Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்தின் கடுமையான அழுத்தங்கள் பயமுறுத்தல்களுக்கு TNA அடிபணிந்தது

Featured Replies

ஜெனிவா செல்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கத்தினதும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கடும் போக்காளர்களதும் கடுமையான அழுத்தங்களே காரணம் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பு ஜெனீவா பயணமாவது என்ற முடிவே எடுக்கப்பட்டு இருந்ததாக எமக்கு தகவல் கிடைத்தது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொள்ளவில்லை. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே கலந்துகொண்டிருந்தார். இதில் ஜெனிவா மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து வலியுறுத்தி உள்ளனர். எனினும் இன்று இலங்கை நேரம் மாலை திடீரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்புகொண்ட சுமந்திரன் இப்படியான அறிகை ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு கூறி சில நிமிடங்களிலேயே ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிடப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து இந்தியாவில் உள்ள சுரேஸ் பிறேமச்சந்திரனுடனும் சுமந்திரன் பேசியபோதும் இதற்கு என்ன அவசரம் என சுரேஸ் கேட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் இந்திய தொடர்பாளர் ஊடாக தெரிய வருகிறது.

அத்துடன் இது குறித்து இந்தியாவில் நின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், மாவைசேனாதிராஜா ஆகியோருக்கும் அறிவிக்கப்படாமல் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் சுமந்திரனும் இணைந்து குறுகிய நேர அறிவிப்பில் அறிக்கையை வெளியிட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது.

இதேவேளை நேற்றும் இன்றும் அரசாங்க தரப்பினர் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருக்கு பயமுறுத்தும் பாணியிலான அழுத்தங்களைக் கொடுத்ததாகவும் இந்த அழுத்தங்களுக்கும் பயமுறுத்தல்களுக்கும் இவர்கள் அடிபணிந்ததாகவும் அரசாங்க தரப்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்று தெரிவிக்கிறது. எனினும் இது குறித்து கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை தொடர்பு கொள்ள முற்பட்ட போதும் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதில் அளிக்கப்படவில்லை.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/74057/language/ta-IN/--TNA-.aspx#.T0kVXQFEN3I.facebook

நிச்சயம் சிங்களம் கூட்டமைப்பின் பிரசனத்தை ஜெனீவாவில் விரும்பாது. ஆனால், இப்படியான தடைகளை சர்வதேசத்திற்கு தமக்குள்ள வழிகள் மூலம் சொல்லவேண்டும். இந்தியாவில் உள்ள உறுப்பினர்கள், தமது சர்வதேச உறுப்பினர்கள் ஊடாக நிலைமைகளை கூறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் சொதப்புவது எப்படி? நடைமுறைப்படுத்துகிறது கூட்டமைப்பு – சரிதம் ஆசிரியர் பீடம்!

ஜெனீவாவில் என்ன நடக்கப்போகிறது? என்ற பல்லாயிரம் கேள்விகளுடன் சர்வதேசமும், தமிழ் மக்களும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்ற பொழுது வாய்ச்சொல் வீரரடி பாணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் வங்குரோத்தின் அடிமட்டத் தனத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றது.

‘ஜெனீவா மாநாட்டில் நாங்களும் பங்கேற்கிறோம். தமிழ் மக்களுக்கு நேர்ந்த

இன்னல்கள் தொடர்பில் அங்கு நேரடியாகவே முறையிடப்போகிறோம்’ என்று அறிக்கைகளை வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதியில் தனது நிலைப்பாட்டினை மூட்டை கட்டிவைத்துவிட்டு குழந்தைகளுக்கு நிலாச்சோறு காட்டும் பாணியில் இந்தியாவிற்குச் செல்வதாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜெனீவா செல்ல வேண்டும், அங்கு தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்கவேண்டும் என்று யாரும் வலியுறுத்தவில்லை. ஆனாலும் தாமாகவே முன்வந்து இவ்வாறான ஒரு தீர்மானத்தினை எடுத்திருந்தமை, வரவேற்கத் தக்கது என்று தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அபிப்பிராயம் ஏற்பட்டிருந்தது என்பது உண்மை தான்.

MRRS221121.jpg

ஆனாலும், வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் வீரவசனம் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச அவசரமாகச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின் போது “தெரிவுக்குழுவில் இடம்பெறுவது தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் கோரியிருந்தார் அதனை நேரடியாகவே சம்பந்தன் மறுத்துவிட்டார்”. என்று ஊடகங்கள் விதம் விதமான செய்தித் தலைப்புக்களை வெளியிட்டிருந்தன.

