Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிக் சொல்கெய்ம் அவர்களே, நீங்கள் இனியாவது ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கப் பாடுபடுங்கள்!

Featured Replies

நோர்வேயின் பன்னாட்டு அபிவிருத்தித்துறை அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள் புது டெல்லிக்குச் சென்றுள்ளார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் சிறிலங்காவுக்கு எதிரான நகர்விற்கு ஆதரவு தேடி அவர் அங்கு சென்றுள்ளதாகச் சில இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேறு சில இணையத் தளங்கள், டெல்லியிலுள்ள எரிசக்தி வள பல்கலைக்கழகம் தனக்கு வழங்கிய கௌரவ கலாநிதிப் பட்டத்தினை ஏற்றுக்கொள்ளவே நோர்வே அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள் அங்கு செல்கின்றார் என்று தெரிவித்துள்ளன.

காரணங்கள் எதுவாயிருந்தாலும், அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள் இந்தியத் தலைநகருக்கு மீண்டும் சென்றுள்ளார். அங்கே அவர் வரவேற்கப்பட்டுள்ளார் என்பது மட்டும் வெளிப்படையானது. ஏனைய செய்திகள் குறித்து நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

ஏனென்றால், அமைச்சர் எரிக் கொல்கெய்ம் அவர்கள் இலங்கைத் தீவிற்கான சமாதானத் தூதராக வலம் வந்த காலத்தில், அவர் இந்தியாவின் ஆசி பெற்றவராகவே கருதப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள், சமாதானம் நோக்கிய நகர்வுகள் அத்தனையையும் இந்தியத் தலைமையகத்தில் அப்படியே ஒப்புவிக்கும் பணியையும் செய்திருந்தார். இலங்கைக்குச் செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் அவர் டெல்லிக்குச் செல்லாமல் நாடு திரும்பியதில்லை.

அமெரிக்காவின் நெருங்கிய நண்பராகவும், இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நபராகவும், இலங்கையின் சமாதானத் தூதுவராகவும் ஏக காலத்தில் பணியாற்றிய எரிக் கொல்கெய்ம் அவர்களுக்கு நிச்சயம் இலங்கைத் தீவில் என்ன நடக்கின்றது? தமிழீழ மக்களுக்கு என்ன கதி நேரப் போகின்றது? என்பது பற்றிப் புரியாமல் இருந்திருக்க முடியாது. அவரால் நிச்சயம் இத்தகையதொரு பேரழிவைத் தடுத்து நிறுத்தியிருந்திருக்க முடியும். ஆனாலும் அவர் அதனைச் செய்யவில்லை என்ற ஆதங்கம் தமிழர் தரப்புக்கு இப்போதும் உள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையே உருவாகியிருந்த பலச் சமநிலை தடுமாற்றம் கொள்ளவும், சிங்கள தேசம் மீண்டும் தமிழர் நிலத்தைக் கைப்பற்றிக் கொள்ளவும் நோர்வே ஊடாக உருவாக்கப்பட்ட சமாதான ஒப்பந்தமே வகை செய்தது. அந்த சமாதான ஒப்பந்தம் உருவாகியிருந்திருக்காவிடின், விடுதலைப் புலிகள் தம்மை முற்று முழுதான மரபு வழிப் போர் முறைக்குள் மாற்றி அமைத்திருக்க மாட்டார்கள்.

சிங்களத்துடனான போரில் விடுதலைப் புலிகள் வெற்றிகளையும், தோல்விகளையும் அடைந்திருந்தாலும், ஒட்டுமொத்தமான அழிவுகளையும், இழப்புக்களையும் அடைந்திருக்க மாட்டார்கள். இந்தச் சமாதானம் பெற்றெடுத்த துரோகக் குழந்தையாகக் கருணா உருவாகியிருக்கமாட்டார். தென்தமிழீழம் பறிபோயிருக்காது. வடதமிழீழம் இத்தனை பேரழிவுகளையும், பெருந் துயரையும் அடைந்திருக்கமாட்டாது.

நோர்வே அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்களது ஏற்பாட்டுடனான இந்தச் சமாதானம் ஈழத் தமிழர்களையும், அவர்களது ஒரே காவலர்களான விடுதலைப் புலிகளையும் அழிப்பதற்கும், தமிழினத்தை மிண்டும் துயரத்திற்குள் சிக்க வைக்க மட்டுமே பயன்பட்டது.

அமைச்சர் எரிக் சொல்கெய்ம் நினைத்திருந்தால் சிங்களப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட முற்று முழுதான தமிழின அழிப்பு நடவடிக்கையினைத் தடுத்து நிறுத்த முடிந்திருக்கும். குறைந்தபட்சம், தன்னை நம்பிய தமிழ் மக்களைப் போர் முற்றுகைக்குள் விட்டுவிட்டு ஐ.நா. பணியாளர்கள் வெளியேறியதையாவது தடுத்து நிறுத்தியிருக்கலாம். அப்பாவித் தமிழர்களது அவலங்களுக்காக உலக நாடுகளைத் தட்டி எழுப்பியிருக்கலாம். ஆனாலும் அவர் விடுதலைப் புலிகளது ஆயுதக் கையளிப்பினையும், சரணடைதலையும் மட்டுமே வலியுறுத்தினார்.

