன்” என்றது.

 

”நான் பகலில் வெளிவந்து திரிகிறதில்லை. சூரியன் மறைந்த பின் இருவரும் சந்திக்கலாம்” என்று ஆந்தை பதிலளித்தது.

 

வெகுநேரம் அன்னம் அப்படியே காத்துக்கிடந்தது. பிறகு இரவில்  ஆந்தையைச் சந்தித்து, தன்  ‌ஷேமலாபங்களைப் பற்றிப் பேசியபின்,  பிரயாணம் செய்த களைப்பால் அங்கேயே தூங்கிவிட்டது.

 

அதேகாலத்தில் அந்தக் குளக்கரையில் ஒரு வியாபாரிகள் கூட்டம் கூடாரம் அடித்திருந்தது. பொழுது விடிந்ததோ இல்லையோ, கூட்டத்தின் தலைவன் கண்விழித்து எழுந்து பயணம் கிளம்புவதற்காக சங்கு எடுத்து ஊதினான். சங்கொலியைக் கேட்டதும் ஆந்தை பயங்கரமாக அலறிக் கூச்சலிட்டுக்கொண்டு குளக்கரையிலுள்ள ஒரு மரப்பொந்தில் போய்ப் புகுந்து கொண்டது. அன்னப் பறவையோ இருந்த இடத்தைவிட்டு ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்தது. ஆந்தையின் அலறல் அபசகுனம் என்று பயந்துபோன அந்தக் கூட்டத்தின் தலைவன், சப்தத்தைக் குறியாகக் கொண்டு அம்பு எய்யும் ஒரு வில்லாளிக்குக் கட்டளையிட்டான். வில்லாளியும் வில்லில் அம்பு தொடுத்து காதுவரை நாணை இழுத்து அம்பு விட்டான். அம்பு பாய்ந்து ஆந்தைப் பொந்தின் அருகில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த அன்னத்தைக் கொன்றது.

 

ஆகையால்தான் ‘காலப் பொருத்தமற்ற காரியம்…’ என்ற செய்யுளைச் சொன்னேன்” என்றது சஞ்சீவகன். அது மேலும் பேசுகையில், ”முன்பெல்லாம் இந்தப் பிங்களகன் தேனொழுகப் பேசி வந்தது. இப்பொழுது விஷம் கக்குகிறது.

 

நேரில் கண்டால் அன்பாகப் பேசி மறைவிலே இகழ்ச்சியாகப் பேசும் சிநேகிதனை விலக்கிவிடு. மேலே பாலாடை மிதக்க உள்ளே விஷம் நிரம்பியிருக்கும் குடம் போன்றவர்கள், அவர்கள்.

 

தூரத்தில் பார்க்கும்போதே கை கூப்புகிறான்; கண்ணெல்லாம் நீர் நிறைகிறது; தனது ஆசனத்தில் பாதியைக் காட்டி உட்காரச் சொல்கிறான்; மார்புடன் இறுகத் தழுவுகிறான்; அவனுடைய அன்புகனிந்த பேச்சுக்கும் கேள்விகளுக்கும் முடிவேயிருக்கிறதில்லை. ஆஹா, நெஞ்சிலே விஷமும் உதட்டிலே தேனுமாகப் பேசுகிறவர்கள் மாயாஜாலத்தில் தேர்ச்சி மிகுந்தவர்கள் தான்! எவ்வளவு அதிசயமான நாடகம் இது! ஒவ்வொரு துஷ்டமும் இதை எப்படித்தான் கற்றுக்கொள்கிறானோ? ஆச்சரியமாக இருக்கிறதே!

 

என்று கூறும் செய்யுளின் உண்மையை நான் அனுபவத்தில் பார்த்து விட்டேன்.

 

ஆரம்பத்தில் மிதமிஞ்சிய உபசாரமும், பாராட்டும், பணிவும் காட்டுவதால் துஷ்டர்களின் சகவாசம் சந்தோஷம் நிறைந்து காணப்படுகிறது. பிறகு, இடைக்காலத்தில், காய்க்காத பூ போன்ற பயனற்ற அழகுச் சொற்களைச் சொரிகின்றது. கடைசிக் கட்டத்தில் துரோகம், அவமானம், அறுவறுப்பு என்கிறதில் போய் முடிந்துவிடுகிறது. தீமையையும் பொய்ம்மையையும் தர்மமாகக் கொண்ட இதை யார்தான் சிருஷ்டித் தார்களோ?

 

கெட்டவனைப் பார்! விதிப்படி நமஸ்கரித்து, எழுந்து நின்று வரவேற்று, சுற்றிச் சுற்றி வந்து உபசரிக்கிறான். அன்போடு கெட்டியாக அணைத்துக் கொள்கிறான். தனது பக்தியை விளம்பரப் படுத்துகிறான். மனத்தைக் கவரும் முறையில் இனிக்க இனிக்கப் பேசுகிறான். நற் குணங்களைப் புகழ்ந்து பாராட்டுகிறான். எல்லாம் சரி, செய்ய வேண்டியதைச் செய்கையில் காட்டு என்றால், அதை மட்டும் செய்ய மாட்டான்.

 

என்ன கஷ்டம்! புல்லைத் தின்னும் நானெங்கே, பச்சை மாமிசம் தின்னும் சிங்கமெங்கே! அதனோடு அல்லவா சேர்ந்திருந்தேன்:

 

ஒத்த குலமும், ஒத்த செல்வமும், பொருந்தியவர்களிடையேதான் திருமணமும், நட்பும் இருக்க வேண்டும். பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையே அவ்வித உறவுகள் இருக்கக் கூடாது.

 

என்கிற ஜனவாக்கு மிகவும்சரி. மேலும், ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

அஸ்தமிக்கிற வேளையில்தான் சூரியன் தன் ஒளியனைத்தையும் சிந்துகிறது. அதை வண்டு உணர்கிறதில்லை. தேன் குடிக்க ஆவல்கொண்டு, அந்த நேரத்தில் தாமரைப் பூவுக்குள் நுழைகிறது. அஸ்தமனமானதும் பூவுக்குள் வண்டு சிக்கிக் கொள்கிறது. இந்த வண்டு போலத்தான் மக்களும் நடந்துகொள்கிறார்கள். பலனைத் தேடியடையும் பேராசையிலே அவர்கள் அபாயங்களைக் கவனிப்பதில்லை.

 

உணவு தேடிச்செல்லும் நீர்வண்டு தேன் நிரம்பிய அன்றலர்ந்த தாமரையை விட்டுவிடுகிறது; உத்தமமான இயற்கை மணம் நிறைந்த மல்லிகையையும் விட்டுவிடுகிறது. அவற்றிற்குப் பதிலாக, யானையின் மதநீரைத் தேடித் திரிகின்றது. இதேபோலத்தான் உலகமும் நல்ல வழியைய விட்டுவிட்டுக் கெட்ட வழிகளில் செல்கிறது.

 

புதிய ருசிதரும் தேனைப் பருக விரும்பும் வண்டுகள் காட்டு யானைகளின் கன்னங்களில் வழிந்தோடுகிற மதநீரைத் தேடியடைகின்றன. ஆனால், யானைகள் காதுகளை விசிறியடித்து எழுப்புகிற காற்றிலே இந்த வண்டுகள் அடிப்பட்டுப் பூமியில் விழுகின்றன. அப்படி விழுகிற நேரத்தில்தான் முன்பெல்லாம் தாமரைப் பூவின் மடியில் தாம் இன்பமாய் விளையாடியதைப் பற்றி நினைத்துக் கொள்கின்றன.

 

குணங்களுக்குத் தகுந்தவாறு தோஷங்களும் ஒட்டிக்கொண்டு வருகின்றன. எவ்விதம் என்றால்,

 

பழக் கொத்துக்களைத் தாங்கும் காரணத்தாலேயே மரக்கிளைகள் வளைந்து போகின்றன. கனத்த தோகை இருப்பதின் காரணத்தாலேயே மயிலின் நடை மந்தமாகிவிடுகிறது. குதிதை வேகமாக ஓடுவதின் காரணத்தாலேயே பாரம் சுமக்க வேண்டியதாகிறது. அதேமாதிரிதான் நல்லவனிடம் உள்ள நற்குணங்களே அவனுக்கு எதிராக வேலை செய்வதுண்டு.

 

யமுனையின் கருநீலத் தண்ணீருக்கடியில் இருக்கிற கரு மணலில் கருநாகங்கள் வாழ்கின்றன. அவற்றின் தலையில் தாரகைகள் போல் ஒளிவீசும் நவரத்தினங்கள் இல்லையென்றால் அந்தப் பாம்புகளை யார் தேடிச் செல்வார்கள்? எந்தக் குணம் ஒரு மனிதனுக்கு உயர்வு அளிக்கிறதோ அதுவே அவனுக்கு ஆபத்தாயும் முடிகிறது.

 

குணவான்களை அரசர்கள் வெறுக்கிறார்கள். உலகில் துஷ்டனிடத்திலும்  முட்டாளிடத்திலுந்தான் பணம் போய்ச்சேருகின்றன.  இதுதான் சகஜமாக நடப்பது. ‘மனிதனுக்குக் கீர்த்தி தருவது குணமே’ என்னும் பாட்டு பொய். அவனது வீரத்தை உலகம் மதிக்கிறதில்லை.

 

கூண்டில் பிடிப்பட்டுக் கர்வமடங்கி அவமானப்பட்ட சிங்கத்தையும், அங்குசத்தால் மத்தம் பிளந்துபோயுள்ள யானைகளையும், மந்திரத்தில் கட்டுண்ட பாம்பையும், ஆதரவின்றி நிற்கும் அறிஞர்களையும், அதிர்ஷ்டம் கெட்ட வீரர்களையும், காலதேவன் பொம்மையோல் ஆட்டி வைத்து விளையாடுகிறான்.

 

அபாயமெதுவுமில்லாத ஏரியிலே மலர்ந்திருக்கும் தாமரையை விட்டுவிட்டு, வண்டுகள் நல்ல யானைகளின் மதநீரைப் பருகப் பேராவலுடன் ஓடுகின்றன. யானைகளின் காதுகள் விசிறி, அடிபட்டு வீழ்வோமே என்று அந்த மூடவண்டுகள் யோசிப்பதில்லை. அதுமாதிரியே, விளைவுகளைப் பற்றி யோசனையில்லாமலே, பேராசைக்காரர்கள் காரியம் செய்கிறார்கள். அது அவர்களின் இயல்பு.

 

யோசிக்காமல் இந்த நீசனோடு உறவு கொண்டேன். எனவே நான் சாகவேண்டியதுதான். ஒரு பழமொழி கூறுவதுபோல்,

மெத்தப் படித்தவர்களில் கூடப் பலர் அயோக்கியர்களாக இருக்கிறார்கள். தந்திரங்கள் புரிந்துதான் பிழைப்பு நடத்துகிறார்கள்.

 

ஆகையால் நல்லதோ கெட்டதோ எதுவாயிருந்தாலும் சரி, காக்கை ஒட்டகம் முதலியவை செய்தது போல் செய்ய வேண்டும் என்றது சஞ்சீவகன்.

 

”அது எப்படி?” என்று தமனகன் கேட்டதும், சஞ்சீவகன் சொல்லத் தொடங்கியது:

 

http://puthu.thinnai.com/?p=5506

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 16 - ஏமாந்துபோன ஒட்டகம்

 

அன்னபூர்னா ஈஸ்வரன்

 

ஏமாந்துபோன ஒட்டகம்

 

ரு ஊரில் சாகரதத்தன் என்றொரு வியாபாரி இருந்தான். நூறு ஒட்டகங்களின்மேல் விலையுயர்ந்த துணிமணிகளை ஏற்றுவித்து, அவன் எங்கோ பயணம் புறப்பட்டான். போகிற வழியில், விகடன் என்கிற ஒட்டகம் பாரம் தாங்க முடியாமல் துன்பப்பட்டு, உடல் தளர்ந்து போய்க் கீழே விழுந்தது. அதன்மேலிருந்த துணி மூட்டையை வியாபாரி கீழிறக்கிவைத்தான். மூட்டையிலிருக்கும் துணிகளைப் பாகம் பாகமாகப் பிரித்து மற்ற ஒட்டகங்கள் மீது சமபாரமாக ஏற்றினான். ‘இந்தக் காடு பயங்கரமாயிருக்கிறது, இங்கே தங்க முடியாது’ என்று முடிவு கட்டி, விகடனை அங்கேய விட்டுவிட்டு மேலே போனான். அவன் போனபிறகு, கொஞ்ச நேரத்தில் விகடன் மெல்ல மெல்ல எழுந்து நின்று, திரிந்தபடியே, புல்லைத் தின்னத் தொடங்கியது. இப்படியே கொஞ்ச நாள் ஆனவுடன் அதற்குப் பலம் வந்துவிட்டது.

 

இப்படியிருக்க, அந்தக் காட்டில் மதோத்கடன் என்றொரு சிங்கம் இருந்தது. அதனிடம் ஒரு சிறுத்தை, காக்கை, நரி மூன்றும் வேலை பார்த்து வந்தன. சிங்கமும் அவையும் காட்டில் சுற்றித் திரிந்து வருகிறபோது ஒட்டகத்தைப் பார்த்துவிட்டன. அதற்குமுன் இப்படிப்பட்ட மிருகத்தை அவை பார்த்ததே கிடையாது. அதன் உடம்பைப் பார்த்தாலே சிரிப்புத்தான் உண்டாகும். அவ்வளவு கோமாளித்தனமாக இருந்தது. அதைப் பார்த்த சிங்கம், ”இந்தக் காட்டில் அதிசயமாய்க் காணப்படுகிறதே இந்த மிருகம்! யார் என்று விசாரியுங்கள்” என்று சொல்லிற்று.

 

காக்கை போய் விவரத்தை அறிந்துவந்து, ‘ஜனங்கள் இதை ஒட்டகம் என்று சொல்கிறார்கள்’ என்று தெரிவித்தது.

 

”ஏய், நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று சிங்கம் ஒட்டகத்தைக் கேட்டது. வியாபாரியிடமிருந்து பிரிந்துபோன விஷயத்தை ஒன்று பாக்கி விடாமல் ஒட்டகம் சொல்லிற்று. அதைக்கேட்டு சிங்கத்திற்கு அதன்மேல் இரக்கம் ஏற்பட்டு அபயம் தந்தது.

 

இப்படி இருந்துவரும்போது, ஒரு நாள் சிங்கம் ஒரு யானையுடன் சண்டைபோட்டது. சண்டையிலே யானைத் தந்தங்கள் சிங்கத்தின் உடம்பைக் குத்திவிட்டதால், சிங்கம் குகையிலேயே படுத்துக்கிடக்க வேண்டியதாயிற்று. சிங்கம் வேட்டையாட முடியாமற்போனதால் ஐந்தாறு தினங்கள் ஆவதற்குள் சாப்பாடு பூராவும் தீர்ந்துபோய் விட்டது. சாப்பாடில்லாமல் எல்லோருக்கும் அவசரமான நெருக்கடி ஏற்பட்டது.  அவை பசியால் வாடுவதைச் சிங்கம் கவனித்து, ”முன்போல் உங்களுக்கு இதை தேடித்தர எனக்குச் சக்தி கிடையாது. ஆகையால் நீங்களே போய்ச் சாத்தியமானதைச் செய்யுங்கள்” என்றது.

 

”நீங்கள் இப்படிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது, நாங்கள் மட்டும் தின்று கொழுப்பதா? வேண்டாம்” என்றன அவை.

 

”பேஷ் நல்ல வேலைக்காரனுக்குள்ள நடத்தையும் பக்தியும் உங்களிடம் இருக்கின்றன. கஷ்டப்படுகிற எனக்கும் சேர்த்து இரை கொண்டு வாருங்கள்” என்றது சிங்கம்.

 

இதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் அவை சும்மா இருக்கவே, ”வெட்கப்பட வேண்டாம் ஏதாவதொரு மிருகத்தை வேட்டையாடிக்கொண்டு வாருங்கள். எனக்கு என்ன கஷ்டமிருந்தபோதிலும் எல்லோருக்கும் சாப்பாடு தயார் செய்து தருகிறேன்” என்றது சிங்கம்.

 

பிறகு அவை நான்கும் காட்டைச் சுற்றி வந்தன. ஒரு மிருகம்கூடக் கண்ணில் படவில்லை. காக்கையும் நரியும் பேசிக்கொள்ளத் தொடங்கின.

 

”நண்பனே, மேலும் சுற்றித் திரிவதில் என்ன பிரயோஜனம்? நம் ராஜாவை நம்பி இருந்து வருகிறதே, இந்த ஒட்டகம்! இதைக் கொன்று வயிறு வளர்த்தால் என்ன?” என்றது நரி.

 

”நீ சொல்வது நல்ல யோசனைதான். ஆனால் ஒட்டகத்துக்கு அரசர் அபயம் தந்திருக்கிறார். நாம் அதைக் சொல்லக்கூடாதல்லவா?” என்றது காக்கை.

 

”நீ சொல்வது சரிதான். நான் போய் எஜமானரிடம் பேசி அதைக் கொல்ல எண்ணங்கொள்ளும்படி தூண்டிவிடுகிறேன். அவரிடம் பதில் வாங்கி வரும்வரை இங்கேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டு நரி சிங்கத்திடம் சென்றது.

 

சிங்கத்தை அணுகி, ”அரசே! காடு பூராவும் சுற்றிப் பார்த்துவிட்டோம். பசி வாட்டி வதைக்கிறது. இனி ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. நீங்களோ பத்தியம் இருந்து வருகிறீர்கள். நீங்கள் மட்டும் கட்டளையிட்டால் விகடனைக் கொன்று எல்லாரும் பசியாற்றிக்கொள்ளலாம்” என்றது நரி.

 

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சிங்கத்துக்குக் கோபம் வந்துவிட்டது. ”சீ, நீசப்பாவி! அதை இன்னொருதரம் சொன்னால் உடனே உன்னைக் கொன்று போடுவேன். அபயம் தந்தபிறகு அதை நான் எப்படிக் கொல்ல முடியும்?

 

கோதானத்தையும், பூமிதானத்தையும், அன்னதானத்தையும்கூட அறிஞர்கள் அவ்வளவு சிலாக்கியமாகக் கருதுவதில்லை. எல்லாவற்றிலும் அபயதானமே சிறந்தது

 

என்று சொல்லப்படுகிறதே!” என்று கூறியது.

 

”அரசே! அபய வாக்குத் தந்தபின் கொல்வது தோஷந்தான். ஆனால், ராஜபக்தி மேலிட்டு தன் உயிரைக் கொடுக்கத் தானாகவே முன் வந்தால் அதைக் கொல்வதில் தோஷமில்லை. தானாகவே சாவதற்கு அது ஒத்துக் கொண்டால் அதைக் கொல்லலாம். அப்படியில்லையென்றால், எங்களில் யாரையாவது கொன்று சாப்பிடுங்கள். பத்தியம் இருக்கிறீர்கள். பசியை அடக்கினால் உங்கள் நிலைமை மோசமாகிவிடும். அரசனுக்குப் பயன்படாத எங்கள் உடல் இருந்தென்ன பிரயோஜனம்? உங்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டால் உடனே நாங்களும் தீயில் பாய்வோம்.

 

அந்தக் குலத்தின் முக்கிய புருஷனை அவரவர்கள் சிரமப்பட்டு காக்க வேண்டும். அவன் இறந்தால் குலமே நாசமாகிவிடும். அச்சு முறிந்தபின் சக்கரக் கால்கள் எப்படி நிற்க முடியும்?

 

என்று ஒரு பழமொழி உண்டு” என்றது நரி.

 

”சரி, நீ விரும்பியபடியே செய்” என்றது சிங்கம்.

 

நரி உடனே வேகமாகத் திரும்பிச் சென்றது. மற்ற மிருகங்களைப் பார்த்து, ”ஐயையோ, அரசர் ரொம்பக் கஷ்டப்படுகிறார். மூக்கு நுனியில் உயிர் ஊசலாடுகிறது. அவர் இறந்தால் பிறகு, யார் இந்தக் காட்டில் நம்மைக் காப்பற்றப்போகிறார்கள்? நாம் போய் பசியோடு இருக்கும் அவருக்கு நமது உடலைத் தானம் செய்யலாம், வாருங்கள். அதனால் அரசனுக்குச் செலுத்த வேண்டிய ஜன்மக் கடனைத் தீர்த்தவர்களாவோம்.

 

எஜமானன் விபத்துக்குள்ளான பிறகு அதைச் சும்மா பார்த்துக் கொண்டு உயிரோடிருக்கும் வேலைக்காரன் நரகத்தைத்தான் அடைகிறான்.

 

என்று பழமொழி உண்டு” என்றது நரி.

 

அவை கண்ணீர் விட்டபடியே திரும்பிப்போய் சிங்கத்தை வணங்கிவிட்டு உட்கார்ந்தன.

 

சிங்கம் அவற்றைப் பார்த்து, ”ஏதாவது மிருகம் மிருகம் கிடைத்ததா? கண்டீர்களா?” என்று கேட்டது.

 

”எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டோம். ஒரு மிருகத்தையும் பிடிக்கவுமில்லை. பார்க்கவுமில்லை என்றது காக்கை. ”ஆகையால் இன்றைக்கு என்னையே கொன்று தின்று தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதனால் உங்களுக்கும் திருப்தி ஏற்படும், எனக்கும் சுவர்க்கம் கிடைக்கும்.

 

பக்தி விசுவாசத்துடன் எஜமானுக்காக உயிர்த்தியாகம் செய்கிறவன், நரையும் மூப்புமற்ற பெரும் பதவி பெறுகிறான்.

 

என்று ஒரு பழமொழி உண்டு” என்று காக்கை தெரிவித்துக் கொண்டது.

 

அதைக் கேட்டதும், நரி ”உன் உடம்பு சிறியது. உன்னைத் தின்று அரசர் உயிர்வாழ்வது கஷ்டம். மேலும், உன்னைக் கொன்று தின்றால் வேறொரு தோஷமும் உண்டாகும். எப்படி என்று கேட்டால்,

 

காக்கை மாமிசம் போன்ற அற்ப சொற்பமான உணவுகளை ஏற்கலாகாது. அவற்றைத் தின்பதால் பலனுமில்லை, திருப்தியுமில்லை.

 

நீ எஜமான விசுவாசத்தைக் காட்டி நல்லவன் என்று இரு உலகங்களிலும் பெயர் எடுத்துவிட்டாய். கொஞ்சம் விலகி நில். நானும் எஜமானரிடம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றது.

 

காக்கை நகர்ந்து கொடுத்ததும், நரி மரியாதையோடு சிங்கத்தை வணங்கிவிட்டு, ”அரசே! இன்றைக்கு என்னைத் தின்று தங்கள் உயிரைக் காத்துக்கொண்டு, எனக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையுண்டாகும்படி செய்யுங்கள்.

 

சம்பளத்துக்கு வேலை செய்யும் வேலைக்காரர்களின் உயிர் எஜமானனிடம் பணயம் வைக்கப்படுகிறது. அந்த உயிரை எஜமானன் பெற்றுக்கொள்வதில் ஒரு விதமான தவறுமில்லை.

 

என்றொரு பழமொழி உண்டு” என்றது நரி.

 

இந்தச் சொற்களைக் கேட்டதும் சிறுத்தை நரியைப் பார்த்து, ”நரியே! நீ சொன்னது சரி. ஆனால் உன் உடம்பும் சிறியதுதான். மேலும், நீ நகங்களோடு சண்டை செய்பவன், நீங்கள் இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நீ சாப்பிடத்தகாதவள். ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

உயிர் போகிற நிலைமை ஏற்பட்டாலும், சாப்பிடத் தகாததை அறிவாளி சாப்பிடுவதில்லை. அப்படிச் சாப்பிட்டால் இமையும் மறுமையும் கிட்டாமல் போய்விடும். எனவே அதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

 

சரி. நீ உன் எஜமான விசுவாத்தைக் காட்டிக்கொண்டு விட்டாய்.

 

நல்லகுடியில் பிறந்தவர்கள் அரசனை மகிழ்விப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை.  முதலிலிருந்து கடைசிவரை என்றைக்கும் அவர்களின் கண்ணிம் மாறுவதில்லை.

 

என்கிற ஜனவாக்கு ரொம்பச்சரி. நீ அப்பால்போ. நானும் எஜமானரைத் திருப்தி செய்கிறேன்” என்றது.

 

நரி நகர்ந்து உட்கார்ந்ததும், சிறுத்தை சிங்கத்தை வணங்கிவிட்டு, ”அரசே! இன்றைக்கு என்னைத் தின்று உயிர் வாழுங்கள். சுவர்க்கலோகத்தில் எனக்கு அமர வாழ்வு கிடைக்கச் செய்யுங்கள், பூமியில் என் புகழ்  ஓங்கச் செய்யுங்கள். கொஞ்சமும் தயங்க வேண்டாம்.

 

எஜமானரின் காரியத்தில் வேலைக்காரர்கள் தமது தகுதியைக் காட்டினால் அவர்களுக்குச் சுவர்க்கத்தில் அமர நிலையும் பூமியில் புகழும் கிடைக்கும்.

 

என்றொரு பழமொழி உண்டு” என்றது.

 

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஒட்டகம், ”இவர்கள் எல்லோரு எவ்வளவோ அழகாகப் பேசியிருக்கிறார்கள். ஆனபோதிலும் அரசர் இவர்களைக் கொல்லவில்லை. நானும் இந்தச் சமயத்துக்குத் தக்கபடி பேசுகிறேன். என் வார்த்தையையும் இவர்கள் எல்லோரும் ஆட்சேபித்துப் பேசுவார்கள்’ என்று எண்ணமிட்டது. பிறகு தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தது. ”சிறுத்தைப் புலியே! நீ சொன்னதும் சரிதான். ஆனால் நீயும் நகங்களை உபயோகிக்கிறவன்தான். ஆகவே, உன்னை எப்படி எஜமானர் கொன்று தின்ன முடியும்! ஒரு பொருத்தமான பழமொழியைக் கேள்!

 

தன் இனத்தாருக்கு மனத்தாலும் தீங்கு நினைப்பவனுக்கு இரு உலகிலும் இடம் கிடையாது. அவன் அசிங்கமான புழுவாக ஜன்ம மெடுக்கிறான்.

 

ஆகையால் நீ விலகி நில். நானும் அரசரிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றது.

 

சிறுத்தை அவ்விதமே நகர்ந்த பிறகு ஒட்டகம் சிங்கத்தின் முன் வணங்கி நின்று, ”அரசே! இவர்கள் எல்லோரும் சாப்பிடத் தகாதவர்கள். ஆகவே என்னைத் தின்று தாங்கள் உயிர் வாழுங்கள். எனக்கு இரு உலகங்களும் கிடைக்கும்.

 

எஜமானனுக்காக உயிரைக் கொடுக்கும் வேலைக்காரனுக்குக் கிடைக்கிற நற்கதி யோகிகளுக்கும் யாகம் செய்பவர்களுக்கும் கூடக் கிடைப்பதில்லை.

 

என்று ஒரு பழமொழி உண்டு” என்றது.

 

ஒட்டகம் இப்படிச் சொன்னதுதான் தாமதம், உடனே சிங்கத்தின் கட்டளைப்படி சிறுத்தையும் நரியும் பாய்ந்து ஒட்டகத்தின் வயிற்றைக் கிழித்தன. காக்கை அதன் கண்களைப் பிடுங்கியது. ஒட்டகம் உயிரை விட்டது. பசியால் வாடிப் போயிருந்த அவை, ஒன்றையும் மிச்சம் வைக்காமல் அதை விழுங்கித் தீர்த்தன.

 

ஆகையால்தான் ‘மெத்தப் படித்தவர்களில் கூடப் பலர் அயோக்கியர்களாக இருக்கிறார்கள்..’ என்றெல்லாம் சொல்லி வந்தேன்” என்று கதையை முடித்தது சஞ்சீவகன். பிறகு, மேலும் தொடர்ந்து தமனகனிடம் பேசுகையில், ”நண்பனே!

 

நீசர்கள் ஆழ்ந்து நிற்கும் இந்த அரசன் அண்டினவர்களுக்கு நன்மை செய்வதில்லை. கழுகுகளை மந்திரிகளாகக் கொண்டு அன்னப்பறவை அரசாட்சி செய்வதைவிட, அன்னப்பறவைகளை மந்திரிகளாகக் கொண்டு கழுகு ஆட்சி செய்வதே மேல். ஏனென்றால் கழுகுகளின் சகவாசத்தால் பல தோஷங்கள்  உண்டாகின்றன. வினாசமடைவதற்கு அவையே போதும். ஆகவே மேலே சொன்ன கழுகைத்தான் அரசனாக்க விரும்ப வேண்டும். கெட்டவர்களின் போதனைகளால் அரசன் சுயமாக யோசித்துத் தீர விசாரித்து நடப்பதற்குச் சக்தியற்றுப் போகிறான்.

 

‘உன் அருகில் நரி இருக்கிறது; அந்த காக்கைக்கும் கூரிய அலகு இருக்கிறது; உன் நண்பர்கள் எனக்குப் பிடிக்கவில்லை. ஆகவே மரத்தின்மேல் ஏறிக்கொண்டேன்.’

 

என்று தச்சன் ஒரு கதையில் சொல்லக் கேட்டதில்லையா?” என்றது சஞ்சீவகன். ‘

‘அது எப்படி” என்று தமனகன் கேட்கவே, சஞ்சீவகன் சொல்லத் தொடங்கியது.

 

http://puthu.thinnai.com/?p=5767

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 17 -  சிங்கமும் தச்சனும்

 

அன்னபூர்னா ஈஸ்வரன்

 

சிங்கமும் தச்சனும்

 

ரு நகரத்தில் தேவகுப்தன் என்றொரு தச்சன் இருந்தான். தினந்தோறும் அவன் சாப்பாட்டைக் கட்டி எடுத்துக்கொண்டு மனைவியோடு காட்டுக்குப் போய் பெரிய மரங்களை வெட்டி வருவது வழக்கம். அந்தக் காட்டில் விமலன் என்றொரு சிங்கம் இருந்தது. அதைச் சுற்றித் திரிந்தபடி மாமிசபக்ஷணிகளான ஒரு நரியும் ஒரு காக்கையும் இருந்தன. ஒருநாள் காட்டில் சிங்கம் தனியே திரிந்து கொண்டிருக்கும்போது அந்தத் தச்சனைக் கண்டு விட்டது. தச்சனும் அந்த பயங்கரமான சிங்கத்தைப் பார்த்துவிட்டான். ‘இனி செத்தோம்’ என்று அவன் எண்ணியிருக்கலாம். அல்லது ஆபத்துக் காலத்தில் சமயோசிதமாக யுக்திகள் தோன்றுமே, அது தோன்றிற்றோ என்னவோ! பலசாலிகளை நேராக எதிர்கொள்வதுதான் சரி என்று முடிவு செய்து, சிங்கத்தை நோக்கிச் சென்று நமஸ்கரித்துவிட்டு,  ”வா, தோழா, வா! உன் சகோதரனின் மனைவி தயாரித்துத் தந்த இந்தச் சாப்பாட்டை நீயும் சாப்பிடு!” என்று சொன்னான்.

 

”நண்பனே, சோறு தின்று நான் வயிறு பிழைக்கிறவன் அல்ல; நான் ஒரு மாமிச பக்ஷணி. இருந்தாலும் பரவாயில்லை. உன் மேலிருக்கும் பிரியத்தால் அதைக் கொஞ்சம் ருசி பார்க்கிறேன். சாப்பாட்டில் ஏதாவது விசேஷமுண்டா?” என்று கேட்டது சிங்கம்.

 

உடனே தச்சன் சர்க்கரை, நெய், திராட்சை, வாசனை திரவியங்கள் கலந்து தயாரித்த மணம் மிகுந்த லட்டு, ஆப்பம், காரமான தின்பண்டங்கள் போன்ற பலவகையான விசேஷ பதார்த்தங்களைச் சிங்கத்தின்மீது வற்புறுத்தித் திணித்தான். அதைச் சாப்பிட்டுவிட்டுச் சிங்கம் நன்றியறிதலோடு அவனுக்கு அபயம் அளித்தது. காட்டில் பயமின்றி எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியவிட்டது. ”நண்பனே, நீ தினந்தோறும் என்னிடம் வா, வேறு யாரையும் அழைத்து வராமல் தனியாக வந்து போய்க் கொண்டிரு” என்று அதனிடம் தச்சன் சொல்லி வைத்தான்.

 

இப்படியே காலம் செல்லச் செல்ல அவர்களிடையே அன்பு வளர்ந்தது. ஒவ்வொரு நாளும் பலவிதமான உணவுகளும், உபகரிப்புகளும் கிடைத்து வந்ததால் மிருகங்களை வேட்டையாடுகிற வழக்கத்தைச் சிங்கம் விட்டுவிட்டது.

சிங்கத்தின் தயவில் பிழைத்து வந்த நரிக்கும் காக்கைக்கும் இரையில்லாமற் போய்விட்டது. அவை பசி வேதனையோடு சிங்கத்தை நெருங்கி, ”சுவாமி! தினந்தோறும் நீங்கள் எங்கே போகிறீர்கள்? போய்விட்டு மனத்திருப்தியோடு திரும்பி வருகிறீர்களே, என்ன விஷயம்? சொல்லுங்கள்” என்று கேட்டன.

 

”நான் எங்குமே போகிறதில்லையே?” என்றது சிங்கம்.

 

அவை விடவில்லை. மேலும் மேலும் பணிவோடு வற்புறுத்திக் கேட்டுக்கொண்டேயிருந்தன. கடைசியில் ”என் தோழன் ஒருவன் தினசரி காட்டுக்கு வருகிறான். அவன் மனைவி அருமையான பல தின்பண்டங்களைத் தயாரித்து அனுப்புகிறாள். அவற்றை ஆசையோடு சாப்பிட்டு வருகிறேன்” என்று சிங்கம் சொல்லிற்று.

அதைக் கேட்ட நரியும் காக்கையும், நாமும் அங்குபோய், தச்சனைக் கொன்று, அவன் ரத்தத்தையும் மாமிசத்தையும் தின்று ரொம்ப காலத்துக்குப் பிழைக்கலாமே!” என்று ஒன்றுக்கொன்று பேசிக்கொண்டன. இந்தப் பேச்சு சிங்கத்தின் காதில் விழுந்தது. அது உடனே ”இங்கே பாருங்கள். அவனுக்கு நான் அபயம் தந்திருக்கிறேன். இப்படிப்பட்ட கெட்ட காரியத்தை எப்படி மனத்தால்கூட நினைக்க முடிகிறது உங்களுக்கு? உங்களுக்கும் நல்ல பட்சணங்கள் தச்சனிடம் வாங்கித் தருகிறேன். வாருங்கள்” என்று சொல்லிற்று. நரியும் காக்கையும் ஒத்துக்கொண்டன.

 

பிறகு அவை மூன்றும் தச்சன் இருக்கும் இடத்துக்குப் போகத் தொடங்கின. துன் மந்திரிகளோடு சிங்கம் வருவதைத் தூரத்திலேயே தச்சன் கண்டுவிட்டான். ‘இது நமக்கு நல்லதாகப் படவில்லை’ என்று எண்ணியபடியே மனைவியோடு அவசர அவசரமாக ஒரு மரத்தின்மேல் ஏறிக்கொண்டான். சிங்கம் நெருங்கி வந்து, ”நண்பனே, நான் வருவதைப் பார்த்ததும் ஏன் மரத்தின்மேல் ஏறிக்கொண்டாய்? நான் உன் நண்பன், விமலன் என்கிற சிங்கமாயிற்றே? பயப்பட வேண்டாம்” என்று சொல்லிற்று.

 

அதற்குத் தச்சன் பின்வருமாறு சொன்னான்:

 

‘உன் அருகில் நரி இருக்கிறது; அந்தக் காக்கைக்கும் கூரிய அலகு இருக்கிறது. உன் நண்பர்கள் எனக்குப் பிடிக்கவில்லை. ஆகவே மரத்தின்மேல் ஏறிக்கொண்டேன்’ என்று,

 

அதைத்தான் நானும் குறிப்பிட்டேன். நீச்சர்கள் சூழ்ந்திருக்கும் இந்த அரசன் அண்டியவர்களுக்கு நன்மை செய்வதில்லை” என்றது சஞ்சீவகன்.

 

கதை சொல்லி முடித்து, மேலும் சஞ்சீவகன் பேசத் தொடங்கியது: ”எனக்கு எதிராகப் பிங்களகனை யாரோ திருப்பி விட்டிருக்கிறான்!

 

மிருதுவான ஜலம்கூட ஒழுகியோடி மலைச்சாரலை அரித்துத் தோஷம் உண்டுபண்ணுகிறது. தந்திரசாலியின் சொல்லுக்குக் காது கொடுத்தால் மிருதுவான மனமும் எங்கேயோ ஓடி ஒளிந்து கொள்கிறது.

 

இந்த நிலைமையில் எது செய்தால் சரியாயிருக்கும்? சண்டை போடுவதைத் தவிர சரியான வழி வேறு ஒன்றும் இல்லை.

 

சுவர்க்கத்தை விரும்புகிறவர்கள் யாகமும், தவமும், தானமும் செய்து அதை அடைகிறார்கள். ஆனால் அதே சுவர்க்கத்தை போர்க்களத்தில் உயிர்த் தியாகம் செய்யும் வீரம் கணப்பொழுதில் அடைந்து விடுகிறான்

 

என்று ஒரு பழமொழி கூறுகிறது. மேலும்,

 

வீரன் இறந்தால் சுவர்க்கம் செல்கிறான். சத்துருவை ஜெயித்தால் சுகம பெறுகிறான். இவை இரண்டும்தான் வீரனுக்கு நன்மை செய்கிற குணங்கள்.

 

பொன்னும் மணியும் அணிந்த மங்கையர், யானை, குதிரை, சிம்மாசனம், செண்சாமரம், களங்கமற்ற சந்திரன் போல ஒளிவீசும் வெண் குடை, செல்வம் இவையெல்லாம் கோழைகளுக்கு இல்லை. தாயைப்போய் கட்டிக்கொள்ளும் பயங்கொள்ளிகளுக்கு இல்லை.

 

என்றது சஞ்சீவகன்.

 

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் தகனகன் யோசிக்கத் தொடங்கியது. ‘இவன் மிகுந்த பலசாலியாக இருக்கிறான். கூர்மையான கொம்புகளும் இருக்கின்றன. விதிவசத்தால் சண்டையில் அரசனை ஒருவேளை இவன் கொன்றாலும் கொன்றுவிடலாம். அப்படி நடக்க விடுவது சரியில்லை.

