Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர்நாள் முடிந்தும் தொடரும் குழப்பவாதிகளின் சதி திட்டங்கள்-யேர்மனியில் குழப்பத்தை ஏற்படுத்த விரைந்துள்ள சங்கீதன்

Featured Replies

singkala%20pulanaayvu.jpgயேர்மனியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சிலர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக உயர்வு இணையம் அறிகிறது.

மாவீரர்நாள் காலப்பகுதியில் பல குழப்பங்களை யேர்மனியில் ஏற்படுத்தி வந்து பின் போட்டி மாவீரர்நாளை நடத்தி மூக்குடைபட்டு குறுகிய சிலர் மட்டும் கலந்து கொண்டு அவர்களால் நடத்தப்பட்ட போட்டி மாவீரர்நாள் வெற்றியளிக்காததால் மனமுடைந்து விரக்த்தியில் போட்டி நிகழ்வுகளிலிருந்து ஒதுங்கும் நிலைக்கு வந்துள்ள பலரையும் உச்சாகப்படுத்தும் நிமித்தம் பிரித்தானியாவில் தலைமைச்செயலகம் என்று சொல்லி தமிழர்களுக்குள் பிழவுகளை ஏற்படுத்தி வரும் சங்கீதன் என்ற நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக யேர்மனிக்கு வந்துள்ளதாக உயர்வு இணையத்திற்கு நம்பகமான வட்டாரத்தில் இருந்து செய்தி கிடைத்துள்ளது.

குறிப்பாக தாமே புலிகள் என்று கூறி முள்ளிவாய்க்காலில் போர் மெளனிக்கப்பட்டதன் பின் ஜரோப்பாவுக்கு வந்த சிலரும் மற்றும் பல ஆண்டுகளாக புலிகளின் கட்டமைப்புக்களிலிருந்து ஒழுக்காற்று நடவடிக்கையின் பிரகாரம் நீக்கப்பட்டிருந்த சிலரும் சேர்ந்துகொண்டு புலிகளின் சர்வதேச கட்டமைப்புக்களுக்கு சவால்விடும் விதமாகவும் அதை சிதைக்கும் விதமாகவும் தமது சூழ்ச்சி வேலைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மாவீரர்நாளை குறி வைத்து ஜரோப்பாவில் பல நாடுகளிலும் போட்டி மாவீரர்நாள் நிகழ்வுகளை நடத்தி மூக்குடைபட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள குழுவினரை உச்சாகப்படுத்தும் விதமாக அவர்களை வழிநடத்தும் சிலர் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டுள்ளதோடு யேர்மனியிலும் மாவீரர் நாள் நடத்தி மக்களால் புறக்கணிக்கப்பட்டு மனமுடைந்து,சலிப்படைந்து,ஒரு கட்டத்தில் தாம் தவறானவர்களின் கீழ் செயற்படுகின்றோமா என்ற சந்தேகத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்புக்கு போட்டியாக போட்டி நிகழ்வுகளை நடத்துவதோடு தாமே புலிகளின் கட்டமைப்பு என்று சொல்லி செயற்படும் தலைமைச்செயலக குழுவிலிருந்து ஒதுங்குவதற்கு பலரும் முடிவெடுத்துள்ள நிலையில் அவர்களை உச்சாகப்படுத்தி மீண்டும் அவர்களை புலிகளின் சர்வதேச கட்டமைப்புக்களுக்கு எதிராக செயற்படுத்துவதற்கும் அதை சிதறடிப்பதற்கும் ஏதுவாக பிரித்தானியாவில் தலைமைச்செயலம் என்று செயற்பட்டு தமிழர் அமைப்புக்களுக்கிடையில் பிழவுகளையும் மோதல்களையும் உருவாக்கிவருவதாக பலராலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சங்கீதன் என்பவர் வந்துள்ளதோடு,

