Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் துணையுடன் அமெரிக்காவை முறியடிப்போம்-இலங்கை நம்பிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில் இலங்கை அரசு தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளை இந்தியாவின் துணையுடன் முறியடிக்க முடியும் என்று இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அரசு எங்கள் மீது மிகக் கடும் அழுத்தங்களை கொடுக்கிறது. ஆனால் நாங்கள் அதை சமாளித்து விடுவோம். ஏனெனில் இந்தியா எமக்கு முழுப் பக்க பலமாக இருக்கிறது” இவ்வாறு பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி. செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்திருக்கிறார்.

எதிர்வரும் 27ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக இருக்கும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கிலாரி கொழும்புக்கு அறிவித்துள்ள நிலையில் அதிகாரியின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இறுதி முடிவை அமெரிக்கா எடுப்பதற்கு முன்பாக அந்த நாட்டு இராஜாங்கத் திணைக்களத்தின் துணைச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கை வருவது உறுதிப்படுத்தப்படவுள்ளது. இவருடன் பொதுமக்கள் பாதுகாப்பு ஜனநாயகம் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான கீழ் நிலைச் செயலாளர் மேரி ஒரேரோ உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவினர் வரவுள்ளனர்.

இதற்கிடையில் இலங்கையின் 64ஆவது சுதந்திர தினம் கடந்த சனிக்கிழமை கொலம்பிய மாவட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் றொபேட் ஓ பிளேக் உட்பட அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய றொபேட் ஓ பிளேக், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அடிக்கல்லை நல்லிணக்க ஆணைக்குழு நட்டுவைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இலங்கைத் தீவு அமைதியுடனும் சமத்துவத்துடனும் மீண்டௌக் கூடிய தீர்மானகரமான வழிவகைகளை நல்லிணக்க ஆணைக்குழு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த இலக்குகளை இலங்கை அடைவதற்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.saritham.com/?p=49910

அமெரிக்காவின் புலனாய்வு தகவல்கள் இந்தியாவை சிங்களத்திற்கு எதிராக முடிவு எடுக்க வைக்கும்.

சீனா பூநகரி உட்பட்ட பல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் காலை ஊன்றி, வேறு பல இடங்களில் பதித்த காலை ஆழமாக பரப்பி வரும் தகவல்கள் டெல்லியை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைமீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் இந்தியாவை அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வைக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது..! இதன்மூலம் சீனாவுக்கு எதிரான வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்க இந்தியாவை நிர்ப்பந்திக்கலாம்..! :D

ஆனால் மறுவளமாக, இந்தியா மதில்மேல் பூனையாக இருந்துகொண்டு நேரடி அமெரிக்க, சீன மோதல்கள் ஏற்படுவதை விரும்புகிறது..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா என்பது ஒரு தேசமா? இல்லை நல்ல தேசங்களுக்கு அதுவே ஒரு தோசமா?

அதன் சர்வதேச அரசியல் என்பது, அதன் கறுப்பு பணங்களை காக்கும் நாயா?

சாகும் அதன் மக்களை கருணை கொள்ளாது சாவிலும் அரசியல் செய்யும் பேயா?

தன் மக்களுக்கே உதவாக்கரையான கிந்திய அரசியல், ஐநாவில் பிச்சை எடுத்தல் ஒன்றே அதன் தகுதிக்கு ஒன்றியது!

இதுக்கும் வேண்டுமாம் ஐநாவில் நிரந்தர உறுப்புரிமை! இதுவரை இருக்கின்ற உறுப்புகளிலேயே உயிர் இல்லை, இன்னும் ஒன்று வேண்டுமாம் பேருக்கு.

நடை செத்தது, செவி செத்தது என பாதிப் பிணங்களால் ஆளப்படும் நாடு, எங்கே தான் வாழப்போகின்றது?

எவரைத்தான் வாழவிடப் போகின்றது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் துணையுடன் அமெரிக்காவை முறியடிப்போம்-இலங்கை நம்பிக்கை!

இந்த நம்பிக்கைதானே பல ஆயிரம் தமிழர்களை அழிக்க காரணமாக இருந்தது

என்னத்தை விதைத்தார்களோ அதுவே அறுவடையாகும் ஒருநாள் அதுவரை ........

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்திய சீன அரசுகளின் கைகளில் இருக்கும் வரை

எல்லாமே கேள்விக்குறி தான்.

தேவைக்கேற்ப உப்பு புளி போல எல்லோரும்

இலங்கையைத் தொட்டுச் செல்வார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா என்பது ஒரு தேசமா? இல்லை நல்ல தேசங்களுக்கு அதுவே ஒரு தோசமா?

அதன் சர்வதேச அரசியல் என்பது, அதன் கறுப்பு பணங்களை காக்கும் நாயா?

சாகும் அதன் மக்களை கருணை கொள்ளாது சாவிலும் அரசியல் செய்யும் பேயா?

தன் மக்களுக்கே உதவாக்கரையான கிந்திய அரசியல், ஐநாவில் பிச்சை எடுத்தல் ஒன்றே அதன் தகுதிக்கு ஒன்றியது!

இதுக்கும் வேண்டுமாம் ஐநாவில் நிரந்தர உறுப்புரிமை! இதுவரை இருக்கின்ற உறுப்புகளிலேயே உயிர் இல்லை, இன்னும் ஒன்று வேண்டுமாம் பேருக்கு.

நடை செத்தது, செவி செத்தது என பாதிப் பிணங்களால் ஆளப்படும் நாடு, எங்கே தான் வாழப்போகின்றது?

எவரைத்தான் வாழவிடப் போகின்றது?

தேவா, கலக்கல் கருத்து.  ஆனால் தெரு நாயை குளிப்பாடி வீட்டு நடுவில் வைத்து தீர்ப்பு சொல்லுங்க நாட்டாமை என்று புலம்புவோரை என்ன பண்ணுவது?

நூற்றி இருபது கோடி மக்கள் இருந்தும் ஐ.  நா. பாதுகாப்பு சபையில் இடம் இல்லாத வாய் பேச்சு கை புள்ளை! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.