Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கதையும் கவிதையும்...

Featured Replies

கதையும் கவிதையும்...

தமிழீழத்தில் விடுதலைப்புலிகளினால் நடாத்தப்பட்ட தமிழீழ அரசு வெளிநாட்டவர்கள் பாராட்டும்படி நடந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இக் காலகட்டத்தில், இங்குள்ள செயற்பாட்டாளர்கள் போராளிகளின் கட்டளைக்கு அமைவாக, அவர்கள் குறிப்பிட்ட பொருட்களை பல கஸ்டங்களுக்கு மத்தியில் அங்கு கொண்டுசென்று, போராளிகளுக்கு கொடுத்துக் கொண்டாடினார்கள். போராளிகளுடன் கைகுலுக்கி, போட்டோ எடுத்து, இதனை இங்கு கொண்டுவந்து மற்றவர்களுக்கு காட்டி பெருமைப்பட்டுக் கொண்டார்கள். தலைவருடன் சேர்ந்து நின்று, புகைப்படம் எடுத்தவர்கள் தங்கள் வீட்டு வரவேற்பறையில் அதனை மாட்டி வைத்து, வீட்டுக்கு வந்தவர்களுக்கு, தங்களின் செல்வாக்கினை பறைசாற்றி புகழ்ந்து திரிந்தார்கள். இவற்றைக் கேட்டும், பார்த்தும் என்போன்ற ஏமாளிகள் மனத்துக்குள் ஏக்கம் கவலையும் கொள்வதும் உண்டு

இந்த நிலையில் போராளிகள் இங்கு வந்தபோது. நான் முந்தியா? நீ முந்தியா? என்று போட்டி போட்:டுக்கொண்டு. விமான நிலையம் சென்று, பூச்செண்டு கொடுத்து, வரவேற்றார்கள். யார் வீட்டுக்கு முதலில் அழைத்துச் செல்வது என முன்கூட்டியே திட்டமிட்டு, திட்டத்திற்கமைவாக ஆடம்பர வாகனங்களில் அவர்களை ஏற்றிச் சுற்றித் திரிந்தார்கள். மக்கள் போராளியைச் சந்திக்கச் சென்றால், ''போராளிகளை யார் யார் சந்திப்பது என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம்'' என்று கூறி, சொறிநாயை விரட்டுவதுபோல் மக்களை விரட்டினார்கள். ''போராளியை முன்கூட்டியே எங்களுக்குத் தெரியும்;'' என்று கூறினாலும் அதனை மறுத்து. தங்களுக்கு நெருக்கமானவர்களை மட்டும் அவர்களைச் சந்திக்க அனுமதித்தார்கள்.

கூட்டங்களுக்கு போராளிகளை அழைத்துச் செல்லும்போது, இராசமரியாதை கொடுத்து அவர்களைக் கொளரவப் படுத்தியதுடன், மேடைகளில் மாவீரரைப் புகழ்ந்தும் போராளிகளைப் புகழ்ந்தும், போராளிகளை விடத் தாங்களே விடுதலைத் தாகம் மிக்கவர்களாகவும் விடுதலைத் தீயை மூட்டுபவர்களாகவும் தியாகிகளாகவும், விராவேசப் பேச்சுப் பேசி, வீறுநடைபோட நடந்து, கைதட்டல் வேண்டி, பூவூடன் சேர்ந்த நாரும் மணம்பெறும் என்பதை செயலால் உணர்த்தினார்கள்.

சிங்கள இராணுவம் முள்ளிவாய்க்காலில் பல நாடுகளின் துணையுடன், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு, பல இலட்சக் கணக்கான தமிழ்மக்களைப் படு கொலை செய்து, பிடிபட்ட போராளிகளை பால் வேறுபாடின்றி, சித்திரவதை செய்து, துன்புறுத்தி சின்னாபின்னப்படுத்தியது. இதன்பின் விடுதலைப் போரை முற்றாக அழித்துவிட்டதாக 2008 மே மாதம் 18ம் திகதி ஏக்காளமிட்டது.