யேர்மனியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்புக்கு எதிராக செயற்பட்டு வரும் நபர்களை சந்தித்து யேர்மனியில் மீண்டும் பல குழப்பங்களையும்,அமைப்புக்களுக்கிடையிலும்,தேசிய செயற்பாட்டாளர்களுக்கிடையிலும் மோதல்களை உண்டு பண்ணும் விதமாக சில சதி திட்டங்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக மக்களையும் தேசிய செயற்பாட்டாளர்களையும் பிரித்து அவர்களுக்குள்ளும் மோதலை ஏற்படுத்துவதற்கான பாரதூரமான சதி திட்டமொன்றை அங்கு அவர்கள் தீட்டியுள்ளதாக நாம் அறிகிறோம்.

அத்தோடு சங்கீதன் என்பவர் யேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வியடைந்து துவண்டு துடித்து வரும் சிலரையும் ஒன்றிணைத்து இந்த சதித்திட்டத்தை தீட்டியுள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது,ஏனெனில் சங்கீதன் என்பவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வியடைந்து,புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பை எதிரியாகவும் அவர்களை பழிவாங்கவேண்டும் என்றுதுடிக்கும் சிலரை இன்று சந்திக்கவுள்ளதகவும் எமக்கு உறுதிப்படுத்தப்பட்ட செய்தி கிடைத்துள்ளது.

எனவே கடந்த சில மாதங்களாகவே ஜரோப்பாவில் பலகுழப்பங்களும் அதன் உச்சமாக தேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்களும் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கையில் சங்கீதன் என்பவர் யேர்மனிக்கு வந்து இவ்வாறு பல ஆண்டுகளாகவே புலிகளின் கட்டமைப்புக்களுக்கு எதிராக செயற்படும் சிலரையும் தலைவரையே விமர்சித்துவருபவர்களையும,புலிகள் தலைமை பலமாக இருந்த போதே அவர்களுக்கு எதிராக செயற்பட்டவர்களையும் சந்தித்துள்ளமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய புலம்பெயர் மக்களே,எத்தடைகள் வரினும் எமது நோக்காகிய தமிழீழ தனி நாட்டை மீட்கும் வரை எமது போராட்டம் ஏதோவொரு வடிவத்தில் தொடரும்.

அதுவரைக்கும் இவ்வாறான குழப்பவாதிகளை இனம் கண்டு அவர்களை புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று யேர்மனியில் உள்ள தமிழீழ ஆதரவாளர் ஒருவர் எமக்குதெரிவித்துள்ளார்.

உயர்வு ஆசிரியர் பீடம்

நன்றி உயர்வு

புலம்பெயர் என்ற பதத்தை மகிந்தா விரும்பவில்லை என்று அண்மையில் ஒரு செய்தி வெளியானது, அதற்கேற்ப மேலும் நாசகார வேலைகளை சிங்களம் அவிழ்த்து விடும் என்பதில் ஐயம் இல்லை.

'கண்ணால் கண்டதும் பொய்; காதால் கேட்டதும் பொய்; தீர விசாரித்து அறிவதே மெய்' -என்பதற்கேற்ப விழிப்பாய் இருந்து உண்மைகளை அறியவேண்டும்.

சர்வதேசப் பணிமனை யார் தலைமையில் இயங்குகிறது? யாருடன் இணைந்து செயற்படுகிறது.? நாடுகடந்த தமிழீழ அரசு அமைக்கப்பட்டபோது, அதை ஏன் உடைத்து இரண்டாக்கினார்கள் ? மாவீரர் தினத்தை இரண்டாகக் கொண்டாட ஏன் அடம்பிடித்தார்கள்? கூட்டணியை இரண்டாக்கினீர்கள் ஏன்? பொதுவான அமைப்புகளை இரண்டாக்கினார்கள். ஏன் இந்த நிலை?. தனிப்பட்டவர்களின் இருப்பைத் தப்ப வைப்பதற்காக மக்களைக் கூறு போடாதீர்கள். எல்லோரும் இணைந்து செயலபடுவொம் என்று அறிக்கை விடுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.