Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனவுகள் வளர்ப்போம்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இக்கவிதையை எழுதியவன் ஏற்கனவே காலமள்ளிய கனவுகளும் நீழும் நினைவுகளும்... என்றொரு கதை மூலம் யாழுக்கு அறிமுகமான வசந்தன். அவனது இன்னொரு பதிவு இது யாழ் வாசகர்களுக்காக தருகிறேன்.

காலமள்ளிய கனவுகளும் நீழும் நினைவுகளும்... கதையைப் படிக்க இவ்விணைப்பில் அழுத்துங்கள்

கனவுகள் வளர்ப்போம்....

வசந்தன்

இப்பொழுதெல்லாம்

பெயர் தெரியாத தெருக்களில்

அகதியாய்

மண்வாசனையைத்

தேடும்போது தான்

உயிர் கனக்கிறது.

மரணத்தின் திசைநோக்கி – அன்று

நடந்தவர்களுடன்

நானும் கூட நடந்தேன்.....

அது மிக மிக அருகில்

என்னை வரவேற்றுக் காத்திருந்தது.

ஆயினும்

எல்லாவற்றிலிருந்தும்

நொடிப்பொளுதில் தப்பியதாக

ஒரு உணர்வு.

பனியில் நனைந்து

உடைகள் கனப்பதுபோல

மனதும் ஈரமாய்க் கனக்கிறது.

நினைவுச் சுழலில் சிக்குண்டு

இதயம் பாரமாய் கனக்கிறது.

எத்தனை கோடிகள் இருந்தென்ன

யாராலும் ரசிக்கப்படாமல்

சுடுகாட்டு மௌனத்தில்

விழித்திருக்கிறது எங்கள்

கடலும் வானமும்

தினசரி சிரித்து மலர்ந்து

ஆழத் தழுவி நீள நெடுங்கதை பேசி

காதலித்துக் குதூகலித்து

பிரிவின் வலிமறந்து

எல்லோரும் ஒன்றாயான

எங்கள் தாய்மடியில்

ஆக்கிரமிப்பின்

அரண்மனையும் அந்தப்புரமும்.

அந்தத் தாய்மடியின் கதகதப்பும்

இன்னமும் வலியாய்....

நாங்கள்

படுத்த பாய்களில் திண்ணைகளில்

விளையாடிய முற்றத்தில்

தினமும் வசந்தம் கொடுத்த

பூஞ்சோலைகளில்

ஏறி நாம் உறவாடும்

பிலாக்களில் தென்னைகளில்

வகுப்பறைகளில்

படங்கீறி மகிழ்ந்திருந்த

கல்லூரி மேசைகளில்

எங்கும் அவர்களே ஆக்கிரமித்து...

எங்கள் குழப்படிகளின் குதூகலிப்பும்

நீடித்த வசந்தமும்

ஒரு சில இரவுகளில்

எல்லாம் தொலைந்து போயின....

நெஞ்சில் கனலுடன்

வீழ்ந்தவர்களை விதையாக்கி

செந்நீருற்றிப் பாதுகாத்த

எங்கள் கல்லறைக் கோயில்களின்

சுவடுகள் கற்காலத்திற்குப் போய்விட்டன.

ஆக்கருவூலங்களில் உறைந்து கிடந்த

எதிர்காலம் மீதான

எங்களின் நம்பிக்கையும்

சுதந்திர குரல்களும் ஊமையாகிவிட்டன.

ஆனாலும்

உயிர் கொண்டு மூட்டிய

விடுதலைத் தீ

இன்றும் நீறாகியபடி

கொழுந்துவிட்டு எரிகிறது.

ஆயினும் எங்கள் கனவுகள்

சொட்டுச் சொட்டாய் துளிர்க்கும்

என்ற நம்பிக்கையில்

இப்போதும் உலகிடம்

கையேந்தியபடி நாம்....

எரித்தது பாதி

புதைத்தது பாதியென

ஏறிந்துவிட்டு வந்த

பிணங்களின் உயிர்ச் சூடு கூட

இன்னமும் அடங்கியிருக்க முடியாது.

எல்லாவறையும் இழந்தோம்

எங்கள் கனவைக் கூட

எங்கள் உயிர்களால்

எழுதிவிட்டு வந்த

வரலாறுகளின் மீது

முளைக்கிறது

சிங்கள நினைவுத்தூபிகள்....

போனது போகட்டும்

வெட்டப்பட்ட

நகங்களை விடுத்து

விரல்களையாவது பாதுகாப்போம்....

எம்மூர்களில்

மீண்டும் வசிக்கப்போகும்

எங்கள் கனவுகளும்

நம்பிக்கைகளும் அழியாது

மீண்டும் துளிர்க்குமென்ற கனவோடு

கனவுகள் வளர்ப்போம்....

07.02.2010

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவறையும் இழந்தோம்

எங்கள் கனவைக் கூட

எங்கள் உயிர்களால்

எழுதிவிட்டு வந்த

வரலாறுகளின் மீது

முளைக்கிறது

சிங்கள நினைவுத்தூபிகள்....

நினைவுகளும், தூபிகளும், அவற்றுள் ஒரு ஆன்மா இல்லாதவரை, வெறும் கற்குவியல்களே, சாந்தி!

கிளிநொச்சியில் விழுந்து கிடக்கும் நீர்த்தாங்கிக்கு, இந்தப் தூபிகளை விடவும் அதிக சக்தி உள்ளது என்பது எனது கருத்து!!!>

34508856.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்கி , புங்கையூரான் உங்கள் கருத்துகளுக்கு வசந்தன் எழுதிய பதில் இங்கு இணைக்கிறேன்.

கல்கி

கனவுகள்மீதான உங்களின் வைராக்கியமான காதலும் ஈடுபாடும் எல்லோரையும் புடம்போடட்டும் கனவுகளிற்கும் எண்ணங்களிற்கும் யாராலும் தடைபோடமுடியாதுதானே கனவுகாணுங்கள்... இன்றைய கனவுகள் நாளைய இலட்சியங்களிற்கு வழிசமைக்கட்டும்... தொலைந்துபோன வாழ்க்கை மீண்டும் எம்மூரில் துளிர்க்கும்...கனவாய்ப்போன காதலும் வீரமும் வாழ்க்கையும் மீண்டுமொருநாள் கைகூடட்டும்...அந்தநாளிற்காய் கனவுகாணுங்கள்...உங்களுடன் நாங்களும் இணைகிறோம் கனவுகளுடன்

வாழ்த்துக்கள்.

அன்புடன் வசந்தன்

புங்கையூரான்

அவை வெறும் கற்களால் மாத்திரமட் கட்டப்பட்டதல்ல எமது உணர்வுகளையும் உயிரையும் கண்ணீரையும் ட்டே அதை வடித்திருக்கின்றோம். கற்களை டைக்கலாம் சிதைக்கலாம் அவற்றில் வாழும் உணர்வுகளை யாரால் அழிக்கமுடியும்.

அன்புடன் வசந்தன்

< எரித்தது பாதி

புதைத்தது பாதியென

ஏறிந்துவிட்டு வந்த

பிணங்களின் உயிர்ச் சூடு கூட

இன்னமும் அடங்கியிருக்க முடியாது. >

உண்மையில் அடங்கவில்லைத் தான் . ஆனால் , அதில் தானே கயவர்கள் கயமை செய்கிறார்கள் . தொடருங்கள் வசந்தன் :(:(:( 2 .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.