Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளக்கு விற்பவன் கதை – யுகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கு விற்பவன் கதை – யுகன்

saneeiswaran.jpg

எனக்கு கோவில்கள் அதன் பிரமாண்டங்கள் எப்போதுமே ஆச்சரியம் தருவனவாகவே இருந்திருக்கின்றன. நான் தீவிர ஆன்மீகவாதியோ முழுமையான கடவுள் மறுப்பாளனோ அல்லன். மனிதர்களிடையே காணப்படும் வர்க்க பேதத்தையும் ஏற்றத்தாழ்வுகளையம் கண்டும் கருஞ்சிலையாய் இருக்கும் கடவுளரில் எனக்கு உடன்பாடில்லைத்தான், இருந்தும் எனக்கு கோவில்கள் பிடிக்கும் என்னுள்ளே கரையில் இட்ட மீனாக துடிக்கும் அமைதியின்மையை வலை போட்டுப் பிடித்துக்கொண்டவை கோவில்கள். கோவில்கள் எனக்கு அமைதியைத்தரும் இடம் மட்டுமல்லாமல் ஆச்சர்யம் தருவனவாக இருப்பது அங்கு காணப்படும் சிற்பங்கள் மற்றும் சுவரோவியங்களும்தான். சிற்பங்கள் ஓவியங்கள் என்றதும் இந்தியக் கோவில்கள் தான் என்னை ஆக்கிரமித்துக்கொள்ளும். தஞ்சைப் பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன், திருவண்ணாமலை, இராமேஸ்வரம் மற்றும் இன்னும் பல இந்தியக் கோவில்கள் என்னை முழுமையாக விழுங்கிக் கொண்டவை.

அருகிலே கற்கள் இல்லாத ஊரில் பாரிய கருங்கற்களை எங்கிருந்தோ தருவித்து முழுமையாக கற்களாலேயே கட்டிய கோவில் தஞ்சைப் பொரிய கோவில், தமிழரின் கட்டிடக்கலையின் பெருமை. மன்னர்கள் இருந்த காலத்தில் அவர்கள் தங்கள் வரலாறுகள் பெயர் சொல்ல வேண்டும் என திட்டமிட்டு கட்டியவை என நான் இவற்றைக் கருதவில்லை. ஆன்மிகம் தழைக்க வேண்டும் என்ற எண்ணமாகவும் கலைகள் வளரும் இடமாகவுமே கோவில்கள் அக்காலத்தில் இருந்திருக்கின்றன என்கின்றன அங்கு காணப்படும் கல்வெட்டுக்கள். கோவில்களின் இத்தனை விஸ்தீரணம் என்னைப் பெருமை கொள்ள வைத்தாலும் என் உள் மனது என்றுமே பல கேள்விகளோடு முட்டி மோதிக்கொண்டுதான் இருக்கும்.

பல கேள்விகள் என்னைத் துளைக்க மீண்டும் ஒரு இந்தியப் பயணம் எனக்கு வாய்க்கப் பெற்றது. இந்தியா இரண்டு முகங்கள் கொண்ட ஒரு நாடு. தன்னை வல்லரசாக்கும் கனவுடன் போராடிக் கொண்டிருக்கும் ஒரு நாடும் கூட. எனது இம்முறைப்பயணம் பல கோவில்களுக்கு போகும் வாய்ப்பைத் தந்தது. கோவில்கள் அன்று என்ன நோக்கத்திற்கு கட்டப்பட்டதோ அது இருக்கோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் உண்மை கோயில்கள் வருமானம் கொழிக்கும் பெரிய நிறுவனங்களாகவே இன்று காணப்படுகிறது. இதுக்கு இலங்கை மட்டும் விதி விலக்கல்ல இங்கும் அவ்வாறே, ஊர் முழுக்க தேர் இழுத்து இவர்கள் கண்டது என்னவோ கோவில் முதலாளிமாருக்குத்தான் வெளிச்சம். முள் வேலிக்குள்ள சனம் சாப்பிடாம இருக்க இங்கை இவை பால் ஊத்தி விளையாடினவ. சரி நாங்கள் இந்தியாப்பக்கம் வருவம்.