தேசியத் தலைவர் அவர்கள் ஒருதடவை, ‘நோர்வேக்காரரை நம்ப முடியவில்லை. இவங்கள் உண்மையாகச் சமாதானத்துக்குத்தான் வந்தவங்களோ எண்டு சந்தேகமாக இருக்குது…’ என்று சொல்லியிருந்தார். முக்காலத்தையும் அறியும் மதிநுட்பம் படைத்த அவரது ஊகம் தவறானது அல்ல. எதிரிகளால் அவரை வீழ்த்த முடியாததால், பல துரோகிகள் கூட்டாகச் சேர்ந்து பெரும் வரலாற்றுத் துரோகத்தை நடாத்தி முடித்துள்ளார்கள்.

ஆனாலும், விடுதலைப் புலிகள் இறுதிக் கணம்வரை சரணாகதி அடையவும் இல்லை. தமிழீழ இலட்சியத்தைக் கைவிடவும் இல்லை என்பதால், உலகச் சதிவலையாலும் உயிர்களைப் பறிக்க முடிந்ததே தவிர, தேசியத் தலைவர் அவர்களை வீழ்த்த முடியவில்லை. விடுதலைப் புலிகளிடமிருந்து அந்த யுத்த களம் பறித்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் தமது இலட்சியத் தீயினை உலகத்திலுள்ள அத்தனை தமிழர்களது நெஞ்சிலும் மூட்டிவிட்டுள்ளார்கள். அதனால்தான், புலம்பெயர் தேசங்களிலும் விடுதலைப் பெருந் தீ கொழுந்து விட்டு எரிகின்றது.

ஒரு காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் கதாநாயகனாக உயரத்தில் வைத்துப் போற்றப்பட்ட நோர்வேயின் அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள், பின்னர் வில்லனாகவே விமர்சிக்கப்பட்டார். இந்தியாவின் விருப்பத்துடன் ஈழத் தமிழர்கள்மீது சிங்கள தேசம் நடாத்திய இன அழிப்புப் போரின் தவிர்க்க முடியாத நபராகவே எரிக் சொல்கெய்ம் இருக்கின்றார்.

அழிக்கப்பட்டவர்களுக்கும், அவலப் பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற மேற்குலக நாகரிகத்தின் பாரம்பரியத்திற்குட்பட்ட எரிக் சொல்கெய்ம் அவர்கள் இனியாவது ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கப் பாடுபடுபவர்களில் முதன்மையானவராக மாறவேண்டும். அதற்குத் தடைக்கல்லாக இன்றும் தொடரும் இந்தியாவின் தவறான முடிவினை இந்தப் பயணத்திலாவது மாற்றுவதற்கு எரிக் சொல்கெய்ம் முயலவேண்டும். கைவிட்டுப்போன ஈழத் தமிழர்களது பாதுகாப்பான வாழ்வை மீண்டும் அவர் உறுதிப்படுத்த வேண்டும்.

- இசைப்பிரியா

  • கருத்துக்கள உறவுகள்

எரிக் சொல்கெய்ம் அவர்களே, நீங்கள் இனியாவது ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கப் பாடுபடுங்கள்!

நீங்கள் ஒரு பக்கம், அன்பு!

நேரம் காலம் தெரியாமல், பகிடி விட்டுக்கொண்டு! :icon_mrgreen:

நல்லதொரு ஆக்கம். விடுதலைப்புலிகளால் கூறியும் ஏற்க மறுத்த விடயங்கள் இன்று நிதர்சனமாக சீனாவால் உண்மையாக்கப்படுகின்றது.

ஏனென்றால், அமைச்சர் எரிக் கொல்கெய்ம் அவர்கள் இலங்கைத் தீவிற்கான சமாதானத் தூதராக வலம் வந்த காலத்தில், அவர் இந்தியாவின் ஆசி பெற்றவராகவே கருதப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள், சமாதானம் நோக்கிய நகர்வுகள் அத்தனையையும் இந்தியத் தலைமையகத்தில் அப்படியே ஒப்புவிக்கும் பணியையும் செய்திருந்தார். இலங்கைக்குச் செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் அவர் டெல்லிக்குச் செல்லாமல் நாடு திரும்பியதில்லை.

இந்தமுறை தான் சிங்கள நாட்டிற்கு செல்லாமல் புதுடெல்லி செல்லுகிறார். இந்த முறை மேற்குலக நலன்கள் (இந்தியா உட்பட) ஏமாற்றப்பட்டு வருவதே காரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.