 

வீரர்களாயிருந்தாலும் என்ன, யாருக்கும் யுத்தத்தில் வெற்றி என்பது நிச்சயமில்லை. அதனால்தான் அறிவாளிகள் முதலில் மூன்று உபாயங்களைச் கையாண்டு பிறகு சண்டைக்குப் போகிறார்கள்

 

என்றொரு பழமொழி கூறுகிறது. ஆகவே எனது புத்திசாதுரியத்தைக் கொண்டு இவனை யுத்தம் செய்யும் எண்ணத்திலிருந்து திருப்பிவிட வேண்டும்’ என்று முடிவு செய்தது. பிறகு, சஞ்சீவகனைப் பார்த்து, ”நண்பனே, நீ சொல்வது சரியான உபாயமில்லை. ஏனென்றால்,

 

சத்துருவின் பலத்தை அறியாமல் சண்டைக்குப் போகிறவன் நீர்க் குருவியிடம் சமுத்திரம் அவமானம் அடைந்தது போல் அவமான மடைகிறான்.

 

என்று ஒரு பழமொழி உண்டு” என்றது தமனகன்.

 

”அது எப்படி?” என்று சஞ்சீவகன் கேட்கவே, தமனகன் கூறத் தொடங்கியது.

 

http://puthu.thinnai.com/?p=5977

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 18 - சமுத்திரமும் நீர்க்குருவியும்

அன்னபூர்னா ஈஸ்வரன்

 

சமுத்திரமும் நீர்க்குருவியும்

 

பெரிய சமுத்திரம் ஒன்று இருந்தது. அதில் மீன், முதலை, ஆமை, சுறாமீன், திமிங்கிலம், நத்தை, முத்துச்சிப்பி, கிளிஞ்சல் முதலான இன்னும் எத்தனையோ ஜந்துக்கள் நிறைய இருந்தன. அதன் கரையோரத்தில் ஒரு நீர்க்குருவியும் அதன் மனைவியும் இருந்து வந்தன. ஆண் குருவிக்கு உத்தான பாதன் என்று பெயர். பெண் குருவிக்குப் பதிவிரதை என்று பெயர். ருது அடைந்ததின் பலனைப் பெற்று அந்தப் பெண் குருவி முட்டையிடும் தருணத்தில் இருந்தது. அது தன் கணவனைப் பார்த்து, ”நான் முட்டையிட வேண்டும். அதற்குத் தகுந்த இடமாகப் பார்த்துப் பிடியுங்கள்” என்று சொல்லியது.

 

”வேறு இடம் எதற்கு? நம் அப்பனும் பாட்டனும் தேடிவைத்துப் போன இந்த இடமே ரொம்ப நல்லதாயிற்றே! இங்கேயே நீ முட்டையிடு” என்றது ஆண் குருவி.

 

”இது வேண்டாம், ரொம்ப அபாயகரமான இடம். சமுத்திரம் ரொம்பவும் பக்கத்தில் இருக்கிறது. அலைநீர் உயரக் கிளம்பிப் பாய்ந்து என் குஞ்சுகளை அடித்துக்கொண்டு போனாலும் போய்விடும்” என்றது பெண் குருவி.

 

”அன்பே! இந்த உத்தானபாதனைச் சமுத்திரத்துக்கு நன்றாகத் தெரியும். எனக்கு விரோதமாக நடந்துகொள்ள அதற்குத் திராணி கிடையாது.

 

பாம்பின் தலையில் ஜொலிக்கிற மாணிக்கத்தை முன்பின் யோசிக்காமல் யார் பறிக்கப் போவார்கள்? ஒரே பார்வையில் எதிரியைக் கொல்லக் கூடியவனை யார்தான் கோபமூட்டுவார்கள்?

 

என்கிற பழமொழியையும்,

 

பச்சைப்பசை எதுவுமில்லாத பாலைவனமாகவே இருந்தாலும், கோடை வெயில் உடலைக் கொளுத்திக் கொண்டிருந்தாலும், யாராவது மதயானையின் நிழலில் தங்குவதற்குப் போவார்களா?

 

என்கிற பழமொழியையும் நீ கேட்டதில்லையா? மேலும்,

 

பனித்துளிகளைச் சுழற்றியடிக்கும் குளிர்காற்று விடியற்காலையில் வீசிக் கொண்டிருக்கும்போது, நன்மை தீமை தெரிந்தவன் யார்தான் தண்ணீரைக் கொண்டு ஜலதோஷத்தைப் போக்க நினைப்பான்?

 

மதயானையின் மத்தகத்தைப் பிளந்த சிரமத்தோடு சிங்கம் தூங்கிக்கொண்டிருக்கிறது. அந்த யமனைப்போய் யாராவது தட்டி யெழுப்புவார்களா? யமலோகத்தை எட்டிப் பார்க்க யார்தான் விரும்புவார்கள்?

 

பயமில்லாமல் யமலோகத்துக்குப் போய் யமனுக்கு உத்தரவு போடுகிறவன் மாதிரி உனக்கு விரோதி யாரும் கிடையாது. அப்படி இருக்கிறதாகச் சொன்னால் என் உயிரைத் தரத் தயார்.

 

நூற்றுக்கணக்கான தீ நாக்குகள் ஆகாயத்தை எட்டி நக்கியபடி புகையில்லாமல் பயங்கரமாக எரியும் நெருப்பிலே எந்த முட்டாள்தான் நுழையத் துணிவான்?

 

என்றது ஆண் குருவி.

 

ஆண் குருவியின் பலம் பெண் குருவிக்குத் தெரியாதா? இந்தப் பேச்சைக் கேட்டதும் அதற்குச் சிரிப்பு வந்துவிட்டது. ”உங்கள் பேச்சு ரொம்ப நன்றாகத்தானிருக்கிறது. போங்கள்! எனக்கும் அநேகம் சொல்ல முடியும்.

 

பட்சிராஜனே! இப்படி நீ பெருமையடித்துக் கொண்டால் உன்னைப் பார்த்து உலகம் சிரிக்கும்.

 

யானையைப்போல் முயலும் லத்தி போட்டது என்றால், அது கேட்பதற்கு அதிசயமான விஷயம்தான்.

 

உங்கள் பலம் என்ன, பலவீனம் என்னவென்று உங்களுக்கே எப்படித் தெரியாமல் போயிற்று? ஒரு பழமொழியைக் கேட்டிருப்பீர்களே!

 

தன்னை அறிவதே கஷ்டமான வேலைதான்; எது சரியான வேலை, எது வீண்வேலை, என்று அறிவதும் கஷ்டம்தான். இருந்தபோதிலும், தன் சக்தியை அளந்தறிந்தவனுக்கு நெருக்கடியான காலங்களில் துன்பம் எதுவும் ஏற்படுகிறதில்லை.

 

‘என் சக்தி இவ்வளவுதான்; இன்னின்ன காரியத்தைத்தான் நான் சாதிக்க முடியும்’ என்று உணர்ந்து யார் நடந்து கொள்கிறானோ அவனே புத்திசாலி. அவன்தான் பலனடைவான்.

 

இன்னொரு சரியான பேச்சையும் கேளுங்கள்!

 

தனக்கு நன்மை செய்யும் சிநேகிதர்களின் பேச்சைக் கேட்காதவன், கட்டையிலிருந்து நழுவி உயிர்விட்ட ஒரு முட்டாள் ஆமையின் கதிக்கு ஆளாகிறான்.

 

என்றது பெண் குருவி. ”அது எப்படி?” என்று ஆண் குருவி கேட்கவே, அதன் மனைவி சொல்லத் தொடங்கியது:

 

 

http://puthu.thinnai.com/?p=6247

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 19 - ஆமையும் வாத்துக்களும்அன்னபூர்னா ஈஸ்வரன்

 

 

ஆமையும் வாத்துக்களும்

 

ரு ஏரியில் சம்புக்ரீவன் என்றொரு ஆமை இருந்தது. அதன் சிநேகிதர்களாக சங்கடகன் விகடன் என்று இரண்டு வாத்துக்கள் இருந்தன. ஏதோ கால வித்தியாசத்தால் பன்னிரண்டு வருஷகால மழை தவறிப்போய் நீர் வறட்சி ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் வாத்துக்கள் இரண்டும் யோசிக்கத் தொடங்கின. ஒரு யோசனை தோன்றியது. ‘இந்த ஏரியில் நீர் வற்றிவிட்டது. வேறு ஏதாவது ஏரி குளம் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான். நண்பன் சம்புக்ரீவனிடம் விடை பெற்றுக் கொண்டு போய்விடலாம்’ என்று தீர்மானித்தன.

 

அவ்விதமே ஆமையிடம் போய் விஷயத்தைச் சொல்லின. அதைக் கேட்டதும், ஆமை ”என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் போய்விடுவதற்கு எப்படி உங்களுக்கு மனம் வருகிறது? நானோ நீரில் வசிக்கிறவன். நீர் வற்றிப் போவதாலும், உங்கள் பிரிவாற்றாமையாலும் நான் சீக்கிரம் செத்துவிடுவேன். என்மேல் உங்களுக்குக் கொஞ்சமாவது அன்பு இருக்குமானால் என்னைச் சாவிலிருந்து காக்க வேண்டும். ஏரியில் நீர் வற்றிப் போனால் உங்களுக்குச் சாப்பாடுதான் குறையும். எனக்கோ உயிரே போய்விடுமே! சாப்பாடு குறைவது கொடுமையா, பிராணனை விடுவது கொடுமையா? நீங்களே யோசித்துச் சொல்லுங்கள்” என்றது.

 

”உனக்கு இறக்கைகள் கிடையாது. நீ நீரில் வசிக்கிறவன். உன்னை அழைத்துப்போக எங்களால் முடியாதே!” என்று வாத்துக்கள் பதில் தந்தன.

 

”அதற்கு ஒரு  உபாயம் செய்யலாம். ஒரு குச்சியைக் கொண்டு வாருங்கள்.” என்றது ஆமை. வாத்துக்கள் போய் குச்சியொன்று கொண்டு வந்தன. அந்தக் குச்சியின் நடுப்பாகத்தை ஆமை தன் பற்களால் கவ்விப் பிடித்துக் கொண்டு பேசத் தொடங்கியது. ”இந்தக் குச்சியை உங்கள் அலகுகளில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மேலே பறந்து செல்லுங்கள். வேறு ஏதாவது ஏரி, குளம் கண்ணுக்குத் தெரிகிற வரையில் சமவேகத்தில் பறந்து போய்க்கொண்டேயிருங்கள்” என்று சொல்லிற்று.

 

”அந்த உபாயத்தில் ஒரு அபாயம் இருக்கிறது. எப்பொழுதாவது நீ கொஞ்சம் வாய் திறந்தால் போதும், குச்சியின் மீதுள்ள பிடி விட்டுப்போய் உயரத்திலிருந்து கீழே விழுந்து தூள் தூளாகி விடுவாய்” என்று வாத்துக்கள் ஆட்சேபித்தன.

 

”அப்படியானால், இந்த வினாடிமுதல் நான் மௌன விரதம் அனுஷ்டிக்கிறேன். ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் வரை ஒன்றும் பேச மாட்டேன்” என்றது ஆமை.

 

வாத்துக்கள் அப்படியே செய்தன. ரொம்பவும் சிரமப்பட்டு ஏரியை விட்டு மேலே எழும்பி அருகிலிருந்த பட்டணத்தின்மேல் பறந்து சென்றன. கீழேயிருக்கும் நகர ஜனங்கள் மேலே போகிற ஆமையைப் பார்த்து விட்டார்கள். ”என்ன இது? வண்டியிழுப்பது போல எதையோ இழுத்துக் கொண்டு பறவைகள் பறக்கின்றனவே!” என்று அவர்களிடையே பேச்சும் சலசலப்பும் எழுந்தது.

 

அந்தப் பேச்சு ஆமையின் காதில் விழுந்தது. அதற்குச் சாவு சமீபித்துவிட்டது. கவனமில்லாமல் ”இந்த ஜனங்கள் என்ன உளறுகிறர்கள்?” என்று வாய் திறந்து பேசிற்று. அவ்வளவுதான், அந்த வினாடியே அந்த முட்டாள் ஆமை குச்சியை விட்டு நழுவி தரையில் விழுந்தது. இறைச்சி விரும்புகிற ஜனங்கள் அதை உடனே கூரான கத்திகொண்டு கண்டந்துண்டமாக வெட்டித் தீர்த்து விட்டார்கள்.

 

அதனால்தான் ‘தனக்கு நன்மை செய்யும் சிநேகிதர்களின் பேச்சைக் கேளாதவன்…’ என்றெல்லாம் சொல்கிறேன்” என்றது பெண் குருவி அது மேலும் தொடர்ந்து பேசுகையில்,

 

வருமுன் காப்போனும், சமயோசித புத்தியுடையவனும் சுகம் பெறுவார்கள்; விதியை நொந்து கொள்கிறவன் நாசமடைகிறான்.

 

என்றது. ”அது எப்படி?” என்று ஆண் குருவி கேட்கவே, பெண் குருவி சொல்லத் தொடங்கியது:

 

 

மூன்று மீன்கள்

 

ரு பெரிய ஏரியில் அனாகதவிதாதா (வருமுன் காப்போன்) பிரத்யுத் பன்னமதி (சமயோசித புத்தியுடையவன்) யத்பவிஷ்யன் (வருவது வந்தே தீரும் என்று நினைக்கிறவன்) என்று மூன்று மீன்கள் இருந்து வந்தன.  அவை மிகவும் பெரிய மீன்கள். ஒருநாள் சில செம்படவர்கள் கரையோரத்தில் நடந்தபடியே, ”இந்த ஏரியில் மீன்கள் நிறைய இருக்கின்றன. நாளைய தினம் இங்கு வந்து மீன் பிடிக்கலாம்” என்று பேசிக்கொண்டு போனார்கள். இந்தப் பேச்சு அனாகதவிதாதா காதில் விழுந்தது.

 

அதைக் கேட்டதும் ‘இது நமது நன்மைக்கு இல்லை. கட்டாயம் அவர்கள் நாளைக்கோ மறுநாளைக்கோ இங்கு வருவார்கள். அதற்குள் மற்ற இரண்டு மீன்களையும் அழைத்துக்கொண்டு, தொந்தரவுகள் எதுவுமில்லாத வேறு ஏரிக்குப் போய்விட வேண்டியதுதான்’ என்று அது   யோசித்து முடிவு செய்தது. இரு மீன்களிடமும் சென்று விஷயத்தைச் சொல்லிற்று.

 

அதற்குப் பிரத்யுத்பன்னமதி ”இந்த ஏரியில் ரொம்ப நாளாக நான் இருந்து வருகிறேன். திடீரென்று இதை விட்டுச் செல்ல என்னால் முடியாது. செம்படவர்கள் வரும்போது பார்த்துக்கொள்ளலாம். அந்த நேரத்தில் ஏதாவது உபாயம் செய்து எப்படியாவது தப்பித்துக்கொள்வேன்” என்று சொல்லிற்று.

 

சாவு நெருங்கிவிட்ட யத்பவிஷ்யன் ”இதைப்போல எத்தனையோ ஏரிகள் மற்ற இடங்களிலும் இருக்கிறபோது, இங்கேதான் வருவார்கள் என்று யார் நிச்சயமாகச் சொல்லமுடியும்? வம்பு வதந்திகளைக் கேட்டுவிட்டு, தான் பிறந்து வளர்ந்த ஏரியை ஒருவன் விட்டுச் செல்வது சரியல்ல.

 

பாம்புகளும், போக்கிரிகளும், பிறரை அண்டிப் பிழைக்கிறவர்களும் போடுகிற திட்டங்கள் காரியத்தில் நடப்பதில்லை. அதனால்தான் உலகமும் வாழ்ந்து வளர்கிறது.

 

என்ற பழமொழியைக் கேட்டதில்லையா? நான் உங்களோடு வரப் போகிறதில்லை. தீர்மானமாகச் சொல்லிவிட்டேன் என்றது.

 

அவற்றின் முடிவைக் கேட்டதும், வருமுன் காப்போன் அன்றைய தினமே வேறொரு ஏரிக்குச் சென்று விட்டது. மறுநாள் செம்படவர்கள் வேலையாட்களோடு அங்கு வந்தார்கள். ஏரியின் அடியாழத்தை வளைத்துத் துழாவுகிறமாதிரி வலை வீசினர். ஒரு மீன் கூட பாக்கி விடாமல் பிடித்து விட்டனர். தண்ணீருக்குள் இருக்கும்போதே சமயோசித புத்தியுள்ள இரண்டாவது மீன் வலையில் செத்துவிட்டதுபோல் நடித்தது. ‘மீன் பெரியது; தானாகவே செத்துவிட்டிருக்கும்’ என்று எண்ணிச் செம்படவர்கள் அதை வலையிலிருந்து எடுத்துக் கரையில் போட்டனர். உடனே அது துள்ளிச் சென்று தண்ணீரில் மூழ்கி மறைந்து போயிற்று.

 

வலையின் துவாரங்களில் மூன்றாவது மீன் (யத்பவிஷ்யன்) வாய் மாட்டிக்கொண்டு அதிலிருந்து விடுபடத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. செம்படவர்கள் அதைத் தடியால் அடித்தார்கள். உடம்பு பஞ்சுபோல் ஆகி உயிர்போகிறவரைக்கும் அது துள்ளிக் கொண்டேயிருந்தது.

 

அதனால்தான் ‘வருமுன் காப்போனும், சமயோசித புத்தியுள்ளவனும் சுகம் பெறுவார்கள்; விதியை நொந்து கொள்கிறவன் நாசமடைகிறான்’ என்று சொன்னேன்” என்றது பெண் குருவி.

 

”அன்பே, நான் யத்பவிஷ்யன் மாதிரி என்று நினைக்கிறாயா? நான் சொல்வதைக் கேள்:

 

குதிரை, யானை, இரும்பு, கட்டை, கல், துணி, ஆண், பெண், தண்ணீர் இவற்றிற்கிடையே பெரிய வித்தியாசமிருக்கிறது

 

என்றது ஆண் குருவி. மேலும் ”நீ பயப்படாதே!  என் பராமரிப்பில் இருக்கும் உன்னை யாரால் அவமதிக்க முடியும்?” என்று சொல்லிற்று.

 

நாளடைவில் அங்கேயே அந்தப் பெண் குருவி முட்டையிட்டது.

 

இந்த இரண்டு நீர்க் குருவிகளும் பேசிக் கொண்டதைச் சமுத்திரம் கேட்டுக் கொண்டிருந்தது. அது எண்ணிற்று: ”ஆஹா, சரியாகத்தான் ஜனங்கள் சொல்லியிருக்கிறார்கள்:

 

தற்பெருமை என்பது யாருக்குத்தான் இல்லை? ஆகாயம் கீழே விழுந்துவிடாமலிருப்பதற்காக இந்த நீர்க்குருவி இரண்டு கால்களையும் மேலே தூக்கியபடி மல்லாக்காகப் படுத்திருக்கிறதுபோலும்!

 

ஆகவே இதன் பலத்தைச் சோதிக்கிறேன்” என்றது.

 

மறுநாள் நீர்க்குருவிகள் இரண்டும் இரை தேடச் சென்றபொழுது, சமுத்திரம் தனது அலைக்கரங்களை வெகுதூரம் வீசி முட்டைகளை ஆவலோடு எடுத்துச் சென்றுவிட்டது. பெண் குருவி திரும்பி வந்ததும் முட்டைகளை இருந்த இடத்தில் ஒன்றுமே இல்லாமலிருப்பதைக் கண்டது. உடனே கணவனைப் பார்த்து, ”துரதிர்ஷ்டம் பிடித்த எனக்கு என்ன நேர்ந்திருக்கிறது பாருங்கள்! சமுத்திரம் என் முட்டைகளை எடுத்துக்கொண்டு போய் விட்டது. வேறிடம் போகலாம், வேறிடம் போகலாம் என்று பலதரம் சொன்னேன். யத்பவிஷ்யனைப்போல் உங்களுக்கும் புத்தி கிடையாது நீங்கள் போக விரும்பவில்லை. குழந்தைகள் இறந்த துக்கத்தால் நான் நெருப்பில் குதிக்கப் போகிறேன். இது நிச்சயம்” என்றது.

 

அதற்கு ஆண் குருவி, ”அன்பே, என் சாமார்த்தியத்தைப் பார்! இந்தச் சமுத்திரத்தை என் அலகினால் வற்ற அடித்துவிடுகிறேன்!” என்றது.

 

”நாதா, சமுத்திரத்தோடு நீங்கள் எப்படிச் சண்டை போட முடியும்?

 

தன் பலத்தையும் விரோதியின் பலத்தையும் அறியாமல் கர்வங்கொண்டு சண்டைக்குப் போகிறவன் நெருப்பில் விழுந்த விட்டில்பூச்சி மாதிரி நாசமடைகிறான்.

 

என்பது தெரியாதா?” என்றது பெண் குருவி.

 

”அன்பே, அப்படிச் சொல்லாதே! சூரியனின் இளங்கதிர்கள் கூட மலையுச்சிமீது பாய்கிறதில்லையா? பராக்கிரமசாலிகளுக்குத் தங்கள் வயதைப் பற்றிக் கவலையில்லை.

 

என் அலகைக் கொண்டு இந்தச் சமுத்திரத்தை ஒரு சொட்டு நீர்கூட  மிஞ்சாதபடி வற்றவைத்து விடுகிறேன், பார்!” என்றது ஆண் குருவி.

 

‘      ’நாதா, ஆயிரத்து எண்ணூற்று உபநதிகளின் நீரோடு கங்கை சிந்து நதிகள் இடைவிடாமல் வந்து கலக்கும் இந்தச் சமுத்திரம் எங்கே, ஒரு சொட்டு நீர் மட்டும் எடுக்கக்கூடிய உங்கள் அலகு எங்கே! நீங்களாவது, சமுத்திரத்தை வற்றவைப்பதாவது! யோசனையில்லாமல் ஏன் பிதற்றுகிறீர்கள்?” என்று பெண் குருவி கேட்டது.

 

அதற்கு ஆண் குருவி, ”இதைக்கேள்!

 

என் அலகு இரும்புக்குச் சமானமானது. நீண்ட இரவும் பகலுமாய் நமக்கு நேரமும் வேண்டிய அளவுக்கு இருக்கிறது. அப்படியிருக்க ஏன் சமுத்திரம் வற்றாது? திடச்சித்தம்தான் வெற்றிக்கு அடிப்படை.

 

உற்சாகமும் ஆண்மையும் இல்லாவிட்டால் எதிரியை வெல்வது கடினம். துலாராசியில் ஏறித்தான் சூரியன் மேகத் திரள்களை ஜெயிக்கிறான்.

 

என்றது.

 

”சரி, சரி. சமுத்திரத்துடன் சண்டை போட்டுத்தான் ஆக வேண்டு மென்றால் மற்ற குருவிகளையும் உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள். ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

ஒரு படை பலவீனமாயிருந்தாலும் எண்ணிக்கையில் அதிகமா யிருந்தால் அது வெற்றிபெறும். பல புற்களைக் கொண்டு செய்த கயிற்றால் யானையைக் கூட கட்டிப் போடலாம்.

 

மரங்கொத்தியும் குருவியும் தவளையோடும் சிறு ஈயோடும் சேர்ந்து கூட்டமாக எதிர்த்ததால் ஒரு யானை செத்தது.

 

என்றும் ஒரு பழமொழி உண்டு” என்றது பெண் குருவி. ”அது எப்படி? என்று ஆண் குருவி கேட்க,

 

பெண் குருவி சொல்லத் தொடங்கியது:

 

http://puthu.thinnai.com/?p=6501

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 20 - குருவிக்கும் யானைக்கும் சண்டை

அன்னபூர்னா ஈஸ்வரன்

 

குருவிக்கும் யானைக்கும் சண்டை

 

டர்ந்த காடு ஒன்று இருந்தது. அதில் ஒரு குருவியும் அதன் மனைவியும் ஒரு மரக்கிளையில் கூடுகட்டி இருந்து வந்தன. நாளாவட்டத்தில் அதன் குடும்பம் பெருகிற்று. ஒருநாள் மதம் பிடித்த காட்டானை ஒன்று வெய்யில் தாள முடியாமல் நிழலுக்காக அந்த மரத்தின் கீழ் ஒதுங்கியது. மதம் பிடித்துக் கண்மூடிப்போன அந்த யானை, குருவிக் குடும்பம் இருக்கும் மரக்கிளையை துதிக்கை நுனியால் இழுத்து ஒடித்தது. கிளை ஒடிந்து குருவி வைத்திருந்த முட்டைகள் எல்லாம் கீழே விழுந்து உடைந்துபோயின. ஆண் குருவியும் பெண் குருவியும் மட்டும் எப்படியோ சாகாமல் தப்பித்துக் கொண்டன. அவற்றிற்கு ஆயுள் கொஞ்சம் பாக்கி இருக்க வேண்டும்.

 

தன் குஞ்சுகள் செத்ததைக் கண்டு பெண் குருவி துக்கித்துக் கதறியது. இந்தக் கதறலைக் கேட்டு அதன் நெருங்கிய சிநேகிதியான மரங்கொத்தி வந்து, அவள் துக்கத்தைக் கண்டு தானும் துக்கித்தபடி, ”தோழீ! அழுது என்ன பிரயோஜனம்?

 

காணாமற் போனதையும், செத்துப் போனதையும், காலங்கடந்து போனதையும் நினைத்து அறிவாளிகள் துயரப்படுவதில்லை. அறிவாளி களுக்கும் மூடர்களுக்கும் இதுதான் வித்தியாசம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள். உலகில் எந்த ஜீவனுக்கும் துயரப்பட வேண்டியதில்லை. அவற்றை எண்ணித் துயரப்படுகிற மூடன்தான் துக்கத்தோடு துக்கம் சேர்க்கிறான். அதனால் அவன் கஷ்டங்கள்தான் இரு மடங்காகப் பெருகுகின்றன.

 

சுற்றத்தார் விடுகிற கண்ணீர் பித்ருக்களுக்குத்தான் இன்னல் விளைக்கிறது. ஆகையால் அழக்கூடாது. சக்திக்குத் தக்கபடி ஈமச் சடங்குகள் செய்ய வேண்டும்

 

என்று சொல்லியது.

 

”நீ சொல்வது சரிதான். இருந்தாலும் அந்தக் கெட்ட யானை மதம் பிடித்துப்போய் என் குஞ்சுகளை ஏன் நாசம் செய்ய வேண்டும்? நீ என் சிநேகிதி என்றால் அந்தப் பெரிய யானையைக் கொல்வதற்கு ஒரு உபாயம் கண்டுபிடி. அதன்படி செய்து குஞ்சுகள் இறந்த துக்கத்தை நான் சகித்துக் கொள்கிறேன்.

 

ஆபத்துக் காலத்தில் ஒருவன் உதவுகிறான். கஷ்ட காலத்தை இன்னொருவன் எள்ளி நகையாடுகிறான். இருவருக்கும் தக்க மரியாதை  செய்தால் மறுபடியும் மனிதன் பிறக்கிறான்.

 

என்றது பெண்குருவி.

 

”நீ சொல்வது உண்மையே. ஒரு பழமொழி கூறுகிறபடி,

 

உன்னிடம் பணமுள்ள வரையில் உலகில் எல்லோரும் நண்பர்களே; ஆனால்  அவர்கள் எல்லாம் உண்மையான நண்பர்களில்லை. வேறு ஜாதியில் பிறந்தவனானாலும் யார் ஆபத்தில் உதவுகிறோனோ அவனே உண்மையான நண்பன். ஆபத்தில் உதவுகிறவன் நண்பன்; அன்னமளிப்பவன் தந்தை; நம்பிக்கையானவன் தோழன்; திருப்தி செய்பவள் மனைவி.

 

என் புத்தி சாதுரியத்தைப் பார். வீணாரவன் என்ற சிறு ஈ என் நண்பன். அதை அழைத்து வருகிறேன். அது இந்த துராத்மாவான துஷ்ட யானையைக் கொல்லும்” என்றது மரங்கொத்தி.

 

பிறகு பெண் குருவியை அழைத்துக்கொண்டு போய் மரங்கொத்தி சிறிய ஈயைப் பார்த்து, அதனிடம் ”தோழீ! இது என் சிநேகிதி. ஒரு கெட்ட யானை இதன் முட்டைகளை நாசமாக்கிய துக்கத்தோடிருக்கிறாள். அந்த யானையைக் கொல்ல நான் ஒரு உபாயம் செய்திருக்கிறேன். அதற்கு நீ உதவி செய்ய வேண்டும்” என்றது.

 

”சிநேகிதியே! அதற்கு ஆட்சேபனை என்ன? மேகதூதன் என்ற தவளை என் பிரிய நண்பன். அதையும் அழைத்து வைத்து விரும்பியபடி செய்வோம். ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

அன்பும், அறவாழ்வும், சாஸ்திர ஞானமும், குணமும் அறிவும் படைத்த அறிஞர்கள் போடும் திட்டங்கள் ஒரு போதும் வீணாவதில்லை.

 

என்றது ஈ.

 

பிறகு மூன்றும் தவளையிடம் சென்று விஷயத்தைத் தெரிவித்தன. அதைக்கேட்ட தவளை, ”பெரியோர்களின் கோபத்தின் முன் அந்த யானை எம்மாத்திரம்? ஈயே, நீ போய் அந்த யானையின் காதில் ரீங்காரம் செய்.ங உன் ரீங்காரத்தைக் கேட்கும் சுகத்தில் அது கண்களை மூடிக்கொள்ளும். அப்போது மரங்கொத்தி போய் அதன் கண்களைத் தன் அலகினால் கொத்தட்டும். ஒரு பள்ளத்தின் அருகில் நான் உட்கார்ந்து கத்துகிறேன். அந்தச் சப்தம் கேட்டு, அங்கே குளம் குட்டை இருக்கிறது என்று நினைத்து தாகவிடாய் தீர்க்க யானை வந்து அந்தப் பள்ளத்தில் விழுந்து சாகும்” என்றது.

 

திட்டமிட்டபடியே செய்தன. சிறிய ஈயின் பாட்டின் சுகத்தில் மதயானை கண்களை மூடியது. மரங்கொத்தி அதன் கண்களைப் பிடுங்கியது. நடுப்பகலில் தாகம் தணிக்க வேண்டி அந்த யானை இங்கும் அங்கும் சுற்றித் திரிந்து, தவளையின் சத்தத்தைத் தொடர்ந்து வந்து பெரிய பள்ளத்தில் விழுந்து செத்தது.

 

அதனால்தான் ‘மரங்கொத்தியும், குருவியும்…’ என்றெல்லாம் சொன்னேன்” என்றது பெண் குருவி.

 

அதற்கு ஆண் குருவி, ”நீ சொல்கிற மாதிரியே செய்வோம். சிநேகிதர்களைக் கூட்டி வந்து சமுத்திரத்தை வற்றவைக்கிறேன்” என்றது. இந்தத் தீர்மானத்தின்படியே எல்லா குருவிகளையும் அழைத்துத் தன் குஞ்சுகள் பறிபோன துக்கத்தைத் தெரிவித்தது. அதன் துயரத்தை நீக்குவதற்காக அவையெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து தங்கள் இறக்கைகளால் சமுத்திரத்தை அடிக்க ஆரம்பித்தன.

 

அப்போது அவற்றில் ஒரு குருவி, ‘இப்படிச் செய்தால் நம் விருப்பம் நிறைவேறாது. மண்ணும் புழுதியும் கொட்டி சமுத்திரத்தை நிரப்பிவிடலாம், வாருங்கள்” என்றது. இதைக் கேட்டவுடனே எல்லா குருவிகளும் தங்கள் அலகுகள் கொண்ட மட்டும் மண் எடுத்து வந்து போட்டு சமுத்திரத்தை நிரப்ப ஆரம்பித்தன.

 

அப்போது இன்னொரு குருவி, ”என்ன செய்தாலும் சரி, இந்தப் பெரிய சமுத்திரத்துடன் நாம் சண்டை போட முடியாது. நான் ஒரு தகுந்த யோசனை சொல்கிறேன். ஆலமரத்தடியில் ஒரு கிழட்டு வாத்து இருக்கிறது. அது சமயோசிதமான யுக்தி சொல்லும். அதனிடம் போய்க் கேட்போம், வாருங்கள்.

 

யாருக்கு அனுபவமதிகமோ அவனே கிழவன்; கிழவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும். காட்டில் பிடிபட்ட வாத்துக்கூட்டம் கிழவாத்தின் பேச்சைக் கேட்டதினால் விடுதலை பெற்றன.

 

என்று ஒரு பழமொழி இருக்கிறது” என்றது. ”அது எப்படி?” என்று மற்றவை கேட்கவே, அந்தப் பறவை சொல்ல ஆரம்பித்தது.

 

 

http://puthu.thinnai.com/?p=6649

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 21 - புத்திகூர்மையுள்ள கிழவாத்து

அன்னபூர்னா ஈஸ்வரன்

 


புத்திகூர்மையுள்ள கிழவாத்து

 

ரு காட்டுக்குப் பக்கத்தில் ஆலமரம் ஒன்று இருந்தது. அதில் பல பெரிய கிளைகள் உண்டு. அங்கு ஒரு வாத்துக் கூட்டம் இருந்து வந்தது. அந்த மரத்தடியில் கோசாம்பி என்றொரு கொடி படர்ந்தது. அதைக் கண்ட கிழவாத்து, ”இந்தக் கொடி ஆலமரத்தைப் பற்றிக்கொண்டு ஏறினால் நமக்குக் கெடுதிதான் உண்டாகும். கொடியைப் பிடித்துக் கொண்டு ஒருவேளை யாராவது மரத்தில் ஏறி நம்மைக் கொல்லலாம். சுலபமாகப் பிடுங்கி யெறிகிற மாதிரி சிறியதாக இருக்கும்போதே, நாம் இந்தக் கொடியைப் பிடுங்கி யெறிந்து விட வேண்டும் என்று சொல்லிற்று.

 

ஆனால் கிழவாத்தின் பேச்சை மற்றவை லட்சியம் செய்யவில்லை. கொடியைப் பிடுங்கி எறியவில்லை. எனவே நாளடைவில் அந்தக் கொடி வளர்ந்து மரத்தைச் சுற்றிக்கொண்டு ஏறிப் படர்ந்தது.

 

ஒருநாள் வாத்துக்கள் இரைதேட வெளியே போயிருந்த சமயம். அப்போது ஒரு வேடன் கொடியைப் பிடித்து மரத்தின்மேல் ஏறி, வாத்துக்கள் தங்கும் இடத்தில் கண்ணி வைத்து விட்டுத் தன் இருப்பிடத்துக்குப் போய் விட்டான். சாப்பாடு விளையாட்டு எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு வாத்துக்கள் இரவில் திரும்பி வந்தன. மரக்கிளைகளில் தங்கப் போய் கண்ணியில் சிக்கிக் கொண்டன. அப்போது கிழவாத்து, ”நமக்கு ஆபத்து வந்து விட்டது, எல்லோரும் கண்ணியில் அகப்பட்டுக் கொண்டு கஷ்டப் படுகிறோம். முன்பு நான் சொன்னதை யாரும் கேட்கவில்லை. கஷ்டத்தை நீங்களே வரவழைத்துக்கொண்டீர்கள். இனி எல்லோரும் செத்த மாதிரிதான்” என்றது.

 

இதைக் கேட்டதும் மற்ற வாத்துக்கள், ”பெரியவரே! சிக்கிக் கொண்டோம் இனி என்ன செய்யலாம், சொல்லுங்கள்” என்று கேட்டன.

 

”என் பேச்சைக் கேட்பதானால் சொல்கிறேன். வேடன் வரும்போது நீங்கள் எல்லோரும் செத்துப்போன மாதிரி நடிக்க வேண்டும். வேடனும் ‘இவை செத்துவிட்டன’ என்று எண்ணிக் கொள்வான். எல்லோரையும் பிடித்துத் தரைமீது போடுவான். பிறகு அவன் மரத்தை விட்டு இறங்கி வருவதற்குள் கீழே கிடக்கிற எல்லோரும் ஒரே சமயத்தில் குபீலென்று மேலே பறந்து போய் விடவேண்டும்” என்றது கிழட்டு வாத்து.

 

பொழுது விடிந்தவுடன் வேடன் வந்தான். அவன் வருவதைப் பார்த்ததும் எல்லா வாத்துக்களும் செத்து விட்டதுபோலக் கிடந்தன. அவனும் அப்படியே நம்பி விட்டான். அவற்றைக் கண்ணியிருந்து எடுத்து ஒவ்வொன்றாகத் தரைமேல் எறிந்தான். பிறகு அவன் கீழே இறங்கிவர முயற்சிப்பதைப் பார்த்ததும், அந்த வாத்துக்கள் எல்லாம் கிழவாத்து சொன்ன புத்திமதியின்படி ஒரே சமயத்தில் மேலே பறந்து சென்று விட்டன.

 

அதனால்தான் ‘யாருக்கு அனுபவம் அதிகமோ… என்றெல்லாம் சொல்கிறேன்’ என்றது அந்தப் பறவை.

 

கதை சொல்லி முடிந்ததும் பறவைகள் எல்லாம் கிழவாத்திடம் போய் முட்டைகள் திருட்டுப்போன துக்கச் செய்தியைத் தெரிவித்தன. அதைக்கேட்ட கிழவாத்து, ”எல்லாப் பறவைகளுக்கும் கருடனே ராஜா. எனவே தகுந்த உபாயம் இதுதான்: நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஏககாலத்தில் அழுது ஆரவாரம் செய்து கருடனை பயமுறுத்துங்கள். அந்த ரோதனையைக் கேட்டு நம் துக்கத்தைக் கருடன் போக்கிவிடுவான்” என்று சொல்லிற்று.

 

இதற்கிணங்க, அவை எல்லாம் கருடன் இருக்கும் இடத்துக்குப் போயின. அப்போது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே சண்டை நடக்க இருந்த சமயம். கருடனை மகாவிஷ்ணு அழைத்திருந்தார். அந்த நேரத்தில்தான் பறவைகள் எல்லாம் தங்கள் எஜமானரான பக்ஷ¢ராஜனிடம் வந்து சேர்ந்தன. முட்டைகளை சமுத்திரம் திருடி பிரிவாற்றாமைத் துயரத்தை உண்டாக்கியதை அவை தெரிவித்துக் கொண்டன. மேலும், ”பிரபுவே, நீங்கள் எங்கள் ராஜாவாக விளங்கி வருகிறீர்கள். நாங்களோ, எங்கள் அலகு கொள்ளும் அளவுக்கு இரை தேடி சாப்பிட்டுப் பிழைத்து வருகிறோம். அநத அகம்பாவம் பிடித்த சமுத்திரம் எங்கள் குஞ்சுகளை எடுத்துக்கொண்டு போய்விட்டது. ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

ஏழைகள் எப்போதும் மறைவாகவே தங்கள் சாப்பாட்டைச் சாப்பிட வேண்டும். துர்ப்பலமான இரை தின்னும் செம்மறியாட்டைச் சிங்கம் கொன்று விட்டது,

 

என்றன. ”அது எப்படி?” என்று கருடன் கேட்கவே, கிழட்டு வாத்து சொல்லத் தொடங்கியது:


சிங்கமும் செம்மறியாடும்

 

ரு காட்டில் செம்மறியாடு ஒன்று தன் தந்தையை விட்டுப் பிரிந்து தனியே இருந்து வந்தது. அதன் ரோமம் அடர்த்தியாயிருந்தது; கொம்புகள் வலுவுள்ளதாயிருந்தன; தேகம் திடமாயிருந்தது. காட்டில் அது சுற்றித் திரிந்து கொண்டிருந்தது.