கோவில்களைச் சுற்றியும் அது சார்ந்தும் பல வியாபாரங்கள் இயங்கி வருவதை பொதுவாக எல்லாக் கோவில்களிலும் காணக்கிடைக்கிறது. எல்லா வியாபாரங்களும் கடவுள் பற்றிய பல பொய்களுடனேயே நடந்தவண்ணம் இருந்தன. கஷ்டங்களுடன் போகும் நடுத்தர வர்கத்தினர்களே இதற்குப் பெரும் பலிகடாக்கள் ஆகின்றனர். யந்திரங்கள், வித விதமான மாலைகள், சாமி உருவச்சிலைகள் எனப் பல வகைப்பட்ட பொருட்கள் பல பொய்க் கதைகளுடன் இங்கெல்லாம் விற்கப்படுவதைக் காணலாம்.

கோவில்களில் இன்னொரு விடயம் என்னை மிக வியக்க வைத்தது சாமி தரிசனத்திற்கு அறவிடப்படும் பணம்தான். பொது வழி, சிறப்புத் தரிசன வழி என பணம் கறக்க கோவிலில் நடாத்தப்படுகிற வேடிக்கையான நாடகம். கடவுளுக்கு முன்னே எல்லோரும் சமம் என யாரும் படித்திராத கண்ணுக்குத் தெரியாத வேதத்தில் சொல்லி இருப்பதாக கூறிக்கொண்டு இவர்கள் பணம் படைத்த மேலானுக்கும் பணம் இல்லாத் தொழிலாளிக்கும் என தரிசன ஒழுங்கை மாற்றி வைத்திருப்பதை கடவுள் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்.

சரி நான் எதோ சொல்ல வந்து என்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். நாங்கள் தங்கியிருந்த மதுரையில் இருந்து அன்று கொடைக்கானலுக்குப் போவதாக திட்டம் இருந்தது. போகிற வழியில் திருப்பரங்குன்றம் கோவிலுக்குப் போய் விட்டு போகலாம் என்று அன்று காலையிலேயே திட்டம் போட்டோம். அதற்கு முந்தைய நாட்களில் பல கோவில்களுக்கு போயிருந்ததாலும் அங்கு நடக்கிற இம்மரிரியான அக்கிரமங்களைக் கண்டும் வெறுப்புற்றிருந்த என்னுடன் வந்த நண்பர் ஒருவர் இந்தக் கோவில் பயணத்தை விரும்பவில்லை. இருந்தும் போற வழிதானே ஒருக்கா அங்கையும் போய்விட்டுத்தான் போவோமே எனும் எண்ணத்தில் திருப்பரங்குன்றம் சென்றோம்.

முருகனை தமிழ்கடவுள் என்பர் பலர். காரணம் இந்தியாவில் வடபகுதியில் முருகனை வழிபடுவதில்லை அங்கெல்லாம் முருகனின் தந்தை சிவனும் மாமன் விஷ்னுவும் தான் வழிபாட்டுக்குரியவர்களாக இருக்கிறார்கள். கடவுளருக்கிடையிலும் மொழிப்பிரச்சனை இருக்கும் போல.

