Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் புலமை -- யாப்பிலக்கணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் புலமை -- யாப்பிலக்கணம்

பல டுப்பாகூர்கள் புது கவிதை என்ற பெயரில் சகட்டுமேனிக்கு அள்ளி தெளித்தாலும் .. சிலவற்றை மற்றும் ரசிக்க முடிகிறது.. உண்மையில் கட்டுடைத்தல் .. பில்டிங்க் உடைத்தல் போல ... பலது கண்றாவியாக இருக்கிறது...

தமிழ் இலக்கியம் 6 வகுப்பு முதல் துணைபாட நூல் ஆக கல்லூரி இளநிலை (BSC BCA BA BCOM)இரண்டாம் வகுப்பு வரை தனி பாடபகுதி வருவதால் .. பலருக்கு யாப்பிலக்கணம் பற்றி அறிய தர வேண்டியுள்ளது... அப்போதான் ஒழுங்காக பாடல்களை தருவார்கள்....

யாப்பு இலக்கண அறிமுகம்

இலக்கியங்களை இயற்றும்போது இரண்டு வகையானஊடகங்களில் இயற்றுவார்கள். அவற்றில் ஒன்று செய்யுள், மற்றதுஉரைநடை. பழைய காலத்தில் தமிழ் இலக்கியங்கள் யாவும்செய்யுளிலேயே இயற்றப்பட்டன. செய்யுளில் இயற்றப்பட்டஇலக்கியங்களுக்கும் இலக்கணங்களுக்கும் விளக்கம் கூறுவதற்கேஉரைநடை பயன்படுத்தப்பட்டது. இலக்கியம் இயற்றப்பட்டசெய்யுள்களின் அமைப்புப் பற்றிப் படிப்பதே யாப்பு இலக்கணம்ஆகும். செய்யுள்களில் பல வகைகள் உள்ளன. செய்யுளின்முக்கியக் கூறாக இருப்பது ஓசை. வெவ்வேறு விதமான ஓசைகளைஅடிப்படையாகக் கொண்டு பலவிதமான செய்யுள்கள்உருவாகியுள்ளன. பழைய காலத்தில் இருந்த முக்கியமானசெய்யுள் வகைகள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பாஆகியவை ஆகும். இவற்றுடன் கலித்துறையும் பழைய காலத்தில்சிறப்பாக விளங்கியது. பக்தி இலக்கியமும் காப்பியங்களும்தோன்றிய காலத்தில் விருத்தம் என்ற செய்யுள் வகை பரவியது.பிற்காலத்தில் சிந்து, கும்மி முதலிய இசைப்பாடல் யாப்புகளிலும்செய்யுள்கள் இயற்றப்பட்டன. யாப்பு இலக்கணத்தில் செய்யுள் பற்றியும் செய்யுளின்உறுப்புகள் பற்றியும் கூறப்படும். அசை, சீர், தளை, அடி, தொடைஆகியவை யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் ஆகும். இந்தஉறுப்புகளைப் பற்றியும் ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா,கலிப்பா ஆகிய பாக்களையும் அவற்றின் வகைகளையும் பற்றியும்படிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும். அசை எழுத்துகள் சேர்ந்து அசையாக வருகின்றன. அசைநேர்அசை, நிரைஅசை என்று இரண்டு வகைப்படும். ஒரு குறில்எழுத்து அல்லது நெடில் எழுத்து, தனியாகவோ மெய் எழுத்துடன்சேர்ந்தோ வருவது நேர் அசை எனப்படும்.

க - குறில் எழுத்து

கல் - குறில் + மெய் எழுத்து

கா - நெடில் எழுத்து

கால் - நெடில் + மெய் எழுத்து

குறில், நெடில் ஆகிய இரண்டும் தொடர்ந்து வருவதும்இரண்டு குறில் எழுத்துகள் தொடர்ந்து வருவதும் நிரை அசைஆகும். இவற்றுக்குப் பின் மெய் எழுத்து வந்தாலும் நிரைஅசைஆகும்.

கிளி - இரண்டு குறில் எழுத்துகள்

மயில் - இரண்டு குறில் + மெய் எழுத்து

புறா - குறில் நெடில் எழுத்துகள்

இறால் - குறில் நெடில் + மெய் எழுத்து

மெய் எழுத்தைத் தவிர்த்துப் பார்த்தால் நிரைஅசையில்இரண்டு எழுத்துகள் இருக்கும்.

சீர் அசைகள் இணைந்து வருவது சீர் ஆகும். ஒரே அசைசீராக இருப்பதும் உண்டு. இரண்டு, மூன்று, நான்கு அசைகள்சேர்ந்து சீராக அமைவதும் உண்டு. சீர்கள் பின்வருமாறுஅமையும்: ஓர் அசைச் சீர்

ஓர் அசை மட்டுமே வருவது ஓர் அசைச் சீர் ஆகும்.

க, கல், கா, கால் - நேர் அசை

கடு, கடல், பலா, வரால் - நிரை அசை

ஈர் அசைச் சீர்

இரண்டு அசைகள் சேர்ந்து வருவது ஈரசைச் சீர்ஆகும். நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நிரை இவ்வாறு ஈர் அசைச் சீர்கள் நான்கு ஆகும்.

மூவசைச் சீர்

மூன்று அசைகள் சேர்ந்து வருவது மூவசைச் சீர்ஆகும். நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நிரை நேர் நிரை நிரை நேர் நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நேர் நிரை நிரை நிரை நிரை நிரை நேர் அசையில் முடியும் மூவசைச் சீர்கள்நான்கும், நிரை அசையில் முடியும் மூவசைச் சீர்கள்நான்கும் ஆக மூவசைச் சீர்கள் எட்டு ஆகும்.

நாலசைச் சீர்

நான்கு அசைகள் சேர்ந்து வருவது நாலசைச் சீர்எனப்படும். நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நிரை நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நிரை நிரை நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நிரை நேர் நிரை நிரை நேர் நிரை நிரை நிரை நிரை நிரை நிரை நிரை நேர் அசையில் முடியும் நாலசைச் சீர் எட்டும்நிரை அசையில் முடியும் நாலசைச் சீர் எட்டும் ஆகநாலசைச் சீர்கள் பதினாறு ஆகும்.

சீர்களைப் பற்றிக் கூறும்போது அவற்றை எளிமையாகநினைவில் வைக்கும் பொருட்டு அவற்றுக்கு வாய்பாடுகூறப்பட்டுள்ளது. சீர்வாய்பாடுகள் பின்வருமாறு அமையும்:ஓரசைச் சீர்களில் நேர் அசைவரும் சீர் நாள் என்றும், நிரைஅசை வரும் சீர் மலர் என்றும் கூறப்படும்.

ஈரசைச் சீர் வாய்பாடு பின்வருமாறு அமையும்.

நேர் நேர் - தேமா

நிரை நேர் - புளிமா

நேர் நிரை - கூவிளம்

நிரை நிரை - கருவிளம்

நேர் ஈற்றுச் சீர்களை மாச்சீர் என்றும் நிரைஈற்றுச் சீர்களை விளச்சீர் என்றும் கூறுவர். மூவசைச் சீர்களில் நேர் ஈற்றுச் சீர்களுக்கு மேற்கண்டவாய்பாடுகளுடன் இறுதியில் காய் என்பதும் நிரை ஈற்றுச்சீர்களுக்கு இறுதியில் கனி என்பதும் வாய்பாடாக வரும்.