அந்தச் சந்திப்பில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்ததை அவதானிக்க முடியும். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையோ, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையோ தனிப்பட்ட ரீதியில் சந்தித்திருந்தால் அந்தச் சந்திப்பு தொடர்பிலான செய்திகள் சில வாரங்களின் பின்னரோ அல்லது சில மாதங்களின் பின்னரோ தான் வெளித்தெரியவந்திருக்கும்.

ஆனால் இறுதியாக நடைபெற்ற சந்திப்பினை அடுத்து சம்பந்தன் – மஹிந்த சந்திப்புத் தொடர்பிலான செய்தியும், புகைப்படமும் உடனடியாகவே ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டிருந்தது. இந்த இடத்தில் ஒரு முக்கியவிடயத்தினை சுட்டிக்காட்டலாம். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியைச் சந்திக்கச் செல்கின்ற போது புகைப்படப்பிடிப்பாளரையோ, ஊடகத்தினரையோ அழைத்துச் செல்ல அனுமதித்திருக்க வாய்ப்பே இல்லை. மிக மிக நெருக்கமாக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூட சம்பந்தர் – மஹிந்த சந்திப்பிற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் சம்பந்தர் – மஹிந்தர் சந்திப்பினை படம் பிடித்தது ஜனாதிபதி விசுவாசிகளாகவே இருக்கவேண்டும். அதனைவிடவும் இவ்வாறான ஒரு இறுக்கமான முடிவினை சம்பந்தன் அறிவிக்கும் போது அதற்கு வக்காளத்துவாங்கும் வகையில் புகைப்படத்தினை வெளியிடும் நிலையில் இலங்கையில் அரச ஜனநாயகம் இருக்கிறதா? போன்ற கேள்விகள் அன்று எழவில்லைத்தான். ஆனால் இன்று எழுந்திருக்கிறது.

அவசர சந்திப்பிற்கான அழைப்பினைவிடுத்த ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச கூட்டமைப்பின் தலைவரிடம் ஜெனீவாவில் நடைபெறப்போகும் கூட்டத் தொடரில் கூட்டமைப்பினை பங்கேற்க வேண்டாம் என்று வலியுறுத்தியிருக்கின்றார். குறித்த கோரிக்கையினை அடுத்து உடனடியாகவே “தெரிவுக்குழு விடயம் தொடர்பிலான கதையும் கூடவே புகைப்படமும் வெளியாகியிருக்கின்றது என்ற முடிவினை எடுக்கவேண்டியதாகவிருக்கின்றது.

ஜெனீவாப் பயணம் இரத்தானமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் என்ன சொல்லப்படுகின்றது?

தற்போது நிலவும் நிலையற்ற நிலைமை தொடருமேயானால் அது வன்முறைக்கு வித்திடலாம், குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுகிறது. தற்போதைய சூழ்நிலையிலே அமைதி காக்கப்படுவதும், பிரச்சினைகளைத் தவிர்ப்பதும் அவசியமான செயற்பாடுகளென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. எனவே, இந்தக் காரணங்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் பிரசன்னமாயிருக்க மாட்டாது எனத் தீர்மானித்துள்ளது

வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்குறிப்பிடப்பட்டிருக்கின்ற பந்தியே முக்கியமான காரணமாக சம்பந்தனால் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பல பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் தற்போது நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றமையால் அதனைக் கைவிடுவது போன்றவகையில் கருத்துச் சொல்லப்படுகின்றது. சில வாரங்களுக்குள்தான் கூட்டமைப்பினர் தாம் ஜெனீவா செல்லப் போவதாக ஊடகங்களுக்குக் கதை சொல்லியிருந்தனர். இன்று எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலான எதிர்வு கூறல் மூத்த அரசியல் வாதி(!)களுக்கு அப்போது புரியவில்லையா? தீர்க்கதரிசனம் நிறைந்தவர்களாகவும் தமிழ் மக்களின் தன்னிகரில்லாத் தலைவர்களாகவும் சொல்லப்படுகின்றவர்கள் இவ்வாறு சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்வது அவர்களின் இன்னொரு முகத்தினை மக்களும் சர்வதேசமும் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிடாதா?

