Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சவேந்திர சில்வா விவகாரம் - சூசன் ரைஸ் கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rice.jpg

ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விசேட குழுவின் சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் சவேந்திர சில்வாவை எவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியும் என்பது குறித்து ஐ.நா.வையும் அதன் பின்னர் அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்தையும் மூன்று வாரங்களுக்கு முன்னர் இன்னர் சிற்றி பிரஸ் கேட்க ஆரம்பித்தது.

இலங்கை தொடர்பான ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்திருந்த நிபுணர்குழுவின் அறிக்கையில் போர்க்குற்றத்துடன் சம்பந்தப்பட்டதாக சவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணி திரும்பத் திரும்ப பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. தனக்கும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இதனை ஏற்பாடு செய்யுமாறு கூறப்பட்டிருந்ததாக இன்னர் சிற்றி பிரஸுக்கு பங்களாதேஷின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பெப்ரவரி 14 இல் கூறியிருந்தார். பெப்ரவரி 16 இல் பாகிஸ்தானின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இதனை உறுதிப்படுத்தியிருந்தார். இது தொடர்பாக பெப்ரவரி 17 இல் (நேற்று முன்தினம்) சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பு ஐ.நா.வின் அமைதி காக்கும் பணிக்கான இரு உதவிய செயலாளர் நாயகங்களுடன் இடம்பெற்றது. வெள்ளிக்கிழமை காலை 9.45 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இன்னர் சிற்றி பிரஸ் விளங்கிக்கொள்கிறது. வெள்ளிக்கிழமை 10.30 மணியளவில் கடிதம் ஒன்று பற்றி அமெரிக்கத் தூதுர் சூசன் ரைஸிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது. ஐ.நா. விற்கான அமெரிக்க தூதகரத்தின் ஆலோசகர் ரஸல் எவ் கிரகாம் ஐ.நா.வுக்கு எழுதிய கடிதம் தொடர்பாகவே இன்னர் சிற்றி பிரஸ் கேட்டிருந்தது. இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான சவேந்திர சில்வா இராஜதந்திர சிறப்பு விடுபாட்டைக் கொண்டிருப்பதாகவும் அதன் அடிப்படையில் சில்வாவுக்கெதிரான இந்த வழக்கு நிராகரிக்கப்பட்டிருந்தது எனவும் அமெரிக்க சமஷ்டி நீதிமன்றம் ஒன்று தெரிவித்திருந்த விடயத்தை சில்வாவின் வழக்கறிஞர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தை இன்னர் சிற்றி பிரஸ் தனது இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கிறது.

சூடான் தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸின் கேள்விகள் சிலவற்றை தூதுவர் ரைஸ் எடுத்துக்கொண்டார். “இவை இரு வேறுபட்ட விடயங்கள், இராஜாங்கத் திணைக்களம் சிறப்பு விடுபாட்டிற்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. அவர் துரதிர்ஷ்ட வசமாகவோ அல்லாது அதிர்ஷ்டவசமாகவோ இராஜதந்திர அந்தஸ்தைக் கொண்டிருக்கிறார்' என்று இன்னர் சிற்றி பிரஸுக்குக் கூறினார். அதன் பின்னர் சில்வா தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸுக்கு சூசன் ரைஸ் கருத்துத்தெரிவித்துள்ளார். “இந்த ஆலோசனைக் குழுவில் பணியாற்ற தெரிவு செய்யப்பட்ட அவரின் பின்னணிய மிகவும் கவலைக்குரியது. இதனை நாங்கள் உறுப்பு நாடுகளிடம் தெரிவித்திருந்தோம். செயலகத்திற்கும் கூறியிருந்தோம். இந்த விடயம் தொடர்பாக தீர்வு காண அதிகளவு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பகிரங்கமாக இது தொடர்பாக கலந்துரையாடாமல் இருப்பது சிறப்பானது என்று சூசன் ரைஸ் கூறியுள்ளார். சில நிமிடங்களின் பின்னர் பாதுகாப்புச் சபையின் மற்றொரு நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை இன்னர் சிற்றி பிரஸ் அணுகியது. இலங்கையர் தொடர்பாக நீங்கள் சிறப்பாக செய்துள்ளீர்கள் என்று கூறியது. யூ.எஸ்.ஜி.யின் மல்கோரா மற்றும் லாட்சோஸுக்கு இன்னர் சிற்றி பிரஸ் கேள்விகளை அனுப்பியிருந்தது.

