Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ளு முட்டியும் காத்தான் கூத்தும் ஜெனீவா கூட்டமும்…

Featured Replies

கள்ளு முட்டியும் காத்தான் கூத்தும் ஜெனீவா கூட்டமும்…

நாங்க ஜெனீவாக்கு பேசப் போறோம் பெத்தவளே தாயே..!

அம்மா நடுச்சுடலை தில்லை வனம் பெத்தவளே தாயே..!

நமது கிராமங்களில் காத்தவராயர் கூத்து மேடை ஏறுகிறது என்றால் மேடைக்கு பின்னால் பெரிய பானையில் கள்ளு நிறைத்திருக்கும்.

கூத்தாட வருவோர் அதில் இருந்து ஒவ்வொரு மிடறாகக் குடித்து குடித்து ஆடிக் கொண்டிருப்பார்ககள். அதிகாலை வரை கூத்துக் கலைஞர்களை களைப்பின்றி வைத்திருக்கும் பணியை பனங்கள்ளு அற்புதமாக செய்யும்.

இப்படி சொல்வதால் கூத்து கலைஞர்களை கேலி செய்வதாகக் கருதக்கூடாது.

நமது வாழ்க்கைக் கூத்தாட்டங்களை விளங்க இதை ஓர் உதாரணமாக எடுக்கிறோம், அவ்வளவுதான்.

தான் யார், தான் எதற்காக பிறந்திருக்கிறேன் என்ற தேடல்களை மறந்து, கூத்துப் பாட்டுக்கு விடிய விடிய ஆட வேண்டுமானால் அறிவை மயக்க நமக்கு ஒரு போதை தேவை.

நமது அரசியல் மேடைகளில் முழங்குவோரும் ஏறத்தாழ இந்தக் கூத்துக் கலைஞர்கள் போலத்தான். மூளையை கழற்றி மேடைக்குக் கீழே வைத்துவிட்டு ஆரியமாலாவை தேடும் காத்தவராயன் போல ஆட வேண்டும்.

இல்லையேல் அவர்கள் மேடையேற முடியாது.

அந்தக் காலத்தில் எனக்கு தெரிந்த உணர்ச்சிக் கவிஞர் ஒருவர் இருந்தார். தமிழர் கூட்டணி மேடைகளில் அமிர்தலிங்கம் ஈழத்தை அமைப்பார் என்று முழங்கியவர். கூட்டணிக் கொடியை ஏற்றிவிட்டு அமிருக்கு இரத்தப் பொட்டும் வைப்பார்.

jeneva2.jpg

பின்னாளில் அவருக்கு விஷயம் தெரிந்துவிட்டது, அமிர்தலிங்கத்தாலும், மங்கையக்காவாலும் ஈழம் அமைக்க முடியாது என்று. மேடையிலிருந்து அவர் இறக்கப்பட்டுவிட்டார்.

அதற்குப் பிறகு இரண்டாவது தாகம் கூடிய கவிஞர் வந்தார். அவர் இருபத்தி நாலு மணி நேரத்தில் ஈழம் வருமென்று முழங்கினார். கூட்டணிக் கொடியை தலை கீழாக ஏற்றிவிட்டு இரத்தப் பொட்டு வைத்தார்.

இது சரியா..?

பழைய உணர்ச்சிக் கவிஞர் சொன்னார், ” நான் கொஞ்சம் நிதானமாக இருந்ததால் கொடியையாவது நேராக ஏற்றினேன்: அடுத்தாள் அரசியல் கள்ளை தன்னைவிட அதிகமாக அடித்துவிட்டு தலை கீழாக நின்றதால், கொடியையும் தலை கீழாக ஏற்றிவிட்டதாக ” சிரித்தார்.

குறிப்பு : இவை புலிகள் வர முன்னர் நடந்த காத்தவராயர் கூத்துக்கள்.

இப்போது ஜெனீவாவில் போர்க்குற்ற விசாரணைக் காத்தவராயர் கூத்து வந்திருக்கிறது.

சிங்கள இனவாத கள்ளடித்துவிட்டு பீரீஸ் தலைமையில் கூத்துக்கோஷ்டி ஒன்று ஜெனீவா போயுள்ளது.

எல்லாருக்கும் கள்ளு விற்றுவிட்டு வெறியாட்டங்களின் வேடிக்கை பார்க்க ஐ.நா வழமை போல ஜெனீவாவில் கூடியிருக்கிறது.

இந்தியா யார் பக்கம்…?

அமெரிக்கா யார் பக்கம்…?

இதோ சனல் 4 அடுத்த காணொளி வருகிறது..

இப்படி கூத்தாட்டத்திற்கான ஒத்திகைகளும் உடுக்கடிகளும் நடக்கின்றன…

நமது பழைய அமிர்தலிங்கம் காலத்து உணர்ச்சிக் கவிஞர் மறுபடியும் சிரித்தார்.. பனங்கூடலில் மேடை போட்டாலும், ஜெனீவாவில் மேடை போட்டாலும் கள்ளு முட்டியும் காத்தான் கூத்தும் ஒண்டுதான் என்றார்..

போர்க்குற்றக் கள்ளை குடித்துவிட்டு ஜெனீவாவில் ஒரு காத்தவராயன் கூத்து நடக்கப் போகுது…

செத்தவன் வாயில மண்..

அரசியல் கூத்தாடி வாயிலை கள்ளு..

விடிஞ்சா கூத்து முடிஞ்சு போடும்…

அன்று பார்த்த காத்தவராயர் கூத்தும் கள்ளு முட்டியும் எத்தனை அர்த்தமுள்ளவை.. கவிஞர் சிரித்தார்..

யாவும் கற்பனை.

- ஈழத்து நினைவேந்தியார்.. 22.02.2012

http://www.alaikal.com/news/?p=97727

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான காலத்திற்கேற்ற கற்பனையாய் இருந்தாலும் மற்றவர்கள் விளங்கும் பாணியில் எழுதியிருப்பது அருமை.

உணமையின் யதார்த்தத்தை தத்துவரூபமாகப் படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.