 

ஒரு நாள் சிங்கம் ஒன்று எல்லா மிருகங்களும் புடைசூழச் சுற்றி வருகிற நேரத்தில் செம்மறியாட்டைப் பார்த்துவிட்டது. இப்படிப்பட்ட மிருகத்தை அதுவரை சிங்கம் பார்த்ததே கிடையாது. அடர்த்தியான ரோமத்தால், மூடப்பட்டு உடம்பே கண்ணுக்குத் தெரியாதபடி உப்பிப் போயிருந்த அந்தச் செம்மறியாட்டைக் கண்டதும் சிங்கத்துக்குப் பயமும், மனக்கலக்கமும் உண்டாயிற்று. ”கட்டாயம் இது என்னஆவிட பலசாலியாக இருக்கும்போல் தோன்றுகிறது. அதனால்தான் பயமில்லாமல் இப்படிக் காட்டில் திரிகிறது” என்று எண்ணிக் கொண்டது. மெள்ள மெள்ளப் பின் வாங்கி திரும்பிப் போய்விட்டது.

 

பிறகு மற்றொரு நாள் செம்மறியாடு காட்டுத் தரையில் புல் மேய்வதைச் சிங்கம் பார்த்துவிட்டது. உடனே, ”இது என்ன, புல் மேய்ந்து கொண்டிருக்கிறதே! அப்படியானால் கட்டாயம் இரைக்குத் தகுந்த பலம்தான் அதற்கு இருக்கும்” என்று எண்ணி, சிங்கம் அதன்மீது திடீரென்று பாய்ந்து அதைக் கொன்றுவிட்டது.

 

அதனால்தான் ‘ஏழைகள் மறைவாகவே…’ என்ற செய்யுளைச் சொன்னேன் என்றது கிழட்டு வாத்து.

 

இப்படிப் பறவைகளும் கருடனும் பேசிக்கொண்டிருக்கும்போது, மகாவிஷ்ணு அனுப்பிய தூதன் வந்தான். கருடனிடம், ”கருடனே! அமராவதிக்குப் போவதற்காக நீ சீக்கிரம் வர வேண்டும் என்று மகா விஷ்ணு கட்டளையிடுகிறார்” என்று தூதன் சொன்னான்.

 

கருடன் கர்வத்தோடு, ”தூதனே! நானோ ஒரு அற்ப வேலைக்காரன். என்னால் அவருக்கு ஆகவேண்டியதென்ன இருக்கிறது?” என்று பதிலளித்தான்.

 

”கருடனே! கடவுள் உன்னிடம் எப்போதாவது கோபமாகப் பேசியதுண்டா? ஏன் இப்படி அவரிடம் கர்வம் காட்டுகிறாய்?” என்றான் தூதன்.

 

”பகவானுக்கு இருப்பிடமாயிருக்கும் சமுத்திரம் என் வேலைக்காரனாகிய நீர்க்குருவியின் முட்டைகளைத் திருடிச் சென்றுவிட்டது. அதைத் தண்டிக்காமற் போனால் நான் பகவானின் வேலைக்காரனில்லை. நீ போய் இதை அவரிடம் தெரிவி” என்றான் கருடன்.

 

தூதன் போய்ச் சொன்னதிலிருந்து கருடன் விளையாட்டாகக் கோபங் கொண்டிருக்கிறான் என்று மகாவிஷ்ணு தெரிந்து கொண்டார். சிந்திதுதுப் பார்த்தார்; ”ஆஹா, கருடனுக்குக் கடுமையான கோபம் ஏற்பட்டிருக்கிறது. நாமே நேரில் சென்று, அவனைச் சமாதானப்படுத்தி சகல மரியாதைகளுடன் அழைத்து வருவோம். ஏனென்றால்,

 

நல்ல குலத்தில் பிறந்து திறமையும் விசுவாசமும் உள்ள வேலைக் காரனை அவமானப் படுத்தக்கூடாது. உன் சொந்த நன்மையை நீ விரும்புகிறாயானால் அவனை எப்பொழுதும் சொந்தப் பிள்ளை போல் பார்த்துக்கொள்!

 

என்றொரு பழமொழி கூறுகிறது. மேலும்,

 

எஜமானனுக்குச் சந்தோஷ மேற்பட்டால் வேலையாளிடம் தனது திருப்தியைத்தான் பதிலுக்குக் காட்டுகிறான். ஆனால் வேலையாள் சந்தோஷமடைந்தால், தனது உயிரையே பிரதியாகத் தருகிறான்.

 

இவ்வாறு மகாவிஷ்ணு தீர்மானித்துவிட்டு அவசரமாகக் கருடனைப் பார்க்கப் போனார். எஜமானரே தன் வீட்டுக்கு வந்திருப்பதைக் கண்டதும் கருடன் நமஸ்கரித்தான், மரியாதையோடு தலை வணங்கினான். நிலத்தை நோக்கியபடியே, ”பிரபுவே, நீங்கள் இருப்பிடமாகக் கொண்டுள்ளதால் சமுத்திரத்துக்கு வந்துள்ள திமிரைப் பாருங்கள். என் வேலைக்காரனின் முட்டைகளைத்  திருடி என்னை அவமானப்படுத்தியிருக்கிறது. தங்களிடம் இருக்கிற மரியதையால் தாமதித்தேன். இல்லாவிட்டால் அதை இன்றைக்கே வெறும் பூமியாக மாற்றி விட்டிருப்பேன்.

 

ஜனங்களிடையே இளக்காரமும், எஜமானன் மனத்துக்குத் துன்பமும் உண்டாகும் வேலையை உண்மை வேலைக்காரன் உயிர் போனாலும் செய்ய மாட்டான்.

 

என்றொரு பழமொழி கூறுகிறதல்லவா?” என்றான் கருடன்.

 

இதைக் கேட்டதும், விஷ்ணு, ”கருடனே, நீ சொல்வது உண்மை. ஏனென்றால்:

 

குரூரனும் துஷ்டனுமான வேலைக்காரனை நீக்காவிட்டால் அவன் செய்கிற காரியங்களுக்கு எஜமானன் தான் கஷ்டப்பட வேண்டும்.

 

ஆகையால் நீ வா. சமுத்திரத்திடமிருந்து முட்டைகளைத் திரும்பப் பெற்று நீர்க்குருவியைச் சந்தோஷப்படுத்திவிட்டு, தெய்வகாரியமாக அமராவதிக்குப் போகலாம்” என்று சொன்னார்.

 

‘      ’அப்படியே ஆகட்டும்” என்று கருடன் ஒப்புக் கொண்டான். பிறகு சமுத்திரத்தைக் கண்டித்துவிட்டு, மகாவிஷ்ணு அக்னி அஸ்திரத்தை வில்லில் தொடுத்து, ”துஷ்டனே, இந்தப் பறவையின் முட்டைகளைத் திருப்பிக்கொடு, இல்லாவிட்டால் உன்னை நீரில்லாத பூமியாக ஆக்கிவிடுவேன்” என்று சொன்னார்.

 

இந்தச் சொற்களைக் கேட்டதும் சமுத்திரத்தின் பரிவாரங்கள் எல்லாம் பயந்து நடுங்கிப் போய்விட்டன. சமுத்திரம் நடுங்கியபடியே முட்டைகளை எடுத்துக் கொண்டு வந்து பகவானின் கட்டளைப்படி நீர்க்குருவியிடம் திருப்பிக் கொடுத்தது.

 

அதனால்தான் ‘சத்ருக்களின் பலத்தையறியாமல் சண்டைக்குப் போகிறவன்… அவமானமடைகிறான்’ என்று சொன்னேன்” என்று தமனகன் சொல்லிற்று.

 

அதன் உட்கருத்தைச் சஞ்சீவகன் புரிந்து கொண்டது. தமனகனைப் பார்த்து, ”நண்பனே, நீ சொல், சிங்கம் சண்டைபோடும் விதம் என்ன?” என்று கேட்டது.

 

”முன்பெல்லாம் சிங்கம் சோர்ந்துபோய் கல்மீது உட்கார்ந்து கொண்டிருக்கும். இன்றைய தினமோ, போய்க் காண்பதற்கு முன்பே தன் வாலைக் கால்களிடையே இழுத்து விட்டுக்கொண்டு, நான்கு பாதங்களையும் ஒன்றாய்ச் சேர்த்து வைத்து, காதுகளைக் கூராக்கி நிமிர்த்தி நீ வருவதைத் தூரத்திலேயே கவனித்தபடி நின்று கொண்டிருக்கும். அதிலிருந்து உன்மேல் பகைக் கொண்டிருக்கிறது என்று நீ தெரிந்துகொள்ளலாம்” என்றது தமனகன்.

 

பிறகு தமனகன் கரடகனிடம் போயிற்று.

 

”என்ன செய்தாய் நீ?” என்று கரடகன் கேட்டது.

 

”இருவரையும் பிரித்துச் சண்டை மூட்டி விட்டேன்” என்றது தமனகன்.

 

”உண்மையாகவா?”

 

”விளைவுகளிலிருந்து அதைத் தெரிந்து கொள்வாய், பார்” என்றது தமனகன்.

 

"அதில் ஆச்சரியம் என்ன?

 

நன்றாய்த் தோற்றுவித்த பிளவு திடச் சித்தமுள்ளவர்களையும் கலக்கிவிடுகிறது. திரும்பத் திரும்ப வெள்ளம் பாய்ந்து மோதினால் மலை, கற்பாறைகளும் பிளந்து விடுகின்றன அல்லவா?

 

என்றொரு பழமொழி சொல்லுகிறது” என்றது கரடகன்.

 

”பிளவு உண்டு பண்ணி விட்டு மனிதன் தன் சுயநலத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். ஏனென்றால்,

 

ராஜநீதி பூராவும் படித்துவிட்டு அதில் உள்ள தத்துவங்களை அறிந்து கொண்டபிறகும் ஒருவன் தன் சுயநலனைச் சாதித்துக் கொள்ள முடியாவிட்டால் அவன் சிரமப்பட்டுக் கற்றறிந்த அந்தச் சாஸ்திரம் எதற்குப் பிரயோஜனம்?

 

என்றது தமனகன்.

 

”உண்மையாகப் பார்த்தால், சுயநலன்கள் என்று ஒன்று கிடையாது. ஏனென்றால், கிருமிகளும், சாம்பலும், தூசும் படிந்த இந்த தேகம் அருவருப்புத் தருகிறது.

 

ஆகவே, பிறரைத் துன்புறுத்தி இதைப் பேணுவது என்ன நியாயம்?”என்றது கரடகன்.

 

”சும்மா இரு. மந்திரிப் பதவியின் அடிப்படை ஆதாரங்கள் ஒன்றும் உனக்குத் தெரியாது. ராஜநீதியின் பல சாதுரியங்களும் உனக்குத் தெரியாது.

 

தயை தாட்சண்யம் இல்லாமல், மனத்தை இரும்பாக்கி விடு. பேச்சைக் கரும்பாக்கிவிடு. தீமைசெய்தவர்களைத் துளிக்கூடத் தயக்கமில்லாமல் கொன்றுவிடு!

 

என்று ஒரு செய்யுள் இருக்கிறது. இன்னொரு விஷயத்தையும் கேள்,  சஞ்சீவகன் கொல்லப்பட்டால் நமக்குத்தான் இரையாகும். ஏனெனில்,

 

பிறருக்குத் தீங்கிழைத்துத் தன் சுயநலத்தைப் பேண விரும்பும் அறிவாளி. காட்டில் சதுரகன் என்ற நரி செய்த மாதிரி, தன் சூழ்ச்சியை வெளியிடக் கூடாது.

 

என்றது தமனகன், ”அது எப்படி?” என்று கரடகன் கேட்க, தமனகன் சொல்லத் தொடங்கியது:

 

 

http://puthu.thinnai.com/?p=6820

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 22 – சுயநலக்கார நரி

அன்னபூர்னா ஈஸ்வரன்


ஒரு காட்டில் வஜ்ரதம்ஷ்டிரன் என்றொரு சிங்கம் இருந்தது. அதனிடம் கிரவ்யமுகன், சதுரகன், சங்குகர்ணன் என்ற பெயருள்ள ஒரு ஓநாயும், நரியும், ஒட்டகமும் மந்திரிகளாக இருந்தன. ஒருநாள் ஒரு மதயானையோடு சிங்கம் சண்டை போட்டது. யானையின் கூர்மையான தந்தங்கள் அதன் உடம்பைத் துளைத்துவிட்டன. அதனால் சிங்கம் ஒதுங்கித் தனிமையில் வசித்து வந்தது. ஏழு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வேதனைப்பட்டது, பசியால் உடம்பு இளைத்துப் போயிற்று. அதன் மந்திரிகளும் பசியால் வாடிப்போயின. அவற்றைப் பார்த்துச் சிங்கம், ‘’எந்த மிருகத்தையாவது தேடிப் பிடியுங்கள். என் நிலைமை எப்படியிருந்தாலும் உங்கள் பசியைப் போக்குகிறேன்’’ என்றது. சிங்கத்தின் உத்தரவைக் கேட்டதும் அவை காடெங்கும் சுற்றிப் பார்த்தன. ஒன்றும் அகப்படவில்லை. சதுரகன் யோசிக்கத் தொடங்கியது. ‘இந்தச் சங்கு கர்ணனை (ஒட்டகத்தை) சிங்கம் கொன்றால் எல்லோரும் தின்று சிலநாள் திருப்தியாயிருக்கலாம். ஆனால் சிங்கத்தின் சிநேகிதன் இது. சிங்கம் இதைக் கொல்லாது. இருந்தபோதிலும் என் புத்தி சாதுரியத்தால் எஜமானர் இதைக் கொல்ல மனங்கொள்ளும்படி தூண்டிவிடுகிறேன். ஏனென்றால்,


எதையும் அறிய முடியும். எதையும் அடைய முடியம். எதையும் கொல்ல முடியும். புத்திசாலிகளுக்கு முடியாததென்று ஒன்றுமில்லை.


ஆகவே, அறிவைத் தக்கபடி உபயோகிக்கிறேன்’ என்று யோசித்துத் தீர்மானத்துக்கு வந்தது.


பிறகு, சங்குகர்ணனைப் பார்த்து, ”சங்குகர்ணனே! அரசர் பத்தியமிருந்து பசியால் மிகவும் கஷ்டப்படுகிறார். அவர் இறந்துவிட்டால் நாமும் சாவது நிச்சயம். ஆகையால் உன் நன்மைக்காகவும் அரசரின் நன்மைக்காகவும் சில விஷயங்களைச் சொல்கிறேன், கேள்’’ என்றது நரி.


”நண்பனே, சீக்கிரம் சொல், உன் பேச்சைத் தட்டாமல் செய்கிறேன். எஜமானனுக்குச் செய்யும் ஒரு நன்மை நூறு நல்ல காரியங்கள் செய்வதற்குச் சமம்’’ என்றது ஒட்டகம்.


”நண்பனே, உன் உடம்பை இரண்டு மடங்கு லாபத்துக்குக் கொடுத்துவிடு. அதனால் உனக்கு இரண்டு மடங்கு பெரிதான உடம்பு கிடைக்கும். அரசருடைய ஆயுளும் நீடிக்கும்’’ என்றது நரி.


”நண்பனே! அப்படிச் செய்ய முடியுமானால் அது என் பாக்கியமே, அப்படியே செய்யும்படி எஜமானரிடம் சொல். ஆனால் இந்த விஷயத்தில் யமதர்மராஜன் மட்டும் ஒரு ஒப்பந்தத்துக்கு வர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்’’ என்றது ஒட்டகம்.


இப்படித் தீர்மானித்துவிட்டு அவை மூன்றும் சிங்கத்திடம் சென்றன. ”அரசே! ஒரு மிருகம்கூட இன்றைய தினம் கிடைக்கவில்லை. சிங்கம் அதைக் கேட்டு மிகவும் கவலையடைந்தது. சதுரகன், ”அரசே! இந்தச் சங்குகர்ணன், ‘யமதர்மராஜன் எனது உடம்பை இரண்டு பங்காகத் திருப்பிக் கொடுப்பதாக ஒத்துக் கொண்டால் எனது உடலைத் தருகிறேன்’ என்று சொல்கிறான்’’ என்றது.
”நண்பனே, அது நேர்த்தியான வேலைதான். அப்படியே செய்யுங்கள்’’ என்று சொல்லிற்று. ஒட்டகம் ஒப்புக்காண்டதுதான் தாமதம். உடனே சிங்கம் ஒட்டகத்தைத் தனது கைகளால் அறைந்தது. ஓநாயும், நரியும் அதன் வயிற்றைக் கிழித்தன. ஒட்டகம் செத்துப் போயிற்று.


அப்போது சதுரகன், ‘நான் ஒருவனே இதைத் தின்பதற்கு வழியுண்டா?’ என்று யோசித்தது. ரத்தம் தோய்ந்த அங்கங்களோடு இருந்த சிங்கத்தைப் பார்த்து, ‘’எஜமான்! ஸ்நானம், பூஜை செய்வதற்கு நதிக்குச் செல்லுங்கள். நான் கிரவ்யமுகனோடு இருந்து இரையைக் காத்து வருகிறேன்’’ என்றது.


இதைக்கேட்டு சிங்கமும் நதிக்குச் சென்றுவிட்டது. சிங்கம் போனதும், கிரவ்யமுகனைப் பார்த்து, ”நண்பனே, நீ பசியால் ரொம்பவும் வாடுகிறாய். அரசர் திரும்பி வருவதற்குள் ஒட்டகத்தின் மாமிசத்தை நீ சாப்பிடு. உன்மேல் பழி வராதவடி நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று சொல்லிற்று.
அது சொல்லியபடியே ஓநாய் கொஞ்சம் மாமிசத்தை ருசி பார்க்கத் தொடங்கியதோ இல்லையோ, உடனே சதுரகன் ”கிரவ்யமுகனே! தூர விலகிப் போ, அரசர் வருகிறார்’’ என்றது.


ஸ்நானம் பூஜைகளை முடித்துக்கொண்டு திரும்பி வந்த சிங்கம் ஒட்டகத்தின் நெஞ்சு பிடுங்கப்பட்டிருப்பதைக் கண்டது. உடனே கோபங் கொண்டது. ”யார் ஒட்டகத்தை எச்சிலாக்கியது? அவனைக் கொல்கிறேன், பார்’’ என்று சொல்லிற்று. அப்படிச் சொன்னதும், ‘எஜமானர் சாந்தமடையும் படி எதையாவது சொல்’ என்று கெஞ்சுவதுபோல் ஓநாய் சதுரகனின் முகத்தைப் பார்த்தது. ஆனால் சதுரகன் சிரித்துவிட்டு, ”ஒட்டகத்தின் நெஞ்சைத் தின்றுவிட்டு என் முகத்தை ஏன் பார்க்கிறாய்?’’ என்றது. அதைக் கேட்டதும் ஓநாய் தன் உயிருக்குப் பயந்து ஓட்டம் பிடித்தது. வேறு காடு தேடி சென்றது. சிங்கமும் அதைக் கொஞ்ச தூரம் துரத்திச் சென்றுவிட்டு, ‘என்னைப் போல் அவனும் நகத்தை ஆயுதமாகக் கொண்டிருப்பவன், அவனை நான் கொல்லக்கூடாது’ என்று தீர்மானித்துத் திரும்ப வந்தது.


இதற்கிடையே விதிவசமாக அந்த வழியே பெரிய வர்த்தகக் கூட்டம் ஒன்று வந்தது. அவர்களோடு வந்த ஒட்டகங்கள் மீது அதிக பாரம் எற்றியிருந்தார்கள். அவற்றின் கழுத்தில் கட்டியிருந்த பெரிய மணிகள் பேரொலி செய்தன. அதை வெகு தூரத்திலிருந்தே சிங்கம் கேட்டுவிட்டு, ‘’நண்பனே, பயங்கரமான சத்தமாயிருக்கிறதே. என்ன என்று அறிந்து வா’’ என்று நரிக்குக் கட்டளையிட்டது.


அதன் கட்டளைப்படியே நரி கொஞ்ச தூரம் போய்விட்டு வெகு வேகமாகத் திரும்பி வந்தது. அவசர அவசரமாக, ”ஓடுங்கள், பிரபுவே, ஓடுங்கள்! முடிந்தவரைக்கும் ஓடுங்கள்!’’ என்றது.


”நண்பனே, ஏன் இப்படி என்னை மனங் கலங்கச் செய்கிறாய்? என்னவென்று சொல்’’ என்றது சிங்கம்.


”எஜமானே, யமதர்மராஜன் தங்கள் மீது கோபங் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். காரணம், தாங்கள் அவருடைய ஒட்டகத்தை அகால மரணம் அடையும்படி செய்ததோடல்லாமல் அவரையே சாட்சியாகவும் வைத்தீர்கள். அதனால் அந்த ஒட்டகத்தைப் போல் தங்களிமிருந்து ஆயிரம் மடங்கு திருப்பி வாங்கத் தீர்மானித்து அவர் பல ஒட்டகங்களோடு வருகிறார். இந்த ஒட்டகத்தின் தகப்பனார், பாட்டனார் பற்றியெல்லர் விசாரிக்க விரும்பி, இங்கே அருகாமையிலேயே வந்து கொண்டிருக்கிறார்’’ என்றது நரி.


அதைக் கேட்டதும் சிங்கம் தன் உயிருக்குப் பயந்து செத்த ஒட்டகத்தை அப்படியே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தது. பிறகு அந்த சரி ஒட்டகத்தின் மாமிசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று வெகுநாள் காலம் தள்ளியது.


அதனால்தான், ”பிறருக்குத் தீங்கிழைத்துத் தன் சுயநலத்தைப் பேண விரும்பும் அறிவாளி தன் சூழ்ச்சியை வெளியிடலாகாது’ என்று சொல்கிறேன்’’ என்றது தமனகன்.


தமனகன் போனபின், சஞ்சீவகன் யோசிக்கத் தொடங்கியது. ‘நான் என்ன செய்யட்டும்? வேறெங்காவது போனால் வேறு கொடிய மிருகம் ஏதாவது என்னைக் கொன்றுவிடும். ஏனெனில் இது மனித நடமாட்டமில்லாத காடு. மேலும் அரசன் கோபமாயிருக்கும்போது வெளியே போவதும் சாத்திய மில்லை.


”குற்றம் செய்துவிட்டு ஓடிப்போய், தூரத்திலிருக்கிறதாக எண்ணி, நிம்மதியடைய முடியாது. ஏனென்றால் அறிவாளிகளின் கை நீண்டு வந்து குற்றவாளியைத் தண்டிக்கிறது.’’


என்று ஒரு பழமொழி சொல்கிறது. ஆகவே, சிங்கத்திடம் போவதே சரி. அவரிடம் சரணாகதியடைந்தேன் என்பதற்காக ஒரு வேளை அவர் என்னை விட்டுவிடக்கூடும்’ என்று முடிவுக்கு சஞ்சீவகன் வந்தது.


அதன்படியே சஞ்சீவகன் கலங்கிய மனத்துடன் அடிமேல் அடி எடுத்து வைத்துச் சென்றது. தமனகன் சொன்னபடியே சிங்கம் நிற்பதைப் பார்த்ததும் வேறொரு இடத்திற்குப் போய் மீண்டும் யோசிக்கத் தொடங்கியது: ‘என்ன கஷ்டம்! ராஜகுணத்தின் ஆழமே ஆழம்.


அது பாம்புகள் மறைந்து வாழும் வீடு; அல்லது கொடிய மிருகங்கள் இருக்கும் காடு; அல்லது மனோரம்மியமான தாமரை மலர்கள் மறைத்துக் கொண்டிருக்கும் முதலைகள் உள்ள ஏரி; துஷ்டர்கள் திரும்பத் திரும்ச் சொல்லும் அவதூறுகளால் கறைபடிந்த இடம் அது. சாதுவான வேலைக் காரர்கள் அரசன் மனத்தைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.


தமனகன் சொன்னபடியே சஞ்சீவகன் வருவதைப் பார்த்த பிங்களகன் திடீரென்று அதன்மேல் பாய்ந்தது. சிங்கத்தின் வஜ்ராயுதம் போன்ற நகங்கள் அதன் உடலைக் கிழித்தன. சஞ்சீவகனும் தன் கொம்புகளால் சிங்கத்தின் வயிற்றைக் கிழித்து எப்படியோ சிங்கத்திடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. மீண்டும் தன் கொம்புகளால் சிங்கத்தைக் குத்த விரும்பி, சண்டை செய்யத் தயாராக நின்றது.


அப்போது அவை இரண்டும் செந்நிறப் பூக்கள் குலுங்கும் செம்பரத்தி மரம்போல காணப்பட்டன. ஒன்றையொன்று கொல்வதையே குறியாகக் கொண்டு நின்றன. இதைப் பார்த்ததும் கரடகன் தமனகளைத் தூஷிக்கத் தொடங்கியது: முட்டாள்! அவர்களிடையே பகை யுண்டாக்கி நீ கொடுமை செய்திருக்கிறாய். இதனால் காடு பூராவிலும் கலவரமும் குழப்பமும் நீ உண்டாக்கிவிட்டாய். உனக்கு ராஜநீதியே தெரியாது. ஒரு பழமொழி கூறுவதுபோல்,


முன்பின் யோசிக்காமல், உயிருக்கு ஆபத்து உண்டாக்கும்படி நடக்கிற சக்கரவுகளை விவேகத்துடன் சமரசமாகத் தீர்க்கிறவனே ராஜநீதியை நன்கறிந்த மந்திரி.


அர்த்தமற்ற அற்ப லாபங்களுக்காக ஆர்வத்துடன் சண்டைபோட விரும்பு கிறவர்கள் துர்நடத்தையும் துர்ப்புத்தியும் உடையவர்களே, அவர்கள் அரசனையும ராஜ்யத்தையும் சங்கடத்தில் மாட்டி விடுகிறார்கள்.


ஆகையால்தான்,


ஸாமம் (சமரசம்) என்கிற உபாயத்தையே விவேகி முதலில் கையாள வேண்டும். ஸாமத்தால் கிடைக்கிற வெற்றி அவமானகரமானதல்ல.
மூடனே, மந்திரிப் பதவியை விரும்பும் நீ ஸாமம் என்கிற வார்த்தையையே கேட்டதில்லை. நீ தண்டம் என்கிற உபாயத்தைக் கையாள விரும்புவதால் உன் ஆசைகளெல்லாம் வீணாய்விடும். ஒரு பழமொழி கூறுவது போல்,


ராஜநீதி அறிந்தவன் முதலில் ஸாமம் என்கிற உபாயத்தையும், கடைசியில் தண்டம் என்ற உபாயத்தையும் கையாள வேண்டும் என்று பிரம்மா உபதேசிக்கிறார். அவற்றில் தண்டம் என்பது பாவம் மிகுந்தது. ஆகையால் அதைக் கையாள்வதைத் தடுக்க வேண்டும். அல்லது தவிர்க்க வேண்டும்.


பகைவனின் மனத்தில் படிந்த துவேஷம் என்கிற இருளை ஒளிவீசும் ரத்தினமும், சூரியனும், நெருப்பும் விலக்குவதில்லை. ஸாமம் ஒன்றுதான் அந்த இருளை விலக்குகிறது. ஸாமத்தினாலேயே காரியம் கைகூடும்போது தண்டத்தை ஏன் உபயோகிக்க வேண்டும்? சர்க்கரையால் பித்தத்தைத் தணிக்க முடிகிறபோது யாராவது சுரைக்காயை உபயோகிப்பார்களா?


ஸாமம், தானம், பேதம் இவை மூன்றும் புத்தி என்கிற கோவிலுக்கு வாயில்களாகும். நான்காவதாகிய தண்டம் என்பது திமிரால் ஏற்படுவது என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள்.


பலமில்லாமல் புத்தி மட்டுமிருந்தால் அது பெண்மை என்று கருதப் படுகிறது; சூரத்தனம் மட்டும் இருந்து புத்தியில்லாமற் போனால் அது மிருகத்தனம்தான் என்பதில் சந்தேகமில்லை.


யானை, பாம்பு, சிங்கம், நெருப்பு, நீர், காற்று இவற்றின் உண்மையான பலத்தைப் பலசாலி அறிவான் உபாயத்தால் அடைவது பலன் தராது.


அல்லது, ‘நான் மந்திரி குமாரன் அல்லவா’ என்று கர்வங்கொண்டு நீ ஒழுங்கீனமாக நடந்து கொள்வாயானால் உனக்கு நாசம்தான் சம்பவிக்கும். ஒரு பழமொழி கூறுவதுபோல்,


ஐம்புலன்களை அடக்காதவன், அன்பு வளர்க்காதவன், மனத்தை நல்வழியில் செலுத்தாதவன், தர்மம் செய்யாதவன், உலகில் விளம்பரம் மட்டும் விரும்பி உண்மையான கீர்த்தியையும் மனச்சாந்தியையும் தேடாதவன் இவர்கள் எல்லாம் சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்துதான் என்ன பிரயோஜனம்?


ராஜ நீதி என்பது ஐந்து பகுதிகளில் கொண்டிருக்கிறது. அவையாவன. காரியத்தைச் சரியாக ஆரம்பிப்பது, ஆன்பலம் பணபலம், இருப்பது; சரியான காலம் சரியான இடம் நிர்ணயிப்பது; ஆபத்து வரும்போது தடுப்பது; வெற்றியோடு காரியத்தை முடிப்பது, என்பவையே. தற்சமயம் அரசர் சங்கடத்தில் சிக்கியிருக்கிறார். உனக்குத் திறமை இருக்கிறதென்றால் இந்த ஆபத்தைத் தடுக்க வழி தேடு. முறிந்துபோன நட்பைத் திரும்பச் சேர்த்து வைப்பதில்தானே மந்திரிகளின் மதிநுட்பம் சோதிக்கப்படுகிறது? மூடா, உனக்கு விபரீத புத்தி இருப்பதினாலேதான் உன்னால் அதைச் செய்ய முடிய வில்லை. ஒரு பழமொழி கூறுவதுபோல்,
பிறர் காரியத்தை நாசம் செய்யத்தான் நீசனுக்குத் தெரியும். அதை மேம்படுத்துவதற்கு ஒன்றும் தெரியாது. பெருச்சாளிக்குச் செடியைப் பிடுங்கத் தான் சக்தியுண்டோªழிய, செடியைக் காக்க சக்தியில்லை.


என்ன செய்யலாம? இது உன் குற்றம் இல்லை. மந்த புத்தியுள்ள உன் பேச்சை நம்புகிற அரசருடைய குற்றம்தான் இது. ஒரு பழமொழி கூறுவதுபோல்,


மந்தபுத்தியுள்ளவனுக்குச் சாஸ்திரம் கற்பித்தால் அவனுக்குக் கர்வம் அதிகமாகிறதேயொழிய குறைவதில்லை. சூரிய வெளிச்சத்தில் எல்லோருக்கும் கண் தெரியும் போது, ஆந்தைகள் மட்டும் குருடாகி விடுகின்றன அல்லவா?


கல்வியால் கர்வமும் மடமையும் நீங்குவதற்குப் பதிலாக அதிகரிக்குமேயானால் அதற்குச் சிகிச்சை என்ன இருக்கப் போகிறது? அமுதமே ஒருவனுக்கு விஷமாகி விட்டால் பிறகு அவனுக்கு எப்படி வைத்தியம் செய்வது?


என்றது கரடகன்.


மிகவும் பரிதாபகரமான நிலைமையில் அரசன் இருப்பதைப் பார்த்துக் கரடகன் அதிகக் கவலைகொண்டது. மீண்டும் தமனகனைப் பார்த்து, என்ன கஷ்டகாலம்! பிறருடைய உபதேசத்தினால் அரசருக்கு மிகுந்த சங்கடம் உண்டாயிருக்கிறது.


புத்திமான்கள் சொன்ன வழியே நடக்காமல் நீசர்களின் சொற்படி நடக்கும் அரசர்கள் சண்டை சச்சரவுகளுக்கு ஆளாகி அனர்த்தம் என்கிற கூண்டில் சிக்கிக்கொள்வார்கள். அதிலிருந்து வெளியேறுவது கடினம் என்றும் தெரிந்து கொள்வார்கள்.


என்று சொல்கிறபேச்சு ரொம்பவும் சரி. மூடனே, குணசாலிகள் சூழ்ந்துள்ள அரசனுக்குத்தான் உலகம் சேவை புரிய விரும்புகிறது கேவலம் மிருகங்களைப்போல் அழிக்கிற கலை மட்டும் தெரிந்துள்ள உன் போன்ற மந்திரிகள் இருந்தால் அரசனுக்கு நல்ல சகபாடிகள் எப்படிக் கிடைப்பார்கள்?


ஒரு பழமொழி கூறுவதுபோல்,


அரசன் நல்ல மனங்கொண்டவனாகயிருந்தாலும், அவனைச் சூழ்ந்து துன் மந்திரிகள்ள இருந்தால் அந்த அரசனை உலகம் வெறுக்கிறது. இனிப்பாக அமைதியாக இருக்கும் குளம் முகமலர்ச்சியுடன் காணப் படுகிறது. ஆனால் அதற்குள் முதலைகள் இருக்கும். (என்றால் அதை யார் நெருங்குவார்கள்?)


உன் சுயநலத்தை உத்தேசித்து அரசனைப் பிரித்துத் தனிமையிலே வைத்திருக்க நீ விரும்புகிறாய். மூடனே!


அரசன் சபையின் மத்தியிலேதான் சோபிக்கிறான். தனிமையில் சோபிப்பதில்லை. அவனைத் தனிமைப்படுத்தி வைக்க விரும்புகிறவன் அரசனின் விரோதிதான்
என்பதை நீ ஏன் அறியவில்லை?


கடுமையான சொல்லில் நன்மை இருக்கிறதா என்று பார். அது எப்போதும் விஷம் அல்ல. தித்திக்கும் பேச்சில் துரோக சிந்தனை இருக்கிறதா என்று பார். அது எப்போதும் அமிர்தமாயிருப்பதில்லை.


பிறர் சந்தோஷமாகவும் செழிப்பாகவும் இருப்பதைக் கண்டாலே உனக்கு வருத்தம்தான். அது மிகவும் தவறு. சிநேகிதர்கள் தம் கடமையைச் செய்தபின் அப்படி இருப்பது சரியல்ல. ஒரு பழமொழி கூறுவதுபோல்,


துரோகத்தால் நண்பனைப் பெற விரும்புகிறவன், கபடத்தால் தர்மம் சேர்க்க விரும்புகிறவன், சுலபமான வழிகளால் கல்வி பெற விரும்புகிறவன், திமிரால் பெண்ணையடைய விரும்புகிறவன் இவர்கள் எல்லாம் கர்வம் பிடித்த முட்டாள்களே.


எந்தச் செய்கை ராஜ சேவை செய்பவர்களுக்கு வளம் அளிக்கிறதோ அதுவே அரசனுக்கும் திருப்தி அளிக்கிறது. ரத்தினங்கள்போல் ஒளி வீசி எழும் அலைகள் இல்லாவிட்டால் கடல் நடம்புரிந்து பிரயோஜனம் என்ன?


மேலும், அரசன் அருளைப் பெற்றிருப்பவன் அடக்கத்தோடு இருக்க வேண்டியது அவசியம். ஒரு பழமொழி கூறுவதுபோல்,


எவ்வளவுக்கெவ்வளவு எஜமானன் வேலைக்காரனுக்குச் சலுகை கொடுக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அந்த வேலைக்காரனிடம் பயமும் அடக்கமும் இருந்தால் அவன் விளங்குவான்.


நீயோ அற்பச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறாய். ஒரு பழமொழி கூறுவதுபோல்,


நிலைகுலைந்து போனாலும் பெரியோர்கள் தைரியத்தைக் கைவிடுவதில்லை. கரையில் பள்ளம் விழுந்தாலும் கடலின் கம்பீரம் குறைகிறதில்லை யல்லவா?


அற்ப விஷயத்திற்குக்கூட நீசர்கள் நிலைமாறுகின்றனர். மெல்லிய காற்று அடித்தாலும் நாணல்புல் குனிந்து கொடுக்கிறது அல்லவா?


குற்றம் எல்லாம் அரசருடையதுதான். ராஜ நீதியின் ஆறு மார்கங்களையும், நான்கு உபாயங்களையும் அறியாமல் மந்திரி என்று சொல்லிக் கொள்ளும் உன் போன்றவர்களிடம் அரசர் குணமும் பணமும் அன்பும் பெறவேண்டி வெற்றிக்கு உபதேசம் கேட்டாரே?


அழகாகவும் சாமார்த்தியமாகவும் பேசுவதோடு நிறுத்திக்கொண்டு வில்லில் அம்பு தொடுக்க மாட்டாத ஊழியர்களுடன் கேளிக்கையில் மூழ்குகிற அரசனை ராஜ்யலட்சுமி விட்டுச் சென்று எதிரியுடன் தங்கி விளையாடுகிறாள்


என்று சொல்லி வைத்திருப்பது சரிதான்.


பலபத்திரன் என்ற மந்திரி தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டான். நிர்வாண சந்நியாசியை எரித்து அரசனின் அருளைப் பெற்றான். என்ற கதை நியாயத்தைத்தான் சொல்லுகிறது’’ என்றது கரடகன்.


”அது எப்படி?’’ என்று தமனகன் கேட்க, கரடகன் சொல்லத் தொடங்கியது:

 

http://puthu.thinnai.com/?p=7088

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 23 – தேவலோகம் சென்ற சந்நியாசி

அன்னபூர்னா ஈஸ்வரன்


 

கோசல ராஜ்யத்தில் அயோத்தி என்ற நகரம் இருக்கிறது. அதை சுரதன் என்றொரு அரசன் ஆண்டு வந்தான். பல சிற்றரசர்கள் வந்து அவனுக்குத் தலைவணங்கி மரியாதை செய்யும்போது அவர்களின் மணி மகுடங்கள் வீசும் ஒளியிலே சுரதனின் பாதங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும். ஒருநாள் காடுகளைக் காவல் செய்பவன் அரசனிடம் வந்தான். ‘’அரசே! காட்டிலுள்ள எல்லா அதிகாரிகளும் கொந்தளித்துக் கலகம் செய்யும் நிலைமையில் இருக்கின்றனர். அவர்களிடையே விந்தியகன் என்ற தலைமை அதிகாரிக்கு அரசர்தான் மரியாதையாக நடக்கப் பாடம் கற்பிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தான்.


இதைக்கேட்ட அரசன் பலபத்திரன் என்ற மந்திரியை அழைத்து அவர்களை அடக்கி வரும்படி அனுப்பி வைத்தான். மந்திரி போய்விட்டான்.


