Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைக்கான மீள்கட்டமைப்பின் அவசியம்

Featured Replies

தமிழீழ விடுதலைக்கான மீள்கட்டமைப்பின் அவசியம்

தமிழீழ விடுதலைக்கான புதிய மனப்பாங்கையும் புதிய சிந்தனையையும் மீள்கட்டமைப்பையும் வரலாறு கோரி நிற்கிறது.

எங்களுக்கு நாங்களே எஜமானர்களாய் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் நடந்து வந்த பாதையை நாங்களே திரும்பிப் பார்ப்பதுடன் எங்கள் தவறுகளை நாங்களே திருத்திக் கொள்ளவும், எங்களை நாங்களே புதுப்பிக்கவும், எங்களை நாங்களே மீள்கட்டமைப்புச் செய்யவும் தயாராக வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுவோமேயானால் நாங்கள் எதிரிகளின் சேவகர்களாகவே இருக்க நேரும்.

சேவல் கூவி சூரியன் உதிப்பதில்லை. ஆனால் சூரியனின் வரவை சேவலால் முன்னறிவிப்புச் செய்யமுடியும். சூரியன் கிழக்கே உதிக்கும் என்று சொல்ல ஒரு பண்டிதர் தேவையில்லை. ஆனால் சூரியன் ஏன் கிழக்கே உதிக்கின்றது என்பதை விளக்க ஒரு பண்டிதர் தேவை. ஒவ்வொன்றுக்கும் இருக்கக்கூடிய வல்லமையையும், அளவையும் அதனதற்குரிய சரியான அளவில் ஏற்கவும், புரிந்து கொள்ளவும் வேண்டும். ஒன்றைப் பற்றிய மிகை மதிப்பீடும் தவறானது, அதேவேளை ஒன்றைப்பற்றிக் குறைத்து மதிப்பிடுவதும் தவறானது. எப்போதும் சரியானதும், துல்லியமானதுமான மதிப்பீடு நலத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியமானது.

முப்பது வருட சாத்வீகப் போராட்டம் தோல்வியில் முடிவடைந்துவிட்டது என்றும், அதன் பின்பு தொடங்கி நிகழ்ந்த முப்பது வருட ஆயுதப் போராட்டமும் தோல்வியில் முடிந்து விட்டது என்றும் இப்போது எங்கும் பேசிக்கொள்ளப்படுகிறது.

அகிம்சைப் போராட்டம் ஒரு கட்டமைப்பு. ஆயுதப் போராட்டம் இன்னொரு கட்டமைப்பு. அதாவது விடுதலைப் போராட்டம் எனும் பாதையில் இரு கட்டமைப்புக்கள் இருந்தன. தற்போது விடுதலைப் போராட்டம் மூன்றாவதான இன்னொரு மீள்கட்டமைப்பைக் கோரி நிற்கின்றது.

சோசலிசத்திற்கான மார்க்ஸிச முறைமையானது மார்க்ஸ் காலத்துடன் முதலாவது கட்டமைப்பை முடித்துக் கொண்டது. ஆனால் மார்க்ஸ்க்கும் லெனினுக்கும் இடைப்பட்ட காலத்தில் அது ஒரு புதிய கட்டமைப்பிற்கான தேவையைக் கோரி ஊசலாடிக் கொண்டிருந்த காலகட்டமாய் அமைந்தது. லெனின் வருகையுடன் மார்க்ஸிசம் இரண்டாவதான மீள் கட்டமைப்பைச் செய்துகொண்டது. ஒக்டோபர் புரட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மார்க்ஸிசம் மேலும் மீள்கட்டமைப்புச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. லெனின் பதவியில் இருந்தபடியே நடைமுறைத் தவறுகளை உணர்ந்து ஏற்று மீண்டும் மீள்கட்டமைப்புச் செய்தார். அதாவது மார்க்ஸில் இருந்து லெனின் காலம் முடியும் வரை மார்க்ஸிசம் மூன்று கட்டமைப்புக்களுக்கு உள்ளாகி இருந்தது.