நேர் நேர் நேர் தேமாங்காய்

நிரை நேர் நேர் புளிமாங்காய்

நேர் நிரை நேர் கூவிளங்காய்

நிரை நிரை நேர் கருவிளங்காய்

நேர் நேர் நிரை தேமாங்கனி

நிரை நேர் நிரை புளிமாங்கனி

நேர் நிரை நிரை கூவிளங்கனி

நிரை நிரை நிரை கருவிளங்கனி

நாலசைச் சீர்களுக்கு வாய்பாடு கூறும்போது இறுதியில்நேர் வந்தால் தண் பூ, நறும் பூ என்றும் இறுதியில் நிரைவந்தால் தண்ணிழல், நறு நிழல் என்றும் வாய்பாடு கூறுவர்.

நேர் நேர் நேர் நேர் தேமாந் தண்பூ

நிரை நேர் நிரை நேர் புளிமா நறும்பூ

நேர் நிரை நேர் நிரை கூவிளந் தண்ணிழல்

நிரை நிரை நிரை நிரை கருவிள நறுநிழல்

சீர்களை எளிதில் நினைவில் வைத்திருக்க உதவியாகஇருக்கும் என்பதால் வாய்பாடு கூறப்படுகிறது. தளை இரண்டு சீர்கள் இணையும் விதம் தளை என்றுகூறப்படுகிறது . தளை என்பதற்குக் கட்டு என்பது பொருள். சீர்கள் எவ்வாறு இணைந்து தளையாக வருகிறது என்பது கீழேகாட்டப்படுகிறது.

கற் க கச டறக் கற் பவை கற் றபின்

நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நேர் நிரை

தேமா கருவிளம் கூவிளம் கூவிளம்

இந்த அடியில் நான்கு சீர்கள் உள்ளன. நான்கு சீர்களுமேஈரசைச்சீர்கள் ஆகும். கற்க என்ற சீர் நேர் அசையில் முடிகிறது.இதற்குப்பின் வரும் கசடறக் என்ற சீரில் முதல் அசை நிரைஅசையாக உள்ளது. நேர் அசைக்குப் பின் நிரை அசைவந்துள்ளது. இதற்குப் பின் வரும் கற்பவை என்ற சீரில் முதல்அசை நேர் அசையாக உள்ளது. கற்றபின் என்ற சீரிலும் முதல்அசை நேர் அசையாக உள்ளது. இந்த அடியில் நேர்அசைக்குப்பின் நிரை அசையும், நிரை அசைக்குப் பின் நேர்அசையும் வந்து தளை கொண்டுள்ளன. முரண்பட்ட இந்தத்தளைக்கு இயற்சீர் வெண்டளை என்று பெயர் ஆகும். இந்தத்தளை வெண்பாவில் மிகுதியும் வரும். இதேபோல வெவ்வேறுஅமைப்புகளில் ஏழு வகைத் தளைகள் உள்ளன. அடி செய்யுளின் அடுத்த உறுப்பு அடி என்பதாகும். அடிஎன்பது செய்யுளில் இடம்பெறும் ஒரு வரியைக் குறிக்கும். பலஅடிகள் சேர்ந்து ஒரு செய்யுளாக வரும். அடிகளே செய்யுளைவகைப்படுத்துவதில் முக்கிய இடம் வகிக்கின்றன. அடியில் வரும்சீரின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிகள் பல வகைப்படும்.

இரண்டு சீர் அடி - குறள் அடி

மூன்று சீர் அடி - சிந்து அடி

நான்கு சீர் அடி - அளவு அடி

ஐந்து சீர் அடி - நெடில் அடி

ஆறு சீர் அடி - கழிநெடில் அடி

ஆறு சீர்களுக்கு மேலும் ஓர் அடியில் வருவது உண்டு.அவையும் கழிநெடில் அடி என்றே கூறப்படும்.

தொடை தொடுக்கப்படுவது தொடை எனப்படும். இரண்டு அடிகள்தொடர்ந்து வரும்போது அவற்றில் முதல் எழுத்து இரண்டாம்எழுத்து முதலியவை ஒத்து வரும்படி இருப்பது தொடை என்றுகூறப்படும். முதல் எழுத்து ஒத்து வருவது மோனை எனப்படும்.இரண்டாம் எழுத்து ஒத்து வருவது எதுகை எனப்படும்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை (திருக்குறள் -411)

இந்தச் செய்யுளில் முதல் அடியிலும் இரண்டாம்அடியிலும் முதல் எழுத்து செ என்றே வந்துள்ளது. இதுவேமோனைத் தொடை எனப்படும்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (திருக்குறள்-391)

இந்தச் செய்யுளில் இரண்டு அடிகளிலும் இரண்டாம்எழுத்தாக ற் என்ற மெய் எழுத்து வந்துள்ளது. இதுவே எதுகைஎனப்படும். இவைபோலவே வேறுபல தொடைகளும் உள்ளன.

பயில்முறைப் பயிற்சி - II

ஒவ்வோர் அடியிலும் உள்ள முதல் எழுத்துகள் ஒரேஎழுத்தாக அமைவது மோனை என்றும், இரண்டாம் எழுத்துஒரே எழுத்தாக அமைவது எதுகை என்றும் பார்த்தீர்கள்.

இந்தப் பாடலைக் கேளுங்கள். படித்தும் பாருங்கள்.

இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர்! -- அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! -- இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்! -- இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று பேர்! -- இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! -- இன்பத் தமிழ்நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! -- இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! -- இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! -- இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ

இந்தப் பாடலில் மோனை ஆகவும் எதுகை ஆகவும்இடம் பெற்ற எழுத்துகளை எழுதிப் பாருங்கள்.

பா பா என்பது செய்யுளின் வகை ஆகும். பாக்கள்ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்குவகைப்படும். ஒவ்வொரு பாவிலும் வரும் சீர், தளை, அடிஆகியவை கூறப்பட்டுள்ளன. நான்கு பாக்களுக்கும் தனித்தனிஓசை உண்டு. ஓசையை அடிப்படையாகக் கொண்டே பாக்கள்வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாவிலும் பல வகைகள்உள்ளன. எடுத்துக்காட்டாக, வெண்பாவின் வகைகள்பின்வருமாறு.

குறள் வெண்பா - இரண்டு அடிகள் கொண்டது.

சிந்தியல் வெண்பா - மூன்று அடிகள் கொண்டது.

இன்னிசை வெண்பா - நான்கு அடிகள் கொண்டது.(தனிச்சொல் வராது)

நேரிசை வெண்பா - நான்கு அடிகள் கொண்டது.(தனிச்சொல் வரும்)

பஃறொடை வெண்பா - ஐந்து அடிகளும் அதற்குமேலும் வருவது.