கோடை காலம் சென்றதும் ஒரு நிர்வாண சந்நியாசி அந்த நகரத்தில் புகுந்தான். கேள்வி, இலக்கணம், ஜோதிடம், சகுனம், லக்னம்; வான சாஸ்திரத்தின் ஒன்பது, பன்னிரண்டு, முப்பது பாகங்கள்; நிழலைப் பார்த்து நேரம் சொல்லுதல், கிரஹணங்கள், நஷ்டம், லாபம், கிரஹநிலை, ஆயுள், மனதிலுள்ள எண்ணங்கள், சுலுஹம்; முதலிய ஜோதிட சாஸ்திரத்தின் விவரங்களைக் கொண்டு அந்த நகர ஜனங்கள் எல்லோரையும் ஒருசில நாட்களிலேயே விலைக்கு வாங்கினதுபோல் சந்தியாசி தன்வசப்படுத்தி விட்டான். கடைசியில் அவனது ரூபத்தையும் குணத்தையும் பற்றி ஜனங்கள் மூலமாக அரசன் கேள்விப்பட்டான். அரசனுக்கும் ஆவல் பிறந்து அரண்மனைக்குச் சந்நியாசியை வரவழைத்தான். அவனுக்கு ஆசன மளித்துவிட்டு, ”பண்டிதரே, பிறர் எண்ணங்களை நீர் அறிவீர் என்பது உண்மைதானா?’’ என்று கேட்டான்.


அதற்குச் சந்தியாசி, ”விளைவைக் கொண்டு அதை அறிவீர்கள்’’ என்று பதிலளித்து, பொருத்தமான கதைகளைச் சொல்லி, அரசனை கட்டுக்கடங்காத ஆவல் கொள்ளும்படி செய்தான்.


ஒருநாள் சந்நியாசி வழக்கமாய் வரும் நேரத்தில் வரவில்லை. மறுநாள் அரண்மனைக்குள் புகுந்து, ”அரசே, உமக்கு நல்ல செய்திகள் சொல்லப் போகிறேன். இன்று, ”காலை மடாலயத்திற்குள்ளே நான் என் உடலைவிட்டு நீங்கி தேவலோகத்திற்குச் செல்வதற்குத் தகுந்த மற்றொரு சரீரம் பெற்றேன். தேவர்கள் எல்லோரும் என்னைப்பற்றி நினைத்தபடியே இருக்கிறார்கள். ஆதலால் சுவர்க்கலோகத்துக்குப் போய்விட்டுத் திரும்பி வந்திருக்கிறேன். அங்கே ‘அரசனின் சௌக்கியத்தை நாங்கள் விசாரித்தாகச் சொல்லுங்கள்’ என்று தேவர்கள் என்னிடம் சொன்னார்கள்’’ என்றான்.


இதைக் கேட்ட அரசனுக்கு ஆவலும் ஆச்சரியமும் ஏற்பட்ட விட்டது. ”என்ன! சுவர்க்கத்துக்குக் கூடவா நீர் போகிறீர்?’’ என்று கேட்டான்.
”மகாராஜா, ஒவ்வொரு நாளும் நான் சுவர்க்கத்திற்குப் போய் வந்து கொண்டிருக்கிறேன்’’ என்றான் சந்நியாசி. அந்த முட்டாள் அரசன் அதை நம்பி விட்டான். ராஜ்ய அலுவல்களையும் அந்தப்புர ஸ்திரீகளையும் புறக்கணித்துவிட்டு சந்நியாசியிடமே ஈடுபட்டவாறு இருந்து விட்டான்.


நிற்க.பலபத்திரன் காட்டு ராஜ்யத்திலுள்ள கொந்தளிப்புகளை யெல்லாம் அடக்கிவிட்டு அரசனிடம் திரும்பி வந்தான். மந்திரி பிரதானிகளை அவரவர்கள் போக்கில் போக விட்டுவிட்டு, அரசன் அந்த நிர்வாண சந்நியாசியுடன் தனித்திருந்து, தாமரைபோல் மலர்ந்த முகத்துடன் ஏதோ அதிசயமான விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதைப் பலபத்திரன் கண்டான். விஷயத்தைப் புரிந்துகொண்டான். அரசனை வணங்கிவிட்டு, ”அரசருக்கு வெற்றி உண்டாகட்டும்! தேவர்கள் பிரியமானதை வழங்கட்டும்!’’ என்று வாழ்த்தினான்.


திரியின் §க்ஷமத்தை அரசன் விசாரித்துவிட்டு, ”நீர் இந்த ஆச்சாரியாரை அறிவீரா?’’ என்று கேட்டான்.


”அநேக ஆச்சாரியார்களுக்குக் குருவாகவும், பிரம்மாவைப் போல் அநேக ஆச்சாரியார்களைச் சிருஷ்டிப்பவருமான இவரை எப்படி அறியாமலிருக்க முடியம்? மேலும், இந்த ஆச்சாரியாருடைய சுவர்க்கலோக யாத்திரைகளைப் பற்றியும் கேள்விப்பட்டேன். இது உண்மைதானா?’’ என்று மந்திரி கேட்டான்.


”நீர் கேள்விப்பட்டது எல்லாம் உண்மைதான்’’ என்றான் அரசன்.


”மந்திரிக்கு ஆவல் இருந்தால் அவரே அதைப் பார்க்கட்டும்’’ என்றான் சந்நியாசி.


பிறகு சந்நியாசி மடாலயத்திற்குள் சென்று நன்றாகத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு நின்றான். ஒரு முகூர்த்த நேரம் ஆயிற்றோ இல்லையோ, மந்திரி அரசனைப் பார்த்து, ”அரசே, அவன் எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவான்?’’ என்று கேட்டான்.


”ஏன் இப்படி அவசரப் படுத்துகிறாய்? அவன் தன் சரீரத்தை மடாலயத்திற்குள்ளேயே விட்டுவிட்டு தெய்வ சரீரத்துடன் போய்த் திரும்புவான்’’ என்றான் அரசன்.


”அது உண்மையானால் விறகுக் கட்டைகளைக் கொண்டுவரச் சொல்வோம். அவற்றைக் கொண்டு இந்த மடாலயத்தைக் கொளுத்துகிறேன்.’’


”எதற்காக?’’


”அரசே, அவன் உடலை எரித்து விட்டால் அவன் தேவலோகத்துக்குச் சென்று திரும்பும் தெய்வ சரீரத்துடன் உங்கள் அருகில் இருந்து வருவான் அல்லவா? இந்தக் கதையைக் கேளுங்கள்:

 

http://puthu.thinnai.com/?p=7270

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 24 - சந்நியாசி பாம்பை மணந்த பெண்

அன்னபூர்னா ஈஸ்வரன்


 

பாம்பை மணந்த பெண்


 

ராஜக்கிருஹம் என்கிற ஊரில் தேவசர்மா என்றொரு பிராமணன் இருந்தான். அவன் மனைவிக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் அண்டை அயலார்களின் குழந்தைகளைப் பார்த்துவிட்டு அவள் ரொம்பவும் அழுதாள். ஒருநாள் பிராமணன் அவளைப் பார்த்து, ‘’அன்பே, கவலைவிடு. நான் குழந்தைப் பேறு பெறுவதற்காக யாகம் செய்யும்போது ஏதோ ஒரு அசரீரி, ‘பிராமணனே, மற்றெல்லா மனிதர்களைக் காட்டிலும் மிகுந்த அழகும், குணமும், பலமும் உள்ள குழந்தை உனக்குப் பிறக்கும்’ என்று தெளிவாகச் சொல்லிற்று’’ என்றான்.

 

பிராமணன் மனைவிக்கு ஒரே சந்தோஷம், அப்படியே மனம் நிறைந்து போனாள். ‘’அசரீரி வாக்கு பலிக்கட்டும்’’ என்று வேண்டிக்கொண்டாள். கிரமப்படி கர்ப்பவதியாகி காலாகாலத்தில் ஒரு ஆண் பாம்பை ஈன்றெடுத்தாள். அதைப் பார்த்ததும், ‘இந்தப் பாம்பை எறிந்து விடுங்கள்’ என்று அத்தனை வேலைக்காரர்களும் சொன்னார்கள். அந்தப் பேச்சைப் பொருட்படுத்தாமல் அவள் அதை எடுத்து ஸ்நானம் செய்வித்தாள். அதைச் சுத்தமான பெட்டியில் வாஞ்சையோடு எடுத்துவைத்து, பால் வெண்ணெய் முதலியவற்றைக் கொடுத்து சிரத்தையோடு போஷித்தாள். சில நாட்களிலேயே பாம்பு பெரியதாக வளர்ந்தது.

 

ஒருநாள் அந்தப் பிராமணப் பெண் பக்கத்து வீட்டுப் பையனுக்குக் கல்யாணம் நடப்பதைக் கண்டாள். கண்ணீர் பெருகியோடிய முகத்தோடு கணவனிடம் சென்று, ‘’என்ன இருந்தாலும் உங்கள் மீது எனக்கு வருத்தந்தான். நமது பிள்ளைக்கும் கல்யாணம் செய்து வைக்க ஏன் நீங்கள் முயர்ச்சிக்க வில்லை? என்று கேட்டான். அதற்கு அவள் கணவன், ‘’குணவதியே, அதல பாதாளத்துக்குப் போய் வாசுகியை வேண்டிக் கொள்ளச் சொல்கிறாயா, என்ன? முட்டாளே, இந்தப் பாம்புக்கு வேறு யார் பெண் கொடுப்பார்கள்?’’ என்றான்.

 

என்ன சொல்லியும் மனைவியின் ஏக்கம் நீங்கவில்லை. மனைவியின் முகத்தைப் பார்த்து கணவன் வருந்தினான். அவள்மீதிருந்த அன்பினால், நிறைய உணவைக் கட்டி எடுத்துக்கொண்டு பல நாடுகளைச் சுற்றிவரத் தொடங்கினாள். சில மாதங்கள் கழிந்து, ஒரு தூர தேசத்தைச் சேர்ந்த குட்குட நகரம் என்ற நகரத்துக்கு வந்து சேர்ந்தான்.  அவனுக்கு நன்கு தெரிந்த உறவினன் ஒருவன் அங்கிருந்தான். அவன் நல்லவன். எனவே அவனோடு தங்கி சௌகரியமாக இருக்கலாம் என்று எண்ணி அவன் வீட்டுக்குள் நுழைந்தான். உறவினனும் அவனுக்கு ஸ்நானம் செய்வித்து, சாப்பாடு தந்து, உபசாரங்கள் செய்தான். தேவசர்மா அன்றிரவை அங்கேயே கழித்தான். பொழுது விடிந்ததும் அவனிடம் விடைபெற்றுக்கொண்டு தேவசர்மா புறப்படவிருந்த சமயத்தில், ‘’எதற்காக நீங்கள் இந்த ஊருக்கு வந்தீர்கள்? எங்கே போகிறீர்கள்?’’ என்று உறவினன் கேட்டான்.

 

‘’என் மகனுக்குத் தகுந்த பெண் தேடிக்கொண்டே இங்கு வந்திருக்கிறேன்’’ என்று பதிலளித்தான் தேவசர்மா.

 

‘’அப்படியானால், எனக்கு அதிரூபவதியான பெண் ஒருத்தி இருக்கிறாள். நீங்கள் கட்டளையிட்டால் சரி. அவளை உங்கள் பையனுக்குப் பெண்ணாக அழைத்துச் செல்லலாம்’’ என்றான் உறவினன்.

 

அதன்படியே அந்தப் பெண்ணோடு வேலையாட்களையும் அழைத்துக் கொண்டு தேவசர்மா வீட்டிற்குத் திரும்பிவந்தான்.

 

அந்தப் பெண்ணின் அதிரூப சௌந்தரியத்தையும், அற்புதமான குணங்களையும், அசாதாரணமான நடையுடை பாவனைகளையும் கண்டதும் ஊர்ஜனங்களின் விழிகள் அன்பால் மலர்ந்தன. பெண்ணின்  வேலையாட் களிடம், ‘’நல்லவன் எவனாவது இப்படிப்பட்ட பெண்மணியைக் கொண்டு போய்ப் பாம்புக்குக் கட்டிக் கொடுப்பானா?’’ என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் பெண்ணின் சுற்றத்தார் கவலை அடைந்தனர். ‘’அந்தப் பேய் பிடித்த பையனின் வீட்டிலிருந்து பெண்ணை அழைத்துச் செல்லுங்கள்’’ என்றனர். ஆனால் அந்தப் பெண்ணோ, ‘’இந்தப் பிதற்றல் எல்லாம் போதும். வேத வாக்கைக் கேளுங்கள்.

 

அரசன் ஒரு தடவைதான் சொல்வான்; சாதுவும் ஒரு தடவைதான் சொல்வான்; பெண்ணையும் ஒரே தடவைதான் மணமுடிப்பார்கள். டூம் முன்றையும் ஒரே தடவைதான் செய்வார்கள்.

 

பூர்வஜன்மத்தில் செய்த கர்மத்தின் பலனாக நடக்கிறதை வேறு விதமாக மாற்ற நமக்குச் சக்தி கிடையாது. புஷ்பகன் என்கிற கிளியின் விதியைக் கண்டு தேவர்கள் சகித்துக் கொண்டார்களே!

 

என்று சொன்னாள்.

 

‘’யார் அந்தப் புஷ்பகன்?’’ என்று எல்லோரும் கேட்கவே, அந்தப் பெண் சொல்லத் தொடங்கினான்:


புஷ்பகன் என்ற கிளி

 

புஷ்பகன் என்ற கிளி ஒன்று இந்திரனிடம் இருந்தது. அநேக சாஸ்திரங்களையும் ஆகமங்களையும் நன்றாய் அறிந்து அது புத்திசாலியாக இருந்தது. அழகான உருவமும் அதற்கேற்ற குணங்களும் பெற்றிருந்தது. ஒருநாள் அது இந்திர சபையில் இந்திரன் கைமேல் உட்கார்ந்திருந்தது. அந்த ஸ்பரிச சுகத்தால் அதன் தேகம் முழுவதும் புல்லரித்தது. பலவிதமான சூத்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தது. இந்திரனை வணங்கும் நேரம் வந்ததும் யமன் அங்கு வந்தான். யமனைக் கண்டதும் கிளி ஒருபுறமாக ஒதுங்கியது. அதைக் கண்ட தேவர்கள், கிளியைப் பார்த்து, ‘’இவரைக் கண்டதும் ஏன் இப்படி ஒதுங்கிப் போகிறாய்?’’ என்று கேட்டனர்.

 

‘’இவர்தான் எல்லோருடைய உயிரையும் பறிக்கின்றவர் ஆயிற்றே! இவரைக் கண்டதும் எப்படி ஒதுங்காமல் இருக்கமுடியும்?’’ என்று கிளி சொல்லிற்று. கிளியின் பயத்தைப் போக்க விரும்பிய தேவர்கள் யமனைப் பார்த்து, ‘’எங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து இந்தக் கிளியைக் கொல்லாமல் இரு’’ என்று  சொன்னார்கள். எனக்கு ஒன்றும் தெரியாது. காலன்தான் அதைத் தீர்மானிக்கிறவன்’’ என்றான் யமன். எனவே தேவர்கள் அந்தக் கிளியை எடுத்துக்கொண்டு காலனிடம் சென்றார்கள்.  முன்மாதிரியே வேண்டிக்கொண்டார்கள். ‘’மரணம்தான் இதை அறிவான். அவனிடம் சொல்லுங்கள்’’ என்று காலன் கூறிவிட்டான்.

 

அவ்விதமே தேவர்கள் மரணத்திடம் சென்றார்கள். மரணத்தைப் பார்த்த மாத்திரத்தில் கிளி செத்துப்போயிற்று. அதைக் கண்டு தேவர்கள் எல்லோரும் மனவருத்தமடைந்து, ‘’இதன் அர்த்தம் என்ன?’’ என்று யமனைக் கேட்டார்கள். ‘’மரணத்தைப் பார்ப்பதினாலேயே இது சாகும் என்று விதி இருந்தது’’ என்று யமன் சொன்னான். அதைக்கேட்ட பிறகு தேவர்கள் எல்லோரும் தன் இருப்பிடத்திற்குத் திரும்பிப் போய்விட்டனர்.

 

அதனால்தான் ‘பூர்வஜன்மத்தில் செய்த கர்மத்தின் பலனாக நடக்கிறதை வேறுவிதமாக மாற்ற நமக்குச் சக்தி கிடையாது…’ என்று சொல்கிறேன்’’ என்றாள் அந்தப் பெண். மேலும், ‘’தன் பெண் விஷயமாய்ப் பொய் சொன்னார் என்று என் தகப்பனாருக்குக் கெட்ட பெயர் வரக்கூடாது’’ என்றும் சொன்னாள். இவ்வாறு சொல்லிவிட்டுத் தன் தோழிகளின் அனுமதி பெற்று அந்தப் பாம்பை மணந்து கொண்டாள். பிறகு அந்தப் பாம்பின் முன் காய்ச்சிய பால் முதலியவற்றைப் பக்தியோடு வைத்து உபசரிக்க ஆரம்பித்தாள். ஓரிரவு அவள் அறையிலிருந்த அகலமான பெட்டியிலிருந்து அந்தப் பாம்பு வெளிவந்து அவள் படுக்கையில் ஏறியது. ‘’ஆண் உருவத்தில் வந்துள்ள நீ யார்?’’ என்று உடனே அந்தப் பெண் கேட்டாள். அந்நிய மனிதன் என்று நினைத்து உடம்பெல்லாம் வெடவெடக்க எழுந்துபோய்க் கதவைத்  திறந்து வெளியே செல்ல முயற்சித்தாள். அப்போது அவன், ‘’அன்பே, போகாதே, நில். நான் உன் கணவன்’’ என்று சொன்னான். அவளை நம்பச் செய்தவற்காகக் பெட்டியிலிருந்த பாம்பின் உடலில் நுழைந்து மறுபடியும் வெளியே வந்தான். ஒளி வீசும் கிரீடமும், குண்டலமும், கடகமும், கேயூரமும் தரித்து மோதிரங்கள் அணிந்து அவன் காணப்பட்டான். அவன் பாதங்களில் அவள் வீழ்ந்தாள். பிறகு அவர்கள் இன்பமாய் இரவைக் கழித்தனர்.

 

இரவில் அடிக்கடி எழுந்திருக்கும் வழக்கம் அவன் தந்தைக்கு உண்டு. தந்தைக்கு விஷயம் தெரிந்தவுடன் அந்தப் பாம்பின் உடலை எடுத்து மறுபடியும் அதில் நுழைய மாட்டான் அல்லவா?’ என்ற எண்ணத்தோடு நெருப்பிலிட்டான். விடியற்காலையில் பத்தினியோடு மிகுந்த ஆனந்தத்துடன் உரையாடிக்கொண்டிருந்த தன் ஈடற்ற புதல்வனை எல்லா ஜனங்களுக்கும் காண்பித்தான்.

 

இந்த உதாரணத்தை அரசனுக்குச் சொல்லிவிட்டு, நிர்வாண சந்நியாசி இருக்கிற மடாலயத்தை மந்திரி பலபத்திரன் தீக்கிரையாக்கினான்.

 

அதனால்தான், ‘பலபத்திரன் என்கிற மந்திரி…’ என்னும் செய்யுளைச் சொன்னேன்’’ என்றது கரடகன். மேலும் தமனகனைப் பார்த்து,  ‘மூடனே, இவர்கள்தான் உண்மையான மந்திரிகள். உன்னைப்போல் அரசியல் தந்திரம் ஒன்றும் தெரியாமல், மந்திரி என்ற பெயர் மட்டும் வைத்துக்கொண்டு, அவர்கள் பிழைக்கிறதில்லை. உன் கெட்ட புத்தி ஒரு பரம்பரைக்குணம். உன் கெட்ட நடத்தையே அதை எல்லா வழிகளிலும் விளம்பரப்படுத்துகிறது. கட்டாயம் உன் தந்தைகூட இந்த லட்சணத்தில்தான் இருந்திருக்க வேண்டும்.

 

ஏனென்றால்,

 

தந்தையின் குணம் எப்படியோ அப்படியே மகனுடைய குணமும் இருக்கும். தாழம்புச் செடியிலிருந்து நெல்லிக்கனி உண்டாகிறதில்லை யல்லவா?

 

அறிஞர்களிடம் இயல்பாகவே மாட்சிமை தங்கியிருக்கும். எத்தனை காலம் சென்றாலும் அது மங்குவதில்லை. அவர்களாவே அதைக் கைவிட்டு மனோபலவீனத்தைக் காட்டினால்தான் உண்டு.

 

ஏனென்றால், எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் மயிலின் நிர்வாணத்தை யாரால் பார்க்க முடியும்? என்றாலும் மேகங்கள் கர்ஜிக்கும்போது அந்த மூடமயில் நாட்டியமாடுகிறது. (தன்னை நிர்வாணமாகக் காட்டிக் கொள்கிறது.)

 

துஷ்டனாகிய உனக்கு உபதேசம் செய்வது வீண். ஒரு பழமொழி கூறுகூதுபோல்,

 

வளையாத மரத்தை வளைக்கவும் கல்லை உடைக்கவும் கத்தியால் முடியாது. சூசீமுகம் என்னவோ உபதேசம் செய்து பார்த்தும் குரங்கைக் கீழ்ப்படிந்து போகும்படி செய்ய முடியவில்லை.

 

என்றது கரடகன். ‘’அது எப்படி?’’ என்று தமனகன் கேட்க கரடகன் சொல்லத் தொடங்கியது:

 

 

http://puthu.thinnai.com/?p=7571

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 25 - முட்டாளுக்குச் செய்த உபதேசம்

அன்னபூர்னா ஈஸ்வரன்


 


முட்டாளுக்குச் செய்த உபதேசம்

 

 

ரு காட்டுப்பிரதேசத்தில் குரங்குக் கூட்டம் ஒன்றிருந்தது. அவை குளிர் காலத்தில் அசாத்தியக் குளிரால் வாடிக்கொண்டிருந்தன. இரவில் ஒரு மின்மினிப் பூச்சியைக் கண்டன.. ‘அது நெருப்புத்தான்’ என்று அவை எண்ணி அதைச் சிரமப்பட்டுப் பிடித்து, காய்ந்த புல்லையும் இலைகளையும் போட்டு அதை மூடிவிட்டன. பிறகு தங்கள் கைகளையும், வயிற்றையும், மார்பையும், விலாப்புறத்தையும் அதன்முன் நீட்டிக் காட்டிச் சொறிந்துகொண்டபடியே மானசீகமான உஷ்ணத்தை அனுபவித்து இன்படைந்தன. அவற்றில் ஒரு குரங்கு குளரில் ரொம்பவும் வாடியதால் அதிலேயே கவனம் பூராவும் செலுத்தி அதை அடிக்கடி ‘பூ பூ’ வென்று ஊதிற்று.

 

அப்போதுதான் சூசீமுகன் என்ற பறவை மரத்திலிருந்து இறங்கி வந்தது. அதற்கு நாசகாலம் நெருங்கிவிட்டது போலிருக்கிறது. அந்தக் குரங்கைப் பார்த்து, ‘’நண்பனே, வீணாக ஏன் கஷ்டப்படுகிறாய்? அது நெருப்பல்ல; மின்மினிப் பூச்சிதான்’’ என்று சொல்லிற்று. அதன் வார்த்தையைக் கேட்காமல் குரங்கு மீண்டும் ஊதிற்று. பறவை பல தடவை தடுக்க முயற்சித்தும் ஊதுவதைக் குரங்கு நிறுத்தவில்லை. விஷயத்தை நீட்டுவானேன்? அந்தப் பறவை குரங்கின் காதருகில் வந்து உரத்த குரலில் மீண்டும் கத்தியது. குரங்கு உடனே அதைப் பிடித்து ஒரு கல்லின்மேல் ஓங்கி அறைந்தது. முகம், கண், தலை, கழுத்து எல்லாம் நசுங்கிப்போய் அந்தப் பறவை செத்தது.

 

அதனால்தான் ‘வளையாத மரத்தை வளைக்கவும், கல்லை உடைக்கவும் கத்தியால் முடியாது…’ என்ற செய்யுளைச் சொன்னேன்.

 

மேலும்,

 

யோக்கியதையில்லாதவனுக்குக் கல்வி போதிப்பதில் என்ன லாபம்? மூடிய குடத்தில் வைத்த விளக்கு வீட்டு இருட்டைப் போக்குமா?

 

நிச்சயமாய் நீ ஒரு நீசப்பிறதிதான். ‘அபஜாதன்’ என்கிற வகையைச் சேர்ந்தவன். எப்படி என்று கேள்:

 

புத்திரர்கள் நான்கு வகைப்பட்டவர்கள் என்று சாஸ்திரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். அதாவது ஜாதன், அனுஜாதன், அபிஜாதன், அபஜாதன் என்று நான்கு வகை.

 

தாய்போல் குணமுள்ளவன் ஜாதன்; தந்தைபோல் குணமுள்ளவன் அனுஜாதன்; நல்ல குணமுள்ளவன் அபிஜாதன்; கீழோனுக்கும் கீழானவனே அபஜாதன்.

 

குடும்பத்தை உயர்ந்த நிலைக்ககக் கொண்டு வருவதற்கு மிகுந்த புத்தி கூர்மையோ, செல்வமோ, செல்வாக்கோ பெற்றவன்தான் தாய்க்கு உண்மையான பிள்ளையாகிறான்.

 

என்கிற சொல் ரொம்பவும் சரி. மேலும்,

 

கண்ணுக்கு அழகாயிருப்பவனைக் காண்பது சுலபமே; அறிவுள்ள மனிதனைக் காண்பதுதான் துர்லபம்.

 

தர்மபுத்தி, துஷ்டபுத்தி என்கிற இருவர்களின் ஞாபகம் வருகிறது. பிள்ளையின் மிதமிஞ்சிய புத்தியால் தகப்பன் புகையால் மூச்சடைதது இறந்தான்.

 

என்கிற கதை சரியான கதை.’’ என்றது கரடகன்.

 

‘’அது எப்படி?’’ என்று தமனகன் கேட்கவே, கரடகன் சொல்லத தொடங்கியது:

 

 

 

தர்மபுத்தியும் துஷ்டபுத்தியும்

 

ரு நகரத்தில் தர்மபுத்தி, துஷ்டபுத்தி என்று இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். இருவரும் இரண்டு வியாபாரிகளின் புத்திரர்கள். பணம் திரட்டுவதற்காக அவர்களிருவரும் வெகு தொலைவிலுள்ள வேறொரு நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே அதிர்ஷ்டவசமாக யாரோ ஒரு சந்நியாசி ஆயிரம் தங்க நாணயங்களோடு முன்பு  புதைத்து வைத்திருந்த ஒரு குடத்தை எடுத்துத் தர்மபுத்திக்குத் தந்தான். தர்மபுத்தி துஷ்டபுத்தியோடிருந்து யோசித்து, ‘நாம் பாக்கியசாலிகள்தான். இனிமேல் ஊருக்குத் திரும்பிப் போகலாம்’ என்று தீர்மானித்தான். இருவரும் சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்தார்கள்.

 

சொந்த ஊருக்கு அருகே வரும்போது தர்மபுத்தி, துஷ்டபுத்தியைப் பார்த்து, ‘’நண்பனே, இதில் பாதி உனக்குத்தான் சொந்தம். அதைப் பெற்றுக் கொள். அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போய் சிநேகிதர்கள், சிநேகிதர்கள் அல்லாதவர்கள் மத்தியிலே இருந்து நல்ல பெயர் எடுத்து விளங்கலாம்’’ என்று கூறினான்.

 

ஆனால் துஷ்டபுத்தி சுயநலத்தை மட்டும் பாராட்டுகிற கெட்ட எண்ணத்துடன், ‘’நண்பனே, இந்தப் பணத்தைப் பொதுவில் வைத்திருக்கும் வரை நமது நட்பு மாறாமலே இருந்துவரும். ஆகவே தலா நூறு நாணயங்கள் எடுத்துக்கொண்டு மிச்சத்தைப் பூமியில் புஆத்துவிட்டு வீட்டுக்குப் போவோம். அதன் குறைவு நிறைவுகள் நமது நன்னடத்தையைச் சோதித்துக் காட்டிவிடும்’’ என்று சொன்னான். சுபாவமாகவே நல்ல புத்தியுள்ள தர்மபுத்தி, அவன் பேச்சில் மறைந்திருந்த கெட்ட எண்ணத்தைத் தெரிந்துகொள்ளாமல், அதற்கு ஒப்புக் கொண்டான். கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு மிச்சத்தைப் பூமியில் ஜாக்கிரதையாகப் புதைத்துவிட்டு இருவரும் நகரத்துக்குள் புகுந்தனர்.

 

துஷ்டபுத்தி கெட்டவழியில் புத்தியைச் செலுத்தினான். அவன் விதியும் அப்படியிருந்தது. அதனால் கொஞ்சகாலத்திலேயே பணம் பூராவையும் விரயம் செய்துவிட்டான். மறுபடியும் அவனும் தர்ம புத்தியும் போய் தலா நூறு நாணயங்கள் எடுத்துக்கொண்டு திரும்பினார்கள். ஆனால் அதையும் ஒரு வருஷம் ஆவதற்குள் அவன் செலவழித்து விட்டான்.

 

துஷ்டபுத்திக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘அவனோடு போய் மறுபடியும் தலா நூறு நாணயங்கள் என்று பங்கு பிரித்துக் கொண்டால் மிஞ்சியிருக்கப் போவது நானூறு நாணயந்தானே! திருடுவதென்றால் பிறகு திருடிப் பிரயோஜனமில்லை. இப்போதே ஆறுநூறு நாணயங்களையும் திருடி விடலாமே!’ என்று நினைத்தான். தனியேபோய் மிச்சப் பணத்தைத் திருடிக்கொண்டு தரையைச் சமன் செய்துவிட்டுத் திரும்பினான்.

 

ஒரு மாதம் கழிந்தவுடன், தானே தர்மபுத்தியிடம் போய், ‘’நண்பனே, மிச்சப் பணத்தையும் சமமாகப் பிரித்துக்கொள்ளலாம், வா’’ என்று சொல்லி, தர்மபுத்தியோடு போய் பூமியைத் தோண்டித் தொடங்கினான். தோண்டிப் பார்த்தபோது பணமில்லாமலிருப்பதைக் கண்டனர். உடனே துஷ்டபுத்தி ஆத்திரத்தோடு அந்தக் காலிக்குடத்தைத் தன் தலையில் இடித்துக்கொண்டு ‘’எங்கே அந்தப் பணம்? தர்மபுத்தி, நீதான் அதைக் கட்டாயம் திருடியிருக்க வேண்டும். எனக்குச் சேரவேண்டிய பாதியைக் கொடுத்துவிடு. இல்லாவிட்டால் நீதி மன்றத்தில் புகார் செய்வேன்’’ என்று சொன்னான்.

 

அதற்குத் தர்மபுத்தி, ‘’நீசனே, மூடு வாயை! நான் தர்மபுத்தி. இப்படிப்பட்ட திருட்டுக் காரியத்தை நான் செய்யமாட்டேன்.

 

பிறர் மனைவியைத் தாய்போலும், பிறர் சொத்தை மண்போலும், எல்லா உயிர்களையும் தன்னைப்போலும், தர்மபுத்தியுள்ளவர்கள் பாவிக்கின்றனர்.

 

என்கிற செய்யுள் நீ அறிந்ததுதான்’’ என்றான்.

 

இருவரும் விவாதித்துக் கொண்டே நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். பணம் திருட்டுப்போன விஷயத்தைச் சொன்னார்கள் அதைக் கேட்டு நீதி வழங்கும் அதிகாரிகள் அவர்களுக்கு ஒரு தெய்வப்பரீட்சை வைக்கக் கட்டளையிட்டனர்.

 

அப்போது துஷ்டபுத்தி, ‘’என்ன கஷ்டம்! நீங்கள் நியாயம் சரியாக வழங்க வில்லை.

 

ஒரு  வழக்கில் எழுத்து மூலமாக பத்திரமே சிறந்த சாட்சியம்; அடுத்த படியாக கண்ணால் கண்ட சாட்சியமும் காதால் கேட்ட சாட்சியமும்  சிறந்தவை. அவை இல்லாமற் போனால்தான் தெய்வப் பரீட்சை வைக்கத்தகும் என்று நீதி சாஸ்திரம் சொல்லுகிறது.

 

ஆகவே, இந்த வழக்கில் எனக்கு வனதேவதையை சாட்சி, எங்கள் இருவரில் யார் நியாயஸ்தன், யார் நியாயஸ்தன் இல்லை என்று அதுவே உங்களுக்குச் சொல்லும்’’ என்றான்.

 

அதைக் கேட்ட அதிகாரிகள், ‘’நீ சொல்வது சரிதான்.

 

நீசனாயிருந்தபோதிலும் ஒரு வழக்கில் ஒருவன் சாட்சி கொண்டு வந்தால் அவனுக்குத் தெய்வப்பரீட்சை வைக்கக்கூடாது. வனதேவதையே சாட்சியாக வருகிறது என்றால் பிறகு கேட்கவும் வேண்டுமா?

 

என்று இன்னொரு நீதி சாஸ்திர வாக்கும் இருக்கிறது. எனவே எங்களுக்கும் இந்த வழக்கில் அதிக ஆவல் ஏற்பட்டிருக்கிறது. நாளைக் காலை நீங்கள் இருவரும் எங்களோடு அந்தக் காட்டுக்கு வரவேண்டும்’’ என்றனர். அதன்பிறகு அவ்விருவரிடமும் ஜாமீன் பெற்றுக்கொண்டு அவர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள்.

 

துஷ்டபுத்தி வீட்டுக்குப் போனதும் தன் தந்தையிடம், ‘’அப்பா! அந்த நாணங்கள் என் வசம்தான் இருக்கின்றன. உங்களிடமிருந்து ஒரு வார்த்தை வேண்டும். நாமிருவரும் இன்றிரவே யாருக்கும் தெரியாமல் பணம் தோண்டி யெடுத்த இடத்துக்குப் போவோம். அதன் பக்கத்திலுள்ள ஒரு மரப் பொந்தில் உங்களை உட்கார வைக்கிறேன். காலையில் நீங்கள் அதிகாரிகளிடம் சாட்சியம் சொல்ல வேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டான்.

 

இப்படிப் பிள்ளை சொன்னதும், ‘’மகனே, இருவருமே நாசமாகி விடுவோம். இது ஒரு உபாயமே இல்லை.

 

உபாயத்தைத் தேடும் விவேகி அதிலுள்ள அபாயத்தையும் பார்க்க வேண்டும். முட்டாள் நாரையின் குஞ்சுகளைக் கீரிப்பிள்ளை தின்றதைப் பார்!

 

என்கிற கதையில் நல்ல நீதி இருக்கிறது’’ என்றான் தந்தை.

 

‘’அது எப்படி?’’ என்று துஷ்டபுத்தி கேட்க, தந்தை சொல்லத் தொடங்கினான்:

 

 

http://puthu.thinnai.com/?p=7784

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 26 - யோசனையில்லாத உபாயம்

 

அன்னபூர்னா ஈஸ்வரன்


 

யோசனையில்லாத உபாயம்

 


ரு காட்டில் ஆலமரம் ஒன்றிருந்தது. அதில் நாரைகள் கூடு கட்டி இருந்து வந்தன. மரத்தின் ஒரு பொந்தில் ஒரு கருநாகம் இருந்தது. நாரைகளின் குஞ்சுகளுக்கு இறக்கை முளைப்பதற்குமுன்பே அவற்றை தின்று காலங்கழித்து வந்தது.  அப்படியே ஒருநாள் ஒரு நாரையின் குஞ்சுகளைப் பாம்பு தின்றுவிட்டது. அதனால் அந்த நாரை துக்கத்தோடு ஏரிக்கரைக்குப் போய் தாரை தாரையாகக் கண்ணீர் விட்டு அழுது தலையைத் தொங்க விட்டுக்கொண்டு நின்றது.

 

அதைப் பார்த்த ஒரு நண்டு, ‘’மாமா, ஏன் இப்படி இன்றைக்கு அழுகிறீர்கள்?’’ என்று கேட்டது.

 

’நண்பனே, நான் என்ன செய்யட்டும்? பாக்கியமில்லாதவன். என் குஞ்சுகளையும் என் சுற்றத்தாரின் குஞ்சுகளையம் மரப்பொந்தில் இருக்கும் பாம்பு தின்று விடுகிறது. அந்தத் துக்கத்தால் அழுகிறேன். அதைக் கொல்வதற்கு ஏதாவது உபாயம் இருந்தால் சொல் என்றது நாரை.

 

நண்டு யோசித்தது. ‘இந்த நாரை என் இனத்தின் இயற்கைப் பகைவன். ஆகவே, அசல் உண்மையைபோல் தோன்றுகிற மாதிரி போய் உபதேசம் செய்கிறேன். அதனால் மற்ற நாரைகளும் நாசமாய்ப் போகட்டும்.

 

‘’பேச்சை வெண்ணெய்போல் ஆக்கிவிடு; மனத்தை ஈவிரக்கமின்றி வைத்துக்கொள். ஒரு காரியத்துக்குச் சத்துருவைத் தாண்டி அதைக் கொண்டே அதன் குலத்தை அழித்துவிடு’’

 

என்ற ஒரு பழமொழி உண்டு’ என்று தனக்குள் முடிவு செய்து கொண்டது.

 

பிறகு நண்டு வெளிப்படையாக, ‘’மாமா, அப்படியானால் ஒன்று செய். கீரி இருக்கும் வளையிலிருந்து பாம்பு இருக்கும் பொந்துவரை வழி நெடுக மீன் இறைச்சித் துண்டுகளைப் போட்டுக்கொண்டே போ. அந்த வழியாகக் கீரி போய் அந்தக் கெட்ட பாம்பைக் கொன்று விடும்’’ என்றது.

 

சொன்னபடியே நாரை செய்துவிட்டது. மீனிறைச்சித் துண்டுகளைப் பின்பற்றிச் சென்ற கீரிப்பிள்ளை அந்தத் துஷ்டப் பாம்மைக் கொன்றது. அதோடு நிற்காமல் மரத்திலுள்ள எல்லா நாரைகளையும் சாவதானமாகப் பிடித்துத் தின்றது.

 

அதனால்தான் ‘உபாயத்தைத் தேடும் விவேகி அதிலுள்ள அபாயத்தையும் பார்க்கவேண்டும்…’ என்று சொல்கிறேன்’’ என்றான் துஷ்ட புத்தியின் தந்தை.

 

தந்தையின் பேச்சைத் துஷ்டபுத்தி கேட்கவில்லை. இரவில் போய், யாரும் காணமுடியாதபடி மரப்பொந்தில் தந்தையை உட்கார வைத்தான். பிறகு காலையிலேயே குளித்துவிட்டு நல்ல துணிமணிகளை உடுத்திக்கொண்டு தர்மபுத்தியுடனும் அதிகாரிகளுடனும் அந்த மரத்தண்டை வந்தான். வந்ததும்,

 

‘’சூரியன், சந்திரன், காற்று, தீ, ஆகாயம், பூமி, நீர், இதயம், யமன், பகல், இரவு, சந்திப்பொழுதுகள், தர்ம தேவதை இவையெல்லாம் மனித நடவடிக்கைகளை அறியும்.’’