அழகன் முருகனை தரிசிக்க திருப்பரங்குன்ற வாயிலைச் சென்றடைந்தோம். இந்தியாவில் எந்தக் கோவிலுக்குப் போனாலும் சன நெரிசலைக் காணமுடியும். கோவிலைச் சுற்றிக் கடைகள் என்று பாhத்;தால் கோவிலுக்குள்ளேயும் கடைகள். வாசலிலேயே இந்துக்கள் மாத்திரம் என்ற பலகை மற்றக் கோவில்கள் போலவே இங்கும் காணக்கிடைத்தது. மதம் ஏன்தான் மனிதனை இந்தளவுக்கு ஆட்டி வைக்கிறதோ எனத் தெரியாத கேள்வியுடன் கோவிலுக்குள் நுழைந்தோம். இன்னொரு பலகையும் பல கோவில்களில் காணக்கிடைக்கும் அது “ இங்கு தமிழில் மந்திரம் ஓதப்படும்” என்று சொல்லூம் என்ன ஒரு வேடிக்கையான விடயம் இது கடவுளுக்தான் வெளிச்சம். கோவில்கள் பல நேரத்தில் வழிபாட்டிடம் மட்டுமல்லாமல் சுற்றுலாத்தளமாகவும் மாற்றப்படுகிறது. எல்லாக் கோவில்களிலும் கமராவுக்கு என்று தனிக்கட்டணம் அறவிடப்படுவது இதற்குச் சான்றாகின்றது. எமது சிற்பங்களின் பெருமைகளை விற்றுத்தான் நாம் பிழைக்கவேண்டுமா என்ற கேள்விக்கும் எனக்குப் பதிலில்லை.

பல நேரத்தில் பல கேள்விகளுக்குப் பதில் இல்லாமலேயே நாம் வாழும் இவ்வுலகோடு சமரசம் பண்ணிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் அங்கு பொது வரிசையில் நின்றவர்கள் அதிகம் என்றாலும். நாங்கள் சிறப்புத் தரிசன டிக்கட் எடுக்காமல் பொது வழியிலேயே சென்றோம். சற்று உள்ளே செல்லச் செல்ல ஒரு வித்தியாசமான நான் எங்கும் கேட்டிராத ஒரு குரல் நமக்கு கேட்டவண்ணம் இருந்தது. அந்தக் குரலுக்கு மிக அண்மிக்க அண்மிக்க அந்தக் குரல் சொன்னதும் எமக்குத் தெளிவாக கேட்டது. “உங்கள் கஷ்டங்கள் போக சனிஸ்வரனுக்கு நெய் விளக்கு போடுங்க” எனச் சொன்னது அக்குரல். சற்றே கிட்டப் போனதும் அந்தக்குரலுக்கான உருவத்தினைக் காணக்கிடைத்தது.

கோவிலின் ஒரு மூலையில் தரிசனம் முடித்து விட்டுச் செல்பவர்கள் பாதையில் சனிஸ்வரன் திருவுருவச்சிலைக்கு முன்பாக சற்றே குள்ளமான கருமையான உருவம் அவருடைய கண்கள் மற்றவர்களுடைய கண்கள் போல் அல்லாமல் சற்றே பெரிதாகவும் முகத்திலேயே கண்ணகள் பொருத்தப்பட்டது போலவும் இருந்தது. மற்றவர்களுடன் தரிசனத்திற்குச் சென்று கொண்டிருந்த நான் வரிசை முன்னேற முன்னேற அவரை திரும்பிப்பார்த்த படியே வந்தேன். அவருக்கு வேலை செய்ய இன்னொரு உதவியாளும் கூடவே இருக்கிறார். “உன்ட எல்லாப் பிரச்சனையும் தீர சனிஸ்வரனுக்கு விளக்கு போடு” “ நெய் விளக்கு 5 ரூவாயி” என்று அந்த மனிதரின் குரல் அந்த இடம் முழுக்க நிறைந்திருந்தது. தரிசனம் முடித்துச் செல்லும் பலர் அவரிடம் விளக்கு வாங்கி சனிஸ்வரனுக்கு முன்னே தங்கள் பிராhத்தனைகளுடன் தீபம் இட்டுவிட்டுச் செல்வதையும் அங்கு எரிந்து முடிந்து இருந்த விளக்குகளை அந்த உதவியாளர் எடுத்து மீண்டும் நெய் விட்டு வைப்பதும் எனக்கு ஆச்சரியமாப்பட்டது.

