Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இஸ்லாமிய நாடுகளுடன் மகிந்த அவசரத் தொடர்பு!

Featured Replies

இஸ்லாமிய நாடுகளுடன் மகிந்த அவசரத் தொடர்பு! - ஜெனிவாவில் சிறிலங்காவை ஆதரிக்கக் கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆpணக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்கக் கொழும்பு பகீரதப் பிரயத்தனம் மேற் கொண்டுவரும் சூழ்நிலையில், சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தானே நேரடியாக முஸ்லிம் நாடுகள் பலவற்றின் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 பேர் கொண்ட உயர்மட்ட இராஜதந்திரக் குழுவொன்று நேற்று ஜெனிவாவில் களமிறக்கியுள்ள நிலையில், முஸ்லிம் நாடுகள் சிலவற்றையே சிறிலங்கா தற்போது முழுமையாக நம்பியிருப்பதாகத் தெரிகின்றது.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உலக நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசி ஊடாக நேரடியாகத் தொடர்பு கொண்டு சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணையைத் தோற்கடிப்பதற்கான உறுதி மொழியைப் பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் என நம்பகரமாகத் தெரிய வந்துள்ளது.

மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாட்டுத் தலைவர்களுடன் உரையாடிய சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணையைத் தமது நாடுகள் எதிர்க்கும் என்ற உறுதி மொழியைத் அந்நாட்டுத் தலைவர்கள் வழங்கியுள்ளனர்.

அத்துடன், குறித்த நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களும் ஜெனிவாவில் முகாமிட்டுள்ள அரசாங்கங்கக் குழுவிடம் இதே உறுதி மொழியை வழங்கியிருக்கின்றனர் என ஜெனிவாவிலுள்ள சிறிலங்காவின் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

இதனைவிட ஜோர்டான் நாட்டின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதிலும், அதனூடாக ஏனைய முஸ்லிம் நாடுகளின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டிருப்பதாகத் தெரிகின்றது. இதற்காக ஜோர்டான் மன்னருடன் பேச்சுக்களை நடத்துவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளார். கட்டார், ஈரான் போன்ற சில நாடுகளும் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்க உறுதியளித்துள்ளன.

அதேவேளை, அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராஜதந்திரிகள் சுமார் 20 பேர் ஜெனிவா விரைந்திருப்பது தமக்கு எதிரான தீர்மானத்துக்கு வலுச்சேர்ப்பதற்காகவே எனக் கருதும் சிறிலங்கா தூதுக்குழுவினர் அதற்கு எதிரான வியூகத்தை வகுப்பதில் குழம்பிப் போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவா விரைந்துள்ள இந்தக் குழுவில் அமெரிக்காவைச் சேர்ந்த 15 உயர் இராஜதந்திரிகளும், பிரித்தானியாவைச் சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர் என்று ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு மேலாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதவுரிமைகள் தொடர்பான இரண்டாம் நிலைச் செயலாளர் மரியா ஒட்டேரோவையும் வொஷிங்ரன் ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்பாக அவரைக் கொழும்புக்கு அனுப்பி வைத்திருந்தது அமெரிக்கா. சிறிலங்கா விவகாரத்தில் வொஷிங்ரன் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் கொழும்பில் விளக்கியிருந்தார். எதிர்வரும் முதலாம் திகதி அவர் ஜெனிவாவில் இலங்கை விவகாரம் குறித்து உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. தனக்கு எதிரான பிரேரணை குறித்து கொழும்பு மேற்கத்தேய நாடுகளுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் எதிராகக் காட்டும் வெளிப்பாடுகள் குறித்து வொஷிங்ரன் ஆத்திரமுற்றுள்ளதாக வெளியாகும் தகவல்களின் பின்னணியிலேயே மரியா ஒட்டேரோவின் ஜெனிவாப் பயணமும், இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.pongutham...59-c3413d038b3e

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரியாவின் ஆசாத்திடம் முதல் உதிவியை கேட்பார்கள் என்று நம்புகிறேன்!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடுகளுக்கும் நாங்கள் ஒரு மின் அஞ்சல் அனுப்பினால் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.