ஒவ்வொரு பாவிற்கும் தனி ஓசை உண்டு. வெண்பாவின்ஓசை செப்பல் ஓசை எப்படும். இவ்வாறே மற்ற பாக்களுக்கும்ஓசைகளும் வகைகளும் உள்ளன.

பாவினம்

பாவினம் என்பது பாக்களை ஒட்டி வருவதாகும்.பாக்களின் ஓசையை ஒட்டி வருவதால் இவற்றைப் பாவினம்என்று கூறுகின்றனர். தாழிசை, துறை, விருத்தம் ஆகியமூன்றும் பாவினம் என்று கூறப்படும். இந்தப் பாவினங்கள் நான்குபாக்களுக்கும் உள்ளன. ஆசிரியப் பாவிற்குரிய பாவினங்கள்பின்வருமாறு.

ஆசிரியத் துறை ஆசிரியத் தாழிசை ஆசிரிய விருத்தம்

இந்தப் பாவினங்களுக்குத் தனியே இலக்கணம்சொல்லப்பட்டுள்ளது. இதைப் போலவே மற்ற பாக்களுக்கும்பாவினங்கள் உள்ளன.

2.2.1 பாட்டியல் இலக்கணம்

இலக்கியங்கள் பலவகைப்படும். அவை பிள்ளைத்தமிழ்,மாலை, அந்தாதி, உலா, தூது, பரணி, கலம்பகம், குறவஞ்சி,பள்ளு முதலியனவாகும். இவை பிற்காலத்தில் தோன்றிய இலக்கியவகைகள் ஆகும். இத்தகைய இலக்கியங்களின் இலக்கணத்தைக்கூறுவது பாட்டியல் இலக்கணம் எனப்படும். பாட்டியல் நூல்கள்இலக்கியங்களுக்கு இலக்கணம் கூறுவதுடன் பொருத்தஇலக்கணமும் கூறுகின்றன. செய்யுளில் அமைய வேண்டியபொருத்தங்கள் பத்து என்று பாட்டியல்கள் கூறுகின்றன. ஒருநூலின் தொடக்கம் நன்றாக இருந்தால்தான் நூல் நன்றாகஅமையும் என்பது அக்கால நம்பிக்கை. இந்த நம்பிக்கையைஒட்டியே பொருத்தங்கள் அமைகின்றன.

பொருத்தங்கள்

1 மங்கலம் 2 எழுத்து 3 சொல் 4 தானம் 5 பால் 6 உண்டி 7 வருணம் 8 கதி 9 நாள் 10 கணம்

எடுத்துக்காட்டாக செய்யுளின் முதல் சொல் மங்கலமாக இருக்க வேண்டும்என்பது மங்கலப் பொருத்தம் ஆகும். பாட்டியல் நூல்கள் இதைவற்புறுத்திக் கூறுகின்றன. மங்கலச் சொற்கள் இவை என்ற ஒருபட்டியலும் பாட்டியல் நூல்களில் தரப்பட்டுள்ளன. சீர், உலகம்,மணி, பொன், பூ, திங்கள், கடல், மலை முதலியன மங்கலச்சொற்கள் ஆகும். இவற்றை முதல் சொல்லாகக் கொண்டே நூல்இயற்ற வேண்டும் என்று பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.

http://www.tamilvu.org/courses/degree/c021/c0211/html/c0211222.htm

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கணப்படி பாடலின் இடையே ஓரசை அதாவது குறிலும் நெடிலும்

இணைந்து வரக்கூடாது .

அப்படி வந்தால் தளை தட்டும்.:D

இணைப்பிற்கு நன்றி புரட்சி

  • கருத்துக்கள உறவுகள்

சரியான போட்டி

கலகத்தில்தான் தமிழனுக்கு நல்லது கிடைக்குமென்றால்....?

நடக்கட்டும் நடக்கட்டும்

வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியப்பா..

அகவற்பா.....

அகவற்பாவின் ஓசை அகவலோசையாகும். சுருங்கச்சொல்வதென்றால் கூட்டத்தின் மத்தியினின்று உரையாற்றுவது போன்றது. இவ்வகவற் பாவிற்கு மற்றொரு பெயரும் உண்டு. ஆசிரியப்பா என்பதே அதன் மற்றொரு பெயர். நான்கு பாவகைகளுள் முதலில் தோன்றிய பா, ஆசிரிய (அ) அகவற்பாவாகும். ஆசிரியப்பாவின் தோன்றலுக்குப் பிறகே மற்ற பாக்கள் தோற்றங்கண்டன.

அகவற்பா என்றோர் பெயரிருக்க எதற்காக ஆசிரியப்பா என்ற மற்றொரு பெயர் தோன்றிற்று? எனது எண்ணத்தில் தோன்றிய கருத்து இது:-

மனிதன் முதலில் தோன்றினானா? மதம்முதலில் தோன்றியதா? என்றால், மனிதன்தான் முதலில் தோன்றினான் என்பதைப்போல, இலக்கியம் முதலில் தோன்றியதா? இலக்கணம் முதலில் தோன்றியதா? என்றால், இலக்கியமே முதலில் தோன்றியிருக்க முடியும். இலக்கியத்திற்காகவே இலக்கணம் வகுக்கப்பட்டது. இலக்கணம் தோன்றுதற்குமுன் மனிதன் தன் எண்ணங்களை எழுத்துக்களில் சொல்லக்கருதியபோது, அக்கருத்திற்கேற்றாற்போல் வரிவடிவமமைத்துச் சொல்லியிருக்கக்கூடும். பின்னாளில் கூறியவற்றுள் எவை எழுமையான வடிவம் எனக்கருதினானோ, அதனை முதன்மைப்படுத்தி இலக்கணம் கற்பித்துக்கொண்டிருக்க வேண்டும். இலக்கணம் கற்பித்துக்கொண்டபின், முன்பே (இலக்கணம் கற்பிக்கப்படாததற்கு முன்பு) வரையப்பட்ட இலக்கணம் தப்பிய பாக்களை மீண்டும் குற்றம் (ஆசு) நீக்கி இலக்கணத்திற்கு உட்பட்ட எழுதமுற்பட்டிருக்கலாம்.

இலக்கணம் கற்பிப்பதற்கு முன்பு எழுதப்பட்ட இலக்கண ஆசுடைய பாக்களை ஒழுங்குபடுத்தவேண்டிப் பின்னாளில் இலக்கண ஆசு இரியப் பாடியிருக்கலாம். அதாவது இலக்கணம் கற்பிக்கப்படுவதற்குமுன்பு எழுதப்பட்ட இலக்கணமற்ற பாக்களை (அல்லது அப்பாக்களின் உள்ளீடுகளை (கருத்துக்களை)) குற்றங்களை நீக்கி இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதமுயன்றிருக்கலாம். அதன்பயனாக, பெயர்க்காரணமாக ஆசிரியப்பா என்ற பெயர் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது.

நால்வகைப் பாக்களுள் முன்தோன்றிய பா இது என்பதால் இதன் இலக்கணம் அத்துணைக் கடினமில்லை. மிகமிக எளிது. ஆனால் பாநயத்தோடு எழுதுதல் சற்றே கடினமானதும்கூட. ஆசிரியப்பாவில் கனிச்சீர் ஒழிய எனைய எட்டுச்சீர்களும் வரும்.