1920 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தத்தைத் தொடர்ந்து மார்க்ஸிசம் அடுத்த பெரும் மீள்கட்டமைப்புச் செய்யப்பட வேண்டியதற்கான பெரும் வரலாற்று நிர்ப்பந்தத்திற்கு உள்ளானது. ஆனால் இற்றைவரை அது செய்யப்படவில்லை. அவ்வாறு தொடர் மீள்கட்டமைப்புக்களுக்கு மார்க்ஸிச சோசலிசம் உள்ளாகாததன் விளைவே சோசலிச அரசுகள் உலகப்பரப்பில் வீழ்ந்து நொருங்குண்டு போனதற்கான காரணமாகும்.

அதேவேளை முதலாளித்துவம் தன்னை இடையறாது புதுப்பித்தும், மீள்கட்டமைப்புச் செய்தும் வருகிறது. அதனாற்தான் அது தொடர் வளர்ச்சியுடன் பூமியில் நின்று பிடிக்கிறது.

எல்லாப் போராட்டங்களையும் காலகட்ட நிபந்தனைகளுக்கு உட்படுத்தி அதனதன் அளவிலும், வல்லமையிலும் வைத்து அவற்றைச் சரிவர மதிப்பீடு செய்து காலதேசவர்தமானத்திற்கு பொருத்தமான வகையில் தொடர் மீள்கட்டமைப்புக்களுக்கு உள்ளாக வேண்டும்.

ஈழத்தமிழரின் போராட்ட வரலாற்றின் சாத்வீகப் போராட்டம் 1961 ஆம் ஆண்டுடன் முடிவடைந்து விட்டது. 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டம் முழுத்தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து குறிப்பிடக்கூடிய பாரிய சாத்வீகப் போராட்டம் எதனையும் தமிழரசுக் கட்சி முன்னெடுக்கவில்லை. இதன் பின்பு ஆங்காங்கே உள்ளுர் மட்டங்களில் சிறுசிறு அளவில் உண்ணாவிரதப் போராட்டங்களும், கறுப்புக்கொடி காட்டல்களும், சிலவேளை முழுத்தமிழ் மண்ணிலும் அடையாள ஒரு நாள் ஹர்த்தால், கடையடைப்பு போன்ற சம்பவங்களைத் தவிர 1961-ல் இருந்து 1982 வரை பாரிய சாத்வீகப் போராட்டங்கள் எதுவும் நிகழ்ந்ததில்லை. ஆதலால் உண்மையான அர்த்தத்தில் 1961 ஆம் ஆண்டு பாரிய சத்தியாகக்கிரகப் போராட்டத்துடன் சாத்வீகப் போராட்டம் முடிவடைந்து விட்டதென்றே கூறவேண்டும்.

ஒன்றில் 1961 ஆம் ஆண்டுடன் சாத்வீகப் போராட்டம் புதிய உத்வேகத்துடன் புதுப்பரிமாணம் பெறவேண்டியிருந்தது, அல்லது போராட்டம் மீள்கட்டமைப்புச் செய்யப்பட வேண்டியிருந்தது. இங்கு இந்த இரண்டும் நிகழவில்லை.

எப்போதும் அரசியலில் புதுப்பித்தல், மாற்றங்களுக்கு உள்ளாகுதல், இறுதியில் மீள்கட்டமைப்புச் செய்தல் தவிர்க்கப்பட முடியாத முக்கிய அம்சங்கள் ஆகும். மூன்று வயதுச் சட்டையை முப்பது வயதில் அணிய முடியாது. இந்த சின்னஞ் சிறிய உண்மை அரசியலுக்கு மிகவும் அவசியமானது. ஈழத்தமிழர்களின் போராட்டம் இப்பொழுது பலவகைகளிலும் மீள்கட்டமைப்பிற்கு உள்ளாக வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தத்தில் உள்ளது. தக்கன பிழைக்கும், தகாதன அழியும். காலகட்ட வளர்ச்சிச் சூழலுக்கும், குறிப்பாகச் சர்வதேச, பூகோளப், பிராந்திய நிலைமைகளுக்கு பொருத்தமான வகையில் எம்மை நாம் தற்போது மீள்கட்டமைப்புச் செய்தாக வேண்டும்.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னிருந்த சர்வதேச நிலைமை இப்போது இல்லை. செல்லிடச் தொலைபேசிக்கு முன்னிருந்த பூகோள நிலையில் இருந்து செல்லிடத் தொலைபேசி பிரயோகத்திற்கு வந்ததன் பின்னான பூகோள யதார்த்தம் பெரும் புரட்சிகர மாற்றத்தை அடைந்துவிட்டது. இந்த வகையில் சர்வதேச அரசியல் மாற்றங்களும், பூகோள மாற்றங்களும் சமூகவாழ்வை பெரும் மாற்றங்களுக்கு உள்ளாக்கி உள்ளன. இவ்வாறு அனைத்துவகை மாற்றங்களையும் கருத்தில் எடுத்துக்கொண்டு அவற்றுக்கு பொருத்தமான வகையில் எமது அரசியலை நாம் மீள்கட்டமைப்புச் செய்ய வேண்டிய தவிர்க்கப்பட முடியாத அத்தியாவசியத்தில் உள்ளோம்.

