Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியலுரிமை சுதந்திரம் குறித்து பன்னாட்டு அரச பிரதிநிதிகளோடு பேசுவேன் என கூறிக்கொண்டு - ஜெனீவா புறப்பட்டார் டக்ளஸ் தேவானந்தா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Daglas-devanantha150.jpg

சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றிரவு ஜெனீவாவிற்கு பயணமாகியுள்ளார் என அறியப்படுகிறது.

பல்வேறு நாடுகளின் அரச பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் இந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களில் ஒருவராக கலந்து கொள்ளும் அதே வேளையில் தமிழ் பேசும் மக்களால் அதிகூடிய விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைவர் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாகவும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு எமது மக்கள் அடைய வேண்டிய அரசியலுரிமை சுதந்திரம் குறித்து பன்னாட்டு அரச பிரதிநிதிகளோடும் கலந்துரையாடவுள்ளார்.

தமிழ் பேசும் மக்களுக்கு தேவையானது இனங்களுக்கிடையில் அல்லது அரசாங்கத்திற்கும் தமிழ்பேசும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை தூண்டி விடுவது அல்ல என்றும் மாறாக தமிழ்பேசும் மக்கள் அடைய வேண்டிய அரசியலுரிமைகளை அடைவதே பிரதான இலக்கு என்றும் கருதி செயற்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவைகள் குறித்து நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளை பன்னாட்டு அரச பிரதிநிதிகளோடும் கருத்துக்களை பரிமாறவுள்ளார்.

இதேவேளை இலங்கைத்தீவில் நிலவும் அமைதி சமதானம் மற்றும் வன்முறைகளற்ற சூழலை மேலும் வலுப்படுத்தி அவற்றை பாதுகாப்பதற்காகவும் இனங்களுக்கிடையில் சமத்துவ உறவு அரசியல் சமவுரிமை என்பவற்றை உருவாக்குவதற்காகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தனது கருத்துக்களையும் அதற்கான நடைமுறை சார்ந்த செயற்திட்டங்களையும் முன்வைக்கவுள்ளார் என தெரியவருகிறது.

http://www.seithy.co...&language=tamil

டக்ளசுக்கு தேவை:

* சிங்கள அரச பயங்கரவாதிகளுடன் சேர்ந்து தமிழ் ஊடகவியாளர்கள் (BBC, உதயன் நிருபர்கள்), அரசியல்வாதிகள் (மகேஸ்வரன், மகேஸ்வரி, ரவிராஜ், .......), அப்பாவி மக்களை கொலை செய்வது.

* சிங்கள அரச பயங்கரவாதிகளுடன் சேர்ந்து தமிழ் மக்களை கடத்தி கப்பம் பெறுவது, கொலை செய்வது.

* சிங்கள பௌத்த அரச பயங்கரவாதிகளுடன் சேர்ந்து தமிழ் மக்களிடம் கொள்ளையடிப்பது, கோவில்களில் கொள்ளையடிப்பது.

* இந்திய பயங்கரவாதிகளுடன் சேர்ந்து தமிழ் மக்களை கடத்தி கப்பம் பெறுவது, கொலை செய்வது, தமிழ் மக்களிடம் கொள்ளையடிப்பது, கோவில்களில் கொள்ளையடிப்பது.

ஜெனீவாவில் கூடும் தமிழ் மக்கள் சிங்கள அரச பயங்கரவாதிகளின் மந்திரி சபையில் இருக்கும் இந்தக் கயவனின் சுயரூபத்தை வெளிப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவைகள் குறித்து நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளை பன்னாட்டு அரச பிரதிநிதிகளோடும் கருத்துக்களை பரிமாறவுள்ளார்

நடமுறைக்கு சாத்தியமானது ....சிங்களத்தை படிக்க வேண்டும்,புத்தர் கோவில்களை தமிழர் பகுதியில் தெருத் தெருவாக அமைத்து வழிபாடு செய்வதுதான் ......

பன்னாட்டு அரச பிரதிநிகளுக்கும் தமிழர்களின் அரசியல் சுதந்திரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது சர்வதேசம் நன்கே அறியும்.

பல்வேறு நாடுகளின் அரச பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் இந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களில் ஒருவராக கலந்து கொள்ளும் அதே வேளையில் தமிழ் பேசும் மக்களால் அதிகூடிய விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைவர் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாகவும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு எமது மக்கள் அடைய வேண்டிய அரசியலுரிமை சுதந்திரம் குறித்து பன்னாட்டு அரச பிரதிநிதிகளோடும் கலந்துரையாடவுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முறியடிக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் ஜெனீவா பயணம்!

[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 07:38.36 AM GMT ]

daklus_001.jpgஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

52 பேர் அடங்கிய அரச உயர்மட்டக் குழுக்கள் ஜெனீவாவுக்கு நேற்று பயணமாகியுள்ள நிலையில், அவர்களுள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்ற மேற்குலக நாடுகள் முயற்சி செய்து வரும் வேளையில், டக்ளஸ் தேவானந்தாவையும் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அழைத்துச் சென்றமையானது, அரசாங்கம் இலங்கைக்கு சாதகமான கருத்துக்களை முன்வைக்கவே என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இலங்கைத்தீவில் நிலவும் வன்முறைகளற்ற சூழலை மேலும் வலுப்படுத்தி, இனங்களுக்கிடையில் இணக்கத்தை உருவாக்குவதற்காக மனித உரிமைகள் பேரவையில் தனது கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளினால் கொண்டுவரப்படவுள்ள போர்க்குற்ற தீர்மானத்தை முறியடிக்கும் நோக்கில் தமிழ் அமைச்சர் என்ற நிலையில் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்ளவுள்ளமை குறித்து தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடத்தல் துறை அமைச்சர் தனது சுவிஸ் வங்கி கணக்கை சரி பார்க்கவருகிறார்.

ஸ்ரீ லங்கா வரிய வரி மக்களுக்கு சும்மா உடான்ஸ்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எந்தெந்த வகையில் எல்லாம் தம்மை காப்பாற்ற முடியுமோ அந்த வழிகளில் எல்லாம் முயற்சிக்கின்றான் அதற்காக இந்த எஜமானர் விசுவாசிகளான டக்லஸ் தேவானந்த மற்றும் றிசாத் பதியுதீன் போன்ற இனத்துரோகிகளையும் அழைத்து செல்கின்றார்கள்.

இந்த அல்லக்கைகளைப்ப்றி இப்போது உலகம் கொஞ்சம் புரிந்திருக்கின்றது ஆகையால் இவர்ளை அழைத்து செல்வதனால் ஒன்றும் நிகழபோவதில்லை மாறாக ஸ்ரீலங்கா மீது நம்பிக்கையீனமே உருவாகும்.

சம்பந்தர் கதைக்கும் இடங்களில் இவரும் கதைக்க வேண்டும். அப்போதுதான் அறிவு விரும்பிகளுக்கு இலங்கையில் நடப்பது பற்றி ஓடி விளங்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.