அவையாவன:- தேமா, புளிமா, கருவிளம், கூவிளம், தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்.

இருவகை வஞ்சித்தளைகள் அல்லாத ஏனைய ஐந்து தளைகளும் வரும். அவையாவன:-

1.மாமுன் +++ நேர் === நேரொன்றாசிரியத்தளை

2.விளமுன் +++ நிரை === நிரையொன்றாசிரியத்தளை

இவ்விரண்டையும் தொல்காப்பியன் கீழ்வருமாறு குறிப்பான்:-

மாமுன் நேரும் விளமுன் நிரையும்

வருவ தாசிரி யத்தளை யாமே!

3.மாமுன் +++ நிரை === இயற்சீர் வெண்டளை

விளமுன் +++ நேர் === இயற்சீர் வெண்டளை

4.காய்முன் +++ நேர் === வெண்சீர் வெண்டளை

5.காய்முன் +++ நிரை === கலித்தளை

நெடிலடியும், கழிநெடிலடியும் அல்லாத ஏனைய மூன்றடிகளே வரும். அதாவது ஓர் அடிக்கு:- இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு சீர்களே வரும். அதற்குமேல் மிகா.

ஆசிரியப்பாவின் இறுதிச்சீரின் இறுதியசை:- (ஏ, ஓ, என், ஈ, ஆய், அய்) ஆகிய இவற்றிலொன்றைக் கொண்டு இறவேண்டும்.

http://venbaaeluthalaamvaanga.blogspot.in/2009/08/blog-post_25.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உருவக அணி

உவமை அணியில் ஒரு பொருேளாடு ஒரு பொருளை ஒப்பிட்டுக் கூறும் போது அவை ஒப்புமை உள்ள வேறுவேறு பொருள்கள் எனவே காட்டப்படும். ஆனால் சிலபோது உவமைக்கும் அது கொண்டு விளக்கப்படும் பொருளுக்கும் இடையிலான ஒப்புமை மிக அதிகமாக உள்ளது எனக் காட்ட விரும்புகிறார். கவிஞர்.

'தாமரை போன்ற முகம்' எனக் கூறிவந்த கவிஞருக்கு, இரண்டினுக்கும் உள்ள ஒற்றுமை மிகுந்து, வேற்றுமை குறைவுஎனத் தோன்றுகிறது. காலப்போக்கில் அவை இரண்டினுக்கும் வேற்றுமை இல்லை; அவை இரண்டும் ஒன்றே என்றமனவுணர்வு தோன்றுகிறது,

முகம் ஆகிய தாமரை

என்று கூறிவிடுகிறார். இங்கு முகமே தாமரை எனப்பொருள் வருகிறது. இவ்வாறு வரும்போது உவமையணியிலிருந்து உருவக அணி தோன்றுவதை உணரலாம்.

1.3.1 உருவக அணியின் இலக்கணம்

உவமையாகின்ற பொருளுக்கும் (உவமானம்) உவமிக்கப்படும் (உவமேயம்) பொருளுக்கும் இடையிலான வேறுபாட்டை நீக்கி, அவை இரண்டும் ஒன்றே என்னும் உள்ளுணர்வு தோன்றுமாறு ஒற்றுமைப் படுத்திக் கூறுவது உருவகம் என்னும் அணியாகும். அதாவது உவமேயத்தில் உவமானத்தை ஏற்றிக் கூறுதல். இதனை,

உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்று என மாட்டின் அஃது உருவகம் ஆகும்

(தண்டி. 35)

என்ற நூற்பாவால் அறியலாம்.

1.3.2 உருவக அணி விளக்கம்

உவமையணியில் உவமானம் முன்னும் உவமேயம்பின்னும் இருக்கும். இரண்டினுக்கும் ஒப்புமை காட்ட இடையில்போல, புரைய, அன்ன முதலான உவமை உருபுகளுள் ஒன்றுவரும். உருவக அணியில் உவமேயம் முன்னும் உவமானம்பின்னும் வரும். இவற்றை ஒற்றுமைப் படுத்துவதற்காக 'ஆகிய'என்ற உருபு இடையில் வரும். 'ஆக' என்ற உருபும்வருவதுண்டு. இவை 'உருவக உருபுகள்' என்று கூறப்படும்.இவை மறைந்து வருதலும் உண்டு.

மலர்போன்ற கண், மலர்க்கண் - உவமை

கண் ஆகிய மலர், கண்மலர் - உருவகம்

மலர் போன்ற கண் என்ற உவமையில் மலரும் கண்ணும்வேறு வேறு எனும் உணர்வு தோன்றுவதையும், கண் ஆகியமலர் என்ற உருவகத்தில் கண்ணே மலர், கண்ணும் மலரும்வேறுவேறல்ல என்னும் உணர்வு தோன்றுவதையும் நீங்கள்காணலாம்.

1.3.3 உருவக அணியின் வகைகள்

உருவக அணி மொத்தம் பதினைந்து வகைப்படும் என்றுதண்டியலங்காரம் காட்டுகிறது. (தண்டி. 37) அவை வருமாறு:

1) தொகை உருவகம்

2) விரி உருவகம்

3) தொகைவிரி உருவகம்

4) இயைபு உருவகம்

5) இயைபு இல் உருவகம்

6) வியனிலை உருவகம்

7) சிறப்பு உருவகம்

8) விரூபக உருவகம் 9) சமாதான உருவகம்

10) உருவக உருவகம்

11) ஏகாங்க உருவகம்

12) அநேகாங்க உருவகம்

13) முற்று உருவகம்

14) அவயவ உருவகம்

15) அவயவி உருவகம்

இவற்றுள் குறிப்பிடத்தக்க சில வகைகளை மட்டும் விளக்கமாகக்காண்போம். மேலும் தண்டியாசிரியர் குறிப்பிடாததும் திருக்குறள்முதலான பழம்பெரும் இலக்கியங்களில் பயின்று வருவதுமாகிய'ஏகதேச உருவகம்' என்பது குறித்தும் விளக்கமாகக் காண்போம்.

தொகை உருவகம்

'ஆகிய' என்னும் உருவக உருபு மறைந்து வருவதுதொகை உருவகம் ஆகும். அதாவது உவமேயமும்உவமானமும் இணைப்புச்சொல் எதுவும் இன்றிச் சேர்ந்து வருவது.

எடுத்துக்காட்டு:

அங்கை மலரும் அடித்தளிரும் கண்வண்டும்

கொங்கை முகிழும் குழல்காரும் - தங்கியதோர்

மாதர்க் கொடி உளதால் நண்பா! அதற்கு எழுந்த

காதற்கு உளதோ கரை.

(முகிழ்-அரும்பு; கார்-மழை; மாதர்-விருப்பம்)

இப்பாடலின் பொருள் :

'நண்பா! அழகிய கையாகிய மலரையும், அடியாகியதளிரையும், கண்ணாகிய வண்டையும், கொங்கையாகியஅரும்பையும், கூந்தலாகிய மேகத்தையும் உடைய விருப்பம்தரும் கொடி ஒன்று உளது. அக்கொடி மேல் எழுந்தகாதலுக்கு எல்லை உலகத்தில் உண்டோ இல்லை' என்று தலைவன் பாங்கனிடம் கூறுகிறான்.