இந் நிலையில், யார் யார் இறந்தார்கள். என்பதை யாராலும் கண்டு கொள்ள முடீயவில்லை. எத்தனை இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். என்பதை எந்த வல்லரசினாலோ, அதி தொழில் நுட்ப தேர்ச்சியுள்ள நாடுகளினாலோ கணக்கிட்டுக் கூறக்கூட முடியவில்லை. எஞ்சிய தமிழ் மக்கள் ஏதிலிகளாகினர். புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் வேதனையின் விழிம்புக்கு தள்ளப்பட்டு நடைப்பிணமாக வாழ்ந்து வரும் வேளையில், போருக்கிடையே பல கஸ்டங்களுக்கு மத்தியில், பொதுமக்களுடன் கலந்த போராளிகளில் சிலரும், எந்தவித முதலுதவியும் இல்லாமல் குடல்கொட்டக் கொட்ட, உயிரைக் கையில் பிடித்தபடி கடல்மார்க்கமாக அயல் நாடுகளுக்குத் தப்பிய போராளிகள் சிலரும் வெளிநாடுகளுக்கு வந்து சேர்ந்தார்கள்.

இன்று இப்போராளிகளுக்கு உள்ள ஆதரவு எப்படியுள்ளது? உங்களுக்குத் தெரிந்தவற்றை இதன் கீழ் எழுதும்போதுதான் இப்பாடலுக்கான கதையைப் பூரணமாக்க முடியும். எங்கே தொடருங்கள்.

பாடல்:

ஆலிலை பூவும் காயும் அளிதரு பழமும் உண்டேல்

சாலவே பட்சி யெல்லாம் தம்குடி யென்றே வாழும்

வாலிபர் வந்து தேடி வந்திப்பர் கோடா கோடி

ஆலிலை ஆதி போனால் அங்குவந் திருப்பா ருண்டோ.

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு முன் போராளிகளை உச்சியில் தூக்கிவைத்துக் கொண்டாடியவர்கள், முள்ளிவாயக்கால் போர் முடிவுக்குப்பின் முற்றாகவேமாறிவிட்டார்கள். புலம்பெயர்ந்து வந்த போராளிகளை வரவேற்க யாரும் செல்லவும் இல்லை. இருக்கும் இடமறிந்து சென்று பார்க்கவுமில்லை. போராளிகள் தொடர்பை ஏற்படுத்தியபோது மட்டும் கொஞ்சம் மனச்சாட்சியுள்ள ஒரு சிலர், அந்த உணவு விடுதிக்கு கி;ட்ட வா... இந்த உணவு விடுதியடிக்கு வா... என்று கூறித் தெருவிலே சந்தித்தார்கள். சிலர் உணவு விடுதிக்குள் மாறி மாறிக் கூட்டிக்கொண்டு திரிந்தார்கள். இப்படி போராளிகளைச் சந்தித்தவர்களும்; கூட, தாங்கள்தான் விடுதலையை முன்னெடுத்தவர்களாகவும், தாங்கள்தான் தேசத்தின் விடுதலையைத் தாங்கி நிற்பவர்களாகவும் காட்டிக் கொண்டதுடன், சேர்த பணத்தைப்பற்றிய சிந்தனையும,; தங்கள் பதவி பற்றிய சிந்தனையும் உள்ளத்தில் மேலோங்கி இருக்க, கட்டமைப்பு, கட்டமைப்பு என்று மேலோட்டமாகப் பிதற்றினார்கள்.

இதனை அவதானித்த போராளிகள் மக்களை அணுகினார்கள். அவர்களிடையே விசாரித்தார் கள். செயற்பாட்டாளர்களுக்குள்ளே போட்டி, பூசல் நிரம்பி வழிவதுடன் பதவிமோகமும் சுயலநலப்போக்கும் மிளிர்வதைக் கண்டு திடுக்கிட்டார்கள். இதற்காகவா 40 ஆயிரத்திற்கு மேற்;பட்ட மாவீரரை இழந்தோம் என்று இரத்தக் கண்ணீர் வடித்தார்கள். தமிழ் மக்களுக்குள் பிழவுகள் வேண்டாம். விடுதலைப் புலிகள் என்றால் ஒன்றுதான் என்றார்கள். செயற்பாட்டாளர் களை நாடித் தாமே சென்றார்கள். யாரும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் போராளிகளிடம், நீ ஏன் சைனற் அடிக்கவில்லை? நீ சிங்கள உளவாளியா? நீ கருணா குழுவா? பிள்ளையான் குழுவா? நீ என்ன கேபியின்ரை ஆளா? இப்படியே வந்த போராளி களைக் கேள்வி கேட்டு, அவர்களை ஏன் இங்கு வந்தோம் என்று ஆக்கிவிட்டார்கள். இவர்கள் உண்மையாக விடுதலையை நேசித்தவர்களா? போராளிகளை நேசித்தவர்களா? சிந்தித்துப் பாருங்கள். இக்கதைக்கு இப்பாடல் பொருத்தமா எனப் பாருஙக்ள்.

