Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்தில் 56 வெளிநாட்டு தூதுவர்கள் – ஜெனிவாவை எதிர்கொள்ள சிறிலங்காவின் இராஜதந்திர நகர்வு!(படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

photo69-100x100.jpg

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால், பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 56 தூதுவர்கள், இராஜதந்திரிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வடக்கில் போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கவே இவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் வடமாகாண ஆளுனர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மீள்குடியேற்றம், மிதிவெடி, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வீதி அபிவிருத்தி, நீர் விநியோகம், தொடருந்துசேவை, விவசாயத்துறை, மீன்பிடித்துறை, கலை கலாச்சாரம், விளையாட்டுத்துறை மற்றும் வடக்கில் நடைபெறும் அனைத்து அபிவிருத்திகள் தொடர்பாகவும் வடமாகாண ஆளுனர் விளக்கமளித்தார்.

அதன் பின்னர், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் 6 பேர் போருக்குப் பின்னரான அபிவிருத்திக்குப் பின்னர் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்புகள், மீள்குடியேற்றம், மிதிவெடி மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பான தமது சந்தேகங்களைக் கேட்டு விளக்கங்களை பெற்றனர்.

நேற்று நடைபெற்ற சிறிலங்காவின் 64வது சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்க கொழும்பிலும், புதுடெல்லியிலும் இருந்து செயற்படும் பெருமளவு இராஜதந்திரிகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அனுராதபுரத்துக்கு அழைத்துச் சென்றிருந்தது. அவர்களே இன்று யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டனர். சிறிலங்காவின் வெளிவிகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம இவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை முறியடிக்கின்ற ஒரு நகர்வாகவே பெருந்தொகை இராஜதந்திரிகள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்

தக்கது.

8576.jpg

phot102.jpgphoto105.jpg

photo101.jpg

http://www.saritham.com/?p=49743

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா சப்பை அதிகாரிகளுக்கு இலவசமாக சுற்றுலா  பொதியை கொடுத்து வரவழைத்து போட்டோ பிடித்து சும்மா அரைசியல் செய்யினம்.

ஸ்ரீ லங்கா, இந்திய வறியவர்களின் வரியில் என்னெல்லாம் கூத்து நடக்கிறது? 

ஸ்ரீ லங்கா அடி பொடிகள் இதை தட்டி கேட்பார்களா அல்லது மாவீரர் நாள் உண்டியல் கணக்கை மட்டுமா பார்ப்பார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

என்னருமைத் தாய்நிலமே,

போறவன், வாறவன் எல்லாம்,

நாறடிக்கின்றான், உந்தன்,

பொன் மேனியை!

வாளிகட்டி நீரள்ளிய,

வளமான உன் கிணறுகள் எங்கே?

நெஞ்சில் நெருப்பெரிக்கும், இந்த

நீச்சல் தடாகங்கள் எங்கே?

யாருக்காக நீ,

அரிதாரம் பூசுகின்றாய்?

காசை எறிந்தால்,

காலில் விழுகின்ற, இந்தக்

கரு நாகங்களுக்காகவா?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு படம் காட்டல் என்பது சிறு குழந்தைக்கே தெரியும்.