அணிப் பொருத்தம் :

இப்பாடலில் அங்கை ஆகிய மலர் என்னும் உருவகம்'ஆகிய' எனும் உருபு மறைந்து 'அங்கைமலர்' எனவந்திருப்பதைக் காணலாம். இதுபோலவே 'அடித்தளிர்,கண்வண்டு, கொங்கை முகிழ், குழல் கார்' என்னும்உருவகங்களும் உருபு இன்றி வந்துள்ளன. எனவே இப்பாடல்தொகை உருவகம் ஆயிற்று.

விரி உருவகம்

'ஆகிய, ஆக' என்னும் உருபுகள் வெளிப்பட்டு நிற்பதுவிரி உருவகம்.

எடுத்துக்காட்டு:

கொங்கை முகையாக மென்மருங்குல் கொம்பாக

அங்கை மலரா அடி தளிரா - திங்கள்

அளிநின்ற மூரல் அணங்காம் எனக்கு

வெளிநின்ற வேனில் திரு

(மருங்குல்-இடை; அளி-அருள; மூரல்-முறுவல்; அணங்கு-தெய்வப்பெண்; திரு-திருமகள்)

இப்பாடலின் பொருள் :

'கொங்கை அரும்பாக, நுண் இடை வஞ்சிக் கொடியாக,அழகிய கை மலராக, பாதம் தளிராகக் கொண்டவள்;நிலவு போன்ற ஒளியும் அருளும் முறுவலை உடையவள்;நேற்று அணங்கு போன்றிருந்தாள். இப்பொழுது எனக்குவேனில் காலத்தில் தோன்றிய திருமகளை ஒப்பவள் ஆனாள்'என்று தலைவன் பாங்கனிடம் தலைவியின் அழகை கூறுகிறான்.

அணிப் பொருத்தம் :

இப்பாடலில் கொங்கை முகையாகவும், இடை வஞ்சிக்கொடியாகவும், கை மலராகவும், பாதம் தளிராகவும்உருவகிக்கப் பட்டுள்ளதைக் காணுங்கள். இப்பாடலில்,முகையாக, கொம்பாக, மலரா, தளிரா என 'ஆக' 'ஆ' என்றஉருவக உருபுகள் விரிந்து வருதைக் காணலாம். ஆகவேஇது விரி உருவக அணி ஆகும்.

இயைபு உருவகம்

பல பொருள்களை உருவகம் செய்யும் பொழுது,அவற்றை ஒன்றற்கு ஒன்று இயைபு (பொருத்தம்) உடையபொருள்களாக வைத்துக் கூறுவது இயைபு உருவகம்.

எடுத்துக்காட்டு:

செவ்வாய்த் தளிரும் நகைமுகிழும் கண்மலரும்

மைவார் அளக மதுகரமும் - செவ்வி

உடைத்தாம் திருமுகம் என் உள்ளத்து வைத்தார்

துடைத்தாரே அன்றோ துயர்

(முகிழ்-அரும்பு; அளகம்-கூந்தல்; மதுகரம்-வண்டு;)

இப்பாடலின் பொருள் :

சிவந்த வாயாகிய தளிரையும், புன்முறுவலாகிய முல்லை அரும்பையும், கண்ணாகிய மலரையும், கரிய நீண்டகூந்தலாகிய வண்டையும் உடைய திருமுகத்தை என்உள்ளத்திலே வைத்தார். இதனாலே என்னுடைய உள்ளத்தில்உண்டாகிய துயரத்தை நீக்குவார் அன்றோ? (தலைவியைத்தலைவன் மரியாதையுடன் வைத்தார், நீக்குவார் என்றுகூறுகிறான்.)

அணிப் பொருத்தம் :

இப்பாடலில் வாய் தளிராகவும், புன்முறுவல் முல்லை அரும்பாகவும், கண் மலராகவும், கூந்தல் வண்டாகவும்உருவகப் பட்டுள்ளதைக் காண்கிறீர்கள். உருவகம் செய்யப்பயன்படுத்திய தளிர், முகிழ் (அரும்பு), மலர், மதுகரம்(வண்டு) என்ற நான்கும் ஒன்றோடு ஒன்று இயைபு உடையபொருள்களாகும். இவ்வாறு தொடர்புடைய பொருள்களைக்கொண்டு உருவகம் செய்தமையால் இது இயைபுஉருவக அணி ஆகும்.

இயைபு இல் உருவகம்

உருவகம் செய்யப்படும் பொருள்களை ஒன்றோடு ஒன்றுஇயைபு இல்லாத பொருள்களாக உருவகித்துக் கூறுவதுஇயைபு இல் உருவகம்.

எடுத்துக்காட்டு:

தேன் நக்கு அலர்கொன்றை பொன்னாக,

செஞ்சடையே

கூனல் பவளக் கொடியாக, - தானம்

மழையாக, கோடு மதியாகத் தோன்றும்

புழையார் தடக்கைப் பொருப்பு

(நக்கு-ஊறி; தானம்-மதம்; கோடு-கொம்பு;புழை-துளை; பொருப்பு-மலை;)

இப்பாடலின் பொருள் :

இப்பாடல் யானைமுகனான விநாயகப் பெருமானைக்குறிப்பது. துளை உடைய துதிக்கையைக் கொண்டயானையாகிய (விநாயகன்), மலையானது, தேனைச் சிந்தும்கொன்றை மலர் பொன்னாகவும், சிவந்த சடையே பவளக்கொடியாகவும், மதநீர் மழையாகவும், தந்தம் பிறைச்சந்திரனாகவும் கொண்டு தோன்றுகின்றது.

அணிப் பொருத்தம் :

இப்பாடலில், விநாயகன், அவன் அணிந்துள்ள கொன்றைமாலை, செஞ்சடை, மதநீர், தந்தம் ஆகியவை உருவகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வுருவகத்திற்குப் புலவர் கையாண்டமலை, பொன், பவளக்கொடி, மழை, பிறை ஆகியபொருள்கள் ஒன்றோடு ஒன்று இயைபு இல்லாதவைஎன்பதைக் காணலாம். இவ்வாறு இயைபு இல்லாதபொருள்களைக் கொண்டு உருவகம் செய்திருப்பதால் இதுஇயைபில் உருவக அணி ஆகும்.

ஏக தேச உருவகம்

இது உருவக அணி வகைகளில் ஒன்று. ஆனால் இது பற்றித். உருவகம் செய்யும் இரு பொருள்களுள் ஒரு பொருளை உருவகம் செய்து விட்டு அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளை உருவகம் செய்யாது விட்டுவிடுவது ஏக தேச உருவகம் ஆகும்.

எடுத்துக்காட்டு:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

(குறள். 10)

இப்பாடலின் பொருள் :

இறைவன் அடியாகிய புணையைப் (தெப்பம்) பற்றிக்கொண்டோர், பிறவியாகிய பெருங்கடலை நீந்துவர்; அப்புணையைப் பற்றிக் கொள்ளாதோர் பிறவிப் பெருங்கடலைநீந்தமாட்டார்கள்.