 

ஹே, பகவதி! வனதேவதையே! எங்கள் இருவரில் யார் திருடன் என்று சொல்’’ என்று துஷ்டபுத்தி உரக்கக் கத்தினான்.

 

மரப்பொந்திலிருந்த துஷ்டபுத்தியின் தந்தை, ‘’பணத்தைத் தர்ம புத்திதான் திருடினான்’’ என்று பதில் சொன்னான். அதைக் கேட்டதும் எல்லா அதிகாரிகளின் கண்களும் ஆச்சரியத்தால் விரிந்தன.

 

பணத்தைத் திருடிய குற்றத்திற்காக நீதிபதியைக் கொண்டு தர்ம புத்திக்குத் தக்க தண்டனை அளிப்பதைப் பற்றி அதிகாரிகள்  எல்லோரும் யோசிக்கலாயினர். அந்தச் சமயத்தில், தர்மபுத்தி எரி பொருட் களைக் கொண்டுவந்து குவித்து அந்த மரப்பொந்துக்கு நெருப்பு வைத்தான். அது தீப்பற்றி எரிகிற காலத்தில், பாதி உடம்பு சுடப்பட்டு, கண்கள் பிதுங்கிய படியே பரிதாபகரமாகக் கத்திக்கொண்டு துஷ்டபுத்தியின் தந்தை பொந்திலிருந்து வெளியே வந்தான். உடனே எல்லோரும் ‘என்ன இது?’ என்று கேட்டனர். ‘’இதெல்லாம் துஷ்டபுத்தியின் வேலை’’ என்று தந்தை சொன்னான். அதைக் கேட்டு அரசரின் ஆட்கள் துஷ்டபுத்தியை அதே மரத்தின் ஒருகிளையில் தூக்கிலிட்டனர். தர்ம புத்தியைப் புகழ்ந்து ராஜ கிருபை அவனுக்குக் கிடைக்கும்படி செய்து திருப்திப்படுத்தினர்.

 

அதனால்தான் ‘தர்மபுத்தி, துஷ்டபுத்தி…’ என்கிற செய்யுளைச் சொன்னேன்’’ என்றது கரடகன்.

 

மேலும் கரடகன் பேசுகையில், ‘’சீ, மடையா! உன் மிதமிஞ்சிய பாண்டியத்தியத்தால் உன் வம்சத்தையே எரித்துவிட்டாய்.

 

உப்பு ஜலத்தை யெட்டியவுடன் நதிகள் முடிவடைகின்றன. பெண்களுக்குள் வேற்றுமை ஏற்பட்டவுடன் பந்துக்களின் உறவு முடிவடைகின்றது. போக்கிரிகளின் காதை எட்டியவுடன் ரகசியம் முடிவடைகின்றது. கெட்ட புதல்வன் பிறந்தவுடன் குலம் முடிவடைகின்றது

 

என்று சரியாகத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள். மேலும் மனிதனாகட்டும் மிருகமாகட்டும் ஒரே வாயில் இரண்டு நாக்குகள் உள்ள பிறவியை எப்படி நம்புவது? ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

இரண்டு நாக்குகள் கொண்ட, ஆங்காரமும் நிஷ்டூரமும் நிறைந்த துஷ்டனின் வாயும் பாம்பின் வாயும் தீமை செய்வதற்கென்றே அமைந்துள்ளன.

 

எனவே, உன் நடத்தையைக் கண்டு என் உயிருக்கே ஆபத்தேற்படுமோ என்று பயப்படுகிறேன். ஏனென்றால்,

 

போக்கிரி உன்னைப் புகழ்ந்தாலும் சரி, அவனை நம்பாதே! நீண்டகாலமாகத் தீனி கொடுத்து வந்தாலும் கொடுத்தவன் கையையே பாம்பு கடிக்கிறது.

 

தீப்பொறி சந்தனக் கட்டையிலிருந்து பிறந்திருக்கலாம்; என்றாலும், அது எரித்து விடுகிறது. நல்ல குலத்தில் பிறந்திருந்தாலும் போக்கிரி போக்கிரியே. போக்கிரிகளின் சுபாவமே இப்படித்தான்.

 

ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

‘’பிறர் குற்றங்களை நுணுகி ஆராய்ந்து, தன் குணத்தை மட்டும் புகழ்ந்து கொள்ளும் துரோகியை நம்புகிறவர்கள் நாசமடைகிறாரர்கள். அதுதான் அவர்களின் விதி.’’

 

மற்றவர்களை அவதூறு செய்யும் மனிதனின் நாக்கு உடனே நூறு துண்டங்களாக அறுந்து விழாவிட்டால், அந்த நாக்கு நிச்சயமாக வஜ்ரத்தினால் செய்யப்பட்டதே! பிறரைப்பற்றி தோஷம் சொல்லிக் கொண்டிருக்கும்போது யாருடைய நாக்குமௌனவிரதம் அனுஷ்டிக்கிறதோ அந்த மனிதன்தான் மனித சிங்கம். பிறருக்கு நன்மை செய்வதில் நாட்டங்கொண்ட அவனுக்கு பாவம் ஒருபோதும் வரக்கூடாது.

 

ஆகையால், சோதித்துப் பார்த்த பிறகுதான் சகவாசம் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

‘’கல்வியுள்ளவனாகவும் நேர்மையுள்ளவனாகவும் ஒருவன் இருந்தால் அவன் நட்பை நாடிப் பெறு, கல்வியுள்ளவனாயிருந்தாலும் மூர்க்கனாக இருந்தால் அவனிடம் எச்சரிக்கையாக இரு. நேர்மையுள்ளவனாயிருந்தும் மூடனாயிருந்தால் அவனிடம் அனுதாபம் காட்டு. முட்டாளாகவும் மூர்க்கனாகவும் இருந்தால் அவனை ஆரம்பத்திலிருந்தே தூர விலக்கிவிடு.’’

 

உன் முயற்சிகள் உன் வம்சத்துக்கு மட்டுமில்லாமல் அரசனுக்கும் நாசம் விளைத்துள்ளன. அரசனையே இந்தக் கதிக்கு ஆளாக்குகிற நீ இதர ஜனங்களைப் புல்லுக்குச் சமானமாகத்தான் கருதுவாய்.

 

ஆயிரம் பலம் எடையுள்ள தராசை எலிகள் தின்று விடுமேயானால் ராஜாளி யானையையே தூக்கிச் செல்லுமே! பிறகு பையனைத் தூக்கிச் செல்வது கஷ்டமா?

 

என்றொரு பழமொழியுண்டு’’ என்றது கரடகன்.

 

‘’அது எப்படி என்று தமனகன் கேட்க, கரடகன் சொல்லத் தொடங்கியது.

 

 


இரும்பைத் தின்ற எலி


ரு ஊரில் நாதுகன் என்றொருவன் இருந்தான். அவன் ஒரு வியாபாரி. அவன் சொத்துக்கள் அழிந்துபோனதால் தேசாந்தரம் செல்ல உத்தேசித்தான். ஏனென்றால்,

 

முன்பெல்லாம் கௌரவத்தோடு சுகபோகத்தில் வாழ்ந்து வந்தவன், பின்னால் சொத்து இழந்த பிறகும் அதே நாட்டிலோ ஊரிலோ தொடர்ந்து வசித்தால், அவன் அதமன்தான்.

 

யார்யாரோடு முன்பெல்லாம் ஒருவன் ரொம்ப காலத்துக்கு பெருமையுடன் கேளிக்கையில் மூழ்கியிருந்தானோ அவர்களே அவன் ஏழையாக மாறியதும் அவனை நிந்திக்கிறார்கள்.

 

அவன் வீட்டில் முன்னோர்கள் விட்டுச்சென்ற தராசு ஒன்று இருந்தது. அது ஆயிரம் பலம் எடையுள்ளது. அதை லட்சுமணன் என்ற வியாபாரியிடம் அடகு வைத்துவிட்டு, நாதுகன் தேசாந்தரம் போனான்.

 

அப்படி ரொம்ப காலம் வரைக்கும் வெளிநாடுகளில் சுற்றித் திரிந்தான். பிறகு அந்த நகரத்துக்கே திரும்பி வந்தான். வியாபாரியிடம் போய், ‘’லட்சுமணா! நான் அடகு வைத்த தராசைக் கொடு!’’ என்று கேட்டான்.

 

‘’நாதுகனே, உன் தராசை எலிகள் தின்றுவிட்டன’’ என்று வியாபாரி பதிலளித்தான்.

 

நாதுகன் அதைக் கேட்டு, ‘’சரி. எலிகள் தின்றது உன் குற்றமில்லை. இந்த உலகமே இப்படித்தான். எதுவுமே சாஸ்வதமில்லை. அது போகட்டும். நான் குளிப்பதற்கு ஆற்றுக்குப் போகிறேன். உன் மகன் தனதேவனை என் ஸ்நான சாமான்களை எடுத்துவர என்னோடு அனுப்பு’’ என்றான்.

 

தராசைத் திருடியது லட்சுமணன்தான். அவனை மனச்சாட்சி உறுத்தியது. அதற்குப் பயந்தபடியே தனதேவனைப் பார்த்து ‘’குழந்தாய், இந்த நாதுகன் உன் சிற்றப்பா மாதிரி, குளிக்க ஆற்றுக்குப் போகிறார். நீ ஸ்நான சாமான்களை எடுத்துக்கொண்டு அவரோடு போ!’’ என்றான்.

 

ஆஹா, இது எவ்வளவு சரியான வார்த்தை!

 

யாரும் பூர்ணபக்தியுடன் யாரிடமும் அன்பு செலுத்துவதில்லை. பயமோ ஆசையோ துளியாவது தூண்டாத காரண காரியங்கள் எதுவுமில்லை.

 

காரியமும் காரணமும் இல்லாமல் யாராவது ஆதரவு காட்டினால் அதைக் கொஞ்சம் சந்தேகிக்க வேண்டும். முடிவில் அதைப்பற்றி அச்சப்படவும் வேண்டும்.

 

மிகுந்த சந்தோஷத்துடன் தனதேவன் ஸ்நான சாமான்களை எடுத்துக்கொண்டு நாதுகனோடு நதிக்குச் சென்றான். நாதுகன் நதியில் குளித்துவிட்டு வெளியே வந்தான். மலையிலுள்ள ஒரு குகையில் தனதேவனைத் தள்ளினான். அதன் வாயிலைப் பெரிய கல்லால் அடைத்துவிட்டு, வியாபாரியின் வீட்டுக்குத் திரும்பினான். லட்சுமணன் அவனைப் பார்த்து, ‘’நாதுகனே, உன்னோடு வந்த தனதேவன் எங்கே?’’ என்ற கேட்டான்.

 

"லட்சுமணா! ஆற்றங்கரையில் ஒரு ராஜாளி அவனைத் தூக்கிக் கொண்டு போய்விட்டது’’ என்று நாதுகன் பதில் சொன்னான்.

 

‘’ஏய், நீ பொய் சொல்லுகிறாய். பெரிய உடம்பு உள்ள என் பையனை ராஜாளி எப்படித் தூக்கிச் செல்ல முடியும்?’’

 

‘’லட்சுமணா! எலிகள் மட்டும் இரும்புத் தராசைத் தின்னுமோ? உனக்குப் பிள்ளை வேண்டுமென்றால் எனக்குத் தராசைத் திருப்பிக்கொடு!’’ என்றான் நாதுகன்.

 

இப்படி வாதித்துக்கொண்டே இருவரும் அரசனின் அரண்மனையை அடைந்தனர். அங்கு வந்ததும் லட்சுமணன், ‘’ஐயோ, என்ன அநியாயம்! என் மகனை நாதுகன் திருடிவிட்டானே!’’ என்று உரக்கச் சத்தமிட்டான்.

 

நீதி வழங்கும் அதிகாரிகள் நாதுகனைப் பார்த்து, லட்சுமணனின் பையனைத் திருப்பிக்கொடு’ என்றனர்.

 

அதற்கு நாதுன், ‘நான் என்ன செய்யட்டும்? நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு ராஜாளி அவனைத் தூக்கிச் சென்று விட்டதே!’’ என்றான்.

 

“நாதுகனே, நீ சொல்வது உண்மையல்ல. என்ன இது, பதினைந்து வயதுப் பிள்ளையை ராஜாளி எப்படித் தூக்கிச் செல்ல முடியும்?’’ என்று அதிகாரிகள் சொன்னார்கள்.

 

நாதுகன் சிரித்துக்கொண்டே, ‘’பெரியோர்களே! இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்:

 

ஆயிரம் பலம் எடையுள்ள தராசை எலிகள் தின்று விடுமேயானால் ராஜாளி யானையையே தூக்கிச் செல்லுமே! பிறகு பையனைத் தூக்கிச் செல்வது கஷ்டமா?’’

 

என்று சொன்னான். ‘’அது எப்படி?’’ என்று அவர்கள் கேட்டனர்.

 

நாதுகன் தராசின் விருத்தாந்தத்தைச் சொன்னான். அவர்கள் அதைக் கேட்டுச் சிரித்துவிட்டு, ஒருவனிடம் தராசையும் மற்றவனிடம் பையனையும் ஒப்படைத்தனர்.

 

அதனால்தான் ‘ஆயிரம் பலம் எடையுள்ள…’ என்ற செய்யுளைச் சொன்னேன்’’ என்றது கரடகன்.

 

கரடகன் மேலும் பேசுகையில், ‘’மூடனே, சஞ்சீவகனிடம் பிங்களகன் காட்டும் அன்பைக் கண்டு சகிக்காமல் இந்தக் காரியம் செய்திருக்கிறாய்.

 

என்றென்றும் இதுதான் வழக்கம்: நல்ல குலத்தில் பிறந்தவனை நீசகுலத்தில் பிறந்தவன் தூஷிக்கிறான்; பெண்ணின் காதலைப் பெறுகிறவனை அதைப் பெறமுடியாதவன் தூஷிக்கிறான்; தானம் செய்பவனை லோபி தூஷிக்கிறான்; நேர் நடத்தை உள்ளவனை துஷ்டன் தூஷிக்கிறான். தேஜஸ்வியைக் குரூபி தூஷிக்கிறான்; அங்கக் குறைபாடு உள்ளவன் அழகனைத் தூஷிக்கிறான்; சுகத்தோடிருப்பவனை அதிர்ஷ்டமில்லாதவன் தூஷிக்கிறான்; சாஸ்திர ஞானமுள்ளவனை முட்டாள் தூஷிக்கிறான்.

 

என்கிற வாக்கில் நியாயம் இருக்கிறது. அதுபோலவே,

 

மூடன் பண்டிதனை வெறுக்கிறான்! ஏழை பணக்காரனை வெறுக்கிறான்; பாவி புண்ணியவானை வெறுக்கிறான்; விபசாரி குலஸ்திரீயை வெறுக்கிறாள்.

 

ஞானிகள்கூட இயற்கைச் சுபாவத்தின்படிதான் நடக்கிறார்கள்; ஜனங்கள் இயற்கை சுபாவத்தின்படியே நடந்தால் சட்ட தண்டனைகள் என்ன செய்ய முடியும்?

 

ஒரு தடவை சொன்னதுமே யார் கிரகிக்கிறானோ அவனுக்கு உபதேசம் செய்வதுதான் தகும். இருதயமில்லாமல், அசைந்து கொடுக்காமல், கல்போல் நீ இருக்கிறாய். உனக்கு உபதேசிப்பதில் லாபமென்ன? முட்டாள், உன்னோடு இருப்பதே சரியில்லை! என் சேர்க்கையால் ஒருவேளை எனக்கும் அனர்த்தம் உண்டாகலாம்.  ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

ஒரு நாட்டிலோ, கிராமத்திலோ, நகரத்திலோ, வீட்டிலோ துஷ்டனுடன் நீ வசித்தால், விவகாரம் எதுவும் இல்லாமற் போனாலும், சகவாசம் வைத்துக்கொண்டவனுக்கு அனர்த்தம்தான் விளையும்.

 

விவேகமற்ற துஷ்டனுடன் சேருவதைவிட கடலிலோ, பாதாளத்திலோ; நெருப்பிலோ ஆழமான குழியிலோ விழுவதுமேல்.

 

நல்லவர்களுடனோ கெட்டவர்களுடனோ பழகுவதால் அவரவர்களின் குணங்கள் நம்மீதும் படித்துவிடுகின்றன. எல்லா இடங்களிலும் வீசிவருகிற காற்று நல்ல வாசனையையும், கெட்ட வாசனையையும் சுமந்து வருவது போல். பறவைகளாகிய எங்கள் இருவருக்கும் தாய் தந்தையர் ஒருவரே. என்னை யெடுத்து முனிவர் வளர்த்தார். அவனைக் கசாப்புக்காரன் வளர்த்தான். அரசே! அவன் கசாப்புக்காரனின் பேச்சைக் கேட்டான். நான் முனிவரின் வார்த்தைகளைக் கேட்டேன். இதைத்தான் நீ கண்கூடாகக் காண்கிறாய். குணமும் தோஷமும் சேர்க்கையைப் பொறுத்திருக்கிறது.

 

என்கிற கதையில் விவேகம் இருக்கிறது’’ என்றது கரடகன். ‘’அது எப்படி?’’ என்று தமனகன் கேட்க, கரடகன் சொல்லத் தொடங்கியது:

 

http://puthu.thinnai.com/?p=7929

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 27- கல்வியின் பயன்

அன்னபூர்னா ஈஸ்வரன்


 

 

33. கல்வியின் பயன்


ஒரு மலையின் பக்கத்தில் ஒரு பெண்கிளி முட்டைகள் இட்டது. அவற்றிலிருந்து இரண்டு கிளிகள் வெளிவந்தன. கிளி இரை தேடி வெளியே சென்றிருக்கும்போது, அந்தக் கிளிக் குஞ்சுகளை ஒரு வேடன் எடுத்துச் சென்றுவிட்டான். அவற்றில் ஒன்று அதிர்ஷ்டவசமாக எப்படியோ தப்பித்துக்கொண்டது. மற்றதைக் கூண்டில் அடைத்து, அவன் பேசக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினான்.


எங்கெங்கோ சுற்றித் திரிந்து வந்த ஒரு ரிஷி மற்றொரு கிளியைப் பார்த்துவிட்டு அதைப் பிடித்து ஆசிரமத்துக்குக் கொண்டுபோய் வளர்த்தார்.


காலம் சென்றது. ஒரு நாள் அரசன் ஒருவன் சவாரி செய்த குதிரை திசைகெட்டு ஓடியது. அரசன் தன் சேனையிடமிருந்து பிரிந்து காட்டுக்கு வந்து சேர்ந்தான். வேடன் இருக்குமிடத்துக்கு வந்தான். அரசன் வருவதைப் பார்த்ததும் கூண்டிலிருந்த கிளி ‘கலகல’வெனன்று பேசத் தொடங்கியது: ‘எஜமானர்களே, யாரோ ஒருவன் குதிரை மேல் ஏறி வருகிறான். அவனைக் கட்டுங்கள், கட்டுங்கள்! கொல்லுங்கள் கொல்லுங்கள்’ என்றது. அதைக் கேட்டதும் அரசன் தன் குதிரைய வேறு திசையில் வேகமாகத் தட்டிவிட்டான்.


பிறகு அரசன் காட்டில் ரொம்பதூரம் சென்றதும் ஒரு முனிவரின் ஆசிரமத்தைக் கண்டான். அங்கே கூண்டிலிருந்த கிளி அரசனைப் பார்த்துவிட்டு, ‘’வருக, வருக அரசரே! சிரம பரிகாரம் செய்து கொள்ளுங்கள்! குளிர் நீரையும் ருசியுள்ள பழங்களையும் சாப்பிடுங்கள்! ரிஷிகளே, அரசருக்கு அர்க்கியம் பாத்தியம் முதலியவற்றைக் கொடுத்துக் குளுமையான மரநிழலில் மரியாதை செய்யுங்கள்!’’ என்றது.


இதைக்கேட்டதும் அரசனின் கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன. ‘’இது என்ன?’’ என்று ஆதிசயித்தான். கிளியைப் பார்த்து, ‘’இதே காட்டின் இன்னொரு பக்கத்தல் உன்னைப் போலவே ஒரு கிளியைக் கண்டேன். கொடிய ரூபமுள்ள அந்தக் கிளி என்னைக் கண்டதும் ‘கட்டு, கட்டு, கொல்லு, கொல்லு’ என்று கத்திற்று’’ என்று சொன்னான். அரசன் சொன்னதைக் கேட்ட கிளி தன் வாழ்க்கைச் சரித்திரத்தை நடந்தது நடந்தபடி கூறிற்று.


அதனால்தான் ‘குணமும் தோஷமும் சேர்க்கையைப் பொறுத்திருக்கிறது’ என்று சொன்னேன்’’ என்றது கரடகன். ‘’ஆகையால் உன்னோடு சேர்ந்திருப்பதே சரியில்லை.


முட்டாள் நண்பனைவிட அறிவுள்ள எதிரியே மேலானவன் யாரைக் கொல்ல நினைத்தானோ அவர்களுக்காகவே திருடன் உயிர்த்தியாகம் செய்தான். குரங்கு அரசனைக் கொன்றது.


என்கிற கதை மிகவும் சரி’’ என்றது கரடகன். ‘’அது எப்படி?’’ என்று தமனகன் கேட்க, கரடகன் சொல்லத் தொடங்கியது:


34. யோசனையுள்ள எதிரி


ஒரு அரசகுமாரன் ஒரு வியாபாரியின் மகனோடும், கல்வி கேள்விகளில் சிறந்த ஒரு மந்திரியின் மகனோடும் சிநேகமாயிருந்தான். ஒவ்வொரு நாளும் பொது இடங்களுக்கும், நந்தவனங்களுக்கும், ஓய்வு ஸ்தலங்களுக்கும் மூவரும் போவார்கள். விநோத விளையாட்டுகளிலும்,கேளிக்கைகளிலும் மூழ்கி பொழுதைக்கழிப்பர்கள். வில்வித்தை, யானை ஏற்றம், குதிரை ஏற்றம், வேட்டையாடுதல் என்றால் மூவருக்கும் எப்போதுமே பிடிக்காது. ‘ராஜநீதியை நீ வெறுக்கிறாய்’ என்று ஒரு நாள் அரசகுமாரனைத் தந்தை கடிந்து கொண்டார். இந்த அவமானத்தை அவன் தன் நண்பர்களுக்குத் தெரிவித்தான். அதற்கு அவர்கள், ‘’நாங்கள் தொழிலைக் கவனிக்காமல் இருப்பதால் எங்களைப் பற்றி எங்கள் தகப்பனார்கள் கூட ஏதேதோ பிதற்றியபடிதான் இருக்கிறார்கள். உன்னோடிருந்து ஆனந்தமாகப் பொழுதைக் கழித்து வந்ததால் அந்தத் துக்கத்தை உணராமலே இருந்து வந்தோம். இப்போது நீயும் துயரப்படுவதைக் காணும்போது எங்கள் துயரம் அதிகமாகியது’’ என்று சொன்னார்கள்.


‘’அவமானமடைந்தபிறகு இங்கே தங்குவது சரியல்ல’’ என்றான் அரசகுமாரன். மேலும், ‘’மூவருக்கும் ஒரேவிதமான துயரமே. ஆகவே மூவரும் வெளியேறி எங்காவது போகலாம், வாருங்கள். ஏனென்றால்,


தன்மானமுள்ளவனின் வீரம், வித்தை, புண்ணியம், திறமை, குணம் எப்படிப்பட்டது என்பதை அயல்நாட்டுப் பிரயாணம் நன்றாகக் காட்டிவிடுகிறது என்றான் அரசகுமாரன்.


அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். எங்கே போகலாம் என்று யோசித்தார்கள். ‘’பணம் இல்லாமல் நினைத்த காரியம் எதுவும் எங்கேயும் கை கூடாது. ரோஹணமலைக்குப் போவோம். அங்கே ரத்தினங்களைக் கண்டெடுத்து விரும்பியபடியெல்லாம் அனுபவிக்கலாம்’ என்று வியாபாரியின் மகன் சொன்னான். அவன் சொல்வது உண்மைதான் என்று எல்லோரும் ஒப்புக்கொண்டு, ரோஹண மலைக்குப் போனார்கள்.


அங்கே அதிர்ஷ்டவசமாக ஒவ்வொருவருக்கும் ஒரு விலையுயர்ந்த ரத்தினம் கிடைத்தது. உடனே மூவரும் யோசிக்கத் தொடங்கினார்கள். “காட்டு வழியில் பல ஆபத்துக்கள் வருமே! இந்த ரதத்தினங்களை பாதுகாப்பது எப்படி?’ என்று ஆலோசித்தார்கள். மந்திரிகுமாரன் ‘’நான் மந்திரிகுமாரன் அல்லவா? ஒரு உபாயம் யோசித்திருக்கிறேன். ரத்தினங்களை மூவரும் விழுங்கி வயிற்றிலே போட்டுக் கொண்டு போகலாம். வியாபாரிகளோ திருடர்களோ நம்மைக் கவனிக்கவே மாட்டார்கள்’’ என்று சொன்னான்.


அப்படியே தீர்மானித்து ரத்தினத்தை ஒவ்வொருவரும் ஒரு கவனம் சோற்றில் வைத்து விழுங்கி விட்டனர். அவர்கள் கண்ணில் படாதபடி அந்த மலைச்சாரலில் சிரமபரிகாரம் செய்து கொண்டிருந்த ஒரு திருடன் அவர்கள் ரத்தினத்தை விழுங்குவதைப் பார்த்துவிட்டான். அவன் யோசிக்கலானான். ‘’நானும்தான் எத்தனையோ நாட்களாக ரத்தினம் விரும்பி ரோஹணமலையில் சுற்றித் திரிந்தேன். அதிர்ஷ்டமில்லாததால் ஒன்றுகூடக் கிடைக்கவில்லை. எனவே இவர்களோடு சேர்ந்துகொண்டு போகலாம். எப்போதாவது எங்காவது இவர்கள் அலுப்போடு தூங்குவார்கள். அந்தச் சமயம் பார்த்து அவர்களின் வயிற்றைக் கீறி மூன்று ரத்தினங்களையும் எடுத்துக்கொண்டு போய்விடலாம்’’ என்று முடிவு செய்தான். மலையைவிட்டு இறங்கிப்போகிற மூவரையும் பின்தொடர்ந்து சென்று, ‘’உத்தமர்களே, இந்தப் பெரிய பயங்கரமான காட்டைத் தனியே கடந்து என் நாட்டுக்குச் செல்ல என்னால் முடியவில்லை. உங்களோடு சேர்ந்து வரட்டுமா?’’ என்று கேட்டான். அவர்களும் நட்பு வளர்க்க விரும்பி, ‘’அப்படியே செய்’’ என்று சொல்லி, அவனையும் கூட்டிக்கொண்டு வழி நடந்தார்கள்.


காட்டில் அடர்ந்த மலைகளுக்கிடையே போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு கிராமம் வந்தது. அதில் பில்லவர்கள் வசித்து வந்தார்கள். அந்தக் கிராமத்தின் தலைவன் தன்வீட்டில் பலவிதமான பறவைகளே விளையாட்டுக்காக வளர்த்துவந்தான். அவற்றின் மத்தியில் ஒரு கிழப்பறவை கூண்டில் அடைப்பட்டுக் கிடந்தது. இந்த நால்வரும் கிராமத்தின் அருகே போவதை அந்தக் கிழப்பறவை பார்த்துவிட்டுக் கத்த ஆரம்பித்தது. எல்லாப் பறவைகளின் பாஷைகளும் அந்தக் கிராமத் தலைவனுக்குத் தெரியும். கிழப்பறவை போடும் கூக்குரலின் அர்த்தத்தை அவன் புரிந்துகொண்டான். மிகுந்த சந்தோஷத்துடன் அவன் வேலையாட்களைக் கூப்பிட்டு, ‘’அந்த வழிப்போக்கர்களிடம் விலையுயர்ந்த ரத்தினங்கள் இருக்கின்றன. அவர்களைப் பிடியுங்கள் என்று பறவை கத்துகிறது. அவர்களைப் பிடித்து வாருங்கள்’’ என்று சொன்னான்.


வேலையாட்கள் போய் அவர்களைப் பிடித்து வந்தனர். கிராமத் தலைவனே அவர்களைச் சோதனை போட்டான். ஒன்றும் கிடைக்க வில்லை. எனவே அவர்களை விடுவித்து விட்டான். வெறுக்கோவணத்துடன் அவர்கள் போகத் தொடங்கினர். உடனே அந்தப் பறவை மறுபடியும் கத்திற்று. அதைக் கேட்டதும் கிராமத் தலைவன் மறுபடியும் அவர்களைப் பிடித்துவரச் செய்து உன்னிப்பாகச் சோதனை செய்துவிட்டு மீண்டும் விடுவித்தான். அவர்கள் போக ஆரம்பித்தார்கள். பழையபடியும் பறவை உச்சஸ்தாயியில் கத்திற்று. பில்லவர்களின் தலைவர் மறுபடியும் நால்வரையும் அழைத்து, ‘’இந்தப் பறவையை நான் சோதித்திருக்கிறேன். ஒருபோதும் அது பொய் சொல்வ தில்லை. உங்களிடத்தில் ரத்தினங்கள் இருக்கின்றன என்று அது சொல்கிறது, அவை எங்கே?’’ என்று கேட்டான்.


‘’எங்களிடத்தில் ரத்தினங்கள் இருந்தால் பரிசோதித்த பிறகும் ஏன் உங்கள் கண்ணில் தட்டுப்படாமல் போய்விட்டன?’’ என்று அவர்கள் பதில் சொன்னார்கள்.


‘’இந்தப் பறவை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆகையால் ரத்தினங்கள் உங்கள் வயிற்றில்தான் கட்டாயம் இருக்க வேண்டும். இன்று பொழுது சாய்ந்துவிட்டது,, நாளை காலை உங்கள் வயிற்றைக் கிழிக்கப் போகிறேன்’’ என்று அவன் சொன்னான். அவர்களைத் தூஷித்துவிட்டுச் சிறையில் தள்ளினான்.


திருடன் யோசிக்கத் தொடங்கினான். ‘காலையில் இவர்களின் வயிற்றைக் கிழித்து ரத்தினத்தைப் பெறுவான். அதேமாதிரி என்னிடமும் ரத்தினம் இருக்கும் என்று பேராசை கொண்டு என் வயிற்றையும் கிழிப்பான். ஆகவே எப்படியும் எனக்குச் சாவு நிச்சயம். இனி என்ன செய்யலாம்? சரிதான், ஒரு பழமொழி கூறுவது போல்,


‘’நிச்சயமாக உயிர்போகும் நிலைமை ஏற்பட்டால் மகாத்மாக்கள் பரோபகாரம் செய்கின்றனர். அதனால் மரணமே அமிருதம் போல் ஆகிவிடுகிறது.’’


எனவே, என் வயிற்றை முதலில் கீறச் சொல்கிறேன். முதலில் நானே இவர்களைக் கொல்ல நினைத்திருந்த போதிலும் என் சாவு இவர்களைக் காப்பாற்றட்டும். அந்தத் துராத்மா என் வயிற்றைக் கிழித்து எவ்வளவுதான் உன்னிப்பாகப் பரிசோதித்தாலும் ரத்தினம் எதுவும் கிடைக்கப்போவதில்லை பிறகு அவனுக்கு ரத்தினம் தேடும் ஆசை ஒழிந்துபோகும். இரக்கம் இல்லாதவனாயிருந்தாலும் அவன் கருணைகாட்டி, மேலும் இவர்களின் வயிற்றைக் கிழிப்பதை விட்டு விடுவான். அதனால் இந்த மூவருக்கும் நான் உயிர்ப்பிச்சையும் தன தானமும் தந்து உதவியதற்கு இவ்வுலகில் புகழும் மறுஜன்மத்தில் புனிதமான பிறப்பும் அடைவேன். இப்படி ஒரு மரணம் எனக்கு வரட்டும் என்று நான் விரும்பியதில்லை. என்றாலும் இதுதான் அறிஞர்களுக்குரிய மரணம்’’ என்று யோசித்து முடிவு செய்தான்.


இரவு கழிந்தது. காலையில் கிராமத் தலைவன் வந்து அவர்களின் வயிற்றைக் கிழிக்கத் தயாரானான். அந்தச் சமயத்தில் திருடன் அவனிடம் கைகூப்பி, ‘’என் சகோதரர்களின் வயிற்றைக் கிழிப்பதை எனக்குப் பார்க்கச் சகிக்காது. தயவு செய்து என் வயிற்றை முதலில் கீறுங்கள்’’ என்று தெரிவித்தான்.


தயையுடன் கிராமத்தலைவன் அதற்கு ஒப்புக்கொண்டு, அவன் வயிற்றைக் கிழித்துப் பார்த்தான். ரத்தினம் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே அவன் ஆலோசித்தான். ‘’பறவையின் கூக்குரலைக் கேட்டு நான் பேராசைப் பட்டு எவ்வளவு பெரிய பாவம் செய்தேன்? என் கெட்ட காலம்! இவன் வயிற்றில் ஒன்றும் இல்லாதது போலவே மற்றவர்களிடமும் ஒன்றும் இருக்காது,’’ என்று முடிவு செய்தான். ஒரு தீங்கும் செய்யாமல் மூவரையும் விடுதலை செய்துவிட்டான். அவர்கள் காட்டை வேகமாகத் தாண்டிச் சென்று ஒரு ஊருக்கு வந்து சேர்ந்தனர்.


அதனால்தான் ‘யாரைக் கொல்ல நினைத்தானோ அவர்களுக்காகவே திருடன் உயிர்த்தியாகம் செய்தான்; முட்டாள் நண்பனைவிட அறிவுள்ள எதிரியே மேல்’ என்று சொன்னேன்’’ என்றது கரடகன்.


கரடகன் மேலும் பேசியது:

 

http://puthu.thinnai.com/?p=8098

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 28 – யோசனையுள்ள எதிரி


அன்னபூர்னா ஈஸ்வரன்


 



34. யோசனையுள்ள எதிரி

ஒரு அரசகுமாரன் ஒரு வியாபாரியின் மகனோடும், கல்வி கேள்விகளில் சிறந்த ஒரு மந்திரியின் மகனோடும் சிநேகமாயிருந்தான். ஒவ்வொரு நாளும் பொது இடங்களுக்கும், நந்தவனங்களுக்கும், ஓய்வு ஸ்தலங்களுக்கும் மூவரும் போவார்கள். விநோத விளையாட்டுகளிலும்,கேளிக்கைகளிலும் மூழ்கி பொழுதைக்கழிப்பர்கள். வில்வித்தை, யானை ஏற்றம், குதிரை ஏற்றம், வேட்டையாடுதல் என்றால் மூவருக்கும் எப்போதுமே பிடிக்காது. ‘ராஜநீதியை நீ வெறுக்கிறாய்’ என்று ஒரு நாள் அரசகுமாரனைத் தந்தை கடிந்து கொண்டார். இந்த அவமானத்தை அவன் தன் நண்பர்களுக்குத் தெரிவித்தான். அதற்கு அவர்கள், ‘’நாங்கள் தொழிலைக் கவனிக்காமல் இருப்பதால் எங்களைப் பற்றி எங்கள் தகப்பனார்கள் கூட ஏதேதோ பிதற்றியபடிதான் இருக்கிறார்கள். உன்னோடிருந்து ஆனந்தமாகப் பொழுதைக் கழித்து வந்ததால் அந்தத் துக்கத்தை உணராமலே இருந்து வந்தோம். இப்போது நீயும் துயரப்படுவதைக் காணும்போது எங்கள் துயரம் அதிகமாகியது’’ என்று சொன்னார்கள்.


‘’அவமானமடைந்தபிறகு இங்கே தங்குவது சரியல்ல’’ என்றான் அரசகுமாரன். மேலும், ‘’மூவருக்கும் ஒரேவிதமான துயரமே. ஆகவே மூவரும் வெளியேறி எங்காவது போகலாம், வாருங்கள். ஏனென்றால்,


தன்மானமுள்ளவனின் வீரம், வித்தை, புண்ணியம், திறமை, குணம் எப்படிப்பட்டது என்பதை அயல்நாட்டுப் பிரயாணம் நன்றாகக் காட்டிவிடுகிறது
என்றான் அரசகுமாரன்.


அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். எங்கே போகலாம் என்று யோசித்தார்கள். ‘’பணம் இல்லாமல் நினைத்த காரியம் எதுவும் எங்கேயும் கை கூடாது. ரோஹணமலைக்குப் போவோம். அங்கே ரத்தினங்களைக் கண்டெடுத்து விரும்பியபடியெல்லாம் அனுபவிக்கலாம்’ என்று வியாபாரியின் மகன் சொன்னான். அவன் சொல்வது உண்மைதான் என்று எல்லோரும் ஒப்புக்கொண்டு, ரோஹண மலைக்குப் போனார்கள்.


அங்கே அதிர்ஷ்டவசமாக ஒவ்வொருவருக்கும் ஒரு விலையுயர்ந்த ரத்தினம் கிடைத்தது. உடனே மூவரும் யோசிக்கத் தொடங்கினார்கள். “காட்டு வழியில் பல ஆபத்துக்கள் வருமே! இந்த ரதத்தினங்களை பாதுகாப்பது எப்படி?’ என்று ஆலோசித்தார்கள். மந்திரிகுமாரன் ‘’நான் மந்திரிகுமாரன் அல்லவா? ஒரு உபாயம் யோசித்திருக்கிறேன். ரத்தினங்களை மூவரும் விழுங்கி வயிற்றிலே போட்டுக் கொண்டு போகலாம். வியாபாரிகளோ திருடர்களோ நம்மைக் கவனிக்கவே மாட்டார்கள்’’ என்று சொன்னான்.


அப்படியே தீர்மானித்து ரத்தினத்தை ஒவ்வொருவரும் ஒரு கவனம் சோற்றில் வைத்து விழுங்கி விட்டனர். அவர்கள் கண்ணில் படாதபடி அந்த மலைச்சாரலில் சிரமபரிகாரம் செய்து கொண்டிருந்த ஒரு திருடன் அவர்கள் ரத்தினத்தை விழுங்குவதைப் பார்த்துவிட்டான். அவன் யோசிக்கலானான். ‘’நானும்தான் எத்தனையோ நாட்களாக ரத்தினம் விரும்பி ரோஹணமலையில் சுற்றித் திரிந்தேன். அதிர்ஷ்டமில்லாததால் ஒன்றுகூடக் கிடைக்கவில்லை. எனவே இவர்களோடு சேர்ந்துகொண்டு போகலாம். எப்போதாவது எங்காவது இவர்கள் அலுப்போடு தூங்குவார்கள். அந்தச் சமயம் பார்த்து அவர்களின் வயிற்றைக் கீறி மூன்று ரத்தினங்களையும் எடுத்துக்கொண்டு போய்விடலாம்’’ என்று முடிவு செய்தான். மலையைவிட்டு இறங்கிப்போகிற மூவரையும் பின்தொடர்ந்து சென்று, ‘’உத்தமர்களே, இந்தப் பெரிய பயங்கரமான காட்டைத் தனியே கடந்து என் நாட்டுக்குச் செல்ல என்னால் முடியவில்லை. உங்களோடு சேர்ந்து வரட்டுமா?’’ என்று கேட்டான். அவர்களும் நட்பு வளர்க்க விரும்பி, ‘’அப்படியே செய்’’ என்று சொல்லி, அவனையும் கூட்டிக்கொண்டு வழி நடந்தார்கள்.


