Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு திடீர் காய்ச்சல்

Featured Replies

காய்ச்சல் மற்றும் வாந்தி உபாதைகளால் பாதிக்கப்பட்ட மானிப்பாய் மகளிர் கல்லூரி யின் 50 மாணவிகள் யாழ். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதனால் மானிப்பாய் பகுதியில் பதற்ற மானதும் அதே பரபரப்பானதுமான சூழ் நிலை நிலவியது

அதேவேளை, காய்ச்சல் மேலும் பரவு வதைத் தடுக்கும் நோக்குடன் கல்லூரியை இன்றுமுதல் தற்காலிகமாக மூடுவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல், தலையிடி, வாந்தி போன்ற உபா தைகளால் பாதிக்கப்பட்ட மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகள் அம்புலன்ஸ் மூலம் கூட்டிவரப்பட்டு யாழ். ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டனர்.

திடீரென ஏற்பட்ட இந்த நிலைமை குறித்து கல்லூரி அதிபர் திருமதி ஜெயவீரசிங்கத்தி டம் கேட்டபோது அவர் கூறியதாவது:

எமது கல்லூரியில் கடந்த வெள்ளிக் கிழமை வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி இடம்பெற்றது அதன்பின்னர் கடந்த சில தினங்களாக பல மாணவிகள் காய்ச்சல், தலையிடி, வாந்தி ஆகிய நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்தனர்.

மேற்படி நோயால் பலர் வயது வேறுபாடின்றி தரம் ஒன்று முதல் உயர்தர வகுப்பு வரையான மாணவிகளை பீடித்துள்ளன. நேற்றுக் காலை வழமைபோல் நடைபெற்ற இறைபிரார்த்தனை யின்போது ஒருசில மாணவிகள் மயக்கமடைந் தனர். அதனைவிட வகுப்பில் அநேகமான மாணவிகள் சோர்வடைந்து காணப்பட்டனர். இந்த ஒருவகைக் காய்ச்சல் குணம் குறி காணப் பட்டதால் அவர்களை மருத்துவ பரிசோதனை செய்வதற்கென மானிப்பாய் சுகாதார வைத் திய அதிகாரியிடம் தொடர்புகொண்டோம்.

பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், பரிசோதகர்கள் பலர் கல்லூரிக்கு வருகை தந்தனர் அவர்கள் பாதிக்கப்பட்ட 36 மாண விகளை அம்புலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.

ஏனைய 40 மாணவிகள் கல்லூரி மண்ட பத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வைத்தி சாலைக்குக் கொண்டுசென்ற மாணவிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்ட பின்னர் அது ஒருவித வைரஸ் காய்ச் சல் என்றும் கூறப்பட்டது.

இதன் பின்னர் கல்லூரியில் தடுத்துவைக் கப்பட்டிருந்த மாணவிகள் வீடுசெல்ல அனு மதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் சிகிச் சைக்குட்படுத்தப்பட்ட மாணவிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றார்.

பீதிகொள்ளத் தேவையில்லை

மாணவிகள் நோய்வாய்ப்பட்டது தொடர் பாக மானிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதாரப் பரிசோத கர் எஸ்.எல்.ஜெபராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தெரிவித்ததா வது:

இது ஒரு வைரஸ்தொற்றினால் ஏற்பட்டி ருக்கும் காய்ச்சல் என்று மருத்துவ அறிக் கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து எந்த வித பீதியும் கொள்ளத்தேவையில் என்று அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பிரதி மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ் வரன் கருத்துத்தெரிவிக்கையில்:

இந்தக் காய்ச்சல் தொடர்பாக எவரும் பீதி கொள்ளத் தேவையில்லை. இது ஒரு சாதாரண காய்ச் சலே. இது தொடர்பான தடுப்பு நடவடிக் கைகளை சுகாதாரப் பிரிவினர் மேற் கொண் டுள்ளனர். இது குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவித் துள்ளோம் என்றார்.

http://www.uthayan.com/pages/news/today/20.htm

  • தொடங்கியவர்

மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகள் சாதாரண வைரஸ் காய்ச்சலாலேயே பீடிக்கப் பட்டுள்ளனர். அவர்களைப் பறவைக் காய்ச்சல் பீடித்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று யாழ். தாய், சேய்நல அதிகாரி டாக்டர் சி.எஸ்.சொலமன் உதயனுக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து வெளியிடுகை யில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகளை பரிசோதனை செய்தோம்.

அவர்கள் ஒருவகை வைரஸ் காய்ச்சலுக்கே இலக்காகியுள்ளனர். உடலுக்கு ஒவ்வாமையான பொருள்களை உட்கொண்டிருந்தாலும் இத்த கைய காய்ச்சலால் பீடிக்கப்படலாம்.

நஞ்சுப் பதார்த்தம் உள்ள உணவை உட் கொள்வதன் மூலம் ஏற்படும் காய்ச்சலாக இது இருக்காது.

பறவைக் காய்சலுக்கான அறிகுறி மற்றும் புறநிலைகள் காணப்படவில்லை.

ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் என்ற முடிவுக்கே வந்துள்ளோம் மாணவிகளின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத் தப்பட்டுள்ளன. அவற்றின் பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கும் என்றார் அவர்.

http://www.uthayan.com/pages/news/today/21.htm

மானிப்பாய் மகளிர் கல்லூரியின் 150 மாணவிகள் திடீர் சுகவீனமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதி

பறவைக் காய்ச்சல் அல்ல என்று மருத்துவர்கள் உறுதியாக அறிவிப்பு

மானிப்பாய் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவிகள் கடுமையான காய்ச்சல், தலைவலி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அதேநேரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று வெள்ளிக்கிழமை முதல் பாடசாலை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் மகளிர் கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியை அடுத்தே சுமார் 150 மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மட்டும் 75 ற்கும் மேற்பட்ட மாணவிகள் யாழ். ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;

மானிப்பாய் மகளிர் கல்லூரியில் கடந்த 17 ஆம் திகதி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அன்றைய தினம் அங்கு வந்திருந்த பெருமளவு மாணவிகள், அங்கு விற்கப்பட்ட ஐஸ்கிறீம் மற்றும் குளிர்பானங்களை வாங்கிச் சுவைத்துள்ளனர்.

இந்த உணவுப் பண்டங்களைச் சுவைத்த மாணவிகளுக்கு மறுநாள் முதல் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளன.

கடுமையான காய்ச்சல், தலைவலி, இருமல் போன்றவற்றால் இவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவிகள் பலர் பெற்றோரின் உதவியுடன் பல்வேறு தனியார் மற்றும் பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதனால், கடந்த திங்கட்கிழமை பாடசாலையில் மாணவிகளின் வரவு பெரிதும் குறைந்து காணப்பட்டது. பாடசாலைக்கு வந்திருந்த மாணவிகளில் பலரும் பல்வேறு உடல் உபாதைகளால் சிரமமடைந்ததை ஆசிரியர்கள் அவதானித்துள்ளனர். இது பற்றி பாடசாலை அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளை அழைத்த அதிபரும் ஆசிரியர்களும், அனைவரையும் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விளையாட்டுப் போட்டிக்காக பாடசாலைக்கு வந்திருந்த 12 முதல் 18 வயது வரையான மாணவிகளே இவ்வாறு பாதிப்படைந்துள்ளனர்.

பெருமளவான மாணவிகள், இவ்வாறு ஒரே நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால், வைத்தியசாலை இரண்டாம் இலக்க விடுதி, பாதிக்கப்பட்ட மாணவிகளால் நேற்று நிரம்பி வழிந்தது.

யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து மாணவிகளும் உடனடியாக அதிதீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.