அணிப் பொருத்தம் :

இக்குறளில், பிறவியைக் கடலாக உருவகம் செய்துவிட்டு, அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளாகியஇறைவன் திருவடியைத் தெப்பமாக உருவகம் செய்யாதுவிட்டமையால் இது ஏக தேச உருவகம் ஆயிற்று.

http://www.tamilvu.org/courses/degree/d031/d0314/html/d03141l3.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிந்தியல் வெண்பா

மூன்று அடிகளைக் கொண்டது சிந்தியல் வெண்பாவாகும். ஈரடி முக்கால் சிந்தியல் வெண்பா என்கிறது தொல்காப்பியம்.

சிந்தியல் வெண்பாக்கள் இருவகைப்படும். அவை:- 1-நேரிசைச் சிந்தியல் வெண்பா 2-இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஆகும்.

1-நேரிசைச் சிந்தியல் வெண்பா:-

முதல் அடியின் முதற்சீரிலும் இரண்டாம் அடியின் முதற்சீர் மற்றும் நான்காம் சீர்லும் எதுகையமையப் பாடுவது.

காட்டு:-

நல்லார் உறவால் நலம்பெருகும் நாடோறும்

அல்லார் உறவால் அறந்தேயும் -பொல்லார்

தொடர்விடுதல் மேலாந் துணை!

இச்சிந்தியலில் முதற்சீர் ஐந்தாம்சீர் மற்றும் ஏழாம் சீர் எதுகையெடுத்து வந்தமை காண்க. அதாவது இரண்டாமடியின் கடைசிச் சீரில் எதுகையெடுத்துவருவது. ஆகையால் இது நேரிசைச் சிந்தியல் வெண்பா!

ஈரடியும் முக்காலும் ஏற்றுவரின் சிந்தியலாம்;

கூறடி மூன்று(ள்)தனிச் சீர்பெறலே -நேரிசையாம்;

ஊர்க்கிதை ஓதிடுவீர் ஓர்ந்து! -அகரம்.அமுதா

இன்னிசைச் சிந்தியல் வெண்பா:-

தனிச்சீர் பெறாமையும் அடியேதுகை பெறாமையும் இன்னிசை வெண்பாவாகும்.

அன்புற் றெவர்க்கும் அறனல்ல செய்யாது

தென்புற்று நன்குஞற்றுஞ் செம்மைத் திருவுடையார்

இன்புற்று வாழ்வ ரினது!

இச்சிந்தியலைக்கவனிக்க:- மூன்றடிகளிலும் எதுகை எடுத்து வந்திருப்பினும் தனிச்சொல் பெறாமையால் இன்னிசையானது. (தனிச்சொல் -இரண்டாமடியின் நான்காம் சீரில் எதுகையெடுத்தல். இதை இப்படியும் சொல்லலாம் வெண்பாவின் எட்டாம்சீர் எதுகைபெறாமை)

முன்புவெண் பாவுரைப்பேன் முப்பாவும் -பின்புரைப்பேன்

பூவிற் சிறந்தது தாமரை பொன்மயிலே!

பாவிற் சிறந்ததுவெண் பா! –பாரதி தாசன்.

இச்சிந்தியலை நன்கு கவனிக்கவும். முதற்சீர் (முன்பு -ன்) -எதுகையெடுத்துவந்து இரண்டாமடியின் முதற்சீரில் (ன்) -எதுகையின்மையால் இன்னிசையானது. மேலும் முதலடியின் முதற்சீரும் நான்காம் சீரும் எதுகையெடுத்து வந்துள்ளது. அப்படிவரின் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாது.

மேலும் முதற்சீரிலும் எட்டாம் சீரிலும் எதுகைபெற்றிருந்தும் ஐந்தாம் சீரில் எதுகை பெறாமையால் இன்னிசையுள் அடங்கிவிடுகிறது. (அனைத்து அடிகளிலும் எதுகையெடுத்து வராதவையும் இன்னிசைச் சிந்தியலேயாகும்.)

மேலும் இன்னிசைச் சிந்தியல் வெண்பாக்களை அறிய இவ்விடம் கிளிக் செய்க!

நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் இலக்கணம் 1,5,8-ம் சீர் எதுகை யெடுத்துவருவது கட்டாய விதி. இவ்விதியை மீறின் அது இன்னிசைச் சிந்தியலில் வைக்கப்படும்.

http://venbaaeluthalaamvaanga.blogspot.in/2008/06/11.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நற்றிணை

இந்நூல் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் உடையது. 175 புலவர்களால் பாடப்பெற்றது. தற்போது 192 புலவர்கள் பெயர்கள் காணப்படுகின்றன. இதைத் தொகுத்தவர் யார் என தெரியவில்லை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர்.

1. குறிஞ்சி

நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;

என்றும் என் தோள் பிரிபு அறியலரே'

தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,

புரைய மன்ற, புரையோர் கேண்மை; நீர் இன்று அமையா உலகம் போலத்

தம் இன்று அமையா நம் நயந்தருளி,

நறு நுதல் பசத்தல் அஞ்சிச்

சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!

தோழீ ! நம் காதலர் நிலைமை தவறாத வாய்மையுடையவர்; நெடிதாகத் தோன்றுகின்ற இனிமையுடையவர்; எப்பொழுதும் என் தோள்களைப் பிரியும் அன்னதொரு குணக் குறைபாடிலர்; அத்தகைய மேதக்கோருடைய நட்பு; தாமரையின் தண்ணிய தாதினையும் மேலோங்கிய சந்தனத்தின் தாதினையும் ஊதி, அந்தச் சந்தன மரத்தில் வைத்த இனிய தேன் போலத் திண்ணமாக மேதக்கன ஆதலின்; அவர் நீரையின்றியமையாத உலகியல் போலத் தம்மை யின்றியமையாத நம்பால் முன்பு விருப்பமிக வைத்தருளி; பின்பு பிரிதலால் நம் நறிய நுதல் பசலையூர்தற்கு அஞ்சி; செய்வதறியாராய்த் தடுமாற்றமடைவாரோ?; அங்ஙனம் செய்யார்காண்;

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது. - கபிலர்

2. பாலை

அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,

ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,

ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த

செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,

வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை, மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;

வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று

எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,

காலொடு பட்ட மாரி

மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே!