காட்டில் அடர்ந்த மலைகளுக்கிடையே போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு கிராமம் வந்தது. அதில் பில்லவர்கள் வசித்து வந்தார்கள். அந்தக் கிராமத்தின் தலைவன் தன்வீட்டில் பலவிதமான பறவைகளே விளையாட்டுக்காக வளர்த்துவந்தான். அவற்றின் மத்தியில் ஒரு கிழப்பறவை கூண்டில் அடைப்பட்டுக் கிடந்தது. இந்த நால்வரும் கிராமத்தின் அருகே போவதை அந்தக் கிழப்பறவை பார்த்துவிட்டுக் கத்த ஆரம்பித்தது. எல்லாப் பறவைகளின் பாஷைகளும் அந்தக் கிராமத் தலைவனுக்குத் தெரியும். கிழப்பறவை போடும் கூக்குரலின் அர்த்தத்தை அவன் புரிந்துகொண்டான். மிகுந்த சந்தோஷத்துடன் அவன் வேலையாட்களைக் கூப்பிட்டு, ‘’அந்த வழிப்போக்கர்களிடம் விலையுயர்ந்த ரத்தினங்கள் இருக்கின்றன. அவர்களைப் பிடியுங்கள் என்று பறவை கத்துகிறது. அவர்களைப் பிடித்து வாருங்கள்’’ என்று சொன்னான்.


வேலையாட்கள் போய் அவர்களைப் பிடித்து வந்தனர். கிராமத் தலைவனே அவர்களைச் சோதனை போட்டான். ஒன்றும் கிடைக்க வில்லை. எனவே அவர்களை விடுவித்து விட்டான். வெறுக்கோவணத்துடன் அவர்கள் போகத் தொடங்கினர். உடனே அந்தப் பறவை மறுபடியும் கத்திற்று. அதைக் கேட்டதும் கிராமத் தலைவன் மறுபடியும் அவர்களைப் பிடித்துவரச் செய்து உன்னிப்பாகச் சோதனை செய்துவிட்டு மீண்டும் விடுவித்தான். அவர்கள் போக ஆரம்பித்தார்கள். பழையபடியும் பறவை உச்சஸ்தாயியில் கத்திற்று. பில்லவர்களின் தலைவர் மறுபடியும் நால்வரையும் அழைத்து, ‘’இந்தப் பறவையை நான் சோதித்திருக்கிறேன். ஒருபோதும் அது பொய் சொல்வ தில்லை. உங்களிடத்தில் ரத்தினங்கள் இருக்கின்றன என்று அது சொல்கிறது, அவை எங்கே?’’ என்று கேட்டான்.


‘’எங்களிடத்தில் ரத்தினங்கள் இருந்தால் பரிசோதித்த பிறகும் ஏன் உங்கள் கண்ணில் தட்டுப்படாமல் போய்விட்டன?’’ என்று அவர்கள் பதில் சொன்னார்கள்.


‘’இந்தப் பறவை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆகையால் ரத்தினங்கள் உங்கள் வயிற்றில்தான் கட்டாயம் இருக்க வேண்டும். இன்று பொழுது சாய்ந்துவிட்டது,, நாளை காலை உங்கள் வயிற்றைக் கிழிக்கப் போகிறேன்’’ என்று அவன் சொன்னான். அவர்களைத் தூஷித்துவிட்டுச் சிறையில் தள்ளினான்.


திருடன் யோசிக்கத் தொடங்கினான். ‘காலையில் இவர்களின் வயிற்றைக் கிழித்து ரத்தினத்தைப் பெறுவான். அதேமாதிரி என்னிடமும் ரத்தினம் இருக்கும் என்று பேராசை கொண்டு என் வயிற்றையும் கிழிப்பான். ஆகவே எப்படியும் எனக்குச் சாவு நிச்சயம். இனி என்ன செய்யலாம்? சரிதான், ஒரு பழமொழி கூறுவது போல்,


‘’நிச்சயமாக உயிர்போகும் நிலைமை ஏற்பட்டால் மகாத்மாக்கள் பரோபகாரம் செய்கின்றனர். அதனால் மரணமே அமிருதம் போல் ஆகிவிடுகிறது.’’


எனவே, என் வயிற்றை முதலில் கீறச் சொல்கிறேன். முதலில் நானே இவர்களைக் கொல்ல நினைத்திருந்த போதிலும் என் சாவு இவர்களைக் காப்பாற்றட்டும். அந்தத் துராத்மா என் வயிற்றைக் கிழித்து எவ்வளவுதான் உன்னிப்பாகப் பரிசோதித்தாலும் ரத்தினம் எதுவும் கிடைக்கப்போவதில்லை பிறகு அவனுக்கு ரத்தினம் தேடும் ஆசை ஒழிந்துபோகும். இரக்கம் இல்லாதவனாயிருந்தாலும் அவன் கருணைகாட்டி, மேலும் இவர்களின் வயிற்றைக் கிழிப்பதை விட்டு விடுவான். அதனால் இந்த மூவருக்கும் நான் உயிர்ப்பிச்சையும் தன தானமும் தந்து உதவியதற்கு இவ்வுலகில் புகழும் மறுஜன்மத்தில் புனிதமான பிறப்பும் அடைவேன். இப்படி ஒரு மரணம் எனக்கு வரட்டும் என்று நான் விரும்பியதில்லை. என்றாலும் இதுதான் அறிஞர்களுக்குரிய மரணம்’’ என்று யோசித்து முடிவு செய்தான்.


இரவு கழிந்தது. காலையில் கிராமத் தலைவன் வந்து அவர்களின் வயிற்றைக் கிழிக்கத் தயாரானான். அந்தச் சமயத்தில் திருடன் அவனிடம் கைகூப்பி, ‘’என் சகோதரர்களின் வயிற்றைக் கிழிப்பதை எனக்குப் பார்க்கச் சகிக்காது. தயவு செய்து என் வயிற்றை முதலில் கீறுங்கள்’’ என்று தெரிவித்தான்.


தயையுடன் கிராமத்தலைவன் அதற்கு ஒப்புக்கொண்டு, அவன் வயிற்றைக் கிழித்துப் பார்த்தான். ரத்தினம் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே அவன் ஆலோசித்தான். ‘’பறவையின் கூக்குரலைக் கேட்டு நான் பேராசைப் பட்டு எவ்வளவு பெரிய பாவம் செய்தேன்? என் கெட்ட காலம்! இவன் வயிற்றில் ஒன்றும் இல்லாதது போலவே மற்றவர்களிடமும் ஒன்றும் இருக்காது,’’ என்று முடிவு செய்தான். ஒரு தீங்கும் செய்யாமல் மூவரையும் விடுதலை செய்துவிட்டான். அவர்கள் காட்டை வேகமாகத் தாண்டிச் சென்று ஒரு ஊருக்கு வந்து சேர்ந்தனர்.


அதனால்தான் ‘யாரைக் கொல்ல நினைத்தானோ அவர்களுக்காகவே திருடன் உயிர்த்தியாகம் செய்தான்; முட்டாள் நண்பனைவிட அறிவுள்ள எதிரியே மேல்’ என்று சொன்னேன்’’ என்றது கரடகன்.


கரடகன் மேலும் பேசியது:

 

http://puthu.thinnai.com/?p=8206

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 29- முட்டாள் நண்பன்
அன்னபூர்னா ஈஸ்வரன்

 


முட்டாள் நண்பன்

‘’பிறகு அவர்கள் அந்த ஊரில் வியாபாரியின் மகனைப் பேரம் பேசிவிட்டு மூன்று ரத்தினங்களையும் விற்றனர். பணம் நிறையக் கொண்டு வந்து அரசகுமாரன் முன் வைத்தனர். அவன் மந்திரி குமாரனைத் தனது மந்திரியாக நியமித்துக் கொண்டான். அவன் மூலம் அந்த ராஜ்யத்தைக் கைப்பற்ற எண்ணினான். வியாபாரியின் மகனைத் தனது பொக்கிஷ அதிகாரியாக நியமித்தான். இரண்டு மடங்காகச் சம்பளம் கொடுத்து பொறுக்கியெடுத்த நேர்த்தியான யானை, குதிரை, காலாட் படைகளைத் திரட்டினான். ராஜநீதியின் ஆறு அம்சங்களும் அறிந்த அந்த நாட்டின் மந்திரியுடன் சண்டை செய்து அரசனைக் கொன்று, ராஜ்யத்தைக் கைப்பற்றி அரசனானான். பிறகு ராஜ்யத்தின் சகல பொறுப்புக்களையும் அவர்களிடமே ஒப்படைத்துவிட்டு, தன்னிஷ்டம் போல் கேளிக்கைகளில் மூழ்கித் திளைத்திருந்தான்.

அரசன் அடிக்கடி அந்தப்புரத்துக்குப் போய் வருவது வழக்கம். ஒரு சமயம் இப்படிப் போய் வந்துகொண்டிருக்கையில் அந்தப்புரத்திற்கு அருகிலுள்ள லாயத்தில் இருந்த ஒரு குரங்கை எடுதுது செல்லமாக வளர்க்க ஆரம்பித்தான். எப்போதும் அதைத் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டான். ஏனெனில் கிளி, சகோரப்பறவை, புறா, ஆடு, குரங்குகளிடம் இயற்கையிலேயே மன்னர்களுக்குப் பிரியம் உண்டாகிறதல்லவா? அரசன் தந்த பலவிதமான தின்பண்டங்களைத் தின்று காலக் கிரமத்தில் அந்தக் குரங்கு பெரியதாய் வளர்ந்தது. அரச குலத்தினரிடையே பெருமதிப்பும் பெற்றது. அதன்மேல் அன்பும் விசுவாசமும் செலுத்தி அதைத் தன் கத்தி ஏந்தும் பணியாளாக அரசன் நியமித்துக் கொண்டான்.

அரசனின் அரண்மனைக்கு அருகிலே பலவித மரங்கள் நிறைந்த சிங்காரத் தோட்டம் ஒன்று இருந்தது. வசந்த காலம் வந்ததும் வண்டுகள் மன்மதனின் கீர்த்தியை ரீங்காரம் செய்தன. மலர்கள் பரப்பும் மணம் மனோரம்மியமாயிருந்தது. அந்தத் தோட்டத்தைக் கண்டு, மன்மதனால் தூண்டப்பட்டு அரசன் தன் பட்டமகிஷியுடன் அதற்குள் புகுந்தான். எல்லா வேலையாட்களும் வாயிலிலேயே தங்கி விட்டனர்.

உற்சாகத்தோடு தோட்டத்தைச் சுற்றிப் பார்த்து வந்ததிலே அரசன் களைப்படைந்தான். ‘’இந்த மலர் மண்டபத்தில் கொஞ்சம் தூங்குகிறேன். என்னை யாரும் தொந்தரவு செய்யாதபடி கவனமாகப் பார்த்துக்கொள்’’ என்று குரங்குக்குக் கட்டளையிட்டுவிட்டு, அரசன் தூங்கினான். அவன் உடம்பில் பூவும், சந்தனமும், கஸ்தூரியும் மணங்கமழ்ந்தன. அப்போது ஒரு வண்டு வந்து அரசன் தலையில் உட்கார்ந்தது. அதைக் கண்டு கோபங்கொண்ட குரங்கு, ‘’நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அந்த அற்பப் பிராணி அரசனைக் கடிக்கிறதே!’’ என்று எண்ணி அதைத் தடுக்க முற்பட்டது. எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் வண்டு மறுபடியும் மறுபடியும் அரசனை நெருங்கியபடியே இருந்தது. கோபத்தால் குருடாகிய குரங்கு, கத்தியை உருவி வண்டைக் குறி பார்த்து வீசி எறிந்தது. ஒரே வீச்சில் அரசன் தலை துண்டாகி விழுந்தது.

உடனே அரசனோடு, தூங்கிக் கொண்டிருந்த பட்டமகிஷி பயந்து எழுந்து அந்த மூடனைப் பார்த்துவிட்டு அழ ஆரம்பித்தாள். ‘’மூட வானரமே, உன்மேல் நம்பிக்கை வைத்த அரசனிடம் ஏன் இப்படி நடந்துகொண்டாய்?’’ என்று கேட்டாள்.

நடந்ததை நடந்தபடி குரங்கு சொல்லிற்று. அங்கு கூடிய எல்லோரும் அதைத் தூஷித்துத் திரஸ்கரித்தனர்.

அதனால்தான் ‘முட்டாள் நண்பனைவிட, அறிவுள்ள எதிரியே மேலானவன்; குரங்கு அரசனைக் கொன்றது’ என்று சொன்னேன்’’ என்றது கரடகன்.
மேலும் கரடகன் பேசியது:

போக்கிரித்தனத்தில் மட்டும் தேர்ச்சி பெற்று நட்பை முறித்தெறிகின்ற உன் போன்றவர்களின் பேச்சைக் கேட்டால் எந்தக் காரியமும் நன்மையாக முடியாது. நெருக்கடி மிகுந்த காலத்தில் கூட உலகம் புகழக்கூடிய காரியத்தைத்தான் சான்றோர்கள் செய்கின்றனர். இதுபோன்ற தீய காரியங்களை அவர்கள் ஆதரிப்பதில்லை.

நெருக்கடி மிகுந்த காலத்தில்கூட புத்திசாலிகள் கௌரவமளிக்கும் காரியத்தைக் கைவிடுவதில்லை. மயில் தின்று எறிந்துவிட்டாலும் சங்கு தன் வெண்ணையை இழக்கிறதில்லை.

ஒரு பழமொழி கூறுவதுபோல்,

கெட்ட காரியம் என்றும் கெட்ட காரியமே; அதில் புத்திசாலிகள் மனஞ்செலுத்துவதில்லை. எவ்வளவுதான் தாகம் எடுத்தாலும் சாக்கடை நீரை யாரும் குடிப்பதில்லை. உயிர்போகிற நிலைமை ஏற்பட்டாலும் செய்யத்தக்க காரியத்தையே செய்ய வேண்டும், செய்யத்தகாததைச் செய்யலாகாது.

இப்படி நல்ல வழிக்கு வரக்கூடிய வார்த்தைகளைக் கரடகன் சொல்லவே, குற்றமுள்ள நெஞ்சுடைய தமனகன் அவற்றை விஷம் போல் எண்ணி அந்த இடத்தைவிட்டு அகன்றது.

இதற்கிடையில் பிங்களகனும் சஞ்சீவகனும் கோபத்தினால் அறிவு குருடாக்கி மறுபடியும் சண்டைபிடித்தன. சஞ்சீவகனைக் கொன்றதும் பிங்களகனின் கோபம் அடங்கியது. பழைய நட்பை நினைத்துப் பார்த்து பச்சாதாபப்பட்டு கண்ணீர் விட்டது. ரத்தம் தோய்ந்த கையால் கண்களைத் துடைத்தபடியே, பச்சாதாபத்துடன் சொல்லிற்கு; ‘’என்ன கெட்ட காலம், நான் பெரும்பாவம் செய்துவிட்டேன். என் இரண்டாவது உடம்புபோல் இருந்த சஞ்சீவகனைக் கொன்று என்னையே துன்புறுத்திக்கொண்டிருக்கிறேன். ஒரு பழமொழி கூறுவதுபோல்,

வளங்கொழிக்கும் பூமியின் ஒரு பகுதியையும் அறிவுள்ள வேலையாளையும் இழக்கும்பொழுது, இழந்த பூமியையாவது திரும்பப் பெற்றுவிடலாம். வேலையாளைப் பெற முடியாதே என்று அரசர்கள் கொடிய வேதனை அனுபவிக்கிறார்கள்.

பிங்களகன் துயரப்பட்டு மனங்கலங்கி நிற்பதைத் தமனகன் பார்த்தது. மிகுந்த துணிச்சலுடன் மெள்ள நெருங்கி, ‘’அரசே, எதிரியைக் கொன்றபிறகு நீங்கள் இப்படி உறுதி குலைந்து நிற்பது நியாயமில்லை. ஒரு பழமொழி கூறுவதுபோல்,

தந்தையானாலும், மகனானாலும், சகோதரனானாலும், சிநேகிதன் ஆனாலும் உயிருக்கு ஆபத்து உண்டாக்க முற்பட்டால் அவர்களை நன்மை விரும்புவோர் கொல்ல வேண்டும்.

இரக்கங்காட்டும் அரசன், கண்டதைச் சாப்பிடும் பிராமணன், அடங்காப் பிடாரியான பெண்டாட்டி, கெட்ட எண்ணமுள்ள சிநேகிதன், கவனமற்ற நீதிபதி, வணக்கமற்ற வேலைக்காரன் இவர்கள் தம் காரியம் அறியாதவர்கள். இவர்களைக் கைவிட வேண்டியதுதான்.


உண்மைச் சுகம்பெற எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போ! அறிவுள்ளவன் வயதில் சிறியவனானாலும் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்! தரம்மம் செய்யும் பொருட்டு யாசிக்கிறவர்களுக்கு உயிரையும் கொடு! தன் கையே பாவம் செய்தாலும் அதை வெட்டு!

மேலும், அரசர்களின் தர்மம் வேறு, சாதாரண சுபாவமுள்ள மனிதர்களின் தர்மம் வேறு! ஒரு பழிமொழி கூறுவதுபோல்,

மனித சுபாவத்தைக்கொண்டு ராஜ்யத்தை ஆளமுடியாது. மனிதர் களுக்குத் தோஷமாக அமைவது மன்னர்களுக்குக் குணமாக அமைகின்றது.

ராஜநீதி வேசியைப்போல் பல ரூபங்கள் கொள்வது, சஞ்சல புத்தியுடையது. உண்மையையும் பேசும், பொய்யும் பேசும்; கொடுமையும் செய்யும், அன்பும் செய்யும்; இம்சிக்கவும் செய்யும், தயை காட்டவும் செய்யும்; செல்வத்தைச் சேர்க்கவும் செய்யும், விரயமாக்கவும் செய்யும்; பொருளை வழங்கவும் செய்யும்; பறிக்கவும் செய்யும்’’

என்றது தமனகன்.

தன்னிடம் தமனகன் திரும்பி வராததைக் கண்ட கரடகன் தானும் சிங்கத்தின் அருகில் சென்று உட்கார்ந்துகொண்டு தமனகனைப் பார்த்துப் பேசியது; ‘’உனக்கு மந்திரித் தொழிலே இன்னதென்று தெரியாது. காரணம், அன்பு செலுத்திப் பழகும் சிநேகிதர்களிடையே சாவை உண்டாக்கும் சண்டையை மூட்டிவிடுவது மந்திரிகள் கையாள்கிற வழி அல்ல. ஸாமம், தானம், பேதம் ஆகிய மூன்று முறைகளைக் கையாண்டு காரியத்தைச் சாதிக்க முடியும் என்று இருக்கிறபொழுது, தன் சொந்த வேலைக்காரனோடு சண்டை செய்யும்படி அரசருக்கு உபதேசம் செய்து அவரை ஆபத்தில் சிக்க வைக்கிறாய்.

எப்பொழுதுமே சண்டையில் யாருக்கும் வெற்றி நிச்சயம் இல்லை. குபேரனும், இந்திரனும், வாயுவும், வருணனும் யுத்தத்தில் தோல்வியைத் தான் கண்டனர். யுத்தத்தினால் ஒரு நன்மையும் இல்லை; அறிவில்லாதவர்களே யுத்தத்தை விரும்புகின்றனர். சாஸ்திரங்கள் நயத்தைத் தான் போதிக்கின்றன. சாஸ்திரங்களின் மூலமாகத்தானே ஸாமம் முதலான உபாயங்களைக் கையாள வேண்டும்.

எனவே ஒருபோதும் மந்திரிகள் அரசர்களுக்கு யுத்த வழியை உபதேசிக்கலாகாது. விவேகம் நிறைந்த இன்னொரு பழமொழி உண்டு, கேள்:

நல்ல குணம், நல்ல நடத்தை, தன்னடக்கம் உள்ளவனும், எதிரிகளை அழிக்கத் துணிவுள்ளவனும், பேராசையில்லா திருப்பவனுமான வேலைக் காரர்கள் இருக்கிற அரண்மனையில் அரசன் எதிரியின் வசமாவதில்லை.

ஆகவே,

கேட்பதற்குக் கடுமையாயிருந்தாலும் நல்லதையே சொல்ல வேண்டும். எப்போதும் பிரியமான வார்த்தைகளையே பேசுவது வேலைக் காரர்களுக்குத் தகுந்ததல்ல. அரசன் விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி. மந்திரி பிரியமான வார்த்தைகளே பேசி வந்தால் அது அரசன் மனத்தைப் பாழ்படுத்தி ராஜ்யத்தையே நலியச் செய்யும்.

இன்னொன்று,

அரசனும் மந்திரிகளைத் தனித்தனியே அழைத்துக் கேட்கவேண்டும். கேட்டபின் நன்மை எது தீமை எது என்று தனக்குள்தானே தீர ஆலோசிக்க வேண்டும். ஏனெனில், ஒரு சமயத்தில் ஒருவிதமாக எடுத்த முடிவு. மற்றொரு சமயம் சிந்தனை மாறுபடுவதினால் வேறொரு விதமாகத் தோன்றக்கூடும்.

ஒரு பழமொழி கூறுவதுபோல்.

சமதரை மாதிரியே ஆகாயம் காணப்படுகிறது; மின்மினி போலத்தான் நெருப்பும் காணப்படுகிறது. என்றாலும் அவை இரண்டும் ஒன்றல்ல.

பொய் மெய் போலவும், மெய் பொய் போலவும் தோன்றும்; ஆகையால் தீர ஆராய்ந்தறிய வேண்டும். ஆகையால் ராஜநீதியறியாத சேவகன் சொல்வதை அரசன் அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் கெட்ட எண்ணமுள்ள வேலைக்காரர்கள் தம் காரியத்தைச் சாதிப்பதற்காக அழகான வார்த்தைகளைக்கொண்டு உண்மை விஷயத்தைத் திரித்துக் காட்டலாம். எனவே, நன்றாக ஆலோசித்தே ராஜகாரியம் செய்ய வேண்டும்.

ஒரு பழமொழி கூறுவதுபோல்,


ஆப்த நண்பர்களை அடிக்கடி கேட்டு, அவர்கள் சொன்னதில் ஒவ்வொரு எழுத்தையும் சுயபுத்தியுடன் யோசித்து யார் காரியம் செய்கிறானோ அவனே புத்திசாலி; அவனே புகழும் செல்வமும் பெற்று வாழ்வான்.

கடைசியாகச் சொல்வதாவது:

பிறருடைய பேச்சில், அரசர் மயங்கிவிடக் கூடாது. ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தரக்கூடிய பதில் அல்லது ஆலோசனைகளில் இருக்கிற நன்மை, தீமைகளைப் பற்றியும், செய்கையில் இறங்குவதற்குரிய நேரத்தைப் பற்றியும் நன்றாக ஆலோசித்துப் பார்த்து வரவேண்டும். களங்கமற்ற மனத்துடன் ராஜ்யத்தின் சகலவிதமான அலுவல்களையும் சுயபுத்திகோடு தானே நிர்வகித்து வரவேண்டும்’’

இத்துடன் நட்பு அறுத்தல் என்ற முதல் தந்திரம் முடிவடைகிறது. அதன் முதற் செய்யுள் பின்வருமாறு:

காட்டில் சிங்கத்துக்கும் எருதுக்குமிடையே சிறப்பாக வளர்ந்து வந்த சிநேகத்தை, பேராசையும் போக்கிரித் தனமுள்ள ஒரு நரி நாசம் செய்தது.

http://puthu.thinnai.com/?p=8357

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 30- முட்டாள் நண்பன்
அன்னபூர்னா ஈஸ்வரன்
 

நட்பு அடைதல்

இங்கே நட்பு அடைதல் என்னும் இரண்டாம் தந்திரம் தொடங்குகிறது. அதன் முதன் செய்யுள் பின்வருமாறு:

சாதனமும் செல்வமும் இல்லாமற் போனாலும்
அறிவாளிகளும் கல்விமான்களும் – காக்கை,
எலி, மான், ஆமை செய்ததுபோல் – எடுத்த
காரியத்தைத் தொடுத்து முடிக்கின்றனர்.

‘’அது எப்படி?’’ என்று அரசகுமாரர்கள் கேட்கவே, விஷ்ணுசர்மன் சொல்லத் தொடங்கினார்:

தென்னாட்டில் பிரமதாரூப்யம் என்றொரு நகரம் இருக்கிறது. அதற்கு வெகு சமீபத்திலேயே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதன் அடி மரம் பெருத்தும், கிளைகள் தடித்தும் இருந்தன. அதில் பல ஜந்துக்கள் இருந்து வந்தன.

அதன் நிழலில் மான் நித்திரை செய்கின்றது; பசுமையான இலைகளினூடே பறவைகள் வரிசை வரிசையாகக் கூடி வாழ்கின்றன; அதன் பல இடுக்குகளிலும் பொந்துகளிலும் பலவிதமான புழுபூச்சிகள் புகலிடம் பெற்றுள்ளன. அதன் அடிமரத்தில் கூட்டங் கூட்டமாகக் குரங்குகள் தொங்குகின்றன; மலர்க் கொத்துக்களில் வண்டுகள் நிம்மதியாகக் குடிக்கின்றன. அந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல உயிர்களுக்கு ஆனந்த மளிக்கின்றது. அந்த மரம் வாழட்டும்! மரமென்றால் அது அல்லவா மரம்! மற்றவையெல்லாம் பூமிக்குப் பாரம்தான்.

அந்த ஆலமரத்தில் லகுபதனகன் என்று ஒரு காக்கை இருந்தது. ஒருநாள் காலையில் இரை தேடுவதற்காக அது ஊரை நோக்கிப் பறந்து சென்றது. வழியில் ஒரு வேடன் வருவதைப் பார்த்து விட்டது. அந்த வேடன் அந்த வட்டாரத்திலேயே வசிக்கிறவன்தான். பறவைகளைப் பிடிப்பதற்காக அந்த மரத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். அவன் உருவத்தைப் பார்க்க பயங்கரமாயிருந்தது. கைகால்கள் தட்டை குட்டையாயிருந்தன. துணியை முழங்காலுக்கு மேல் தூக்கிக் கட்டியிருந்தான். முகம் விகாரமாக இருந்தது. கண்கள் ரத்தச் சிவப்பேறி இருந்தன. குடுமியை நிமிர்த்தி முடிச்சுப் போட்டிருந்தான். அவன் கைகளிலே வலையும் தடியும் இருந்தன. அவனை வேட்டை நாய்கள் பின்தொடர்ந்து வந்தன. அதிகமாய்ச் சொல்வானேன்? கையில் கயிறு பிடித்து இரண்டாவது யமன் போல் அவன் காட்சியளித்தான். பாவத்தின் அவதாரமோ? அதர்மத்தின் நெருங்கிய நண்பனோ? என்று நினைக்கும்படி அவன் இருந்தான்.

லகுபதனகன் அந்த வேடனைப் பார்த்து மனங்கலங்கி யோசிக்கத் தொடங்கியது: ‘’இந்தப் பாவி என்ன செய்யலாம் என்று நினைக்கிறான்? என் நாசத்தைத் தேடுகிறானா? அல்லது வேறு ஏதாவது செய்ய நினைத் திருக்கிறானா?’’ என்று எண்ணியது. ஆவல் அதிகமாகி, காக்கை அவனைப் பின் தொடர்ந்து போயிற்று.

வேடன் ஒரு இடத்துக்கு வந்து வலையை விரித்தான். அதன் மேல் தானியங்களை இறைத்தான். பிறகு கொஞ்சதூரம் தள்ளி மறைந்து நின்று கொண்டான். ஆனால் பறவைகள் எதுவும் வலையின் பக்கத்தில் வரவில்லை. லகுபதனகனின் ஆலோசனையைக் கேட்டு, தானியங்களை ஆலகால விஷம் என்று வெறுத்து, அந்தப் பக்கத்தை அவை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

அந்த நேரத்தில், சித்ரகிரீவன் என்கிற புறாக்களின் அரசன், நூற்றுக்கணக்கான புறாகக்கள் புழைசூழ, இரை தேடியபடியே சுற்றித் திரிந்து வந்தது. அரிசி இறைந்திருப்பதைத் தூரத்திலிருந்தே கண்டுவிட்டது. லகுபதனகன் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அது கேட்காமல், அரிசி தின்பதில் பேராசை கொண்டு, அந்தப் பெரிய வலையில் வந்து உட்கார்ந்தது. அந்த வினாடியே அதுவும் அதன் பரிவாரங்களும் வலையில் சிக்கிக் கொண்டன. இதில் யாரையும் குற்றம் சொல்லிப் பிரயோஜனம் இல்லை. விதி கெட்டு இருந்ததால்தான் இப்படி நேர்ந்துவிட்டது. ஒரு பழமொழி கூறுவதுபோல்,

பிறர் மனைவியரை அபகரிப்பது குற்றம் என்று ராவணனுக்கு ஏன் தெரியாமல் போயிற்று? பொன்மான் என்று ஒன்றிருக்க முடியாது என்று ராமனுக்கு ஏன் தெரியாமல் போயிற்று, சூதாட்டத்தில் பல அனர்த்தங்கள் உண்டு என்று யுதிஷ்டிரனுக்கு ஏன் தெரியாமல் போயிற்று? விபத்து நெருங்குகிற சமயத்தில் உணர்வு மங்கும். விதி மதியைக் கெடுத்துவிடும்.

காலனின் பாசக் கயிற்றால் கட்டுண்டு, விதி மதியைக் கவ்வுகிற போது, பெரியோர்களின் அறிவுகூட நினைத்திராத பல குறுகிய வழிகளில் செல்கின்றது.

வேடன் மிகவும் சந்தோஷப்பட்டு தடி எடுத்துக்கொண்டு ஓடி வந்தான். வலையில் சிக்கிக்கொண்டதையும் வேடன் ஓடிவருவதையும் பார்த்து சித்ர கிரீவனும் அதன் பரிவாரங்களும் வேதனையடைந்தன என்றாலும், சித்ரகிரீவன் சமயோசித புத்தியோடு, ‘’நண்பர்களே பயப்படாதீர்ள்.

எப்படிப்பட்ட துன்பம் வந்தபோதிலும் யார் அறிவை இழக்காமல் இருக்கிறார்களோ அவர்கள் துன்பங்களைக்கடந்து இன்பம் காண்கிறார்கள்.

நாமெல்லோரும் ஒரே நோக்கத்துடன் இருந்து, எல்லோரும் சேர்ந்தாற்போல் எழுந்து பறந்து வலையை ஆகாயத்தில் தூக்கிச் சென்றுவிட வேண்டும். ஒன்றாய்ச் சேர்ந்து செயல் புரியாவிட்டால் இது சாத்தியமில்லை. ஒற்றுமை இன்றிக் காரியம் செய்தால் சாவுதான் கதி.

ஒரே வயிறும் இரண்டு கழுத்துக்களும் உள்ள பாருண்டப் பறவைகள் முறை பிசகிச் சாப்பிட்டு இறந்ததுபோல், ஒன்றுமை இல்லாதவர்களும் நாசமடைவார்கள்

என்று ஒரு பழமொழி உண்டு’’ என்றது.

‘’அது எப்படி?’’ என்று புறாக்கள் கேட்க, சித்ரகிரீவன் சொல்லத் தொடங்கியது:

http://puthu.thinnai.com/?p=8688

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், கிருபன்!

 

கனநாளைக்குப் பிறகு எட்டிப்பார்த்தேன்!

 

அத்தனை கதைகளும் அருமை! :D

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 31- பாருண்டப் பறவைகள்
அன்னபூர்னா ஈஸ்வரன்


ஒரு ஏரிக்கரையில் பாருண்டப் பறவைகள் என்று சொல்லப்படும் பறவைகள் இருந்து வந்தன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வயிறும், இரண்டு தனித்தனி கழுத்துகளும் இருந்தன. அந்தப் பறவைகளில் ஒன்று இங்கும் அங்கும் திரிந்துகொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு இடத்தில் அதன் ஒரு கழுத்துக்கு அமிர்தம் கிடைத்தது. அப்போது அதைப்பார்த்து ‘’அதில் எனக்குப் பாதி கொடு’’ என்று இரண்டாவது கழுத்து கேட்டுக்கொண்டது. முதல் கழுத்து மறுத்துவிடவே இரண்டாவது கழுத்துக்குக் கோபம் வந்துவிட்டது. எங்கோ விஷத்தைத் தேடிப் பிடித்துச் சாப்பிட்டுவிட்டது. இரண்டுக்கும் வயிறு ஒன்றுதான். எனவே அந்தப் பறவை செத்துப் போயிற்று.

அதனால்தான் ‘ஒரே வயிறும், இரண்டு கழுத்துகளும் உள்ள பாருண்டப் பறவைகள்…’ என்ற செய்யுளைச் சொல்கிறேன். ஒற்றுமையே பலம் தரும்’’ என்றது சித்ரகிரீவன்.

உயிர்மேல் ஆசைக்கொண்டிருந்த அந்தப் புறாக்கள், இதைக் கேட்டு ஒன்றாய்ச் சேர்ந்து வலையைத் தூக்கிக்கொண்டு, அம்புபோல் ஆகாயத்தில் கிளம்பி விட்டன. வானத்தில் ஒரு விதானம் அமைந்தது போல் வலையை விரித்துக் கொண்டு பயமில்லாமல் பறந்து போயின.

புறாக்கள் வலையைத் தூக்கிச் செல்வதைப் பார்த்து வேடன் ஆச்சரியமடைந்தான், உயரப் பார்த்தபடியே, ‘’இதற்குமுன் இப்படிப்பட்ட காட்சியை நான் கண்டதேயில்லை!’’ என்று யோசித்தான்.

அந்தப் புறாக்கள் ஒன்று சேர்ந்து ஒத்துப்போகிறவரை வலையைக் கொண்டு போக முடியும். அவற்றிடையே வேற்றுமைகள் கிளம்பிவிட்டால் அந்த வினாடியெ அவை என்வசமாகிவிடும்.

என்று ஒரு செய்யுளைச் சொன்னான்.

இந்த எண்ணத்தோடு வேடன் புறாக்களைப் பின்தொடர்ந்து சென்றான். அந்தக் கொடியவன் பின் தொடர்வதைச் சித்ரகிரீவன் பார்த்து விட்டது. அவன் எண்ணத்தையும் புரிந்துகொண்டது. கொஞ்சங்கூட மனம் கலங்காமல் மலைகளும் மரங்களும் அடர்ந்த கரடுமுரடான பிரதேசத்தின் மேல் அது பறக்கத் தொடங்கியது.

சித்ரகிரீவனின் அறிவு நிறைந்த செய்கையையும், வேடனின் குரூர சிந்தனையையும் கண்டு லகுபதனகனும் ஆச்சரியப்பட்டுப் போயிற்று. அடிக்கடி மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருந்தது. இரை தேடும் யோசனையை அதற்கு இல்லாமல் போயிற்று. ‘’அது ஒரு மகாத்மா. இவன் ஒரு துராத்மா. இருவரும் இனி என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்’’ என்று எண்ணியபடியே, மிகுந்த ஆவலோடு தானும் புறாக்களைப் பின் தொடர்ந்து சென்றது.

கடைசியில், கரடுமுரடான பாதையால் புறாக்கள் தப்பித்துத் தங்களைக் காப்பாற்றிக் கொண்டதை வேடன் தெரிந்து கொண்டான்.

விதியின்றி ஒன்றும் நடக்காது. விதியிருந்தால் முயற்சியின்றியே எதுவும் நடக்கும். விதியில்லை என்றால் கைக்கு எட்டினதுகூட வாய்க்கு எட்டாமற் போய்விடும் என்று சொன்னான்.

மேலும்,

விதி மட்டும் சதி செய்தால், இருக்கிற செல்வத்தையும் வந்த செல்வம் வாரிக்கொண்டு போய்விடும். மந்திரத்தாலான பொற்குவியல் மறைவதுபோல் மறைந்து போய்விடும்.

என்று சொன்னான்.

‘’புறாக்கள்தான் தின்னக் கிடைக்காமல் போய் விட்டன என்றால், என் குடும்பத்தைக் காப்பாற்றிவந்த வலையும் போய்விட்டதே!’’ என்று சொல்லி, மிகுந்த ஏமாற்றத்துடன் வேடன் திரும்பிப் போய்விட்டான்.

நிராசையோடு வேடன் திரும்பிப் போகிறதைச் சித்ரகிரீவன் பார்த்து விட்டு, புறாக்களிடம், ‘’நண்பர்களே, இனி நாம் நிம்மதியாகப் போகலாம். அந்தத் துஷ்ட வேடன் திரும்பிப் போய்விட்டான். நாம் பிரமதாரூப்ய நகரத்துக்குப் போவதுதான் சரி. அதன் வடகிழக்குப் பாகத்தில் ஹிரண்யன் என்றொரு எலி இருக்கிறது. அது என் உயிர் நண்பன். நம்மைக் கட்டிப் போட்டிருக்கும் வலையை அது ஒரு நொடியில் அறுத்துவிடும். இந்த ஆபத்திலிருந்து நம்மை விடுவிக்க அதற்குத் திறமையுண்டு’’ என்று சொல்லிற்று.

ஹிரண்யன் என்ற எலியைக் காண விரும்பிய புறாக்கள் எல்லாம் சித்ரகிரீவன் சொன்னபடியே செய்தன. ஹிரண்யன் கோட்டை போல் ஆக்கிக் கொண்டிருந்த வளையை நெருங்கியதும் புறாக்கள் கீழிறங்கின.

முன்பு அங்கே,

நீதி சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற எலி (ஹிரண்யன்) ஆபத்து வருவதை எதிர்பார்த்து நூறு வாயில்களுள்ள வளையொன்றைச் செய்துகொண்டு இருந்து வந்தது.

அப்படி இருக்கையில், பறவைகள் இறங்கும் சத்தத்தைக் கேட்டதும் ஹிரண்யன் நடுங்கிவிட்டது. பூனைக்காலுக்கு எட்டாத தூரத்தில் வளையின் ஒரு வாயிலில் வந்து நின்றுகொண்டது. ‘’இது என்னவாக இருக்கலாம்?’’ என்று வியந்தபடியே சுற்று முற்றும் பார்த்தது.

அந்த வளையின் வாயிலில் சித்ரகிரீவன் இருந்துகொண்டு ‘’நண்பா! ஹிரண்யா! சீக்கிரம் வெளியே வா. நான் படுகிற அவஸ்தையை வந்து பார்!’’ என்றது.