"ஹலோ, நண்பகலுக்கு முன்னர் பதில் கோரப்படுகிறது; சவேந்திர சில்வா விடயம் தொடர்பாக நான் விளங்கிக் கொள்கிறேன். அவரின் பெயர் செயலாளர் நாயகத்தின் இலங்கை தொடர்பான நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 58 ஆவது பிரிவுக்கு பொறுப்பாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பிரிவானது போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டதாக வர்ணிக்கப்பட்டிருந்தது. இன்று ஐ.நா.வின் அமைதி காக்கும் பிரிவுடன், தூதுவர்கள் சந்திப்பை மேற்கொள்கின்றனர். இதனை நீங்கள் நேரடியாக உறுதிப்படுத்த வேண்டுமென கேட்கிறேன். சிரேஷ்ட ஆலோசனைக் குழுவில் சில்வாவின் அந்தஸ்து தொடர்பாக குறிப்பிடுமாறு கேட்கிறேன். இந்தக் கட்டத்தில் உங்களின் கருத்து குறித்து கேட்கிறேன்' என்று கேள்விகளை இன்னர் சிற்றி பிரஸ் அனுப்பியிருந்தது. வெள்ளிக்கிழமை நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் திரும்ப இக்கேள்வியை இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது. இந்த விடயம் குறித்து தனக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் எடுராடோ டெல் போயி குறிப்பிட்டிருந்தார். அமைதி காக்கும் பிரிவின் பேச்சாளரிடம் கேட்குமாறு தெரிவித்திருந்தார். மாலை 6.34 மணியளவில் அமைதி காக்கும் பிரிவின் பேச்சாளர் குறிப்பொன்றை எழுதியிருந்தார். மதிய செய்தியாளர் மாநாட்டிற்கு முன்னராக கோரிக்கையை உறுதிப்படுத்துவதாக அந்த குறிப்பு எழுதப்பட்டிருந்தது. அவர் செய்தியொன்றை அனுப்பியிருந்தார். ஆனால், அந்தக் கோரிக்கை தெளிவாகவும் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் இருந்தது. இங்கு பிரச்சினை முக்கியமானதாகும். செயலாளர் நாயகமோ அல்லது உதவி செயலாளர் நாயகமோ போர்க்குற்றம் சாட்டப்பட்டது பற்றி கூறுவதற்கு எதனையும் வைத்திருக்கவில்லை. பான் கீ மூன் மற்றும் அவரின் பேச்சாளர்களுக்கான கேள்வி இது என்று இன்னர் சிற்றி பிரஸ் அழுத்தி உரைத்தது. ஏனென்றால் பான் கீ மூனின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் இந்த விடயம் குறித்து அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். பெப்ரவரி 13 இல் ஐ.நா. பொதுச் சபையானது இந்த விடயம் பற்றி எழுப்பியிருந்ததாக அவர் இன்னர் சிற்றி பிரஸுக்குக் கூறியிருந்தார். ஏனென்றால் பான் கீ மூனின் சொந்த அறிக்கையில் சில்வா இடம்பெற்றுள்ளார். பதிவு ரீதியான பதிலுக்காக நாங்கள் இப்போதும் காத்திருக்கின்றோம். இது தொடர்பாக பான் கீ மூனின் அலுவலகத்திடமும் அமெரிக்காவின் மல்கோரா மற்றும் அவரின் பேச்சாளரிடமிருந்தும் திரும்ப வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை, வெள்ளிக்கிழமை 2.20 மணியளவில் பின்வரும் விடயத்தை ஐ.நா. அமைதி காக்கும் பிரிவின் பேச்சாளருக்கு இன்னர் சிற்றி பிரஸ் அனுப்பியிருந்தது.

"உறுப்பு நாடுகள் சிலவற்றுடன் அமைதி காக்கும் பணி தலைமைத்துவங்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தன. உறுப்பு நாடுகளுக்கான ஆலோசனைக் குழு தொடர்பான தெரிவை அறியப்படுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றது. நாங்கள் ஏற்கனவே உறுப்பு நாடுகளுக்கு இந்த விடயம் குறித்து பரிசீலனை செய்யுமாறு எழுதியுள்ளோம். இந்தக் கட்டத்தில் விசேட ஆலோசனைக் குழுவின் உறுப்புரிமை தொடர்பான எமது கருத்துக்கள் குறித்து கூறுவதற்கு எம்மிடம் எதுவும் இல்லை' என்று பேச்சாளர் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். பான் கீ மூனின் நிபுணர் குழுவில் மருத்துவமனைகளின் மீது ஷெல் வீச்சு மற்றும் சரணடைந்தவர்களுக்கு விசாரணைக்குப் புறம்பான தண்டனை அளிக்கப்பட்டதான விவகாரம் என்பன குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவர் அமைதிகாக்கும் பிரிவின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டமை குறித்து எதுவும் கூறுவதற்கு இல்லை என்று இந்த விடயம் கூறுவதாகக் காணப்படுகிறது என்று நியூயோர்க்கை தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

http://www.pathivu.c...ticle_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சவேந்திர சில்வா விடயம் தொடர்பாக நான் விளங்கிக் கொள்கிறேன். அவரின் பெயர் செயலாளர் நாயகத்தின் இலங்கை தொடர்பான நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில்வாவை ஐநாவுக்கு அனுப்பி அவனைப் பாதுகாக்கும் காரியத்தை மேற்கொண்ட சிங்களவனை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்..! ஆனால் அச்செயலே அவர்களுக்கு சங்கடத்தையும் தருகிறது..!

சிறிலங்காவில் ஹொனி மூன் போன பாண் கீ மூன் இருக்கும் வரை சிங்களப் பயங்கரவாதிகளுக்கு கொண்டாட்டம் தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில்வாவை ஐநாவுக்கு அனுப்பி அவனைப் பாதுகாக்கும் காரியத்தை மேற்கொண்ட சிங்களவனை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்..! ஆனால் அச்செயலே அவர்களுக்கு சங்கடத்தையும் தருகிறது..!

சிங்கள பிச்சை கூட்டத்திற்கு அவ்வளவு பவர் இல்லை.

எல்லாம் டெல்லி இரானிய நேரு குடும்ப நரிகள் தான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.