சுரமோ, ஆழ்ந்துபடக் கிடந்த பெரிய குளிர்ச்சியையுடைய குன்றத்து; தழைத்த வலிய ஈத்த மரங்களையுடைய காற்றுச் சுழன்று வீசும் காட்டின் கண்ணே; நெறிகொண்டு செல்லும் மக்களுடைய தலையை மோதியதனாலே குருதி படிந்த சிவந்த மாறுபட்ட தலையையுடையனவும்; இரத்தம் பூசிய வாயையுடையனவுமாகிய பெரிய தலையையுடைய புலிக்குட்டிகள்; இம் மாலைப் பொழுதில் தாம் பதுங்கியிருக்கும் மரலின் தூஊகளை நிமிர்ந்து நோக்கா நிற்கும் இண்டங் கொடியுடனே ஒருசேரப் படர்கின்ற ஈங்கையையுடையவாகும், இத்தகைய சுரத்தின்கண்ணே; கூரிய பற்களையுடைய மெல்லியளாகிய மடந்தையை முன்னே செல்லவிடுத்துப் பின்னே; இவ்விராப் பொழுதிற் செல்லா நிற்கும். இவ்விளைஞனுள்ளமானது; காலொடுபட்ட மாரி மால்வரை மிளிர்க்கும்; காற்றொடு கலந்த மழை பெய்யுங் காலத்திற் பெரிய துறுகற்களைப் புரண்டு விழுமாறு மோதுகின்ற இடியினுங்காட்டிற் கொடியதா யிராநின்றது;

உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது.

- பெரும்பதுமனார்

3. பாலை

ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்

பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,

கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து,

கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்

வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச் 5 சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை

உள்ளினென் அல்லெனோ, யானே- உள்ளிய

வினை முடித்தன்ன இனியோள்

மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே?

நெஞ்சே! பார்ப்பை யீன்ற பருந்து வருந்தியுறையா நிற்கும் ஆகாயத்தின்மேற் செல்லுகின்ற நெடிய கிளைகளையும்; பொரிந்த அடியையுமுடைய வேம்பினது புள்ளிபோன்ற நிழலின்கண்ணே; கட்டளைக் கற்போன்ற அரங்கை வட்டினாலே கீறி; ஏனைத் தொழிலொன்றும் கற்றறியாத சிறுவர்கள், நெல்லியங்காயை வட்டாகக்கொண்டு பாண்டிலாடா நிற்கும்; விற்போரால் ஆறலைத்துண்ணும் மழவரின் வெய்ய குடியிருப்பினையுடைய சீறூரையுடைய; அழற் சுரத்தின் கண்ணே முற்பட்டு வந்த நம் வலியனைத்தையும் குறைக்கின்ற மாலைப் பொழுதைக் கண்டு; இம் மாலையானது கருதிய வினை முடித்தாற் போன்ற இனிமையையுடைய நம் காதலி; மனையகத்து மாட்சிமைப்பட்ட விளக்கை ஏற்றி அதன் முன்னின்று அவர் தாம் இன்னும் வந்தாரில்லையே யென்று அவ்விளக்கொடு வெறுத்துத் துன்புற்றுக் கருதுகின்ற பொழுதாகும் என்று; யான் முன்னம் ஒரு காலத்து நினைத்தேன் அல்லனோ? அங்ஙனமாக இப்பொழுதும் பொருளீட்டுமாறு ஒருப்படுத்தி என்னை வருத்தாதேகொள்; இனி யான் வாரேன் காண்;

முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - இளங்கீரனார்

4. நெய்தல்

கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்

நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ,

தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,

அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,

'அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை 5 அரிய ஆகும் நமக்கு' எனக் கூறின்,

கொண்டும் செல்வர்கொல்- தோழி!- உமணர்

வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,

கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்

மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக் 10 கருங் கால் வெண் குருகு வெரூஉம்

இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே?

தோழீ ! கடற்கரைச் சோலையிலுள்ள சிறுகுடியிலிருந்து கடலின்மேற் செல்லும் பரதவர்; நீலநிறத்தையுடைய புன்னையின் கொழுவிய நிழலிலே தங்கி; தண்ணிய பெரிய கடற் பரப்பிற் செல்லுதற்கு நல்ல அற்றம் பார்த்து; அவ்விடத்து முறுக்குண்டு கிடந்த வலையைப் பிரித்துப் புலர்த்தா நிற்கும் துறையையுடைய நம் தலைவர்பாற் சென்று; நமக்குண்டாகிய பழிச் சொல்லை அன்னை அறிந்தால்; இனி இங்குத் தங்கி¢க் களவொழுக்கத்து வாழ்தல் அரியவாகும் என்று கூறினால்; உப்பு வாணிகர் வெளிய கல்லுப்பின் விலை கூறிக் கூட்டமாகிய ஆனிரையை எழுப்புகின்ற; நெடிய நெறியிற் செலுத்தும் பண்டிகள் மணலின் மடுத்து முழங்கும் ஓசையைக் கேட்டு; வயலிலுள்ள கரிய காலையுடைய வெளிய நாரைகள் வெருவா நிற்கும்; கரிய கழி சூழ்ந்த நெய்தனிலத்தின்கணுள்ள தம் உறைவிடமாகிய ஊருக்கு; நம்மை யழைத்துக் கொண்டும் போவரோ?

தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது. - அம்மூவனார்

5. குறிஞ்சி

நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,

அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,

குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்

நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,

பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி 5 தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,

அரிதே, காதலர்ப் பிரிதல்- இன்று செல்

இளையர்த் தரூஉம் வாடையொடு

மயங்கு இதழ் மழைக் கண் பயந்த தூதே,

தோழீ! இன்று பிரிந்து செல்லுகின்ற தோழியரை மீட்டும் நின்னை ஆற்றுவிக்குமாறு கூட்டுகின்ற வாடைக் காற்றினால் வருந்திய இமைகளையுடைய மழைபோல நீர்வடிக்கின்ற நின்கண்கள்தாம்; அவர் செல்லாதவாறு ஒரு குறிப்பாகிய தூதைத் தோற்றுவித்து விடுத்தன, அங்ஙனம் விடுத்த தூதின் காரணமாக; இனி மிக்க மழை பெய்தலாலே நிலம் நீரால் நிரம்பப் பெற்று நிறையவும், மலைமேலுள்ள மர முதலாயின தழைப்பவும், அகன்ற வாயையுடைய குளிர்ந்த சுனையில் நீர் நிறைதலால் அங்கு முளைத்தெழுந்த குளநெல் முதலிய பயிர்கள் நெருங்கி வளரவும்; கொல்லையின் கண்ணே குறவர் வெட்டியழித்தலானே குறைபட்ட மிக்க நறைக்கொடி மீண்டுந் தளிர்த்துக் கொடியாகி நறுமணங் கமழ்கின்ற வயிரமுற்றிய சந்தன மரத்தின் மீது படர்ந்து சுற்றியேறவும்; பெருமழையைப் பொழிந்த தொழிலையுடைய மேகமானது; தென்றிசையின் கண்ணே யெழுந்து செல்லுதலாலே பிரிந்தோர் இரங்குகின்ற முன்பனிக்காலத்தும்; நீ நின் காதலரைப் பிரிந்து உறைதல் அரியதாகும்;

தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது. - பெருங்குன்றூர்கிழார்

6. குறிஞ்சி

நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்

நார் உரித்தன்ன மதன் இல் மாமை,

குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,

திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு

எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, 5 'இவர் யார்?' என்குவள் அல்லள்; முனாஅது,

அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி

எறி மட மாற்கு வல்சி ஆகும்

வல் வில் ஓரி கானம் நாறி,

இரும் பல் ஒலிவரும் கூந்தல் பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே.