அதைக்கேட்ட ஹிரண்யன், வளைக்குள் இருந்தபடியே, ‘’ஐயா, நீங்கள் யார்? எதற்காக வந்திருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன துன்பம் நேரிட்டிருக்கிறது? சொல்லுங்கள்’’ என்று விசாரித்தது.

‘’நண்பனே, நான் புறாக்களின் அரசன். உன் சிநேகிதனாகிய சித்ரகிரீவன். சீக்கிரமாக வெளியே வா’’ என்றது சித்ரகிரீவன்.

இந்தச் சொற்களைக் கேட்டதும் ஹிரண்யனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது; உள்ளத்தில் ஆனந்தம் பொங்கியது.

அன்பு கனிந்த நண்பர்கள் தினந்தோறும் வீட்டுக்கு விஜயம் செய்தால் கண்ணுக்கு மகிழ்ச்சியாயும், மனத்துக்கு ஆனந்தமாயும் இருக்கிறது

என்று சொல்லிக்கொண்டே எலி வெளியே வந்தது.

சித்ரகிரீவனும் அதன் பரிவாரங்களும் வலையில் சிக்கிக்கொண்டு இருப்பதைக் கண்டுவிட்டு, வருத்தத்தோடு, ‘’நண்பனே, என்ன இது? எப்போது ஏற்பட்டது? சொல்லுங்கள்’’ என்றது ஹிரண்யன்

‘’நண்பனே, அதை ஏன் கேட்கிறாய்? உனக்குத்தான் தெரியுமே!

எங்கிருந்து வரவேண்டுமென்றிருக்கிறதோ அங்கிருந்து தான் வரும்; யாரால் எது எப்படி ஆகவேண்டுமென்று இருக்கிறதோ அப்படியே அவனால் அது நடக்கும்; எப்பொழுது நடக்க வேண்டுமென்றிருக்கிறதோ அப்பொழுதுதான் அது நடக்கும்; எவ்வளவு காலத்துக்கு நடக்க வேண்டு மென்று இருக்கிறதோ அவ்வளவு காலத்துக்கு நடந்தே தீரும்; எங்கு நடக்க வேண்டுமென்று இருக்கிறதோ அங்கு நடந்தே தீரும். நல்லதும் கெட்டதும் விதிப்படிதான் நடந்தேறுகின்றன

என்று ஒரு பழமொழி கூறுகின்றது. மேலும்,

நீலோற்பல மலரைப் பழிக்கும் ஒளி பொருந்திய ஆயிரங் கண்களோடு உலகத்தைக் காண்பதாக மயில் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் மரண பயம் ஏற்பட்டவுடன் அது பிறவிக் குருடன் போல் நடந்துகொள்கிறது.

நூற்றிருபத்தைந்து யோஜனைகளுக்கும் அப்பாலுள்ள மாமிசத்தை கழுகு பார்த்துவிடுகிறது. என்றபோதிலும், அது விதிவசமாகிறபோது பக்கத்திலுள்ள வலையைக் காண்பதில்லை.

சந்திர சூரிய கிரகணங்களையும், யானை, பாம்பு, பறவைகள் படிபடுவதையும், அறிவாளிகள் ஏழைகளாக இருப்பதையும் பார்க்கிறபோது, விதி கொடிய பலசாலிதான்

என்று எண்ணுகிறேன். ஏனென்றால்,

வானத்தில் தனியே விளையாடித் திரியும் பறவைகளுக்கும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஆழமிக்க கடலின் அடியிலிருக்கிற மீன்களையும் திறமை மிகுந்தவர்கள் பிடித்து விடுகின்றனர். நல்ல நடத்தை கெட்ட நடத்தை என்று இங்கு என்ன இருக்கிறது? குணம் மட்டும் காணக்கிடக்கிறது எங்கே, வெகு தொலைவிலிருந்தபடியே காலன் தனது சாவுக்கரத்தை நீட்டிப் பறித்து விடுகிறான்.

இவ்வாறு சித்ரகிரீவன் பேசிய பிறகு, ஹிரண்யன் அதன் கட்டை அறுக்க முற்பட்டது. உடனே சித்ரகிரீவன் அதைத் தடுத்து, ‘’நண்பனே, அப்படிச் செய்வது சரியல்ல. என் கட்டை அறுப்பதற்கு முன் என் பரிவாரங்களின் கட்டை அறுத்துவிடு!’’ என்றது. இதைக் கேட்டதும் ஹிரண்யனுக்குக் கோபம் வந்தது. ‘’நண்பனே, நீ சொல்வது சரியல்ல, எஜமானருக்குப் பிறகுதான் வேலையாட்கள் எல்லாம்’’ என்றது.

‘’அப்படிச் சொல்லாதே! பாவம், இவையெல்லாம் மற்ற பறவைகளை விட்டு வந்து என்னை அண்டிப்பிழைக்கின்றன. இந்தச் சிறிய மதிப்புக்கூட இவைகளுக்கு நான் காட்டாமல் இருப்பதா?

தங்கள் தகுதிக்கு மேலாகவே தங்களுக்கு மதிப்புக் கொடுத்து நடத்துகிற அரசனை வேலையாட்கள் விட்டுப்போவதில்லை. அரசனிடம் செல்வம் இல்லாத காலத்திலும் மனம் வாடாமல் ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

என்று ஒரு பழமொழி உண்டு. மேலும்,

நம்பிக்கையே அதிகாரத்தின் அடிப்படை. அதைப் பெற்றுத்தான் மிருகம் ராஜ பதவியை அடைகிறது. பிறவியிலேயே சிங்கம் அரசனாகப் பிறந்த போதிலுங்கூட, இந்த நம்பிக்கையைப் பெறாவிட்டால் அது கொடுங் கோலனாகத்தான் ஆட்சி செய்ய முடியும்.

அத்துடன் இன்னொரு விஷயமும் உண்டு. என் கட்டை அறுத்த பிறகு உனக்கு ஒருவேளை பல்வலி ஏற்படலாம். அல்லது அந்தத் துஷ்ட வேடன் திரும்பி வரலாம். அவ்விதம் நேர்ந்தால் எனக்கு நரகம் தான் கிடைக்கும்.

விசுவாசமுள்ள வேலையாட்கள் கஷ்டப்படுவதைக் கண்டு திருப்தி அடைகிற அரசன் இகலோகத்தில் துன்பத்தையும், பரலோகத்தில் நரகத்தையும் அடைகிறான்.

என்று ஒரு பழமொழி கூறுகிறது’’ என்றது சித்ரகிரீவன்.

‘’ஆம், அந்த ராஜதர்மத்தை நானும் அறிவேன்’’ என்றது ஹிரண்யன். ‘’உன்னைச் சோதிக்கவே நான் அப்படிச் சொன்னேன். எல்லோருடைய கட்டுக்களையும் நான் அறுத்துவிடுகிறேன். உனக்கு ஒரு பெரிய பரிவாரமாக அவை இருந்துவரும்.

நல்லவற்றில் வேலையாட்களுக்கும் தகுந்த பங்கு தந்து கருணையோடு நடந்து கொள்கிற அரசன் மூவுலகங்களையும் ஆள்வதற்குத் தகுதி பெறுகிறான்.

இவ்வாறு சொல்லிவிட்டு ஹிரண்யன் புறாக்களின் கட்டுக்களை எல்லாம் அறுத்தெரிந்தது. சித்ரகிரீவனைப் பார்த்து ‘’நண்பனே, இனி நீ உன் இடத்துக்குப் போகலாம்’’ என்றது. சித்ரகிரீவன் தன் பரிவாரத்தோடு தன் இருப்பிடத்துக்குப் போய்விட்டது.

சாதிக்க முடியாத காரியத்தையும் நண்பர்களைக்கொண்டு ஒருவன் சாதித்துவிட முடியும். ஆகவே, நண்பர்களைத் தேடிக்கொள்! அவர்களை உன் சொத்துக்குச் சமமாக நினைத்துக்கொள்!

என்ற வாக்கில் எவ்வளவு விவேகம் இருக்கிறது!

சித்ரகிரீவன் வலையில் சிக்கிக் கொண்டதையும் பிறகு விடுதலை பெற்றதையும் பார்த்து லகுபதனகன் ஆச்சரியமடைந்தது. ‘ஆஹா, இந்த ஹிரண்யனுக்குத்தான் என்ன அறிவு. என்ன திறமை! அதன் கோட்டைதான் எவ்வளவு விசித்திரமாயிருக்கிறது! ஹிரண்யனை நண்பனாக்கிக்கொள்வது எனக்கும் தகும். நான் யாரையும் நம்பாத சந்தேகப் பிராணிதான். யாராலும் என்னை ஏமாற்ற முடியாதுதான். என்றாலும், எனக்கும் ஒரு சிநேகிதன் இருக்க வேண்டும்.

தனக்கு வேண்டியதைத் தானே செய்துகொள்ளும் திறமை இருந்தாலும் கூட ஒருவனுக்கு நண்பர்கள் இருப்பது அவசியம். குறைவு படாதபடி சமுத்திரம் எப்பொழுதும் நிரம்பித்தான் இருக்கிறது. என்றாலும் அது ஸ்வாதி நட்சத்திரத்திடமிருந்து மழையை எதிர்பார்க்கிறது அல்லவா?

இவ்வாறு லகுபதனகன் யோசித்துவிட்டு மரத்திலிருந்து பாய்ந்து இறங்கி வளையின் வாயிலை அடைத்து, -முன்பே எலியின் பெயரைக் கேட்டிருந்தபடியால் – நண்பா, ஹிரண்யா! வெளியே வா’’ என்று கூப்பிட்டது.

ஹிரண்யன் அதைக் கேட்டு, ‘கட்டிலிருந்து விடுதலை பெறாத வேறு எதாவது புறாவாக இருக்குமோ? அதனால்தான் என்னைக் கூப்பிடுகிறதோ?’ என்று நினைத்து, ‘’ஐயா, நீங்கள் யார்?’’ என்று கேட்டது.

‘’நான் ஒரு காக்கை. என் பெயர் லகுபதனகன்’’ என்றது காக்கை.

இதைக்கேட்டதும் ஹிரண்யன் இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி வளையில் இருந்துகொண்டே, ‘’அன்புள்ள ஐயா, இந்த இடத்தை விட்டுப் போய் விடுங்கள்’’ என்றது.

‘’உன்னிடம் ஒரு முக்கியமான காரியமாக வந்திருக்கிறேன். என்னைப் பார்க்கத் தயவு செய்து வெளியே வா!’’ என்றது காக்கை.

‘’உன்னைத் தெரிந்துகொள்வதில் எனக்கு ஒரு லாபமும் இல்லை’’ என்றது எலி.

‘’நண்பனே! சித்ரகிரீவனை நீ கட்டிலிருந்து விடுவித்ததைப் பார்த்து உன்மேல் எனக்கு அபார நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. நானும் எப்போதாவது சிக்கிக் கொள்ள நேரிடலாம். அப்போது உன் மூலம் எனக்கு விடுதலை கிடைக்கும். ஆகவே நீ என் நண்பனாக வேண்டும்’’ என்றது காக்கை.

‘’நீ என்னைத் தின்கிறவன். நான் உனக்குத் தீனியாயிற்றே! உன்மேல் எனக்கு எப்படி நேசபாசம் ஏற்படும்?

தமது பரஸ்பர அந்தஸ்தின் உயர்வு தாழ்வுகளைப் பார்க்காமல் நட்புகொள்கிறவர்கள் மூடர்களே. அவர்களை மக்கள் பரிகசிப்பார்கள்.

என்று ஒரு பழமொழி கூறுகிறது. ஆகையால், நீ போய்விடு’’ என்றது எலி.
‘’இதோ பார், உன் வளை வாசலில் இப்படியே உட்கார்ந்து விடுகிறேன்; நீ என் நண்பன் ஆகாமற்போனால் பட்டினி கிடந்து சாகிறேன்’’ என்றது காக்கை.

‘’நீ என் எதிரியாயிற்றே! உன்னோடு நான் எப்படி சிநேகம் பாராட்ட முடியும்?

கொடிய பகைவர்களின் குணம் எவ்வளவுதான் மாறுபட்டுப் போனாலும் அவர்களுடன் சேராதே! கொதிக்கிற நீரும் நெருப்பை அணைக்கிறதல்லவா?

என்று ஒரு பழமொழி உண்டு’’ என்றது எலி.

‘’நீ என்னைப் பார்த்ததே இல்லையே! பிறகு சண்டை எங்கிருந்து உண்டாகும்? இந்த வீண் பேச்செல்லாம் எதற்கு?’’ என்றது காக்கை.

‘’ஐயா, பகை இரண்டு வகைப்பட்டது. இயற் பகை, செயற் பகை என்று. நீ என் இயற்கைப் பகைவன்.

செயலால் ஏற்பட்டட பகை, வேறு சில செயல்களால் மறைந்து போகிறது. ஆனால் இயல்பாயுண்டான பகை உயிர் போகிறவரைக்கும் மறைவதில்லை.

என்று ஒரு பழமொழி உண்டு’’ என்றது எலி.

‘’அந்த இருவகைப் பகைகளின் குணாதியங்களை அறிய விரும்புகிறேன்’’ என்றது காக்கை.

‘’அப்படியானால் கேள். செயற் பகை என்பது ஏதோ ஒரு காரணத்தால் உண்டாகிறது. தகுந்த பரிகாரம் செய்தால் அது மறைந்துவிடும். அதற்கு மாறாக, இயற்பகை என்பது ஒருபொழுதும் மறையாது. கீரியும் பாம்பும்; மாமிசபட்சணியும் சாகப்பசணியும்; நீரும் நெருப்பும்; தேவர்களும் அசுரர்களும்; நாயும் பூனையும்; சக்களத்திகளும்; சிங்கமும் யானையும்; வேடனும் மானும்; காக்கையும் ஆந்தையும்; அறிவாளியும் மூடனும்; பதிவிரதையும் விபசாரியும்; சாதுவும் துஷ்டனும்; இவர்களிடையே நிரந்தரமான பகை இருக்கிறது. யாரோ எவனையோ அல்லது எவனுக்கு வேண்டியவனையோ கொன்றான் என்பதனால் இந்தப்பகை ஏற்பட்டதில்லை. ஆனாலும் உயிர் போகும்வரை அவர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்’’ என்றது எலி.

‘’அது அர்த்தமில்லாத விஷயமாக இருக்கிறதே! என் பேச்சைக் கேள்;

நட்புக்கும் ஒரு காரணம் உண்டு; பகைமைக்கும் ஒரு காரணம் உண்டு. அப்படியென்றால் அறிவாளிகள் நட்பைத் தேட வேண்டும், பகைமையைத் தவிர்க்க வேண்டும்.

என்றது காக்கை.

‘’உனக்கும் எனக்கும் மத்தியிலே என்ன கொடுக்கல் வாங்கல் இருக்கமுடியும்? நீதி நூலின் சாரத்தைக் கேள்!

நம்பிக்கைத் துரோகம் செய்த நண்பனை மறுமுறையும் ஒருவன் நேசித்தால், கர்ப்பம் தரித்த கோவேறு கழுதைக்கு சாவு எப்படி நிச்சயமோ, அப்படியே அவனுக்கும் சாவு நிச்சயம்.

மொழியிலக்கணத்தின் தந்தையான பாணினியை ஒரு சிங்கம் கொன்றது. மீமாம்ஸ தத்துவ தரிசனம் அருளிய ஜைமினி முனிவரை ஒரு மதயானை கொன்றது. யாப்பிலக்கணத்தின் பொக்கிஷமாகிய பிங்கள முனிவரைக் கடற்கரையில் ஒரு முதலை கொன்றது. ஞானமில்லாத மூட மிருகங்களுக்கு மேதாவிகளின் குணசாதனைகள் என்ன தெரியும்?’’
என்றது எலி.

‘’நீ சொல்வது சரிதான். ஆனாலும் கேள்!

காரணத்தை உத்தேசித்து மிருகங்களும் பறவைகளும் நண்பர்களாகின்றன. உதவி செய்ததை உத்தேசித்து சாதாரண ஜனங்கள் நண்பர்களாகின்றனர். பயத்தையோ அல்லது பேராசையையோ உத்தேசித்து மூடர்கள் நண்பர்களாகின்றனர். ஆனால், பார்த்த மாத்திரத்திலேயே நல்லவர்கள் நண்பர்களாகி விடுகின்றனர்.

மண் குடம் சீக்கிரமாக உடைந்து போகும்; ஆனால் மறுபடியும் அதை உருப்பெறச் செய்வது முடியாத காரியம். துஷ்ட நண்பனும் இந்த மண் குடம் மாதிரிதான்! பொற்குடம் சுலபத்தில் உடையாது. உடைந்தாலும் மறுபடியும் சரி செய்துவிட முடியும். நல்ல நண்பனும் இந்தப் பொற்குடம் மாதிரிதான்!

நுனியிலிருந்து தொடங்கிச் சென்றால் கணுவுக்குக் கணு கரும்பின் ருசி அதிகமாவதுபோல், நல்லவர்களின் நட்பும் வளர்ந்து கொண்டே யிருக்கும். மற்றவர்களின் நட்பு தேய்ந்துகொண்டே போகும்.

நான் நேர்மையானவன் என்பதை நம்பு. சத்தியங்கள் செய்து அதை உறுதிப்படுத்த ந £ன் தயார்’’ என்றது காக்கை.

‘’உன் சத்தியங்களை நான் நம்பமுடியாது. ஒரு பழமொழி கூறுவதுபோல்,

விரோதி சத்தியம் செய்து கொடுத்திருந்தாலும் அவனை நம்பாதே! விருத்திரன் என்ற அசுரன் சத்தியம் செய்து கொடுத்திருந்தபோதிலும் அவனை இந்திரன் கொன்றான்.

எதிரிகளின் நம்பிக்கையைப் பெற்ற பிறகுதான் தேவர்களும் அவர்களை வெற்றிகொள்கிறார்கள். திதியின் நம்பிக்கையைப் பெற்ற பிறகுதான் இந்திரன் அவள் கர்ப்பத்தை அழித்தான்.

சின்னஞ்சிறு ஓட்டையின் வழியே மெள்ள நீர் புகுந்து படகைக் கவிழ்த்து விடுகிறது. அதேமாதிரி, மிகநுட்பமான நமது பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டு பகைவன் உள்ளே நுழைந்து நம்மை நாசம் செய்கிறான். மெள்ள மெள்ள விரோதியின் பணவசதிகளைப் பார்த்து அவனை நம்புகிற மனிதனும், அன்பில்லாத மனைவியை நம்புகிற மனிதனும், உடனே சாவார்கள்.
என்றொரு பழமொழி உண்டு’’ என்றது எலி.

இதைக் கேட்டதும் காக்கை மௌனமாகி யோசிக்கத் தொடங்கியது. ‘’ஆஹா, நீதி சாஸ்திரத்தில்தான் இவனுக்கு என்ன அறிவு! அதற்காகவென்றே இவனை நான் நண்பனாக்கிக் கொள்ளவேண்டும்’’ என்று எண்ணிற்று. பிறகு வெளிப்படையாகப் பேசிற்று:

உண்மை நட்பு என்பது ஏழு வார்த்தைகளில் அடங்குகிற பொருள் என்று சான்றோர் தெரிவிக்கின்றனர்.

நட்புக் கொள்ளும்படி உன்னைப் பலவந்தப்படுத்தினேன். என் கடைசி வார்த்தையையும் நீ கேட்டுவிடு! உன் நட்பை எனக்குத் தா! இல்லாவிட்டால் இங்கேயே உயிர் விடுவேன்’’ என்றது காக்கை.

ஹிரண்யன் யோசித்தது. ‘அவனுக்கு அறிவில்லாமல் இல்லை. அவன் பேச்சிலிருந்தே அது தெரிகிறது.

புத்தியற்றவன் முகஸ்துதி செய்ய மாட்டான். காமமற்றவன் அலங்காரப்பிரியன் ஆகமாட்டான். பற்றறுத்தவன் அதிகாரபீடத்தில் அமரமாட்டான். சத்தியம் பேசுபவன் வஞ்சகன் ஆகமாட்டான்.

ஆகையால் அவனுக்கு என் நட்பைத் தருவது அவசியம்’ என்று முடிவு செய்தது. பிறகு காக்கையைப் பார்த்து, ‘’நண்பனே, நீ என் நம்பிக்கையைப் பெற்றுவிட்டாய். உன் அறிவைச் சோதிக்கவே இப்படியெல்லாம் பேசினேன். இதோ, உன் மடியில் தலைவைத்துப் படுக்கிறேன். பார்!’’ என்று சொல்லிக் கொண்டே வெளியே வரத் தொடங்கியது. ஆனால் பாதி வழி வந்ததும் நின்று விட்டது.

‘’இன்னும் என்மேல் ஏதாவது சந்தேகம் கொஞ்ச நஞ்சம் இருக்கிறதா, என்ன? வளையிலிருந்து வெளியே வரமாட்டேன் என்கிறாயே!’’ என்றது காக்கை.

‘’இல்லை. உன் மனத்தைச் சோதித்துவிட்டேன். உன்னிடம் எனக்குப் பயமே கிடையாது. ஆனால், உன்னை நம்புகிற எனக்கு உன் நண்பர்கள் யாராவது தீங்கு செய்தால் என்ன செய்வது?’’ என்றது எலி.

காக்கை சொல்லிற்று:

ஒரு உண்மைச் சிநேகிதனைக் கொல்வதின் மூலமாக இன்னொரு சிநேகிதனைத் தேடிக் கொள்கிறவனை, நெல்லிலிருந்து பதரை விலக்கி விடுவதுபோல், விலக்கிவிட வேண்டும்.

http://puthu.thinnai.com/?p=8735

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 32- பாருண்டப் பறவைகள்

அன்னபூர்னா ஈஸ்வரன்

 

இந்தச் சொற்களைக் கேட்டதும், ஹிரண்யன் வெளியே ஓடி வந்தது. இரண்டும் அன்புடன் பேசிப் பழகின. சிறிது நேரமானவுடன் லகுபதனகன், ‘’நீ வலைக்குள் போய்விடு. நான் போய் இரை தேடிக்கொண்டு வருகிறேன்’’ என்று ஹிரண்யனிடம் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டுச் சென்றது. ஏதோ ஒரு காட்டுக்குப் பறந்து போயிற்று. அங்ளே ஒரு புலி கொன்று போட்டிருந்த காட்டெருமையைக் கண்டது. வயிறு நிறைய அதைத் தின்ற பிறகு, செம்பரத்தைப்பூபோல செக்கச் செவேலென்றிருக்கும் மாமிசத் துண்டம் ஒன்றை எடுத்துக்கொண்டு திரும்பிந்து, ‘’ஹிரண்யனே; வெளியே வா, நான் கொண்டு வந்திருக்கும் இந்த மாமிசத்தைச் சாப்பிடு’’ என்று அழைத்தது. காக்கை வெளியே சென்றிருக்கும் போது ஹிரண்யனும் முன்யோசனையோடு அரிசியும் தானியமும் தன் நண்பன் சாப்பிடுவதற்காகத் திரட்டித் தாயாராக வைத்திருந்தது. எனவே, ‘’நண்பனே, என்னால் முடிந்த அளவுக்கு அரிசி சேர்த்து வைத்திருக்கிறேன். சாப்பிடு’’ என்று ஹிரண்யனும் சாப்பிட்டது. இதனால் இவருவரிடையிலும் உவகை மிகுந்து, அன்பு பேணும் முறையில் உட்கார்ந்து சாப்பிட்டன. ஆஹா, நட்புக்கு வித்திடுவது இந்தச் செய்கைதானே! ஒரு பழமொழி கூறுவபோல்,

தருவது, பெறுவது; மனம் விட்டுப் பேசுவது, கேட்பது; விருந்து உண்பது, விருந்து படைப்பது; இவை ஆறும் நட்புக்கு அடையாளங்கள் அல்லவா?

நல்லுதவி செய்யாமல் நட்பு பிறவாது; யாருக்கும் எப்படியும் கிடைக்காது. ஈகை செய்வதால் தேவர்களும் திருப்தியடைகிறார்கள்.

ஈகை உள்ளவரை நட்பும் பாராட்டப்பெறும், ஈகையொழித்தால் நட்பும் நலிந்தொழியும். மடி வற்றிப் போனால் தாய்ப்பசுவைக் கன்றுகூட விட்டுப் பிரிந்து விடுகிறது.


என்றும் பழமொழி உண்டு. சுருங்கச் சொன்னால், எலியும் காக்கையும் நிரந்தரமான நட்புடன் ஒழுகின. அவற்றிடையே வளர்ந்த நட்பு திடமானது. நகமும் சதையும்போல் இணைபிரியாமல் வாழ்ந்து வந்தன.

காக்கையின் நல்லுபசாரங்களும் நற்செய்கைகளும் எலியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. அதன்மேல் எலிக்கு அளவுகடந்த நம்பிக்கை உண்டாயிற்று. காக்கையின் இறக்கைகளுக்கிடையே நிம்மதியாக தங்கும் அளவுக்கு எலிக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.

ஒருநாள் காக்கை திரும்பிவந்தபோது அதன் கண்களில் நீர் நிறைந்திருந்தது. விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தது. ‘’நண்பனே, இந்த நாட்டை நான் வெறுக்கத் தொடங்கிவிட்டேன். வேறு எங்காவதுப் போகப் போகிறேன்’’ என்று தழதழத்த குரலில் எலியிடம் சொல்லிற்று.

‘’வெறுப்பு அடையக் காரணம் என்ன?’’ என்று கேட்டது எலி.

‘’சொல்கிறேன், கேள். மழை தவறிப்போய் இந்த நாட்டில் பயங்கரமான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. நகரத்தில் ஜனங்கள் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர். இப்பொழுதெல்லாம் அவர்கள் காக்கைகளுக்குப் பலியாக அன்னம் வைக்கிறதில்லை. அதுமட்டுமா? பறவைகளைப் பிடிப்பதற்காக வீட்டுக்கு வீடு வலை விரித்து வைத்திருக்கிறார்கள். எனக்கு என்னமோ ஆயுள் மிச்சமிருக்கிறதுபோலும், அதனால்தான் சிக்காமல் இருந்து வருகிறேன். இருந்தபோதிலும், வேற்று நாட்டுக்குச் செல்வதைப் பற்றி நினைக்க நினைக்க அழுகை வருகிறது. வேறிடம் போவதற்குக் காரணம் இதுதான்’’ என்று காக்கை விளக்கியது.

‘’சரி. போகிறது என்றால் எங்குதான் போவாய்?’’ என்று கேட்டது எலி.

‘’தென்கோடியில் அடர்ந்த காட்டின் மத்தியிலே பெரிய ஏரி ஒன்றிருக்கிறது. அங்கே மந்தரகன் என்ற ஆமை இருக்கிறது. அது என் உயிர் நண்பன்; உன்னைவிட எனக்கு நெருங்கிய நண்பன். அது எனக்கு மீன் துண்டுகள் கொடுக்கும். மீன் துண்டுகளை நான் சீக்கிரமாக ஜீரணிக்க முடியும். அந்த ஆமையோடு இருந்து, நகையும் சுவையும் கலந்த பேச்சுக்களைப் பேசி, ரசமாகப் பொழுதைக் கழிப்பேன். இன்னொரு விஷயம், பறவைகளை இப்படிச் சாகடிப்பதைக் காணச் சகிக்கவில்லை.

குடும்பத்தில் சாவு ஏற்படுவதையும், நண்பனுக்குச் சங்கடம் ஏற்படுவதையும், மனைவி சோரம் போவதையும், நாடு நாசமாவதையும், காணப்பெறாமலிருப்பவனே பாக்கியசாலி.

என்றொரு பழமொழி தெரிவிக்கிறது’’ என்றது காக்கை.

‘’அப்படியானால் நானும் உன்னோடு வருகிறேன். எனக்கும் ஒரு பெரிய துக்கம் ஏற்பட்டிருக்கிறது என்றது எலி.

‘’என்ன துக்கம் உனக்கு?’’ என்றது. காக்கை,

‘’அது ஒரு பெரிய கதை. சொல்லுவதற்கு நிறைய இருக்கிறது. அங்கு போனபின் விவரமாகச் சொல்கிறேன்’’ என்றது எலி.

‘’நான் ஆகாயத்தில் பறந்து போகிறேன். நீயோ தரையில் ஓடுபவன். நீ எப்படி என்னோடு வரமுடியும்?’’ என்று கேட்டது காக்கை.

‘’என் உயிரைக் காப்பதில் உனக்கு அக்கறை இருக்குமானால் என்னை உன் முதுகில் சுமந்துகொண்டு மெல்ல பறந்துபோ!’’ என்றது எலி.

காக்கைக்கு ஒரே சந்தோஷம். ‘’நான் கொடுத்து வைத்தவன்தான். என்னைவிட பாக்கியசாலி வேறு யாருமில்லை. நீ சொன்னபடியே செய்யலாம். முழுவேகத்தில் பறப்பது முதலாக, பறப்பதில் எட்டுவிதங்கள் உண்டு. அவை எட்டும் எனக்குத் தெரியும். எனவே, உன்னைச் சௌகரியமாகக் கூட்டிச் செல்வேன்’’ என்றது காக்கை.

‘’நண்பனே, பறப்பதில் எட்டு வகை உண்டு என்றாயே? அவை என்னென்ன? அவற்றின் பெயரைச் சொல்’’ என்று கேட்டது எலி.
காக்கை சொல்லிற்று:

முழு வேகத்தில் பறப்பது, பாதி வேகத்தில் பறப்பது, மேல் நோக்கிப் பறப்பது, தொலைதூரம் உயரத்தில் பறப்பது, வட்டத்தில் பறப்பது, நேராகப் பறப்பது, கீழ்நோக்கிப் பறப்பது, மெதுவாகப் பறப்பது – என்றபடி பறப்பது எட்டு வகைப்படும்.

இதைக்கேட்ட ஹிரண்யன் காக்கையின் முதுகின்மேல் ஏறிக்கொண்டது. காக்கை முழு வேகத்தில் பறந்தது. பிறகு மெல்லக் கீழிறங்கிப் பறந்து தன் நண்பனை ஏரிக்குக் கொண்டுவந்து சேர்த்தது.

எலியைச் சுமந்துகொண்டு ஒரு காக்கை பறந்து வருவதை மந்தரகன் (ஆமை) கண்டுவிட்டது. ஆமை சமயசந்தர்ப்பம் அறிந்த ஜந்து அல்லவா? வருவது யாரோ என்னவோ என்று சந்தேகித்து, உடனே நீரில் களுக்கென்று மூழ்கிச் சென்றுவிட்டது. லகுபதனகன் (காக்கை) ஏரிக்கரையிலுள்ள ஒரு மரப்பொந்தில் எலியை விட்டு விட்டு, மரக்கிளையின் நுனியில் உட்கார்ந்து கொண்டது. ‘’நண்பா, மந்தரகனே, வா, வெளியே! நான்தான் உன் நண்பனாகிய காக்கை. வெகுநாள் உன்னைப் பார்க்காமல் மனம் வாடி வந்திருக்கிறேன். வா, என்னை வந்து தழுவிக்கொள்!

நண்பனை நெஞ்சோடு சேர்த்துத் தழுவிக்கொள்வதில் உண்டாகிற குளுமைக்கு ஈடாக பச்சைக் கற்பூரம் கலந்த சந்தனமும், சில்லென்றிருக்கும் பனித்துளிகளும் குளுமை தருவதில்லை. அதில் ஒரு வீசம் கூட இவை தருவதில்லை.

என்றொரு முதுமொழி உண்டு’’ என்று உச்சஸ்தாயியில் காக்கை கூவி அழைத்தது.

இந்தச் சொற்களைக் கேட்டதும் ஆமை மிக உன்னிப்பாக மேலும் கீழும் பார்த்தது. நண்பனை அடையாளம் கண்டுகொண்டது. உடனே அதன் உடலெல்லாம் புளகித்தது; கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைந்தது. அவசர அவசரமாக நீரிலிருந்து வெளியே கரையேறி, ‘’உன்னை முதலில் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. என் தவறை மன்னித்துவிடு!’’ என்றது. மரத்திலிருந்து காக்கை இறங்கி வந்தவுடனே, ஆமை அதை இறுகத் தழுவிக்கொண்டது.

இப்படிப் பரஸ்பரம் ஆலிங்கனம் செய்து கொண்டபின், உள்ளும் புறமும் புளகாங்கிதமடைந்த நிலையிலே அவை இரண்டும் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டன. வெகுகாலமாக பிரிந்திருந்தபோது கிடைத்த அனுபவங்களையும் விஷயங்களையும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன. ஹிரண்யனும் வந்து மந்தரகனை வணங்கி விட்டுப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டது. அதைப் பார்த்தபடியே, லகுபதனகனிடம், ‘’நண்பனே, இந்த எலி யார்? இயற்கையிலே இது உனக்குத் தீனியாக இருக்கிறதாயிற்றே?’’ இதை உன் முதுகில் சுமந்து அழைத்து வருவானேன்?’’ என்று ஆமை கேட்டது.

‘’இது என் நண்பன், ஹிரண்யன் என்று பெயர். எனது இரண்டாவது உயிர்போல் இதை நான் கொண்டாடுகிறேன். சுருங்கச் சொன்னால்,

மழைத் துளிகளை எண்ணமுடியுமா? வானத்து நட்சத்திரங்களை எண்ண முடியுமா? பூமியிலுள்ள மணலை எண்ண முடியுமா? முடியாது.

அது போலத்தான். இதன் குணநலன்களையும் எண்ண முடியாது. இதன் உயரிய குணங்களைக் கணித சாஸ்திரத்தாலும் அளக்க முடியாது. அப்பேர்ப்பட்ட இந்த மகாத்மா விரக்தி நிறைந்த உள்ளத்துடன் இங்கு வந்திருக்கிறது’’ என்றது காக்கை.

‘’மனோவிரக்திக்குக் காரணம் என்ன?’’ என்று கேட்டது.

http://puthu.thinnai.com/?p=8924

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 33- பாருண்டப் பறவைகள்

அன்னபூர்னா ஈஸ்வரன்

 

ஹிரண்யனின் மனவருத்தம்

தென்னாட்டில் பிரமதாருப்யம் என்றொரு நகரம் இருக்கிறது. அதன் அருகாமையில் ஒரு சிவன்கோயில் உண்டு. அதை ஒட்டினாற்போல் இருந்த ஒரு மடாலயத்தில் பூடகர்ணன் என்றொரு சந்நியாசி இருந்து வந்தான். சாப்பிடுகிற வேளையில் பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவன் நகரத்திற்குப் போவான். சர்க்கரையும் வெல்லப் பாகும் மாதுளம் பழமும் கலந்த, வாயில் வைத்தவுடன் கரைகிற, பல இனிய தின்பண்டங்களைப் பாத்திரத்தில் நிறைத்துக் கொண்டு மடத்துக்குத் திரும்பி வருவான். பிறகு விதிமுறைப்படி அவற்றை உண்பான். மிகுதி உணவை வேலைக்காரர்களுக் கென்று அந்தப் பாத்திரத்திலேயே வைத்து மூடி மறைத்து சுவற்றில் ஒரு முளையில் தொங்கவிடுவான். நானும் என் பரிவாரங்களும் அதைத் தின்று பிழைத்து வந்தோம். இவ்விதமாகப் பல நாட்கள் சென்றன.

எவ்வளவோ முயற்சித்து மறைத்து வைத்தபோதிலும், அந்த உணவை நான் சாப்பிட்டுவிடுவதைக் கண்ட அந்தச் சந்நியாசி என்மீது வெறுப்பும் பயமும் கொண்டான். சோற்று மூட்டையை இடம் மாற்றியும் உயர உயர மாட்டியும் பார்த்தான். எல்லாம் வீண். நான் அதைச்சிரமமின்றி எட்டிப் பிடித்துச் சாப்பிட்டு வந்தேன்.

பிறகு ஒருநாள் பிருஹத்ஸ்பிக் என்ற முனிவர் ஒருவர் தீர்த்தயாத்திரை போகிற போக்கிலே அங்கு வந்து சேர்ந்தார். பூடகர்ணன் அவருக்கு நல்வரவு கூறி உபசாரங்கள் பல செய்தான். அவருடைய களைப்பைப் போக்கினான். இரவிலே இருவரும் படுக்கையில் படுத்துக்கொண்டு அறவழிப்பட்ட பல கதைகளை ஒருவர்க்கொருவர் சொல்லிக்கொள்ளத் தொடங்கினார்கள். பூடகர்ணனின் நினைவெல்லாம் எலியைப் பற்றித்தான் இருந்தது. பிளந்த மூங்கில் கழி ஒன்றைக் கையில் கொண்டு பிச்சைப் பாத்திரத்தை அடிக்கடி தட்டிக்கொண்டிருப்பதிலேயே அவனுடைய மனம் லயித்திருந்தது. கதை சொல்லும் தபஸ்விக்கு அவன் சரியாகப் பதில் சொல்லவில்லை.

ஆகவே, விருந்தாளிக்குக் கோபம் வந்துவிட்டது. ‘’பூடகர்ணனே, உனக்கு என்மேலிருந்த அன்பு போய்விட்டது என்பதைத் தெரிந்து கொண்டேன். என்னிடம் நீ மனம்விட்டுப் பேசவில்லை. இரவு வேளையாயிருந்தாலும் பரவாயில்லை. இப்பொழுதே உன் மடத்தைவிட்டு வேறு எங்காவது போய் விடுகிறேன்.

‘’வாருங்கள்! உள்ளே வாருங்கள்! இப்படி ஆசனத்தில் உட்காருங்கள்! சௌக்கியம்தானே? உங்களைப் பார்த்து எத்தனையோ நாட்களாயிற்றே! என்ன சேதி? ஏன் இப்படி இளைத்து விட்டிருக்கிறீர்கள்? உங்களைப் பார்த்ததில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?’’ இப்படித்தான் அன்புள்ளவர்கள் விருந்தாளிகளிடம் பலவாறான ஆதரவு மொழிகள் பேசுகின்றனர். இப்படிப்பட்டவர்களின் வீட்டுக்குத்தான் மன நிம்மதியோடு நண்பர்கள் போகத் தகும்.

விருந்தாளி வந்ததும் மேலும் கீழும் பார்க்கிறவனுடைய வீட்டுக்கு யார் விருந்துண்ணச் செல்கிறானோ அவன் கொம்பில்லாத மாடுதான்.

அன்பு கனித்த வரவேற்பு இல்லாத வீட்டுக்கும், இனிய சொற்கள் வழங்கி உபசரிக்காத வீட்டுக்கும், நல்லதையும் கெட்டதையும் மனம்விட்டுப் பேசாத வீட்டுக்கும், போகாதே!