'சாத்வீகப் போராட்டமும் தோல்வி', 'ஆயுதப் போராட்டமும் தோல்வி' என்று கூறி வாழாதிருப்பதல்ல எம் தலைவிதி. ஒன்றின் முடிவு இன்னொன்றின் தொடக்கம். இங்கு இரண்டு தொடக்கங்களை வரலாறு முன்வைத்திருக்கிறது.

ஒன்று ஆயுதப் போராட்டத்தின் தோல்வி என்பது சிங்கள இனத்துடன் கரைந்து அழிந்து போவதற்கான தொடக்கத்தைக் கொண்டிருக்கிறது. சிங்கள ஆட்சியாளருடன் இணக்க அரசியல் நடாத்துவது என்ற பதம் இத்தகைய கரைந்தழிவிற்கான தொடக்கத்தையே குறித்து நிற்கிறது.

இரண்டாவது 1,40,000 ற்கு மேற்பட்ட தமிழ் மக்களை கொன்றழித்த இனத்துடன் நாம் ஒரு போதும் இணைந்து வாழ முடியாது என்ற செய்தியின் அடிப்படையில் எமக்கான ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

1,40,000 ற்கு மேற்பட்ட மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதையும்விட அவர்களின் கிராமங்கள். நகரங்கள், வீடுகள், வழிபாட்டு இடங்கள் என்பன அழிக்கப்பட்டதையும்விட மோசமான தவறு அவற்றை ஒப்புக்கொண்டு மனம்வருந்த ஒரு மனச்சாட்சியுள்ள சிங்கள மகனைத்தானும் காணமுடியவில்லை. அதாவது இனப்படுகொலையைவிடவும் மோசமானது அந்த இனப்படுகொலையை நியாயப்படுத்தும் விதமும் அல்லது அதனை மறுக்கின்ற விதமுமாகும். சிங்கள ஊடகங்கள், சிங்களவரால் நடாத்தப்படும் ஆங்கில ஊடங்கள் என்பன எதுவும் நடந்து முடிந்த கோர இனப்படுகொலை பற்றி மனம் வருந்தும் ஒரு செய்தியைத்தானும் வெளியிட்டதில்லை. இது இனப்படுகொலையின் அசிங்கத்தை விடவும் மோசமான அசிங்கமாகும். இப்பட்ட மனநிலையிருக்கும் சிங்கள இனத்தவர்களுடன் இனியும் எவ்வாறுதான் இணைந்து வாழமுடியும். வாழமுடியும் என்று நினைப்பவர்கள் நாய்க்கும் எஜமானுக்கும் இடையிலான உறவைப் போசிப்பவர்களாக மட்டுமே இருக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் நாம் கரைந்து இணைந்து அழிந்துபோக முடியாது. மாறாக இனப்படுகொலையும், அதன் பின்னான இரண்டு வருடகால ஒட்டுமொத்த சிங்கள இனத்தின் மனப்போக்கும், நடைமுறைகளும் பிரிந்து செல்வதைத் தவிர வேறு மார்க்கம் ஈழத்தமிழருக்கு இல்லை என்பதையே காட்டுகின்றது. இந்நிலையில் ஒரு புதிய தொடக்கமும், அதற்கான ஒரு மீள்கட்டமைப்பும் ஈழத்தமிழருக்கு தேவை என்பதே வரலாற்றின் கட்டளையாகும். ஒன்றின் முடிவு இன்னொன்றின் தொடக்கம் என்பதற்கேற்ப நாம் உயிர் உடைமைப் பாதுகாப்பு, ஜனநாயகம், சுதந்திரம், சுயகௌரவம், சமத்துவம், சமூகநீதி, தலைநிமிர்ந்த வாழ்வு என்பன போன்ற அத்தியாவசிய தேவைகளின் பொருட்டு விடுதலை பெற்ற மக்களாக வாழவேண்டிய தேவைக்கான ஒரு மீள்கட்டமைப்பைப் பற்றி அதிகம், அதிகம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

