Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வுக்கு இந்தியா அக்கறை காட்டுகிறதாம்! ஹிலாரியிடம் நிருபமா கூறினார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hillary-nirubama150news.jpg

இலங்கையில் நிலைத்து நிற்கக் கூடிய காத்திரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்தியா முழுமையான அதீத அக்கறை காட்டி வருகிறது. அதே சமயம் அமைதித் தீர்வு தொடர்பாக இலங்கையின் வாக்குறுதிகள் இந்தியாவுக்குத் திருப்தி அளிக்கின்றன. இவ்வாறு அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ரனிடம் தெரிவித்திருக்கிறார்.

நேற்றுமுன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தற்போதைய இலங்கையில் அரசியல் நிலைமை மற்றும் இலங்கை விவ காரத்தில் ஏனைய நாடுகளின் தலையீடுகளை அடுத்தே இவர்களின் தீடிர் சந்திப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வோஷிங்டனில் கடந்த வருட இறுதியில் இந்தியத் தூதுவராகப் பதவியேற்ற பின்னர் நிரூபமாராவ், ஹிலாரியைச் சந்திப்பது இதுவே முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்திய அமெரிக்க உறவுகள் குறித்தும், ஆப்கானிஸ்தான், மியன்மார் உட்பட்ட நாடுகளின் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது பேசப்பட்டன. �என்றும் அதேசமயம், இலங்கையின் அமைதி முயற்சிகள் குறித்தான இந்தியாவின் பங்களிப்பு பற்றியும் இதன்போது ஹிலாரி கிளின்ரன் நிருபமா ராவிடம் கேட்டறிந்து கொண்டார் என்றும் வோஷிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இலங்கைப் பயணம் மற்றும் தீர்வு முயற்சிகளில் இந்தியா செலுத்திவரும் அக்கறை குறித்து ஹிலாரியிடம் இங்கு சுட்டிக்காட்டிய நிருபமாராவ், தமிழர்களுக்குத் தீர்வு வழங்குவது தொடர்பிலான விடயத்தில் கொழும்பின் உறுதிமொழி இந்தியாவுக்குத் திருப்தியளிப்பதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப அக்'கறை' பட்டு போடாதீங்கோ.. அப்புறம் ரின் சோப்பு ஏரியல் சோப்பு எது கொண்டு சலவை செய்தாலும் கறை போகாது

நிருபமா ராவ் – ஹிலாரி கிளிண்டன் சந்திப்பு

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை சந்தித்து இருதரப்பு உறவுகள், அணுசக்தி ஒத்துழைப்பின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர்.

வாஷிங்டனில் கடந்த ஆண்டு இறுதியில் இந்தியத் தூதராகப் பதவியேற்ற பின்னர் ஹிலாரியை நிருபமா சந்திப்பது இது முதல்முறையாகும். ஆப்கன், பர்மா உள்ளிட்ட நாடுகளின் விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்ததாக வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் விக்டோரியா நூலந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

http://www.alaikal.com/news/?p=95063

Edited by akootha

தீர்வு விடயத்தில் கொழும்பு அளித்துள்ள வாக்குறுதி திருப்தி அளிக்கிறது! ஹில்லறி கிளின்ரனுடனான சந்திப்பில் நிருபமா ராவ்

இலங்கை இனப்பிரச்சனைக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதில் இந்தியா முழுமையான அக்கறை காட்டி வருகிறது என்றும் அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அளித்துள்ள வாக்குறுதிகள் இந்தியாவுக்குத் திருப்தி அளிக்கின்றன எனவும் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லறி கிளின்ரனுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான விடயம் கவனத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஹில்லறி கிளின்ரனுடனான இச்சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் இலங்கை விவகாரத்தில் ஏனைய நாடுகளின் தலையீடுகள் தொடர்பாக இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளபோதும் ஜெனிவா மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவைக் காப்பாற்றும் நோக்கத்துடன் இந்சந்திப்பு இடம்பெற்றிருக்கலாம் என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் கடந்த வருட இறுதியில் இந்தியத் தூதுவராகப் பதவியேற்ற பின்னர் ஹில்லறியைச் சந்திப்பது இதுவே முதற் தடவையாகும்.

இந்திய அமெரிக்க உறவுகள் குறித்தும், ஆப்கானிஸ்தான், மியன்மார் உட்பட்ட நாடுகளின் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது பேசப்பட்டன என்றும் அதேசமயம், இலங்கையின் அமைதி முயற்சிகள் குறித்தான இந்தியாவின் பங்களிப்பு பற்றியும் இதன்போது ஹில்லறி கிளின்ரன் நிருபமா ராவிடம் கேட்டறிந்து கொண்டார் என்றும் வோஷிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இலங்கைப் பயணம் மற்றும் தீர்வு முயற்சிகளில் இந்தியா செலுத்திவரும் அக்கறை குறித்து ஹில்லறியிடம் இங்கு சுட்டிக்காட்டிய நிருபமாராவ், தமிழர்களுக்குத் தீர்வு வழங்குவது தொடர்பிலான விடயத்தில் கொழும்பின் உறுதிமொழி இந்தியாவுக்குத் திருப்தியளிப்பதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=0b42589e-fd9a-4946-95b4-1c622f5b8727

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களத்தை திருதிப்படுத்துவது ஒன்றுதானே இந்தியத்தின் கொள்கையே!

இவ இதுதான் முதல் முறையாக கில்லாரியை சந்திகிக்றாவானால் இவவின் அமெரிக்காவுக்கான மிசன் பல தடங்கல்களை ஏற்கனவே சந்தித்து விட்டதாகத்தான் எடுத்துக்க்கொள்ள வேண்டும்.

இவ இதுதான் முதல் முறையாக கில்லாரியை சந்திகிக்றாவானால் இவவின் அமெரிக்காவுக்கான மிசன் பல தடங்கல்களை ஏற்கனவே சந்தித்து விட்டதாகத்தான் எடுத்துக்க்கொள்ள வேண்டும்.

உலகவல்லரசான அமெரிக்காவுக்கு ஆசிய வல்லரசான சீனா, உலக வல்லரசாக மாறுவதை தடுக்கவேண்டும். அதற்கு இந்தியா ஆதரவு தேவை. ஆனால் அதற்கு ஏற்றாப்போல் இந்தியா வேகாமாகவோ இல்லை விவேகமாகவோ நடக்கவில்லை. இதனால் அமெரிக்கா மெல்ல மெல்ல தானே களத்தில் இறங்கவேண்டிய தேவை வநதுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை ஒரு இலட்சமாவது தரம் பொய் சொல்லி சாதனை படைத்த நிருபமாவுக்கு கின்னஸ் சாதனை கிடைக்க வாழ்த்துகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.