என்று பழமொழிகள் கூறுகின்றன. கேவலம் இந்த ஒரு மடத்துக்குச் சொந்தக்காரன் என்ற மமதையால் நீ நமது நட்பை மறந்துவிட்டாய். இந்தப் பழமொழிகளின் உண்மையைப் புரிந்துகொள்ளாமற் போய்விட்டாய்! நீ மடத்தில் இருந்து வருகிறாய் என்றாலும் உண்மையிலேயே நீ நரகத்தில்தான் இடம் பிடித்துக்கொண்டிருக்கிறாய். எப்படி என்றால்,

நரகத்திற்குச் செல்ல உனக்கு விருப்பமா? இதோ ஒரு வழி சொல்கிறேன். ஒரு வருஷத்திற்குப் புரோகிதனாயிரு! நரகத்துக்குப் போய் விடலாம். இன்னும் சடுதியிலே போய்ச் சேர விருப்பமா? அப்படியானால், நீ மூன்று நாட்களுக்கு ஒரு மடத்துக்குத் தலைவனாயிரு! போய்ச் சேர்ந்து விடலாம்.

என்றொரு பழமொழி உண்டு. என்ன இரங்கத்தக்க மடமை! இதைப் பற்றி வருந்த வேண்டியிருக்க நீ கர்வப்படுகிறாயே!’’ என்று சொன்னார் முனிவர்.

பூடகர்ணன் இச்சொற்களைக் கேட்டு பயந்து போய்விட்டான். ‘’அப்படிச் சொல்லாதீர்கள், சுவாமி? உங்களைவிட நெருங்கிய நண்பர்கள் எனக்கு வேறு யாருமில்லை. நான் கவனிக்காமல் இருந்ததற்குக் காரணம் சொல்கிறேன். கேளுங்கள். இங்கே ஒரு துஷ்ட எலி இருக்கிறது. எனது பிச்சைப் பாத்திரத்தை எவ்வளவுதான் உயரத்தில் மாட்டித் தொங்கவிட்டாலும், அது எகிறித் குதித்து ஏறி மீதம் வைத்த உணவையெல்லாம் தின்று விடுகிறது. வேலைக்காரர்களுக்கு உணவே இல்லாமல் போய்விடுகிறது. அதனால் மடத்தைத் துப்புரவாக வைத்துக்கொள்ளும் வேலைகளைச் செய்ய அவர்கள் மறுக்கிறார்கள். எனவே எலியை பயமுறுத்துவதற்காக நான் பிச்சைப் பாத்திரத்தை மூங்கில் கழியால் அடித்தவாறிருக்கிறேன். இதுதான் விஷயம். இன்னொன்றும் சொல்ல வேண்டும். தான் குதிப்பதைக் கண்டால் பூனையும் குரங்கும்கூட வெட்கித் தலை குனியும் என்ற பூரிப்புடன் இந்த எலி திரிகிறது’’ என்றான் பூடகர்ணன்.

‘’அதன் வளை எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்தாயா?’’ என்று கேட்டார் முனிவர். ‘’இல்லை, சுவாமி!’’ என்றான் பூடகர்ணன்.

‘’அதன் தானியக் குவியலுக்கு மேலேதான் வளையும் இருக்க வேண்டும். அதன் வாசனையை முகர்ந்துதான் எலி இப்படித் துள்ளிக் குதிக்கிறது. ஏனெனில்,

பணத்தின் வாடை பட்டால் சரி, அதுவே மனின் தேசுவைத் தூண்டிவிடப் போதுமானது. தியாக புத்தியும், தர்ம சிந்தனையுமுள்ளவன் பணத்தை அனுபவிக்கவும் செய்கிறான் என்றால், பிறகு சொல்ல வேண்டியதில்லையே!

காரணமில்லாமல் சாண்டிலித்தாய் எள்ளுக்குப் பதிலாக தேய்க்காத எள்ளை அவள் பெற்றுக்கொண்டதற்குக் காரணம் ஏதாவது இருக்கத்தான் செய்யும்.
என்றொரு வாக்கு உண்டு’’ என்றார் முனிவர்.

‘’அது எப்படி?’’ என்று பூடகர்ணன் கேட்க, முனிவர் சொல்லத் தொடங்கினார்:

http://puthu.thinnai.com/?p=9246

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம்

அன்னபூர்னா ஈஸ்வரன்
 

 

அது மழைக்காலம். ஏதோ ஒரு ஊரில் ஒரு சமயம் ஒரு பிராமணனிடம் நான் தங்குவதற்கு இடம் கேட்டேன். அவனும் கொடுத்தான். அங்கே எனது அறச்செய்கைகளில் ஈடுபட்டவாறு நான் காலம் கழித்து வந்தேன்.

ஒருநாள் விடியற்காலையில் நான் விழித்துக்கொண்டேன். பிராமணனும் அவன் மனைவியும் தர்க்கம் புரிந்துக் கொண்டிருந்தார்கள். அதைக் காது கொடுத்துக் கேட்டவாறு இருந்தேன். பிராமணன் சொன்னான்: ‘’அன்பே, நாளைக் காலையில் தட்சிணாயன சங்கராந்தி வருகிறது. மிகவும் லாபகரமானதாக இருக்கும். எனவே வேறொரு கிராமத்துக்குப் போய் நான் வீட்டுக்கு வீடு யாசிக்கிறேன். சூரியனைத் திருப்தி செய்ய வேண்டி நீ ஒரு பிராமணனுக்கு முடிந்தவரைக்கும் விருந்து வை.’’

அந்தச் சொற்களைக் கேட்டதும் அவன் மனைவி கோபமடைந்தாள். திட்ட ஆரம்பித்தாள். ‘’நீ ஒரு தரித்திரம் பிடித்த பிராமணன். உனக்கு யார் சோறு போடப்போகிறார்கள்? இப்படிப் பேசுகிறாயே, உனக்கு வெட்கமாக இல்லையா? மேலும்,

உன் கையைப் பிடித்தது முதல் நான் ஒரு சுகத்தையும் கண்டதில்லை. நல்ல விசேஷமான உணவையே சாப்பிட்டதில்லையே! பிறகு கைக்கும் காலுக்கும் கழுத்துக்கும் நகை போட்டுக்கொள்வதைப் பற்றிச் சொல்லவே வேண்டாமே! என்றாள் அவள்

பிராமணன் அதைக் கேட்டுப் பயந்து நடுங்கிப்போனான். ஈன சுரத்தில் இருந்தவாறே, ‘’அன்பே, நீ அப்படிச் சொல்லக் கூடாது.

இருப்பது ஒரு கவளச் சோறுதான் என்றாலும் அதில் பாதியைப் பிச்சைக்காரனுக்கும் போடு! ஆசைகொள்ளும் அளவுக்கு யாருக்காவது எப்பொழுதாவது செல்வம் கிடைத்திருக்கிறதா? இல்லையே!

செல்வமிக்கவர்கள் அள்ளி வழங்குவதினால் என்ன பயனைப் பெறுகிறார்களோ அதே பயனைத் தன்னால் இயன்றதைக் கொடுக்கும் ஏழையும் அடைகிறான் என்று அறநூல் தெரிவிக்கின்றது.

நீரை மட்டும் தருகிறது மேகம். என்றாலும் அதை எல்லோரும் விரும்பி நேசிக்கிறார்கள். கைகளை நீட்டுவதுபோல சூரியன் ஒளிக்கிரணங்களை வீசுகிறது. என்றாலும் அதை அதன் நண்பன்கூட ஏறெடுத்துப் பார்க்க முடிவதில்லை.

இதை மனத்தில் கொண்டு ஏழையாயிருக்கிறவன்கூட தக்க சமயத்தில் தகுந்த மனிதர்களுக்குப் பிச்சையிட வேண்டும். அது அற்ப சொற்பமா யிருந்தாலும் பரவாயில்லை. ஏனென்றால்,

உரிய காலம், கொடுக்கத்தக்கவன், சிறந்த சிரத்தை, சக்திக்கேற்ற கொடை – இவற்றை அறிந்து விவேகிகள் அளிக்கும் தானம் பன்மடங்காகப் பெருகுகிறது.

பேராசை கொள்ளவும் கூடாது; கொஞ்சம் ஆசை இருக்கவும் வேண்டும். பேராசை கொண்டதால் நரிக்கு உச்சிக் குடுமி உண்டாயிற்று’’

என்றும் சிலர் சொல்கிறார்கள்’’ என்றான் பிராம்மணன்.

‘’அது எப்படி?’’ என்று மனைவி கேட்டாள். பிராம்மணன் சொல்லத் தொடங்கினான்.


http://puthu.thinnai.com/?p=9450

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்

அன்னபூர்னா ஈஸ்வரன்

 

ஒரு ஊரில் வேடன் ஒருவன் இருந்தான். பாவ மூட்டையைப் பெருக்கிக் கொள்ள அவன் விரும்பினான் போலிருக்கிறது. எனவே வேட்டையாடப் புறப்பட்டான். போகிற வழியில் ஒரு காட்டுப் பன்றியைச் சந்தித்தான். அதன் உருவம் கறுத்த மலையின் உச்சிபோல் காணப்பட்டது. அதைப் பார்த்தவுடனே, அவன் வில்லில் அம்பு தொடுத்து காதுவரை நாணை இழுத்து, பின்வரும் செய்யுளைச் சொன்னான்.

எனது வில்லையும் அதில் தொடுத்துள்ள அம்பையும் கண்டபிறகும் அது பயமில்லாமல் என்னை நெருங்குகிறது. நிச்சயமாக அதை யமன் என்னருகில் அனுப்பி வைத்திருக்கிறான் என்று தெரிகிறது.

அதன்மேல் கூரிய அம்பு எறிந்தான். அதனால் கோபமடைந்த காட்டுப் பன்றி இளம்பிறைபோல் வெண்ணொளி வீசும் தன் பல் நுனியால் வேடனின் வயிற்றைக் கிழிக்கவே வேடன் உயிரற்றுத் தரையில் வீழ்ந்தான். வேடனைக் கொன்ற பிறகு அந்தக் காட்டுப் பன்றியும் அம்பால் அடிபட்ட வேதனையிலே உயிர் விட்டது.

இந்தச் சமயத்தில், எங்கெங்கோ சுற்றித் திரிந்து கொண்டிருந்த ஒரு நரி அங்கு வந்து சேர்ந்தது. காட்டுப்பன்றியும் வேடனும் செத்துக்கிடந்ததை நரி கண்டது. மிகவும் சந்தோஷமடைந்தது. ‘’விதி என்மேல் கருணை கொண்டிருக்கிறது. எதிர்பாராத விதமாக எனக்கு இந்த உணவு படைத்து வைத்திருக்கிறது.

முற்பிறவியில் செய்த வினைகளின் நற்பயனையோ தீயபயனையோ, மறுப்பிறப்பில் நமது முயற்சி எதுவுமில்லாமலே, விதி நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பிக்கிறது.

எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்த வயதில் செய்யப் பட்டிருந்த போதிலும், நல்வினையும் தீவினையும் அதற்குரிய பயனை அனுபவித்துத் தீருகிறது.
என்று சொல்லி வைத்துள்ளது சரியே. இதைக் கொண்டு ரொம்ப நாள் காலம் தள்ளும் விதத்தில் தின்று வருவேன். முதன் முதலில் வில்நுனியில் நாண் நரம்பு இருக்கிறதே, அதைக் கைகளால் பிடித்து மெள்ளத் தின்கிறேன்.

சுயமாகச் சம்பாதித்த செல்வமேயானாலும், அறிவாளிகள் அமுதத்தை உண்பதுபோல் மெள்ள மெள்ளத்தான் அனுபவிக்க வேண்டும். ஒரே வாயில் விழுங்கிவிடுவது ஒருபோதும் கூடாது.

என்றொரு பழமொழி உள்ளது’’ என்றபடி நரி எண்ணமிட்டது. இவ்வாறு எண்ணியபின் நரி வில்நுனியை வாயில் கவ்விக் கொண்டு அதில் தொங்கிய நாண் நரம்பைத் தின்னத் தொடங்கியது. நாண் நரம்பு அறுந்தவுடனே, வில்லின் நுனி நரியின் மேல்வாய்ப் புறத்தைத் துளைத்துக் கொண்டு தலைக்கு வெளியே உச்சிக்குடுமிபோல் பொத்துக்கொண்டு வந்து விட்டது. அதன் வேதனை தாங்கமாட்டாமல் நரி உயிர்விட்டது.

அதனால்தான் ‘பேராசைக் கொண்டதால் நரிக்கு உச்சிக்குடுமி உண்டாயிற்று’ என்றெல்லாம் சொல்கிறேன்’’ என்றான் பிராம்மணன்.

அவன் மேலும் சொன்னான்: ‘’அன்பே, நீ இதைக் கேட்டதில்லையா?

எத்தனை வயது, என்ன தலைவிதி, எவ்வளவு சொத்து, எத்தனைக் கல்வியறிவு, எங்கே சாவு – என்கிற இந்த ஐந்து விஷயங்களும் ஒருவன் கர்ப்பத்திலிருக்கும் பொழுதே நிர்ணயிக்கப்பட்டுவிடுகின்றன.

இந்தப் போதனையைக் கேட்ட பிராமணப் பெண், ‘’அப்படியானால் சரி. வீட்டில் கொஞ்சம் எள் இருக்கிறது. அதைப் பொடி செய்து எள்ளுப் பொடியைக் கொண்டு பிராமணனுக்கு உணவளிக்கிறேன்’’ என்று சொன்னாள். அவள் வார்த்தையைக் கேட்டபிறகு அந்தப் பிராமணன் வேறொரு கிராமத்துக்குப் புறப்பட்டுச் சென்றான். பிராமணப் பெண் எள்ளை நீரில் ஊறவைத்து, தோலை நீக்கி, வெய்யிலில் காயப்போட்டுவிட்டு, வீட்டு வேலைகளைக் கவனிக்கத் திரும்பிவிட்டாள். அந்த நேரத்தில் ஒரு நாய் அந்த எள்மேல் மூத்திரம் பெய்து விட்டுச்சென்றது. பிராமணப் பெண் அதைப் பார்த்து விட்டாள்.

‘’விதி எதிராகப் போனால் எத்தனை சாதுரியமாக வேலை செய்கிறது! இந்த எள்ளைக்கூடச் சாப்பிடத் தகாததாகச் செய்துவிட்டதே! சரி, இதை எடுத்துக்கொண்டு அண்டை அயலார் வீட்டுக்குப் போய் தோல் நீக்கிய இந்த எள்ளைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாகத் தோல் நீக்காத எள் வாங்கி வருகிறேன். யாராயிருந்தாலும் இந்த பேரத்துக்கு ஒப்புக்கொள்வார்களோ!’’ என்று எண்ணினாள்.

எண்ணியபடியே ஒரு கூடையில் அந்த எள்ளை வைத்து, வீடு வீடாக ஏறி, ‘’தேய்த்த எள்ளைத் தேய்க்காத எள்ளுக்குப் பதிலாகப் பெற்றுக் கொள்கிறீர்களா?’’ என்று கேட்டுக்கொண்டே போனால் கடைசியில் நான் பிச்சைக்காக நுழைந்த அதே வீட்டிற்கு அவளும் எள்ளைக் கொண்டுவந்து, மேலே சொன்னபடியே பேரம் பேசினாள். அந்த வீட்டுக்காரி சந்தோஷத்துடன் தேய்க்காத எள்ளைக் கொடுத்து விட்டு அவளிடமிருந்து தேய்ந்த எள்ளைப் பெற்றுக் கொண்டாள். சிறிது நேரம் கழிந்தவுடன் அவள் கணவன் வீட்டுக்கு வந்தான்.

 

‘’அன்பே, இது என்ன?’’ என்று விசாரித்தான்.

‘’நான் ஒரு சாதுரியமான பேரம் பண்ணினேன். தேய்க்காத எள்ளைக் கொடுத்து தேய்த்த எள்ளைப் பெற்றுக்கொண்டேன்’’ என்றாள் அவள். இதைக் கேட்டு அவன் யோசித்தான். ‘’இது யாருடைய எள்?’’ என்று கேட்டான்.

‘’சாண்டிலித்தாய்க்குச் சொந்தமானது அது’’ என்று பதிலளித்தான் காமந்தகி என்ற பெயருடைய அவன் மகன்.

அதைக் கேட்ட அவன் ‘’அன்பே, அவள் மிகவும் கெட்டிக்காரி. வியாபாரத்தில் தேர்ச்சி மிகுந்தவள். இந்த எள்ளை அப்பால் எறிந்துவிடு. ஏனென்றால்,

காரணமில்லாமல் சாண்டிலித்தாய் எள்ளுக்குப் பதிலாக எள் பேரம் செய்யமாட்டாள். தேய்த்த எள்ளைக் கொடுத்து தேய்க்காத எள்ளை அவள் பெற்றுக்கொண்டதற்குக் காரணம் ஏதாவது இருக்கத்தான் செய்யும். என்று சொன்னான்’’ என்று முனிவர் கதையை முடித்தார்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், ‘’எனவே, தானியக் குவியலின் வாசனையால்தான் இப்படி எலி குதிக்க முடிகிறது. அந்த எலி எப்படித் தாக்குகிறது தெரியுமா?’’ என்று கேட்டார் முனிவர். ‘’தெரியும், சுவாமி! தனியாக அது வருவதில்லை, எலிகளோடு கூட்டமாய் வருகிறது அது’’ என்றான் பூடகர்ணன்.

‘’சரி, இங்கே தோண்டுவதற்கு ஏதாவது கருவி இருக்கிறதா?’’ என்று முனிவர் கேட்டார்.

‘’இருக்கிறது. கைக்கு எளிதான இரும்புக்கடப்பாரை இதோ’’ என்றான் அவன்.

‘’சரி, நீயும் நானும் நாளை விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும். காலையில் அந்த எலியின் காலடி அடையாளங்கள் தரையில் படிந்திருக்கும். அவற்றை நாமிருவரும் பின்பற்றிச் செல்லவேண்டும்’’ என்று சொன்னார் விருந்தாளியாக வந்த முனிவர்.

அந்தக் கொடியவனின் சொற்கள் எனக்கு இடி விழுந்தது போலிருந்தது. நான் யோசித்தேன், ‘’ஐயோ இதனால் எனக்குச் சாவுதான் உண்டாகும். ஏனெனில் இவன் பேச்சில் வேறெதோ அர்த்தமிருக்கிறது. என் தானியக் குவியலைப் பற்றித் தெரிந்து கொண்டது போலவே, இவன் என் கோட்டையையும் நிச்சயமாகத் தெரிந்துகொள்வான். இவன் பேச்சிலுள்ள மறை பொருள் இதைத்தான் தெளிவாகக் காட்டுகிறது.

ஒரு பொருளைக் கையில் தூக்கியபடியே அதன் எடையைக் கூறும் சாமர்த்தியசாலிகள் உண்டு. அதேமாதிரி ஒரு மனிதனை ஒரே பார்வையால் அளந்தெடுத்துவிடும் விவேகிகளும் இருக்கிறார்கள்.

முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளின் பயனாக வந்து வாய்க்கிற குணங்கள் பிறவியிலிருந்தே வெளிப்படத் தொடங்கும். மயில் குஞ்சுக்குத் தோகை வளராதிருக்கலாம். இருந்தாலும் குளக்கரையில் அது ஒரு நடை நடந்து காட்டும்போது உடனே அதை மயில்குஞ்சு என்று அடையாளம் கண்டு கொள்கிறோம் அல்லவா?

நான் பயந்து நடுங்கிவிட்டேன். என் கோட்டைக்கு (வளைக்கு) வழக்கமாய்ச் செல்கிற வழியில் போகாமல் நான் என் பரிவாரங்களோடு வேறொரு வழியாகச் செல்ல முயற்சித்தேன்.

ஆனால் பெரிய பூனை ஒன்று எதிரே வந்தது. அது எலிகளைப் பார்த்துவிட்டதோ இல்லையோ, உடனே எலிக் கூட்டத்தின் நடுவே பாய்ந்தது. பல எலிகளைக் கொன்றது. சரியான வழியில் நான் அழைத்துச் செல்லவில்லை என்று உயிர் தப்பிய மற்ற எலிகள் என்னைத் திட்டின. தரையெல்லாம் ரத்தக் கறை படிய அவை ஓடிப்போய் பழைய வளைக்குள்ளேயே புகுந்துகொண்டன.

கட்டை அறுத்துக்கொண்டு வளையைப் பலவந்தமாகக் கிழித்து விலக்கிக் கொண்டு ஒரு மான் ஓடியது. நாற்புறமும் தீப்பிடித்த காட்டிலிருந்தும் தப்பித்து ஓடியது. வேடனின் அம்புக்கும் இலக்காகாமல் தப்பித்துச் சென்றது. கடைசியில் ஒரு கிணற்றில் போய் விழுந்தது. என்ன கஷ்டம்! விதி கெட்டுப்போனால் அதற்கு எதிராக என்ன முயற்சித்தும் என்ன பயன்?

ஆகவே நான் ஒருவன் மட்டும் வேறிடம் சென்றேன். துரதிஷ்டம் பிடித்த மூடர்கள் மற்ற எலிகள்! எல்லாம் பழைய வளைக்குள் புகுந்துவிட்டன. தரையில் ரத்தக்கறைகள் படிந்த அடையாளங்களைப் பின்பற்றிச் சென்ற முனிவர் வளைக்கு வந்து சேர்ந்தார். ஒரு கடப்பாரையை எடுத்துத் தோண்டத் தொடங்கினார். தோண்டுகையில் எனது தானியக் குவியலைக் கண்டு கொண்டார். இந்தத் தானியக்குவியல்தான் என் பிழைப்புக்கு ஒரு சாதனமாக இருந்துவந்தது. இதன் வாசனையைக் கொண்டுதான் நான் முன்பெல்லாம் வளைக்குத் திரும்பி வந்துவிடுவது வழக்கம்.

அதைக் கண்டதும் முனிவர் சந்தோஷமடைந்தார். ‘’ஏ பூடகர்ணனே! இனிமேல் நீ நிம்மதியாகத் தூங்கலாம். இந்தத் தானியக் குவியலின் வாடையைக் கொண்டுதான் எலி உன்னை இதுகாறும் தூங்கவிடாமல் செய்து வந்தது’’ என்று சொன்னார். தானியக் குவியலை எடுத்துக்கொண்டு முனிவர் மடாலயத்துக்குத் திரும்பிச் சென்றார்.

அந்த இடத்துக்கு நான் திரும்பிச் சென்றேன். அங்குள்ள அலங் கோலத்தையும், துயரக் காட்சியையும் என்னால் காணச் சகிக்கவில்லை. ‘’ஐயோ, இனி என்ன செய்வது? எங்கே போவது? இனி எனக்கு மனச்சாந்தி எப்படி கிடைக்கும்?’’ என்று எண்ணமிட்டேன், இந்த எண்ணங்களை எண்ணுவதிலேயே அன்றையப் பகற்பொழுது பூராவும் வெகு கஷ்டத்துடன் கழித்தேன்.

ஆயிரங் கிரணங்களுடன் சூரியன் அஸ்தமித்தவுடன், நான் மனக் கவலையோடு உற்சாகமிழந்தவனாய் என் பரிவாரங்களோடு அதே மடாலயத்திற்குள் நுழைந்தேன். நாங்கள் பிறாண்டுகிற சத்தத்தைக் கேட்டு விட்டு, பூடகர்ணன் ஒரு மூங்கில்கழி எடுத்து பிச்சைப் பாத்திரத்தை அடிக்கடி தட்டத் தொடங்கினான். அதைக் கண்ட முனிவர், ‘’தோழா, இன்றைக்குக்கூடக் கவலையொழித்துத் தூங்கமாட்டாயா என்ன?’’ என்று கேட்டார்.

‘’சுவாமி, அந்தத் துஷ்ட எலி தன் பரிவாரங்களுடன் நிச்சயமாக மறுபடியும் வந்திருக்கிறது. அந்தப் பயத்தால்தான் இப்படிச் செய்கிறேன்’’ என்று சொன்னான் பூடகர்ணன்.

முனிவர் சிரித்துக்கொண்டே, ‘’தோழா, பயப்படாதே! அதன் சொத்து பறிபோனதும் அந்த எலியின் துள்ளிக்குதிக்கும் சக்தியும் அத்தோடு போய்விட்டது. விதி விலக்கின்றி எல்லா ஜீவன்களுக்கும் இதுவே கதி.

ஒருவன் எப்பொழுதும் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கிறான், பிறரை அலட்சியம் செய்து பேசுகிறான், அதிகாரம் செய்து ஏசுகிறான் – என்றால் அதற்குக் காரணம் பணம் படைத்ததால் ஏற்பட்ட தெம்பு ஒன்றுதான்.

அந்தச் சொற்கள் எனக்குக் கோபமூட்டின. பிச்சைப் பாத்திரத்தை நோக்கிப் பலமாக எம்பிக் குதித்தேன். அதை எட்டத் தவறி தரையில் விழுந்தேன். என் எதிரியாகிய முனிவர் என்னைப் பார்த்துவிட்டார். அவர் பூடகர்ணனைப் பார்த்து, ‘’தோழா, பார் அந்த அதிசயத்தை! அதைக் கவிதையிலே சொல்லலாம் போலிருக்கிறது:

பணம் இருந்தால் எல்லோரும் பலசாலிகள்தான்; பணம் இருந்தால் எல்லோரும் அறிஞர்கள்தான். சொத்து இழந்த இந்த எலியைப் பார்! மற்ற எலிகளைப்போல் அதுவும் ஒரு சாதாரண எலியாகி விட்டிருக்கிறது.

அதை இப்படிச் சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்:

விஷப் பல் பிடுங்கப்பட்ட பாம்பு, மதநீர் அற்ற யானை, பணம் இல்லாத மனிதன் — இவர்கள் எல்லோரும் பெயரளவில்தான் பாம்பாகவும், யானையாகவும், மனிதனாகவும் இருக்கிறார்கள்.

இந்தச் சொற்களைக் கேட்டதும், நான் யோசிக்கலானேன். ‘’ஆஹா, எதிரி சொல்கிற சொல்லாயிருந்தாலும் அது உண்மைதான். என்னால் இன்று ஒரு அங்குலம் கூட எகிறிக் குதிக்க முடியவில்லை. பணம் இல்லாத மனிதனின் வாழ்க்கை பாழ்தான், சந்தேகமில்லை!

ஒருவன் அற்ப புத்தியுள்ளவனாக இருந்து, அவனுடைய சொத்தும் போய்விட்டால், பிறகு அவன் செய்யும் முயற்சிகள் எல்லாம் கோடைக்காலத்தில் சிற்றாறு வறண்டு விடுவதுபோல் வறட்சிதான் அடைகின்றன.

காட்டில் பயிராகும் எள்ளும் வால் கோதுமையும் எப்படி நிஜ எள் மாதிரியும் நிஜக் கோதுமையாகவும் இல்லாமல் பெயரளவுக்கு இருந்து உபயோகமின்றி இருக்கின்றனவோ, அதேபோல் பணமில்லாத மனிதனும் உபயோகமில்லாதவனாய் பெயரளவில்தான் மனிதனாக இருக்கிறான்.

ஏழையிடம் நற்குணங்கள் உண்டு; என்றாலும் அவனிடம் அவை ஒருபோதும் பிரகாசிப்பதில்லை. உலகத்துக்குச் சூரிய வெளிச்சம் எவ்வளவு அவசியமோ அப்படியே நற்குணங்கள் விளங்குவதற்குப் பணம் அவசியம்.

செல்வம் கொழித்துச் சுகபோகத்தில் வாழ்ந்தவன் பின்னால் தன் செல்வத்தை இழந்து துயரம் அனுபவிக்கிறது போல் பிறவி ஏழை அவ்வளவு துயரம் அனுபவிப்பதில்லை.
 

பணம் இல்லாவிட்டால் ஒரு மனிதன் வைக்கும் நம்பிக்கைகளும் விருப்பங்களும், விதவைகளின் தொங்கிப்போன ஸ்தனங்களைப்போல் அவனது மனத்தில் வீணே தொங்கி விழுந்தவாறு இருந்து விடுகின்றன.

எதிரே நின்று முயற்சித்துப் பார்த்தாலும் சூரியனைப் பார்க்க முடிகிறதில்லை. அதே வெளிச்சத்தை இரவில் தரித்திரம் என்ற திரை மறைத்து விடுகிறது.

இப்படி மனமுடைந்துபோய் நான் பலவாறு புலம்பினேன். என் தானியக்குவியல் என் எதிரிக்குத் தலையணையாக மாறிப் பிரயோஜனப் படுவதையும் கண்டேன். தோல்வி கண்டவனாய் நான் என் முயற்சியைக் கைவிட்டு, பொழுது புலரும் நேரத்தில் வளைக்குத் திரும்பி வந்து சேர்ந்தேன்.

அப்போது என் வேலைக்காரர்கள் ஒரு பக்கமாக ஒதுங்கிச் சென்று வம்பளக்கலாயினர். ‘’அவனைப்பார்! நமக்குச் சோறுபோட அவனுக்குத் திராணி கிடையாது. மேலும், அவனை நாம் பின்பற்றித்திரிந்தால் பூனைகள் முதலான விபத்துக்கள் உண்டாகின்றன. எனவே அவனுக்கு மரியாதை செய்வதில் என்ன பிரயோஜனம்?’’

கொடைகள் எதுவும் வழங்காமல் விபத்துக்கள் மட்டும் வந்து சேரும்படி செய்து கொண்டிருக்கிற அரசனை விட்டுத் தூர விலகிவிட வேண்டியதுதான். அப்படிப் பட்ட அரசனைப் படைவீரர்கள்தான் முதலில் விட்டுச் செல்லவேண்டும்.

என்றொரு பழமொழி கூறுகிறது’’ என்று பேசிக்கொண்டன. வழியில் இந்தப் பேச்சைக் கேட்டபடியே வளைக்குள் சென்றேன். என்னிடம் சொத்து இல்லாமற் போனதால் வேலையாட்கள் யாரும் என்னோடு வரவில்லை. நான் ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கினேன். ‘’சீ, வறுமை என்பது எத்தனைக் கேவலமானது! இந்தச் செய்யுளில்தான் எத்தனை விவேகம் இருக்கிறது:

வறியவனின் வார்த்தையை அவனது உறவினரும் மதித்து நடப்பதில்லை. அவனுடைய மானம் கப்பல் ஏறிவிடுகிறது. அவனது நற்குணம் என்கிற சந்திரன் ஒளி மங்குகிறது. பிறகு சீக்கிரத்தில் மறைந்தும் போகிறது. நண்பர்களாக இருந்தவர்கள் வெறுத்து விலகிவிடுகின்றனர். துன்பத்துயரங்கள் பன்மடங்காகப் பெருகுகின்றன. பிறர் செய்த பாவங்களுக்கு இவன்மேல் பழி சுமத்தப்படுகிறது.

ஒருவன் வறுமைக்கும் ஆளாகி, விதியின் சோதனைக்கும் இலக்காகிவிட்டால் அவனது நண்பர்களே அவனுக்கு விரோதிகளாகி விடுகின்றனர், அன்பே வெறுப்பாக மாறிவிடுகின்றது.

பிள்ளையில்லாத வீடு பாழ்; நட்புணர்ச்சி இல்லாத நெஞ்சம் பாழ். முட்டாளுக்கு எட்டுத் திசைகளும் சூனியம். ஏழைக்கோ எல்லாமே சூனியம்தான்.

அவனது விருப்பு உணர்ச்சிகள் எதுவும் மாறவில்லை. அவன் பெயரும் மாறவில்லை. அறிவும், சொல்லும மாறிவிடவில்லை. முன்பிருந்த அதே மனிதன்தான். இருந்தாலும், அதோ பார்! அவனிடமுள்ள பணம் போய்விட்டதா? அப்படியானால் அவன் வேற்று மனிதன்தான்!என்ன விசித்திரமான காட்சி இது!

சரி போகட்டும். என் போன்றவர்களுக்குப் பணத்தால் என்ன கிடைக்கப் போகிறது? என்போன்ற ஜனங்களுக்கு இதுதான் தலைவிதி என்றால் பிறகு பணம் இருந்தென்ன, போய் என்ன? சொத்து பறிகொடுத்த நான் இனி காட்டில் வசிப்பதே மேல்.

மானங்காத்தால் வீட்டில் இரு; மானமிழந்தால் வீட்டில் இராதே! மானம் அழிந்தபிறகு, தேவ விமானமே வந்தாலும் விலகிச் சென்றுவிடு!

தோல்வி விபத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாய் வந்தபோதிலும் தன்மானமுள்ளவன் நெஞ்சு நிமிர்ந்து நடக்கிறான். தன்மானத்தைக் கைவிட்டு அவன் பணப்பெருக்கின் முன்னே தலைவணங்குவதில்லை.

இப்படியே மேலும் பல யோசனைகளில் மூழ்கினேன். ‘’பிச்சை எடுப்பது சாவுக்குச் சமானம். காரணம்,

காட்டுத் தீயால் எரிக்கப்பட்டு, பூச்சிகளளால் அரிக்கப்பட்டு, பட்டையுரிந்து பட்டுப்போய் உரமில்லாத மண்ணின் மேல் நிற்கும் மரம் இருக்கிறதே, அதன் நிலை பிச்சைக்காரனின் நிலையைவிட எவ்வளவோ மேல்!

http://puthu.thinnai.com/?p=9631

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி?
அன்னபூர்னா ஈஸ்வரன்


அது துரதிர்ஷ்டத்துக்குக் கட்டிய கோயில்; அது மனத்தைப் பறிக்கும் திருடன்; கண்ணீருக்குப் புகலிடமாயும், மானத்துக்குச் சாவு மாதிரியும், வாய்த்திருப்பது; அது பிறரின் ஏளனத்துக்கு இருப்பிடம்; அது பயத்தின் களஞ்சியம்; சந்தேகத்தின் விளைநிலம்; ஆபத்தின் உறைவிடம்; மானமுள்ளவர்களின் தேசுவைப் பறிக்கும் காலன்; அது ஒரு வகைச் சாவு. தன்மானமுள்ளவனுக்குப் பிச்சையெடுப்பது என்பது ஒரு நரகமே தவிர வேறில்லை.

பிச்சைக்காரன் மானமழிகிறான். மானம் போனதால் கர்வத்தை விடுகிறான். கர்வம் போனதால் சிறுமையடைகிறான். சிறுமை யடைவதால் வேதனைப்படுகிறான். வேதனைப்படுவதால் துயரம் அடைகிறான். துயரத்தால் அறிவை இழக்கிறான். அறிவு இழந்தவன் நாசமடைகிறான். ஐயகோ, வறுமை என்பது எல்லா விபத்துக்களுக்கும் ஆணிவேர் ஆயிற்றே!

சினந்து சீறும் பாம்பின் வாயில் வேண்டுமானாலும் கையை வை! விஷத்தை வேண்டுமானாலும் குடி! யமன் இல்லத்திலாயினும் படுத்துத் தூங்கு! இமயமலையிலிருந்து விழுந்து உருண்டு உடலைச் சுக்கு நூறாக்குவதானாலும் செய்! ஆனால், துரோகியிடம் பெற்ற பணத்தைக் கொண்டு மட்டும் சுகபோகத்தில் மூழ்காதே!

நீ வறியவன் ஆகிவிட்டால் உன் உடலைத் தீக்கிரையாக்கி விடு! உதவி செய்ய விரும்பாத வஞ்சகனிடம் மட்டும் கையேந்தி நிற்காதே.

காடு மலைகளில் துஷ்டமிருகங்களுடன் வசிப்பது மேல்!‘’பிச்சை போடுங்கள்’’ என்கிற சிறுமைப்படுத்தும் சொல்லை மட்டும் சொல்லாதே!

இந்நிலைமைகளில், என் பிழைப்புக்கு வேறு வழி ஏதாவது உண்டா? திருடிப் பிழைக்கலாமா? அதுவும் மகாபாதகமாயிற்றே! பிறர் உடைமையை தனதாக்கிக் கொள்வது என்பதுதானே அதன் அர்த்தம்.

பொய் பேசுவதைவிட வாய்மூடி மௌனியாக இருப்பது என்றைக்கும் மேலானது. பிறர் மனைவியரைக் கூடுவதை விட புருஷன் வீரியமிற்றிருப்பதே மேலானது. வம்பு தும்புகளில் விருப்பங்கொள்வதைவிட உயிரை விடுவதே மேலானது. பிறர் உடைமையைத் திருடிப் பிழைப்பதை விட பிச்சையெடுத்து வாழ்வதே மேலானது.

அல்லது, பிறர் அளிக்கும் தானத்தைப் பெற்று உயிர்வாழலாமா? அதுவும் மகாபாதகம், நண்பர்களே, மகாபாதகம்! அதுவும் சாவின் இரண்டாவது வாயிலே.

நோயாளி, நாடுகடத்தப்பட்டவன், பிறர் உணவைச் சாப்பிடுபவன், பிறர் வீட்டில் தங்கி வசிப்பவன் — இவர்கள் அனைவரும் உயிர் வாழ்வது மரணத்திற்கொப்பானதே, அவர்கள் சாவதே மேல். ஏனெனில் சாவு அவர்களுக்கு மனச்சாந்தி அளிக்கும்.

ஆகவே, முனிவர் பறித்துக்கொண்ட தானியக் குவியலை எப்பாடு பட்டாவது நான் திரும்பப் பெறவேண்டும். என் ஐஸ்வரியம் அவ்விரு துஷ்டர்களுக்கும் தலையண¨யாய்ப் பயன்படுவதை நானே பார்த்தேன் .என் ஆஸ்தியை நான் திரும்பப் பெறவேண்டும். அந்த முயற்சியிலே சாக நேரிட்டாலும் நேரிடட்டும். இந்தப் பிழைப்பை விட சாவு எவ்வளவோ பரவாயில்லை. காரணம்,

தன் உடைமை பறிபோவதைப் பார்த்துக்கொண்டு சும்மாவிருக்கும் கோழைகள் இருக்கிறார்களே, அந்தக் கோழைகள் தர்ப்பணம் செய்யும் நீரை அவர்களுடைய மூதாதையர்கள்கூட ஏற்றுக்கொள்வதில்லை.

இப்படி மனத்தில் நிச்சயம் செய்துகொண்டு, இரவில் நான் மடாலயத்துக்குப் போனேன். முனிவர் நித்திரையில் ஆழ்ந்தபிறகு அந்தப் பையைக் கடித்து ஓட்டை போட்டேன். உடனே முனிவர் விழித்துக் கொண்டு மூங்கில்தடி எடுத்து என் மண்டைமேல் ஓங்கியடித்தார். ஆயுள்காலம் இன்னும் கொஞ்சம் பாக்கி, அதனால்தான் எப்படியோ ஒருவாறு உயிர் தப்பினேன்.

விதிப்படி அவனவனுக்கு உரியது அவனவனுக்குக் கிடைக்கும். அதைப் பெறுவதைத் தேவர்களாலும் தடுக்க முடியாது. ஆகவே நான் வியப்படையவுமில்லை.வருந்தவுமில்லை. ஏனெனில் எனக்குரிய பொருளை இன்னொருவன் எடுத்துக்கொள்ள முடியாது.

என்றது ஹிரண்யன் (எலி), ‘’அது எப்படி?’’ என்று காக்கையும் ஆமையும் கேட்டன. எலி சொல்லத் தொடங்கியது:
 

http://puthu.thinnai.com/?p=9749

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.