பாடலும் கருத்தும்:

பாடல்:

ஆலிலை பூவும் காயும் அளிதரு பழமும் உண்டேல்

சாலவே பட்சி யெல்லாம் தம்குடி யென்றே வாழும்

வாலிபர் வந்து தேடி வந்திப்பர் கோடா கோடி

ஆலிலை ஆதி போனால் அங்குவந் திருப்பா ருண்டோ.

கருத்து:

ஆலமரத்தில் பூக்களும் காய்களும் குளிர்ச்சியுள்ள பழங்களும் இருக்குமானால் எல்லாவகைப் பறவைகளும் தாம் குடியிருந்து வாழும் இடமென்று கூடி வாழந்திருக்கும். அவ் ஆலமரத்தில் இலை முதலியன இல்லாமல் பட்டுப்போகுமானால், அந்த ஆலமரத்தின் அடியிலாவது வந்து இருப்பவை யாதேனும் உண்டோ, அதுபோல, ஒருவனுக்கு எல்லாச் செல்வமும் கூடி இருக்குங் காலத்தில் மட்டும் பலகோடி மக்களெல்லோரும் தமக்கு அவன ஆகவேண்டித் தாம் இருக்கும் இடத்தைத்தேடித் தெரிந்து வந்து, வணங்கி நிற்பர்.

< ஆலிலை பூவும் காயும் அளிதரு பழமும் உண்டேல்

சாலவே பட்சி யெல்லாம் தம்குடி யென்றே வாழும்

வாலிபர் வந்து தேடி வந்திப்பர் கோடா கோடி

ஆலிலை ஆதி போனால் அங்குவந் திருப்பா ருண்டோ. >

இதை இவ்வாறு இலகு படுத்தலாம் எனநினைக்கின்றேன் செம்பகன் . < குளத்தில் நீர் இருக்கும் வரை தான் அந்தக்குளத்தில் மீனும் கொக்கும் இருக்கும் > மேலும் , அரசியல் ரீதியாகக் கருத்துகள் சொல்ல எனக்கு எதுவித தகுதியும் இல்லை . வாழ்த்துக்கள் செம்பகன் :):):) .

  • கருத்துக்கள உறவுகள்

சரி பிழைகளைப்பேசியே தீர்க்கணும்

நாம் கனக்க பேசணும்

கேட்கணும்

பதில் சொல்லணும்

சரி இவ்வளவு எழுதும் தங்களிடம் ஒரு கேள்வி

இவ்வளவு கடினமான பாதைகளைக்கடந்து வெளியில் வந்த சிலரிடம் எப்படி சர்வதேச கடவுச்சீட்டு???

எப்படி ஒரு நாளைக்கு ஒரு நாட்டில் திரிய முடிகிறது???

  • தொடங்கியவர்

கோமகன், விசுகு இருவருக்கும் எனது நன்றிகள்.

அற்ற குளத்தில் அறுநீர் பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலுமே

ஒட்டி உறுவார் உறவு

விசுகு அவர்களுக்கு

இவ்வளவு கடினமான பாதைகளைக்கடந்து வெளியில் வந்த சிலரிடம் எப்படி சர்வதேச கடவுச்சீட்டு???

எப்படி ஒரு நாளைக்கு ஒரு நாட்டில் திரிய முடிகிறது???

நான் சேர்க்க வேண்டியதை நீங்கள் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.