60 வெளிநாட்டு இராஜதந்திரிகள் யாழ்.வந்தனர்

அரசியல் ரீதியான முன்னேற்றம் ஏற்படவில்லைஆளுநரிடம் அவர்கள் எடுத்துரைத்தனர்

வெளிநாட்டைச்சேர்ந்த 60 இராஜதந்திரிகள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இவர்கள் அரியாலை நாவலடிப் பகுதிக்குச் சென்று மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இடங்களையும் பார் வையிட்டனர்.யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இராஜதந்திரிகள் வடக்கு மாகாண ஆளுநரிடம் பல் வேறு கேள்விகளை எழுப்பினர். இதில், வடக்கு மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று இராஜதந்திரி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று நண்பகல் 12 மணியளவில் வருகைதந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் 60 பேர் கொண்ட குழுவினருக்கு வட மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் வைத்து வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் விளக்கமளிக்கப்பட்டது. இதன்போதே இராஜதந்திரியயாருவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியிருந்தார். பொருளாதார ரீதியில் பல முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அரசியல் ரீதியாக அவ்வாறு முன்னேற்றங்கள் ஏற்படவில்லை எனக் குறிப்பிட்ட அந்த இராஜதந்திரி வடக்கு மாகாண சபைத் தேர்தல் எப்போது இடம்பெறும் எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வட மாகாண ஆளுநர் ஏற்கெனவே உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை அரசாங்கம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. பொருத்தமான தருணத்தில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முடிபை ஜனாதிபதி எடுப்பார் எனக் கூறினார். இதேவேளை மற்றுமொரு இராஜதந்திரி நல்லிணக்கம்,பேச்சுவார்த்தை முதலியவற்றை கேட்க முற்பட்டபோது இவ்விடயம் தொடர்பாக அரசாங்க உயர் மட்டத்தினரிடம் கேட்டு அறிந்து கொள்ளுமாறு ஆளுநர் தெரிவித்தார். நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் பணி எப்போது பூர்த்தியாகும் எனவும் பொதுமக்களுக்கு நிலக்க ண்ணி வெடி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா எனவும் இன்னொரு இராஜதந்திரி கேள்வி எழுப்பி யிருந்தார்.

இதற்கு வட மாகாண ஆளுநர் மற்றும் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஆகியோர் விளக்கமளித்தனர். அதில் யுத்தம் முடிபுக்கு கொண்டு வரப்பட்ட பின்பு மிகவிரைவாக நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு வருகின் றன.முகமாலைப் பகுதியில் அதிகளவில் மிதிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளது. இவற்றை அகற்றும் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது என்றார் ஆளுநர். ஆளுநரைத் தொடர்ந்து யாழ். அரச அதிபர் பதிலளிக்கையில், யாழ். மாவட்டத் தில் 87 வீதமான மிதிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன. 37 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீள்குடியேற்றப்பட் டுவிட்டனர். 15 பிரதேச செயலர் பிரிவில் 5 பிர தேச செயலர் பிரிவுகளில் மிதிவெடி கள் அதிகளவில் புதைக்கப்பட்டி ருந்தது இனங்காணப்பட்டது. அதில் 4 பிரதேச செயலர் பிரிவுகளில் மிதிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற் றப்பட்டனர்.

வலிகாமம் வடக்கில் இன்னும் மிதிவெடிகள் அகற்ற வேண்டிய நிலையுள்ளது. மிக விரைவாக அவற்றை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்தார். இதேவேளை இன்னொரு இராஜதந்திரி வடமாகாணத் தில் இடம் பெறும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்பவர்களினால் இடையூறு கள் ஏற்படுத்தப்படுகின்றதா? எனக் கேள்வி எழுப்பினார். இதன்போது இலங்கை அரசாங்கத்தின் அமுலாக்கத்தில் இடம் பெறும் மீள் குடியேற்றத்திற்கு வெளிச்சக்திகள் தடை போட முடியாது என ஆளுநர் பதிலளித்தார். இராஜதந்திரிகளுட னான சந்திப் பின்போது ஆளுநரால் மீள் குடியேற் றம், மிதிவெடி விவகாரம், வீதி புனரமைப்பு, குடி நீர் விநியோகம், புகை யிரதசேவை விவசாயத்துறை, மீன், பிடித்துறை, கலை ;கலாசாரம் விளையாட்டுத்துறை; சுகாதாரம்; கல்வி போன்ற பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளை விளக்கப்படங்களுடன் எடுத்து ரைக்கப்பட்டது.

இராஜதந்திரிகளுடனான சந்திப்பின்போது வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் வட மாகாணத்தின் பிரதம செயலாளர் திருமதி விஜயலக்சுமி ரமேஸ், யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். மேலும் யாழ்ப்பாணத்திற்கு வந்த இராஜதந்திரிகள் யாழ்ப்பாணம் கோட்டையை சென்று பார்வையிட்டதோடு அரியாலை நாவலடிப் பகுதியில் மீள் குடி யேற்றப்பட்ட மக்களைச் சென்று பார்வையிட்டதுடன் இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வீடமைப் புத் திட்டத்தையும் பார்வையிட்டனர்.இது தவிர நல்லூர் கந்தசுவாமி கோவில், யாழ் மத்திய கல்லூரி, புல்லுக்குளம் என்பவற்றையும் அவர்கள் பார்வையிட்டனர். நேற்று முன்தினம் அநுராத புரத்தில் நடைபெற்ற இலங்கையின் 64 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்திற்கு வருகைதந்த குழுவினரே நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27039

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.