தேசிய இனங்கள் பிரிந்து சென்று விடுதலை அடைந்துவரும் வரலாறு 1905ஆம் ஆண்டு சுவீடனிலிருந்து நோர்வே பிரிந்ததுடன் தொடங்கி 2011 ஆம் ஆண்டு தென்சூடான் பிரிந்தது வரை நீண்டு செல்கிறது. அதாவது இரண்டு நூற்றாண்டுகளைத் தழுவி அதன் வரலாறு நீண்டு செல்கிறது. இந்த வரலாற்றுப் போக்கிற்கு ஒடுக்கப்படும், இனப்படுகொலைக்கு உள்ளாகும் உயிர்ப் பாதுகாப்பற்ற, வாழ்வுரிமையற்ற ஈழத்தமிழர்கள் விதிவிலக்காக முடியாது. உலகளாவிய நீதியும், நியாயமும் எமக்கு மறுக்கப்படக்கூடாது.

- வடிவேற்கரசன்

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=8&contentid=32abf6b2-2ccd-4e29-b90e-ea5d8f8c34ed

1,40,000 ற்கு மேற்பட்ட தமிழ் மக்களை கொன்றழித்த இனத்துடன் நாம் ஒரு போதும் இணைந்து வாழ முடியாது என்ற செய்தியின் அடிப்படையில் எமக்கான ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

1,40,000 ற்கு மேற்பட்ட மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதையும்விட அவர்களின் கிராமங்கள். நகரங்கள், வீடுகள், வழிபாட்டு இடங்கள் என்பன அழிக்கப்பட்டதையும்விட மோசமான தவறு அவற்றை ஒப்புக்கொண்டு மனம்வருந்த ஒரு மனச்சாட்சியுள்ள சிங்கள மகனைத்தானும் காணமுடியவில்லை. அதாவது இனப்படுகொலையைவிடவும் மோசமானது அந்த இனப்படுகொலையை நியாயப்படுத்தும் விதமும் அல்லது அதனை மறுக்கின்ற விதமுமாகும். சிங்கள ஊடகங்கள், சிங்களவரால் நடாத்தப்படும் ஆங்கில ஊடங்கள் என்பன எதுவும் நடந்து முடிந்த கோர இனப்படுகொலை பற்றி மனம் வருந்தும் ஒரு செய்தியைத்தானும் வெளியிட்டதில்லை. இது இனப்படுகொலையின் அசிங்கத்தை விடவும் மோசமான அசிங்கமாகும். இப்பட்ட மனநிலையிருக்கும் சிங்கள இனத்தவர்களுடன் இனியும் எவ்வாறுதான் இணைந்து வாழமுடியும். வாழமுடியும் என்று நினைப்பவர்கள் நாய்க்கும் எஜமானுக்கும் இடையிலான உறவைப் போசிப்பவர்களாக மட்டுமே இருக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் நாம் கரைந்து இணைந்து அழிந்துபோக முடியாது. மாறாக இனப்படுகொலையும், அதன் பின்னான இரண்டு வருடகால ஒட்டுமொத்த சிங்கள இனத்தின் மனப்போக்கும், நடைமுறைகளும் பிரிந்து செல்வதைத் தவிர வேறு மார்க்கம் ஈழத்தமிழருக்கு இல்லை என்பதையே காட்டுகின்றது. இந்நிலையில் ஒரு புதிய தொடக்கமும், அதற்கான ஒரு மீள்கட்டமைப்பும் ஈழத்தமிழருக்கு தேவை

தமிழருக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை போராடுவேன்

என உறுதிமொழி எடுத்துக்கொள்ளுகிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.