Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடியப் பிரதமருக்கு கனடியத் தமிழர்கள் சார்பில் உளமார்ந்த நன்றிகள்: - கனடியத் தமிழ்க் காங்கிரஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CTCnews260112_seithy150.jpg

இலங்கை விவகாரத்தில் மற்றயை நாடுகள் அனைத்திற்கும் முன்மாதிரியாக நடந்த கனடியப் பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சருக்கும் கனடியத் தமிழர்கள் சார்பிலான நன்றியறிதலை இந்த வார ஆரம்பத்தில் இடம்பெற்ற பொங்கல்விழாவில் வைத்துத் கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் உமாசுதன் தெரிவித்தார்.

மேற்படி விழாவில் கலந்து கொண்ட கண்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர்களின் மூலமாகவும் இச் செய்தி நேரடியாகவே கனடியத் தமிழ்க் காங்கிரஸால் தெரிவிக்கப்பட்டதோடு இவ் உறவைப் பலப்படுத்துமுகமான அமைச்சரவை சகாக்களுடனான சந்திப்புக்கான அழைப்பை தமிழ்க்காங்கிரஸ் கடித மூலம் விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

கனடியப் பிரதமரின் தலைமைத்துவப் பண்பை வெளிப்படுத்திய சிறீலங்கா மீதான கண்டன நடவடிக்கையைச் சுட்டிக் காட்டியே கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் இந்த நன்றியறிதலைத் தெரிவித்திருந்ததோடு தாங்கள் கனடியர்கள், தமிழர்கள் சம்பந்தமான விவகாரங்களில் தொடர்ந்தும் அரசியற் கட்சிகளுடனும் தலைவர்களுடன் சேர்ந்து இயங்கும் என்றும் தெரிவித்தார்.

அத்தோடு கனடியத் தமிழர்களிற்குத் தேவையான கலாச்சார � சமூக மண்டபமொன்றை அமைப்பதையே 2012ம் ஆண்டிற்கான திட்டமாக எடுத்துள்ளதாகவும், ஈழத் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு நியாயங் கிடைப்பதற்கு தொடர்ந்தும் பாடுபடும் என்றும் தெரிவித்தார்.

CTCnews260112_seithy003.jpg

CTCnews260112_seithy004.jpg

CTCnews260112_seithy005.jpg

CTCnews260112_seithy001.jpg

CTCnews260112_seithy002.jpg

http://www.seithy.co...&language=tamil

398592_230933906992724_100002283494886_509126_1017629189_n.jpg

கனேடிய வெளிவிகார அமைச்சருடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு!

இலங்கையில் மனிதவுரிமை விவகாரங்கள் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பில் திருப்திகரமான முன்னேற்றங்கள் ஏற்படவில்லையானால், இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கனடா பங்கு பற்றுவதை மறுபரிசீலனைக்கு உட்படுத்தலாம் என்றும், ஏனைய பல நாடுகளும் இந்நடைமுறையைப் பின்பற்றலாம் என்றும் இச்சந்திப்பின் போது கனேடிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கையின் நடவடிக்கைகளை கனடா உட்பட உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டும், அழுத்தம் கொடுத்துக் கொண்டும் உள்ளதாகவும், ஆனால் சிறிலங்கா அரசாங்கம் கடும் போக்கைக் கடைப்பிடிக்கின்ற காரணத்தால் விடயங்களை முன்னகர்த்திச் செல்வதில் முட்டுக்கட்டைகள் ஏற்படுவதாகவும் கனேடிய வெளிவிவகார அமைச்சர ஜோன் பயார்ட் நாடுகடந்த தமிழீழ அரசாங்கதின் பிரதிகளிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கனேடிய வெளிவிகார அமைச்சரிடம் மனுவொன்றினையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் கையளித்துள்ளனர். இச்சந்திப்பின் போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சகத்தின் சார்பில் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ், அரசியல் ஆலோசகர் விஜயகலாரத்தினம், பிரித்தானிய இயக்குனர் முருகதாஸ், நிரந்தரச் செயலாளர் ஜெயந்தன் ஆகியோருடன் தேர்தல் ஆணையாளர் டொக்டர் ராஜஜோகேஸ்வரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=ff64706f-ea3e-4b45-9a8c-1fe4b3b64421

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.