அழகன் முருகன் தரிசனம் முடிந்ததும் இல்லையில்லை சீக்கிரம் பார்த்துவிட்டுப் போ என்ற கத்தலால் வேகமாக நடக்க வேண்டியே இருந்தது. கடவுளையும் பார்வைப் பொருளாக்கி பார்த்து விட்டுப்போ என்பது பொதுவாக எல்லா இந்தியக் கேயில்களிலும் காணக்கிடைத்தது. சிறப்புத் தரிசனக்காரர்களுக்கும் இந்த விதி ஒன்றாகவே இருந்தது. அந்த விளக்கு விற்பரின் அருகில் சென்று விளக்கு வாங்கிய படியே எப்படி அய்யா இருக்கிறியள் என்று விசாரித்தேன் இத்தனை காலமும் யாரும் கேட்காத கேள்வியை நான் கேட்டது போலவும் எனது மொழியின் வித்தியாசத்தாலும் சற்றே வியந்து என்னை அவர் மேலும் கீழுமாகப்பார்த்தார். பின்னர் விளக்கு 5 ரூவாயி என்றார். விளக்குக்கு பணம் கொடுத்ததும் தனக்கு முன்னே தட்டில் இருக்கும் விளக்கை எடுக்கும் படி சைகை காட்டினார். பின்னர் ஏதோ நினைத்தவராய் என்னைப் பார்த்து ஒரு விதமாக மேலே கைகாட்டிச் சிரித்தார் அந்தச் சிரிப்பில் வேதனை தெரிந்தது. எல்லோருடைய கஷ்டங்களையும் போக்க விளக்கு விற்கும் அவருடைய நிலையை எண்ணி அவரே சிரிப்பதாக அவரே பின்னர் சொன்னார்.

அந்த இடமே விளக்குப் புகையால் இருண்டே இருந்தது. எல்லாம் வல்ல கடவுள் மனமும் அது போல இருண்டேதான் இருக்குமோ. நானும் சனிஸ்வரனுக்கு விளக்கு வைத்து விட்டு மீண்டும் அவ்விடத்தில் நின்று அவரைப்பார்தபடியே சற்று நேரம் நின்றேன். அவருடைய முகத்தில் இருந்த அந்த சோகம் என்னை மிகவும் பாதித்தது. ஏன் மனிதர்களிடம் இந்த ஏற்றத்தாழ்வு, கடவுள் என்பவர் ஏன் எல்லோரையும் ஒரே விதமாகப் படைக்கவில்லை, மனிதன் கண்டு பிடித்த பணம் ஏன் எல்லா மனிதர்களிடமும் இல்லை என்ற விடை தெரியாத பல கேள்விகளுடனும் மிகவும் கூச்சத்துடனும் கோவிலை விட்டு வெளியே வந்தேன்.

யுகன்

http://www.ndpfront.com/?p=28856

< பல நேரத்தில் பல கேள்விகளுக்குப் பதில் இல்லாமலேயே நாம் வாழும் இவ்வுலகோடு சமரசம் பண்ணிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.>

மிக்க நன்றிகள் சுபேஸ் உங்கள் பகிர்வுகளுக்கு :):):) 1 .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு

ஒரு முக்கிய பரீட்சைக்கு முன் எனது மனைவி மகனைக்கூட்டிக்கொண்டு இந்து ஆலயம் ஒன்றுக்கு சென்று பணம் கொடுத்து அர்ச்சனை செய்தார். அவன் ஏதும் கதைக்காமல் எல்லாவற்றையும் தாய் சொல்வதுபோல் செய்து கொண்டு வந்து வெளியில் வந்ததும் அங்கு நடந்தவற்றிற்கு விளக்கம் கேட்டான். தாயும் நீ நன்றாக பரீட்சை எழுதணும். பரீட்சையின் போது எதுவிதமான சிக்கல்களும் வரக்கூடாது என்பதற்காகத்தான் அர்ச்சனை செய்தேன் என்றார்.

அவன் திருப்பிக்கேட்டான்

அப்போ பணம் இல்லாதவர் எப்படி அர்ச்சனை செய்வது? பரீட்சையில் பிரச்சினையில்லாது தேர்வது? என்று. என்னிடம் பதில் இல்லை. தங்களிடம்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.