Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சூளைமேட்டில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்: டக்ளஸ் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதியப்பட்ட நாள்February 7th, 2012 நேரம்: 11:42

Douglas-Devananda-150x150.jpg

ஈழம் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (இ.பி.ஆர்.எல்.எப்) தலைவராக இருந்தவர் டக்ளஸ் தேவானந்தா. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக தனிக்குழுவாக செயல்பட்டு வந்த இவர்கள் 1980களில் சென்னையில் இருந்தனர்.

1986-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி சென்னை சூளை மேட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த இ.பி.ஆர்.எல்.எப்.பைச் சேர்ந்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது இ.பி.ஆர்.எல்.எப்.பைச் சேர்ந்தவர்கள் சுட்டதில் வாலிபர் ஒருவர் பலியானார்.

4 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இ.பி.ஆர்.எல்.எப். தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் அவருடைய கூட்டாளிகள் 9 பேரும் கைதானார்கள். அவர்கள் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

பிறகு டக்ளஸ் தேவானந்தா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 1988-ல் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பணக்கார வீட்டு சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று டக்ளஸ் பல லட்சம் ரூபாய் பறிக்க முயன்றார். போலீசார் அந்த சிறுவனை மீட்டதோடு டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்தனர்.

சென்னை போலீசில் டக்ளஸ் மீது மீண்டும் வழக்கு பதிவானது. இதற்கிடையே டக்ளஸ் கொலை முயற்சி ஒன்றில் ஈடுபட்டார்.

போலீசார் தேடுவதை அறிந்ததும் சென்னையில் இருந்து தப்பி இலங்கைக்கு சென்று விட்டார். கொலை, கொள்ளை, கடத்தலில் ஈடுபட்ட டக்ளஸ் தேவானந்தாவுக்கு இலங்கையில் அது போல வாழ முடியவில்லை.

எனவே சிங்களர்களுடன் சேர்ந்து கொண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயல்பட்டார். அதற்கு பரிசாக அவருக்கு இலங்கை தொழில் துறை மந்திரி பதவி கிடைத்தது.

இந்த நிலையில் சென்னை போலீஸ் நிலையங்களில் அவர் மீதான 3 வழக்குகளும் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் டக்ளசை கைது செய்ய சென்னை கோர்ட்டு பிடி வாரண்டு பிறப்பித்தது. இதனால் டக்ளஸ் சென்னை பக்கம் தலைகாட்டாமல் உள்ளார்.

இதற்கிடையே தொலைக்காட்சி ஒன்றுக்கு டக்ளஸ் தேவானந்தா அளித்துள்ள பேட்டியில், ‘’ சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு நான் தார்மீக பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். துப்பாக்கி சூட்டை நடத்தியது இ.பி.ஆர்.எல்.எல்.பைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதற்கு நான் தான் பொறுப்பாகும்.

சென்னை போலீஸ் நிலையங்களில் உள்ள அந்த வழக்குகளை சட்டப்படி சந்திக்க நான் தயாராக உள்ளேன். ஆனால் இந்த பழைய விவகாரத்தை சிலர் அரசியல் லாபத்துக்காக மீண்டும் கிளப் பியுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

http://meenakam.com/2012/02/07/38973

இலங்கை ஒட்டு குழு தலைவர் (இது நான் சொல்லவில்லை அமரிக்க, ஐரோப்பா சொல்கிறது) முதல் தடவையாக உண்மைய ஒத்து கொள்கிறார். இலங்கையில் நடந்த கொலைகளையும் இவர் ஒத்துக் கொள்வாரா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அட ,  அமைச்சரின் பெருமைகளை கேட்க கேட்க கண்ணைகட்டுகிறது.

இலங்கை ஒட்டு குழு தலைவர் (இது நான் சொல்லவில்லை அமரிக்க, ஐரோப்பா சொல்கிறது) முதல் தடவையாக உண்மைய ஒத்து கொள்கிறார். இலங்கையில் நடந்த கொலைகளையும் இவர் ஒத்துக் கொள்வாரா??

ஈழத்தில் இன்னும் கொலைகள்,  கடத்தல்கள் முடியவில்லை.  இவர் பாடையில் போகும்போது தார்மீக பொருபேர்பார்.

எங்கட வன்முறை எதிர்பாளர்கள் எங்கை? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சிங்கள ஒட்டுண்ணியின் வாக்குமூலத்தின் பிண்ணனியில் அரசியல் உள்ளது போல்தான் தெரிகிறது, இதே போல் துரோகி கருணாவும் அந்த இந்த அதுக்கு பொறுப்பேற்கிறேன் என்று சொல்ல வாய்ப்பிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாதவர்கள் மீது பழியைப் போடுவதன் மூலம்

இருப்பவர்கள் தப்பிக்கலாம்

என்ன இதின் கருத்து? உள் ஈடாட்டம் இவர்களுக்கு நிலைமகளை சமாளிக்க வேண்டிய தேவையை உணர வைக்கிறதா?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

80களில் டக்லஸ் போன்றவர்கள் தமிழ் நாட்டில் செய்த வன்முறைகளை புலிகள் தான் செய்ததாக அங்குள்ள சாதாரண தமிழர்கள் நம்புகிறார்கள். எல்லா இயக்கங்களையும் ஈழத்துப்புலிகள் என்று தான் பலர் நம்புகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.