Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் விரைவில்: சர்வதேச சமூகத்துக்கு அரசு உறுதி

Featured Replies

சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் விரைவில்: சர்வதேச சமூகத்துக்கு அரசு உறுதி

பொறுப்புக் கூறுதல் தொடர்பாக அமெரிக்கா உட்பட உலக சக்திகள் பலவற்றின் அழுத்தங்களுக்கு மத்தியில், சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டமூலம் விரைவில் சட்டமாக்கப்படும் என சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் ஜெனீவாவிலுள்ள  பல்வேறு தூதரகங்கள், சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட சர்வதேச அமைப்புகள், உலக தமிழர் பேரவை, மனித உரிமைகளுக்கான தமிழர் மத்திய நிலையம் போன்ற எல்.ரி.ரி.ஈ. ஆதரவு அமைப்புகளுடன் இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் கூட்டமொன்றை நடத்தினர்.

அக்கூட்டத்தின்போது சர்வதேச மன்னிப்புச் சபை பல கேள்விகளை எழுப்பியது. அக்கேள்விகளுக்கு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பதிலளிக்கையில், சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்படும் என்றார். வீடியோ மூலம் அளிக்கப்படும் சாட்சியங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதை இச்சட்டமூலம் எதிர்பார்க்கிறது.

வீடியோ மாநாட்டு முறை மூலம் சாட்சியமளிக்கப்படும்போது அத்தகைய தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து கரிசனைகள் எழ முடியும். வேறொரு இடத்திலிருந்து சாட்சிமளிக்கப்படும்போது பின்னணியிலுள்ள எவராலும் வற்புறுத்தலுக்குள்ளாக்கப்பட சாத்தியமுள்ளது. உத்தேச சட்டமூலத்தில் இவ்விடயங்கள் ஆராயப்பட்டு அத்தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொளள் முடியும்.

இச்சட்டமூலம் 2008 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் பின்னர் விவாதமொன்றின் இது குறித்து மேலும் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டது. தற்போது சட்டவரைஞர் திணைக்களம் இச்சட்டமூலத்தை வரைவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/37020-rhlrpfis-ghjfhggjwfhd-rllk-tpiutpy-rutnjr-rfjjff-mur-cwjp.html

  • தொடங்கியவர்

'சித்திரவதை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சார்பாக சட்டமா அதிபர் திணைக்களம் ஆஜராகமாட்டாது'

சித்திரவதைகளில் ஈடுபட்டவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுவதில்லை என சட்டமா அதிபர் கொள்கைத் தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று தெரிவித்தார்.

சித்திரவதை குற்றம்சுமத்தப்படும் நபர்கள் சார்பாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் ஆஜராகமாட்டாது என ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச சமூக பிரதிநிதிகள், மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கூட்டமொன்றின்போது அமைச்சர் ஹீக்கம் தெரிவித்தருந்தார்.

விசாரணைகளின்போது தெளிவான ஆதராங்கள் கிடைத்தால்  இத்தகைய குற்றம் புரிந்தவர்கள் சார்பாக சட்டா அதிபர் திணைக்களம் ஆஜராகமாட்டாது என அவர் கூறினார்.

சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச சாசனத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இலங்கை அதை உறுதிப்படுத்தியும் உள்ளது என அமைச்சர் ரவூவ் ஹக்கீம் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/37022-2012-03-04-19-33-19.html

தன்னைப் பிழையாகக் கைது செய்ததாக 9 மில்லியனுக்கு வழக்குத் தாக்கல் செய்தவரிடம் 10 மில்லியன் அறவிட முயற்சிகள் நடை பெறுகிறது.வீடியோவில் வாக்குமூலம் கொடுக்க போபவரின் குடும்பங்களுக்கு யார் பணம் கட்டப் போகிறார்கள்.

சவேந்திர சில்வா மீது அமெரிக்காவில் சுமத்தப்பட்ட வழக்குகளை வீடியோச் சாட்சியங்கள் மூலம் இலங்கையில் வைத்து விசாரிக்க அவரை இலங்கை கூப்பிடுவார்களா? ஜெகத் டயஸ், பாலித, திசற சமரசிங்கா மூவர் மீதும் சாட்டப்பட்ட வழக்குகளை விசாரிக்க அவர்களையும் இலங்கை கூப்பிடுவார்களா?

மகிந்தா மீதான வழக்குகளை விசாரிக்க என்ன பொறிமுறை? அறிவித்தவுடனேயே அந்த வழக்கு அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு மாற்றப்படும்.

ஏன் ரணில் சர்வதேச நீதிமன்ற உடன்பாடுகளில் கையழுத்திட வில்லை. இலங்கை உடனே அந்தக் குறை பாட்டை நிவிர்த்தி செய்து தனது கையொப்பத்தை இடுமா?

இது முதல் நடை பெற்றால்த்தான் இலங்கை மீது நம்பிக்கை வரும்.

சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச சாசனத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இலங்கை அதை உறுதிப்படுத்தியும் உள்ளது என அமைச்சர் ரவூவ் ஹக்கீம் கூறினார்.

இனியும் மேலதிக ஒரு சட்டம்?

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

இன்றும் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் உறவுகளுக்கு இந்த சட்டம் பயனளிக்குமா?

அவர்கள் விடுதலையாகும் சந்தர்ப்பம் உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய சிக்கலில் இருந்து தப்பிக்க எத்தனை பொய் வேண்டுமானாலும் மகிந்த அரச கூட்டம் சொல்லும்.நடை முறையில் இவர்கள் சொன்ன எதனை செய்துள்ளார்கள்?.நாம் பல தசாப்தங்களாக ஏமாளிகளாக வாழ்ந்துள்ளோம் என்பதை இம்முறை ஐ.நாவிற்கு வந்த தமிழர்கள் உலகிற்கு தொடர்ந்தும் சொல்ல வேண்டும்.மகிந்த அரசு சொல்லும் ஒவ்வொரு உறுதி மொழிகளையும் அமுல் படுத்த உலக நாடுகள் சாட்சிகளாக இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.