நீரில் வளர்ந்த ஆம்பலின் உள்ளிற் புழையுடைய திரண்ட தண்டை நாருரித்தாற் போன்ற; அழகு குறைந்த மாமையையும்; குவளை போன்ற அழகு தங்கப்பெற்ற குளிர்ச்சியுடைய கண்ணையும்; திதலையுடைய அல்குலையும் பெரிய தோளையும் உடைய இளமகளாகிய நம்மாற் காதலிக்கப்பட்ட தலைவியிடத்து; நெருங்கச் சென்று எமது வருகையை முன்னாடிக் கூறுவாரைப் பெறின்; அவரை நோக்கி இவர் யாவரென்று கேட்பாளல்லள்; சுரத்திலுள்ள குமிழ மரத்தின் வளைந்த மூக்கினையுடைய முற்றிய கனிகள் கீழே உதிர்ந்து ஆங்குக் குதித்து விளையாட்டயர்கின்ற இள மானுக்கு வெறுப்பில்லாது உணவாகாநிற்கும்; வலிய வில்லையுடைய ஓரி என்பவனது கானம்போல நறுநாற்றமுடையவாகி; கரிய பலவாகித் தாழ்ந்த கூந்தலையுடைய அவள்தான்; யாம் வந்திருக்கின்றேம் என்பதைக் கேட்டவுடன்; களிப்பினாலே பெரிதும் மயக்கமெய்தா நிற்பள்;

இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்

7. பாலை

சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,

பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,

கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்

கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,

தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம் 5 இன்னே பெய்ய மின்னுமால்- தோழி!

வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை

தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்

சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே.

தோழீ ! மூங்கிலின் வெளிய நெல்லைத் தின்ற வரி பொருந்திய நெற்றியையுடைய யானை; தண்ணிதாகிய நறுமணங் கமழு மலைப்பக்கத்திலே துஞ்சா நிற்கும்; சிறிய இலையுடைய சந்தன மரத்தினையுடைய வாடிய பெரிய காட்டினகத்து; அச்சத்தையுடைய இடமகன்ற சுனையில் நீர் நிறையவும்; பெரிய மூங்கில்களையுடைய மலைப்பக்கத்தில் அருவிகள் ஆரவாரிப்பவும்; கற்களைப் புரட்டிக்கொண்டு ஓடிவருகின்ற மிக்க விசையினையுடைய கானியாற்றின் கண்ணே; பற்றுக் கோடாகிய மூங்கிலும் முழுகுமாறு பெருகிய வெள்ளத்தின் அலைகாட்டிற் சென்று மோதா நிற்கவும்; ஒலிக்கின்ற இடியேற்றொடு முழக்கஞ் செய்து; முகில்கள் இப்பொழுதே மழை பெய்யவேண்டி மின்னா நிற்கும்; இக் காலத்தை நோக்கினவுடன் அவர் இன்னே வந்து நின்னை வரைந்து கொள்வராதலின், நீ வருந்தாதே கொள் !

பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டியிடைக் கழிந்து பொருள்வயிற்பிரிய, ஆற்றாளாய தலைவிக்குத் தோழி சொல்லியது. - நல்வெள்ளியார்

8. குறிஞ்சி

அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,

பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,

திரு மணி புரையும் மேனி மடவோள்

யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!

துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5 அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்

தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள்

கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்

திண் தேர்ப் பொறையன் தொண்டி-

தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே! 10

மிக்க துன்பமுழந்த செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்களையும்; பலவாகிய பூக்களுடனே மாறுபடத் தொடுக்கப்பட்ட தழையுடையை அசையும்படி உடுத்த அல்குலையும்; அழகிய நீலமணியொத்த மேனியையுமுடைய இவ் விளமகள்; யாவர் புதல்வியோ?; அசையாத உள்ளத்தையுடைய எம்மையே துயரஞ் செய்தனள்!; இத்திறம் வல்லவளைப்பெற்று எனக்குதவிய இவள் தந்தை நெடுங்காலம் வாழ்வானாக!; இவளை ஈன்ற தாயும்; அகன்ற வயலின்கண்ணே மள்ளரால் அரியப்பட்டும் அரிச்சூட்டை எடுப்போராற் கொண்டுவரப்பட்டும் தண்ணிய சேறு பரந்து; அழகினையும் வலிய தண்டினையுமுடைய கண்போன்ற நெய்தல் நெற்போரின்கண்ணே மலரும்; திண்ணிய தேரையுடைய பொறையனது தொண்டி நகர் போன்ற சிறப்பினைப் பெறுவாளாக!;

இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன் சொல்லியது.

9. பாலை

அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்

வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,

அலமரல் வருத்தம் தீர, யாழ நின்

நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின்,

பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி 5 சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி,

நிழல் காண்தோறும் நெடிய வைகி,

மணல் காண்தோறும் வண்டல் தைஇ,

வருந்தாது ஏகுமதி- வால் எயிற்றோயே!

மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் 10 நறுந் தண் பொழில, கானம்;

குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே.

வெள்ளிய பற்களையுடையோய!¢; யாம் செல்லும் நெறியில் உள்ள காடெல்லாம்; மாமரத்தின் அரும்பைக் கோதி மகிழ்கின்ற குயில் கூவி விளையாடும் நறிய தண்ணிய சோலையை யுடையன; அன்றியும் அடுத்தடுத்துள்ள பல ஊர்களையுமுடையன; சிதைவில்லாத செயலை முயல்கின்ற ஆர்வ மாந்தர் அக்காரியம் முற்றுப்பெறுமாறு தாம் வழிபடு தெய்வத்தைக் கண்கூடாகக் கண்டாற் போல; யாம் நெடுங்காலம் நின்னைப்பெற முயன்றதனானாகிய சுழற்சியையுடைய வருத்தமெல்லாந் தீரும்படியாக; நின் அழகிய மெத்தென்ற பருத்த தோள்களை அடைந்தனம் ஆதலினால்; இனி நீ பொரியையொத்த பூக்களையுடைய புன்கினது அழகுமிக்க ஒள்ளிய தளிரை; சுணங்கு நிரம்பிய அழகிய முலையிலே அதன் வீற்றுத் தெய்வம் சிறப்போடிருக்குமாறு அப்பி; நிழலைக் காணுந்தோறும் நெடும்பொழுது ஆண்டுத் தங்கி; மணல்களைக் காணுந்தோறும் சிற்றில் புனைந்து விளையாடி; நெறிவந்த வருத்தத்தைப் போக்கி விட்டு மெல்ல மெல்லச் செல்வாயாக;

உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

10. பாலை

அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,

பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த

நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,

நீத்தல் ஓம்புமதி- பூக் கேழ் ஊர!

இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க் 5 கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,

வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்

பழையன் வேல் வாய்த்தன்ன நின்

பிழையா நல் மொழி தேறிய இவட்கே.

மலர்கள் விளங்கிய பொழில் சூழ்ந்த ஊரையுடையோனே !; இனிய கடுப்புடைய கள்ளுணவையும் இழையணிந்த நெடிய தேர்களையுமுடைய வலிமிக்க

http://painthamizhcholai.blogspot.in/p/blog-page_01.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.