இதனைவிடவும் கூட்டமைப்பு எடுத்திருக்கின்ற அடுத்த கட்ட ஏமாற்று நாடகம் மிக வேதனை தருவதாகவே அமைந்திருக்கின்றது. ஜெனீவாவில் நடைபெறவிருக்கின்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது இந்தியாவிற்கு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்தியாவை வலியுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் சில நாட்களின் முன்னர் கூட்டமைப்பு கதைவிட்டிருக்கின்றது.

எங்கோ ஒரு மூலையில் கிரிக்கட் போட்டி நடைபெறும் போது தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பாக அமர்ந்திருந்து கைதட்டி, விசில் அடிக்கும் கூட்டத்துக்கு நிகரான நிலைப்பாட்டினையே கூட்டமைப்பு எடுத்திருக்கின்றது. ஜெனீவாவில் கூட்டத் தொடர் நடைபெறுகின்ற பொழுது இந்தியாவில் நின்று கொண்டு எதைச் சாதிக்கப் போகிறார்கள்? இந்தியாவை முழுமையாக நம்பி நம்பியே அவர்களின் கடந்த காலங்கள் கடந்திருக்கின்றன. இந்தியாவின் பாராமுகத்தினாலேயே எமது தேசிய விடுதலைக் கனவும் சிதைக்கப்பட்டு வந்திருக்கின்றது. இனியும் இந்தியாவை நம்பி எதனைச் சாதிக்கப் போகிறார்கள்?, இதனை விடவும் தீர்மானம் நிறைவேற்றப்படும் நாட்களில் உடனடியான அழுத்தங்கள் உலக நாடுகளின் கதவுகளைத் தட்டும் என்ற கதையினை யாருக்குச் சொல்கிறார்கள்?

ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவொரு அரசியலமைப்பு, கொள்கைவகுப்பு, தீர்மானிக்கும் அமைப்பு என பல்வேறு கட்டுக்கோப்புக்கள் இருக்கும். கூட்டமைப்பினைப் போன்று உடனடியாக ஒரு சிலர் தீர்மானம் எடுக்கும் நிலையில் ஏனைய நாடுகள் இருக்கப் போவதில்லை. கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது இந்தியாவில் கூட்டமைப்பு ஒன்றுகூடியிருக்கின்றது. உடனடியாகவே அதனைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் உலக நாடுகளுக்கு இருக்கும் என்று அம்புலமாமா கதைவிடும் நடவடிக்கையினை அவர்கள் கைவிடவேண்டும்.

கூட்டமைப்பின் முடிவின் ஊடாக மிகத் தெளிவான செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது.

நாங்கள் நாங்களாகவே இருப்போம். காலம் காலமாக நாங்கள் நாங்களாகவே இருந்தோம். நீங்களும் நீங்களாகவே இருங்கள். நாங்கள் இருக்கும் வரையில் நீங்கள் நினைப்பது எதுவும் நடந்துவிடப்போவதில்லை. உங்களுக்காக நாங்கள் இல்லை. எங்களுக்காகவே நீங்கள்.. தமிழன் கனவு.. கப்பல் ஏறி மிக நீண்டநாட்களாகிவிட்டன…என்று எண்ணும் நிலையிலேயே இன்று தமிழினம்.

சரிதம் ஆசிரியர் பீடம்..

http://www.saritham.com/?p=51840

Edited by தமிழரசு

ஜெனிவா அவையில் பிரசன்னமாக பேராசிரியர் சிற்றம்பலம் மிகச் சிறந்த தெரிவு. கூட சுரேஷ், மாவை, அரியநேத்திரன் போன்றவர்களில் சிலரும் சூழ்நிலைகளை சமாளிக்கக் கூடியவர்கள்.

சம்பந்தன், சமந்தனின் எடுபிடி சுமந்திரன் தவிர்ந்த கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் பிரசன்னம் சிங்களப் பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு துணை போக எத்தனிக்கும் பயங்கரவாதிகளையும் அச்சப்படுத்தும்.

ஆனால் சில காரணங்களால் ஏற்படக்கூடிய வெற்றிடத்தை நா. க. த. ஈ. அரசின் பிரதிநிதிகள் கட்டாயம் நிரப்ப வேண்டிவரும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் கனவை நாம் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் ஸ்ரீ லங்கா அரசியல்வாதிகளிடம் கொடுக்கவில்லை.  

சம்மந்தரினதும் , சுமதிரனதும் செயற்பாடுகள் திசை மாறி தான் போகிறது . அருமையான சந்தர்பங்களை நழுவ விடுகிறார்கள் . இதுதான் எமது இனத்தின் சாபம் . வெண்ணை பொங்கும்போது தாளியை உடைகிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.